அலைகற்றை ஊழலில் திமுகவை விட காங்கிரசுக்கு அதிகபங்கு இருப்பது தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்பட்சத்தில் பிரதமர் மன்மோகன்சிங் ராசினாமா செய்யகூடும் என தெரிகிறது.
நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை தேவை என எதிர்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இதற்கு காங்கிரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
நாடாளுன்ற கூட்டுகுழு விசாரணைக்கு ஒத்துக்கொண்டால் பிரதமர்மன்மோகன் சிங்குக்கு நெருக்கடி அதிகமாகிவிடும். கூட்டுக்குழு முன் விசாரணை கூண்டில் ஏறவேண்டி கட்டாயத்துக்கு பிரதமர் தள்ளப்படுவார். அப்போது ஊழலில் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பை காட்டிக்கொடுக்கவேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு உள்ளது.
மேலும் இதில் காங்கிரசை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினால் திமுக கூட்டணி முறியும். அப்படி ஒன்று சம்பவித்தால் எதிர்கட்சிகள் யாரும் தேவை இல்லை திமுகவே போதும் காங்கிரசை வறுத்தெடுக்க.
இப்படி பல பல சிக்கலில் சிக்கி தவிக்கிறது காங்கிரசு. என்னை விட்டுவிடுங்கள் நான் ஒதுங்கிகொள்கிறேன் என பல முறை சோனியாவிடம் மன்மோகன்சிங் சொல்லிவிட்டதாக தெரிகிறது. ஆனால் அடுத்து தானோ அல்லது ராகுலோ பிரதமர் பதவியில் அமரும்வரை அமைதிகாக்க கேட்டுள்ளார் சோனியா.
இன்று அல்லது நாளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரசு ஒத்துக்கொள்ளும். அப்போது நாடுமுழுவதும் மன்மோகன்சிங் மீது ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தும் வேலையில் காங்கிரசு இறங்கும். இந்த அலையோடு மன்மோகன்சிங் ராசினாமா செய்வார். அந்த அலையைபயன்படுத்தி இத்தாலியா அன்னையோ, ராகுலோ பிரதமர் நாட்காலியில் அமரலாம்.
ராசா ராசினாமா அதை தொடர்ந்து நடக்கும் அத்துனை நாடகங்களுக்கும் சோனியா+சர்வதேச தொழிலதிபர்கள் இயக்குனர்களாக இருக்கின்றனர்.
எப்படியோ பலனடைந்தது திமுக, பலனடைவது அதிமுக, பலியானது மன்மோகன்சிங்+ராசா
இதுதான் இறுதியில் மிச்சமடையும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
இலங்கை ராசபட்சே அரசின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக மற்றும் ஒரு காணொளியை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழப்பெண்களை...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
இனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் "எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை என்றால் என்ன இதற்க்கு முன் நடந்ததுண்டா? எனக்கு தெரியாது கொஞ்சம் விளக்கமாக பதிவில் சொன்னால் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்
ReplyDeleteதிரு .தொப்பிதொப்பி
ReplyDeleteநாடாளுமன்ற கூட்டு குழு என்பது நடப்பு நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களில் கட்சி அடிப்படையில் ஒரு குழு அமைப்பர்.
அதில் ஆளும் கட்சி தலைவர் தலைவராக இருப்பார். குழுவில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் (உறுப்பினர் எண்ணிக்கை பலம் அடிப்படையில்) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
இந்த குழு சம்மந்தப்பட்ட பிரச்சனையை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்யும். இந்த குழுவுக்கு நாட்டின் உச்ச அதிகாரம் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்கான அதிகாரம் உள்ளது. இன்னும் சொல்லபோனால் பிரதமர் உட்பட உயர்பதவியில் இருப்பவர்களை நேரடியாக விசாரிக்கும் அதிகாரம் இந்த குழுவுக்கு உண்டு.
சட்டத்தின் வழிதான் விசாரிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு நீதிமன்றத்திற்கு உள்ளது. ஆனால் இந்த குழுவுக்கு சட்டத்தின் வழிகளில் தான் விசாரனைசெய்யவேண்டும் என்ற நிபர்ந்தனை இல்லை. சுருக்கமாக சொன்னால் நாட்டின் உச்ச அதிகாரம் இந்த குழுவுக்கு உள்ளது.
இந்த குழுவின் இறுதிமுடிவை உச்சநீதிமன்றத்திற்கும் அனுப்பிவைக்கலாம்.
இதற்கு முன்னர் போபசு ஊழல், பங்குசந்தை முறைகேடு உட்பட நான்கு பிரச்சனைகளுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2004ல் மும்பை பங்குசந்தை முறைகேடுவுக்காக அமைக்கப்பட்டது.