Dec 28, 2010

கோவை: தீண்டாமை சுவரா? தீட்டு சுவரா?

கோவையில் தீண்டாமை சுவர் இடிப்பு என்ற செய்தியை இரு தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிக்கைளிலும் படித்திருப்பீர்கள்

சம்பவ இடத்திற்கு சென்றோம், இரு தரப்பையும் விசாரித்தோம். உண்மையில் அது தீண்டாமை சுவர் இல்லை என்பதை நம்மால் புறிந்துகொள்ள முடிந்தது.

பரபரப்புக்காவும், பேரம் படிவதற்காகவும் கிளப்பப்பட்ட பிரச்சனையே அது. பேரம் படியாததால் அது தீண்டாமை சுவரானது. இந்த சுவர் ஒன்றும் காலகாலமாக உள்ளது அல்ல. சமீபத்தில் தான் கட்டியுள்ளார்கள். கட்டுமானத்தின்போது அவர்களுக்கு தீண்டாமை இல்லாமல் இருந்ததா? அல்லது பேரம்படிந்ததா?

தீண்டாமை சுவர் ஒழிக்க குரல்கொடுக்கும் தோழர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் அதற்கு முன்னர் நாம் செய்தாகவேண்டிய பல அடிப்படை கட்டமைப்புகள் இருக்கிறது. அதை செய்யாமல் தீண்டாமை என்று கொடிபிடிப்பதும் ஒரு தீண்டாமையே.

நாங்கள் சாதி அடிப்டையில் அந்த சுவரை கட்டவில்லை. அப்பகுதியில் இருந்து இந்த இடத்திற்குள் மக்கள் செய்யும் மனிதகழிவுகளை தடுக்கதான் காம்பவுண்டு சுவர் கட்டினோம். பலமுறை வேண்டி கேட்டோம், கெஞ்சி கேட்டோம், கண்டித்துக்கூட விட்டுவிட்டோம். அது நிறுத்தப்படவில்லை. அதனால் தான் சுவர் எழுப்பினோம். இது அந்த இடத்திற்கான உரிமையாளர்கள் சொன்னது. அது நியாயாமாகவே பட்டது.

அந்த பகுதி முழுவதும் மனிதகழிவுகளாக இருந்தது. உங்கள் இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?

இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல கிராமங்களுக்கு மூக்கை பிடித்துக்கொண்டு தான் செல்லவேண்டியுள்ளது. சாலையின் இரு புறமும் பூக்கள் அல்ல பீ க்கள் தான் வரவேற்கின்றன. 

இந்த சுகாதார சீர்கேடுக்கு முடிவே இல்லையா? 

வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டிதர அரசுக்கு அப்படி என்ன நிதிபற்றாக்குறை? வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டினால் ஊழல் செய்யமுடியாது. பொதுகழிப்பிடம் கட்டினால் எளிதில் ஊழல் செய்யலாம். மனித கழிவை கூட தின்ன தயாராகும் இந்த ஊழல் பெருச்சாளிகள் திருந்துவது எப்போது?




வீட்டுக்கு ஒரு டி.வி வழங்கும் முன்னர் வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டிதந்திருக்கலாமே?

அதே நாகராசபுரத்தில் பாலம் உடைந்து பல மாதம் ஆகிறது. அதற்காக குரல்கொடுக்க ஏன் இந்த பொதுநலவாதிகளும் பத்திரிக்கைகளும் முன்வரவில்லை. அதே நாகராசபுரத்தில் மனிதகழிவுகளை மிதித்து தாண்டி தான் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைகின்றனர். இந்த தீட்டுகளை அகற்ற யார் முன்வருவார்கள்

நாகராசபுரம் ஒரு உதாரணம் தான். இதுபோல தமிழகத்தின் பல கிராமங்களின் சாலைகளும், கால்வாய்களும், நாரிக்கொண்டு தான் இருக்கிறது. இதில் எல்லாம் சாதியை கிளப்பினால் தான் சுத்தம் செய்வார்களா?

1 comment:

  1. அருமையான பதிவு நண்பரே.

    புகைப்படத்துடன் பதிவு நன்றி

    ReplyDelete

Popular Posts