இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர்.
கோவை வாளையாரில் இருந்து பாலக்காடு சென்ற பேருந்தில் ரதீசு பயிணித்துள்ளார். 52 பயணிகள் பேருந்தில் இருந்துள்ளனர். கஞ்சிக்கோடு அருகே வந்தபோது பேருந்தை மறித்து ஏறிய 10 பேர் கொண்ட கும்பல் ரதீசை வெட்டி கொலைசெய்துள்ளது. இந்த கொலை வெறி தாக்குதலில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து பாலக்காடு போலீசார் கூறுகையில் ‘‘நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பாரதிய சனதா மற்றும் டி.வை.எப்.ஐ அரசியல் கட்சிகளிடையே மோதல் நடந்தது. கொலை செய்யப்பட்ட ரதீசு பாரதிய சனதா கட்சியில் பொருப்பில் உள்ளவர். எனவே இது அரசியல் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலக்காட்டில் பா.ச.க.,வினர் பந்த் அறிவித்துள்ளனர். இதனால் இன்னும் பதட்டம் அதிகரித்துள்ளது.
எப்போதும் வாகன நெரிசல் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (எண் 47) ஒடும் பேருந்தை மறித்து பேருந்தில் உள்ள 50 பேர் முன்னிலையில் ஒருவரை கொலைசெய்ய முடிகிறது என்றால் என்னவென்று சொல்வது?
பகையை, கொலை, வன்முறை இவற்றை வளர்க்க தான் அரசியல்கட்சிகள் என்றால் முதலில் மூடுவிழா கொண்டாட வேண்டியது அரசியல் கட்சிகளுக்கு தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
No comments:
Post a Comment