Dec 27, 2010

சாப்பாட்டில் வென்ற ஈரோடு சங்கமம்

ஈரோடு வலைபதிவர்கள் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்கு என்னால் மதியம் தான் போய் சேர முடிந்து. நிறைய அனுபவங்கள் கிடைத்தன.

எந்த குறையும் இல்லாமல் 200% திருப்தியளித்த முதல் விசயம் விருந்து. இதற்கு முழு கவனமும் முக்கியத்துவமும் கொடுத்த ஈரோட்டு சங்கமத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

தலைவாழை இலையில் தலைசிறந்த விருந்தை தந்தார்கள்

படங்களை இணைத்துள்ளேன்.






அன்னமிட்ட கரங்களில் ஒன்று

சின்ன சின்ன அனுபங்களை சொல்வதன் மூலம் விருந்துக்கு எப்படியெல்லாம் முக்கியத்துவம் தந்தார்கள் என்பதற்கு எழுத்துவடிவம் கொடுக்க முயற்சித்திருக்கிறேன்.

விருந்துக்கு எந்த காத்திருப்பும் இல்லாமல் மிக கச்சிதமாக அனைவரும் ஒருசேர அமர்ந்து சாப்பிட வழிசெய்திருந்தார்கள்.

சைவம் தனியாக அசைவம் தனியாக இருந்தது. இங்கு மிகமிக பாராட்டகூடிய விடயம் அசைவத்துக்கு இணையாக சைவ விருந்து இருந்தது. பொதுவாக அசைவ விருந்து அளிக்கப்படும் இடங்களில் சைவத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இங்கு அந்த குறை இல்லை.

சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்த எனக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது. சைவம் சாப்பிடலாமா? அசைவம் சாப்பிடலாமா என்று?

ஒவ்வொருவருக்கும் அனைத்து வகைகளும் ஒன்றுவிடாமல் பரிமாற கதிர் உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட கவனம் உண்மையில் விருந்தோம்பலுக்கான இலக்கணம். கடைசி நபர் சாப்பிட்டு செல்லும் வரை அவர் முன்னின்று செலுத்திய பொறுப்புணர்ச்சி என்னை வியக்க வைத்தது. 

விருந்து ஏற்பாடு செய்வதை விட அதை பரிமாறும் விதம் மிக முக்கியம். அதை மிகமிக நேர்த்தியாக செய்தார்கள்.

நான் அசைவம் தான். நான் எப்பவும் காரம் குறைவாக சாப்பிடுபவன். நான் இதுவரை சென்ற பெரும்பாலான அசைவ விருந்துகளில் காரம் அதிகம் இருக்கும். ஆனால் இங்கு அந்த குறை துளியும் இல்லை, சுவைகள் அனைத்தும் கச்சிதமாக இருந்தது. சமையல்காரருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

உண்டவர்களின் முழு திருப்திக்கு உணவில் சுவையின் பங்கு கூடுதாலா, பரிமாறிய பங்கு கூடுதலா என்று பிரித்துபார்க்கமுடியாத அளவுக்கு இரண்டும் கச்சிதமாக இருந்தது.

அடுத்த பதிவில் சுரேசின் கேமரா கையாளல், ஓசை செல்லாவின் நகைச்சுவை சரவெடிகள், வினோதின் புகைபட நளினம், அப்புறம் சேர்தளத்தின் செமரகளை ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.

1 comment:

  1. புகைப்படம் அருமையா எடுத்து இருக்கீங்க

    ReplyDelete

Popular Posts