Dec 4, 2010

அலைகற்றை ஊழல் : வீரப்பமொய்லி ராசினாமா?

அலைகற்றை ஊழல் விவகாரத்தில் சட்டஅமைச்சர் வீரப்பமொய்லியும் ராசாவும் இணைந்து கூட்டுசதியில் ஈடுபட்ட விவரங்கள் நேற்று அம்பலமானது.

நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில் ராசாவுக்கு ஆதரவாக வாதாடிய சட்டஅமைச்சகம் நீதிபதிகளின் கண்டிப்புக்கு உள்ளானது.

பிரதமரின் ஆலோசனைகளை ராசா மதிக்கவில்லை என்ற பிரதமரின்(வழக்கறிஞர்) வாதத்திற்கு, ராசாவின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். அப்போது ராசாவுக்கு ஆதரவாக சட்ட அமைச்சகமும் வாதிட்டது. இது பிரதமருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. 

இதை தொடர்ந்தே அலைகற்றை ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனையை மீறி ராசாவுக்கு ஆதரவாக வீரப்பமொய்லி கையெழுத்திட்ட ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்படது. இன்று இதுகுறித்த மேலும் சில ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

அலைகற்றை ஊழலில் பெரும்தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து வீரப்பமொய்லி ராசினாமா செய்யக்கூடும் எனதெரிகிறது.

ஆட்டம் சூடுபிடித்து விட்டது.

1.76 லட்சம் கோடியை இழந்ததற்கு இந்தியமக்களுக்கு அலைகற்றை ஊழல் மற்றும் 5 அமைச்சர்கள் ராசினாமா என்ற நாடகம் பொழுதுபோக்காக அமைவது தான் மிச்சம்.

ஆகா... ராசா, வீரப்பமொய்லி அப்புறம் மீதி 3 பேரு யாரு?....

பொறுத்திருந்து பாருங்கள். காங்கிரசு அரசே கூண்டோடு ராசினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அந்த கட்சியின் தத்து அன்னைக்கு பங்கு இருக்காம்.

 எப்படியோ நம்ம ராசா தப்பிச்சுட்டாரு !!!
ராசா தனிமரம் இல்லை, அது ஒரு தோப்பு

No comments:

Post a Comment

Popular Posts