‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 6 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.
சொற்பம் லண்டன் தமிழர்கள் ராசபட்சேவுக்கு தண்ணிகாட்டினார்கள் என்றால் அந்த நாட்டு அரசாங்கம் அவர்கள் உணர்வை மதித்திருக்கிறது. ஆனால் இங்கோ ?
ஒன்றும் இல்லை, நேற்று கோவையில் இலங்கை எம்.பி விரட்டியடிக்கப்பட்டதே லண்டம் சம்பவம் நடந்ததால் தான். அத இல்லாமல் இருந்திருந்தால் போராட்டகாரர்கள் சிறையி, இலங்கை எம்.பி போலீசு மரியாதையுடன் விழாவிலும் கலந்திருப்பார் என்பது தான் நிதர்சன உண்மை.
இங்கு போராட்டங்கள் ஒடுக்கப்படுகிறது. ஒவ்வொரு போராட்டமும் விலையற்றதாக்கப்படுகிறது. முத்துகுமார் போன்ற பலர் உயிரை மாய்த்தாலும் ஒன்றும் சம்பவிப்பதில்லை. காரணம் அரசியல் நாடகங்கள்.
இதை மாற்ற வேண்டும். இந்தியாவில் ஈழத்துக்கான ஆதரவு வந்துவிட்டால் போதும் ஈழம் மலர்ந்துவிடும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோரே இதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது விடுதலைபுலிகள் அமைதிகாப்பதும் இந்த காரணங்களுக்காக தான். சென்ற மாவீரர் நாள் அறிக்கையும் அதை தான் வலியுறுத்தி உள்ளது.
தற்போது மீண்டும் ஈழக்குரூரங்களை உலகம் கவனிக்க துவங்கியுள்ளது. இதை நீர்த்துப்போசெய்ய முயற்சிகள் நடக்கலாம். அதைவிட அரசியலாக்கி தேர்தலில் ஆதாயம் தேடும் அவலங்கள் அரங்கேரலாம்.
தயவு செய்து தமிழர்களே அதை அனுமதித்துவிடாதீர்கள்.
வெருக்கப்படக்கூடியவர்கள் என்றாலும் வேறு வழி இல்லை, தமிழ் ஈழம் அமைய ஒரே வழி தமிழக அரசியல் தலைவர்கள் மட்டும் தான்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் மனமாற்றம் தான் மிக முக்கியம். இது அரசியல்வாதிகளின் கையில் சிக்கியுள்ள போலிசனநாயகநாடு.
இங்கு நாம் என்ன செய்தாலும் ஆட்சியாளர்களை தாண்டி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. ஆட்சியாளர்கள் அனுமதித்தால் மட்டுமே நம் போராட்டங்கள் வெற்றிபெறும்.
ஈழம் அமைய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? ஆட்சியாளர்கள் மனதில் ஈழகொடூரங்களை எப்படி பதியவைப்பது. அவர்கள் கல்நெஞ்சை எப்படி இளக செய்வது?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
இலங்கை ராசபட்சே அரசின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக மற்றும் ஒரு காணொளியை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழப்பெண்களை...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
இனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் "எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...

தனிஈழம் அமைவது தமிழக அரசியல் தலைவர்கள் கையில் உள்ளது. /////////////////
ReplyDeleteஇருக்கலாம் ஆனால் நீங்கள் புகைப்படம் போட்டிருக்கும் இருவரால் முடியாது