2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு போட்ட அதே கூட்டணியை அமைத்து 2011 சட்டசபை தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அதற்கான முயற்சிகளை கருணாநிதி முழு வீச்சாக செய்து வருகிறார். ஆனால் எந்த முயற்சியும் முழுமையான பலனை தருவதில்லை.
காங்கிரசை வெளியேற்றினால் மட்டுமே கூட்டணிக்குள் வருவோம் என இடதுசாரிகள் திட்டவட்டமாக சொல்லிவிட்டன. அதே நேரத்தில் பாமக ஒரே ஒரு நிபர்ந்தனையுடன் அணிசேர தயாராகிவிட்டது. தேர்தலுக்கு பின் மத்தியில் அன்புமணி ராமதாசை மேலவை உறுப்பினராக்கி அமைச்சர் பதவியை பெற்றுதரவேண்டும்.
விசயகாந்த் முழுமையாக அதிமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார். இதனால் காங்கிரசு வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அதிமுக வந்துவிட்டது. காங்கிரசு வராவிட்டால் மதிமுக, இடதுசாரிகள், கூடவே கொங்கு முன்னேற்ற கழகத்தையும் சேர்த்துக்கொள்வது என அதிமுக முடிவுசெய்துள்ளது.
அதிமுகவுக்கு சீமான் மற்றும் சனவரியில் கட்சி துவங்க இருக்கும் நடிகர் விசய் ஆகியோர் அதரவு தெரிவிக்ககூடும்.
தற்போதைய நிலவரப்படி
திமுக - காங்கிரசு - பாமக - விடுதலைசிறுத்தைகள் - சில இசுலாமிய கட்சிகள்
அதிமுக - தேமுதிக - மதிமுக - இடதுசாரிகள் - கொ.மு.க - புதிய தமிழகம் - சில இசுலாமிய கட்சிகள்
என்ற நிலையில் கூட்டணி நிலவரம் உள்ளது.
சமக பாரதியசனதா போன்றவையும் அதிமுக பக்கம் சாய தாயாராகியுள்ளன.
காலங்கள் மாற கட்சிகளின் கோலங்கலும் மாறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து கனிமொழி கூறியதாவது : அலைகற்றை விவகாரத...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்...
///காலங்கள் மாற கட்சிகளின் கோலங்களும்?!மாறலாம்!///எப்புடி,ரங்கோலி?????
ReplyDeleteபெயரில்லா கூறியது...
ReplyDelete///காலங்கள் மாற கட்சிகளின் கோலங்களும்?!மாறலாம்!///
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க!நான் லகரம்,ளகரம் பிழை கண்டு பிடித்துக் கூறவில்லை!கட்சிகளின் குழப்பங்களைக் கிண்டலடித்தேன்!அவ்வளவே!!!!!!!!!!
ReplyDelete