அலைகற்றை ஊழல் தொடர்பாக நீரா ராடியாவின் வீட்டில் சிபிஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். டெல்லி பாரகம்பாவில் உள்ள நீரா ராடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்திவருகின்றது.
தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் வீட்டிலும் சோதனை நடக்கிறது. டெல்லியில் 7 இடங்கள் உட்பட 34 இடங்களில் சிபிஐ சோதனை நடக்கிறது.
ராசாவி வீட்டில் நடந்த சோதனையை அடுத்து கிடைத்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கனிமொழி வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கு திமுக தலைமையில் இருந்து வந்த கடும் எதிர்ப்பால் காங்கிரசு நிலைகுலைந்தது. அதனால் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐக்கு காங்கிரசு மறைமுக தடைவிதித்தது.
காங்கிரசின் இந்த செயலுக்கு பிரதமர் தன் மவுன கண்டனத்தை தெரிவித்தார். சி.பி.ஐ கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவதில் குறுக்கிடக்கூடாது என்பதை தெரிவித்துள்ளார். தனது அதிருப்தியை நேற்று தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்த பேச்சில் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்தே கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ புது திட்டம் போட்டுள்ளது.
ராசா வீட்டில் சோதனை நடந்த கையோடு கனிமொழி வீட்டில் சோதனை நடத்தும் செயலுக்கே திமுக கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு மாற்றாக நீராராடியாவின் வீட்டில் நடந்த சோதனைக்கு பின், அதன் அடிப்படையில் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இது ஓரளவு கவுரவம் காக்கும் என திமுக எதிர்பார்க்கிறது. அதற்கு அதிக எதிர்ப்பு இருக்காது என்றும் சி.பி.ஐ நம்புகிறது.
நடக்கட்டும் சி.பி.ஐ சோதனைநாடகங்கள். இவர்களின் நாடகத்தை வேடிக்கை பார்ப்பதை தவிர இந்திய குடிமகன் வேறு என் செய்ய முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
இந்தியன் என்பதில் பெருமை பட்டோம் எப்போது தெரியுமா? அண்ணல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை படித்த போது. எவ்வளவு நேர்...
-
இந்த 3 கேள்விகளை வைத்து அலைகற்றை விவகாரத்தில் ராசா ஊழல் செய்தாரா என்பதை நீங்களே துள்ளியமாக கணிக்கலாம். 1. விண்ணப்பிக்க 15 நாள் என்றிருந்த ...
-
மனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...
-
வலபதிவுகளில் சில பின்னூட்டங்களை படிக்கும்போது தானக நமக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த சிரிப்பை அடக்க சிலமணிதுளிகள் பிடிக்கும். அப்படி இன்று அ...
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத...
No comments:
Post a Comment