Dec 3, 2010

அலைகற்றை ஊழல் : ராசா & வீரப்பமொய்லி கூட்டுசதி அம்பலம்

திமுக - காங்கிரசு உறவில் விரிசல் வரும்போது எல்லாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னர் வீரப்பமொய்லியின் அறிக்கை பறந்துவந்திருக்கும். கூட்டணி பலமாக உள்ளது என்பதை கருணாநியை விட வீரப்பமொய்லி அடிக்கடி நினைவூட்டி வந்தார்.

வீரப்பமொய்லியின் அக்கறை எங்களை போன்ற ஊடகவியலாளர்களுக்கு உண்மையில் வியப்பை தந்தது. ஆனால் அதற்கு காரணம் இப்போது தான் புறிகிறது.

வேறு ஒன்றும் இல்லை அலைக்கற்றை ஊழலில் அவருக்கு கனமான பங்கு இருந்திருக்கிறது. கூட்டணி உடைந்தால் குட்டுவெளியில் வந்துவிடும் என்ற பயத்தில் தான் வீரப்பமொய்லியின் பேட்டிகள் பறந்துவந்திருக்கிறது.

அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ராசாவின் கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததே மத்திய சட்ட அமைச்சகம் தான். வீரப்பமொய்லியின் பரிந்துரையை தான் அப்படியே பிரதமருக்கு அனுப்பியிருக்கிறார் ராசா. 


2.த.,அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவரச வீதிகளுக்கு ஆதரவாக வீரப்பமொய்லி கையெழுத்திட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  

இந்த ஆவணங்கள் நேற்று(3.4.2010) நாடாளுமன்றத்திலும் பின்னர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.

இரு தினங்களுக்கு முன் ராசாவுக்கு துணையாக பிரதமர் மன்மோகன்சிங் விசாரணை வட்டத்திற்குள் வந்தார். இன்று வீரப்பமொய்லியும் வந்துள்ளார். விரைவில் எல்லோரும் எதிர்பார்க்கும் சோனியாவும் வருவார்.

விஞ்ஞானரீதியில் ஊழல் செய்யும் தலைவரை இந்த வட்டத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம். ஆனால் அவரின் கருத்து வாரிசுக்கு நிச்சயம் ராசாவுக்கு பக்கத்தில் இடம் உண்டு.

3 comments:

  1. can you provide some link on this?

    thanks

    anvarsha

    ReplyDelete
  2. I found the link..

    http://www.timesnow.tv/Law-Minister-backed-Raja-on-2G/videoshow/4359753.cms

    here is the link on this.

    anvarsha

    ReplyDelete

Popular Posts