Jan 30, 2011

திமுகவை குழிதோன்டி புதைக்கும் கருணாநிதி


காங்கிரசை தோற்கடிக்க உறுவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. தந்தை பெரியார், அண்ணா அவர்கள் எந்த நோக்கத்துக்கான திமுகவை உருவாக்கினார்களோ அந்த நோக்கம் கருணாநிதியால் முடிவுக்கு வந்தது.

காங்கிரசை தமிழகத்தை விட்டே விரட்டியடிக்கவேண்டும் என்பது திமுகவின் முதல் கொள்கை.

ஆனால் அண்ணாவால் விரட்டப்பட்ட காங்கிரசு இன்று கருணாநிதியின் குரல்வலையை பிடித்துள்ளது.

அடுத்து திமுக &காங்கிரசு கூட்டணி வெற்றிபெற்றால் நிச்சயமாக 50 ஆண்டுகளுக்கு பின்பு தமிழக ஆட்சி பீடத்தில் காங்கிரசு அமரும் என்பதில் சந்தேகமில்லை.

2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட 2011 தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் ஒரே கட்சி காங்கிரசு தான். இந்த அதிர்ச்சியை எப்படி சீரணித்துக்கொள்வது என்றே தெரியவில்லை.

இந்த தேர்தலில் எனது கணிப்பு படி திமுக கூட்டணியில் இப்படி ஒதுக்கீடுகள் அமையலாம்

திமுக     140 (2006 - 130)
காங்கிரசு      60 (2006 - 48)
பாமக      30 (2006 - 31)
வி.சிறுத்தை 2  (2006 - 9)
இதரம் 4  (2006 - 4)

இந்த கூட்டணி வெற்றி பெருமானால் தமிழக ஆட்சி கட்டிலில் திமுகவும் காங்கிரசும் ஒன்றாக அமரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈழம் அழித்து தமிழகத்தை பிடித்தது காங்கிரசின் சாதனை. குடும்பம்  காங்கிரசை வளர்த்து, திமுகவை அழித்தது கருணாநிதியின் சாதனை.


திமுக தன்னோடு அழிந்துபோய்விட வேண்டும் என்பது தான் கருணாநிதியின் திட்டமா?

காங்கிரசை கழட்டிவிட்டால் திமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் கருணாநிதியின் யோசனை இதுவாக கூட இருக்கலாம்.

இப்போது காங்கிரசை கழட்டிவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும். ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஒருவேளை குடியரசு தலைவர் ஆட்சி என்றால் அங்கு காங்கிரசின் கைதான் ஓங்கி இருக்கும். மத்திய ஊழல் வழக்குகளில் தன் மனைவி, துணைவிகள் கைது செய்யப்படலாம். குடும்ப சண்டையால் தேர்தல் வெற்றி தோல்வியை கூட பார்க்க முடியாமல் போகலாம்.

அய்யகோ... நல்ல தந்தையின் மன ஓட்டங்களை யார் அறிவார். 

தள்ளாதை வயதில் இப்படி காங்கிரசின் கிடுக்கிபிடியில் சிக்குவது தான் கருணாநிதியின் விதியா? 

No comments:

Post a Comment

Popular Posts