அலைகற்றை ஊழல் விவகாரத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் ஊடகங்கள் கடித்துக் குதறுவதில் இருந்து தப்பிக்க நல்லவே திட்டம் போட்டிருக்கிறார் கருணாநிதி.
தமிழகம் முழுவதும் சி.பி.ஐ 27 இடங்களில் சோதனையிட்டது. இதில் முக்கியமாக கனிமொழியின் தாயும் கருணாநிதியின் துணைவியுமான ராசாத்தியம்மாளின் தணிக்கையாளர் வீட்டில் நடந்த சோதனை தான் உச்சம்.
இதை ஊடகங்கள் ஊதிபெரிதுபடுத்திவிடும் என்ற பயம் திமுக தலைமையை கிடுகிடுக்க வைத்துவிட்டது. அதை எதிர்கொள்ள எடுத்த ஆயுதம் தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அறிக்கையின் பின்னனி.
ராசாத்தியம்மாள் வீடு வேறு கருணாநிதி வீடு வேறு அல்ல. அப்படியிருக்கும்போது கருணாநிதியின் தணிக்கையாளர் வீட்டில்தான் இந்த சோதனை நடந்துள்ளது.
இந்த கேவலத்தை எப்படி சமாளிப்பது? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க என்ன செய்வது?
நீண்ட யோசனையின் விளைவாக விடுதலைபுலிகள் நினைவு பொறிதட்டியிருக்கிறது.
பிரதமர், சோனியா, அப்புறம் நம்ம முத்தமிழ் வி.... களை விடுதலைபுலிகள் கொல்ல திட்டம் போட்டுள்ளனர் என்ற அறிக்கையை தமிழக காவல்துறை வெளியிட்டது. ஊடகங்கள் இந்த நாய்பிசுகெட்டை கவ்விக்கொண்டு சி.பி.ஐ சோதனையை விட்டுவிடுவார்கள் என்பது தான் திமுக தலைமையின் எதிர்பார்ப்பு
ஆனால் ஊடகங்கள் சும்மாவா?
அதையும் கவ்விக்கொண்டது. அப்புறம் இதையும் விடவில்லை. இப்போதும் விடுதலைபுலிகள் ஊடுருவல் என்பதை விட கருணாநிதியின் வீட்டில் சோதனை என்ற பிசுகெட்தான் அதிக சுவையாக உள்ளது என்கிறன ஊடகங்கள்.
பாவம் தாத்தா தான் ஏமாந்துவிட்டார்.
காங்கிரசு சி.பி.ஐயை வைத்து திமுகவை மிரட்டுகிறது. திமுக விடுதலைப்புலிகளை காட்டி காங்கிரசை மிரட்டுகிறது.
இவர்கள் பங்கு பிரச்சனைக்கு சி.பி.ஐயும் விடுதலைப்புலிகளையும் பகடைகாயக்கியது தான் காலத்தின் கொடுமை.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
தள்ளாத வயதில்,போகப் போகும் வயதில் ஆசைகள் அதிகமாகுமாம்!ஒரு கதை என் ஞாபகத்தில் வருகிறது:ஒரு வயதானவர் இப்பவோ,அப்பவோ என்று இழுத்துக் கொண்டு கிடந்தாராம்!பிள்ளைகளுக்கு என்ன குறை வைத்தோமென்றே புரியவில்லை!ஒவ்வொரு ஆசைகளாகக் கேட்டார்களாம்!இல்லை,இல்லயென்று தலையை ஆட்டிய கிழவர் கடைசியாகக் கேட்ட கேள்விக்கு ஆம் என்று தலையாட்டினாராம்!மண்,பெண்,பொன்னென்று மூன்றாக ஆசைகளைப் பிரிப்பார்கள்!இந்தக் கிழவருக்கு முதலிரண்டும் ஓக்கே!மூன்றாவது தான் இன்னமும் வேண்டும்!!!
ReplyDelete