அலைகற்றை ஊழல் தொடர்பாக நீரா ராடியாவின் வீட்டில் சிபிஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். டெல்லி பாரகம்பாவில் உள்ள நீரா ராடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்திவருகின்றது.
தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் வீட்டிலும் சோதனை நடக்கிறது. டெல்லியில் 7 இடங்கள் உட்பட 34 இடங்களில் சிபிஐ சோதனை நடக்கிறது.
ராசாவி வீட்டில் நடந்த சோதனையை அடுத்து கிடைத்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கனிமொழி வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கு திமுக தலைமையில் இருந்து வந்த கடும் எதிர்ப்பால் காங்கிரசு நிலைகுலைந்தது. அதனால் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐக்கு காங்கிரசு மறைமுக தடைவிதித்தது.
காங்கிரசின் இந்த செயலுக்கு பிரதமர் தன் மவுன கண்டனத்தை தெரிவித்தார். சி.பி.ஐ கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவதில் குறுக்கிடக்கூடாது என்பதை தெரிவித்துள்ளார். தனது அதிருப்தியை நேற்று தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்த பேச்சில் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்தே கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ புது திட்டம் போட்டுள்ளது.
ராசா வீட்டில் சோதனை நடந்த கையோடு கனிமொழி வீட்டில் சோதனை நடத்தும் செயலுக்கே திமுக கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு மாற்றாக நீராராடியாவின் வீட்டில் நடந்த சோதனைக்கு பின், அதன் அடிப்படையில் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இது ஓரளவு கவுரவம் காக்கும் என திமுக எதிர்பார்க்கிறது. அதற்கு அதிக எதிர்ப்பு இருக்காது என்றும் சி.பி.ஐ நம்புகிறது.
நடக்கட்டும் சி.பி.ஐ சோதனைநாடகங்கள். இவர்களின் நாடகத்தை வேடிக்கை பார்ப்பதை தவிர இந்திய குடிமகன் வேறு என் செய்ய முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக தேர்தல் கருத்து கணிப்பு : ஆட்சி மாற்றம் உறுதி ---------------------------------------------------------------------------- அதிமுக + த...
-
ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம் எனற பதிவின் மூலம் கோவை பத்திரிக்கையாளர்களிடம் நேரடியாக நிறையவே வாங்கி கட்டிக்கொண்டேன். ...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
3 கோடி ரூபாயுடன் முதலமைச்சர் வாழ்க்கையை துவங்கிய செயலலிதாவுக்கு அப்படி 68 கோடி ரூபாய் சொத்து வந்தது என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
No comments:
Post a Comment