‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 6 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.
சொற்பம் லண்டன் தமிழர்கள் ராசபட்சேவுக்கு தண்ணிகாட்டினார்கள் என்றால் அந்த நாட்டு அரசாங்கம் அவர்கள் உணர்வை மதித்திருக்கிறது. ஆனால் இங்கோ ?
ஒன்றும் இல்லை, நேற்று கோவையில் இலங்கை எம்.பி விரட்டியடிக்கப்பட்டதே லண்டம் சம்பவம் நடந்ததால் தான். அத இல்லாமல் இருந்திருந்தால் போராட்டகாரர்கள் சிறையி, இலங்கை எம்.பி போலீசு மரியாதையுடன் விழாவிலும் கலந்திருப்பார் என்பது தான் நிதர்சன உண்மை.
இங்கு போராட்டங்கள் ஒடுக்கப்படுகிறது. ஒவ்வொரு போராட்டமும் விலையற்றதாக்கப்படுகிறது. முத்துகுமார் போன்ற பலர் உயிரை மாய்த்தாலும் ஒன்றும் சம்பவிப்பதில்லை. காரணம் அரசியல் நாடகங்கள்.
இதை மாற்ற வேண்டும். இந்தியாவில் ஈழத்துக்கான ஆதரவு வந்துவிட்டால் போதும் ஈழம் மலர்ந்துவிடும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோரே இதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது விடுதலைபுலிகள் அமைதிகாப்பதும் இந்த காரணங்களுக்காக தான். சென்ற மாவீரர் நாள் அறிக்கையும் அதை தான் வலியுறுத்தி உள்ளது.
தற்போது மீண்டும் ஈழக்குரூரங்களை உலகம் கவனிக்க துவங்கியுள்ளது. இதை நீர்த்துப்போசெய்ய முயற்சிகள் நடக்கலாம். அதைவிட அரசியலாக்கி தேர்தலில் ஆதாயம் தேடும் அவலங்கள் அரங்கேரலாம்.
தயவு செய்து தமிழர்களே அதை அனுமதித்துவிடாதீர்கள்.
வெருக்கப்படக்கூடியவர்கள் என்றாலும் வேறு வழி இல்லை, தமிழ் ஈழம் அமைய ஒரே வழி தமிழக அரசியல் தலைவர்கள் மட்டும் தான்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் மனமாற்றம் தான் மிக முக்கியம். இது அரசியல்வாதிகளின் கையில் சிக்கியுள்ள போலிசனநாயகநாடு.
இங்கு நாம் என்ன செய்தாலும் ஆட்சியாளர்களை தாண்டி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. ஆட்சியாளர்கள் அனுமதித்தால் மட்டுமே நம் போராட்டங்கள் வெற்றிபெறும்.
ஈழம் அமைய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? ஆட்சியாளர்கள் மனதில் ஈழகொடூரங்களை எப்படி பதியவைப்பது. அவர்கள் கல்நெஞ்சை எப்படி இளக செய்வது?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...
-
இந்தியன் என்பதில் பெருமை பட்டோம் எப்போது தெரியுமா? அண்ணல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை படித்த போது. எவ்வளவு நேர்...
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவ...
-
வலபதிவுகளில் சில பின்னூட்டங்களை படிக்கும்போது தானக நமக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த சிரிப்பை அடக்க சிலமணிதுளிகள் பிடிக்கும். அப்படி இன்று அ...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...

தனிஈழம் அமைவது தமிழக அரசியல் தலைவர்கள் கையில் உள்ளது. /////////////////
ReplyDeleteஇருக்கலாம் ஆனால் நீங்கள் புகைப்படம் போட்டிருக்கும் இருவரால் முடியாது