தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்த உள்ளது.
இதற்காக 6.11.2010 அன்று நடந்த கூட்டத்தில் தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்ப்பதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட வில்லை. மாறாக இது குறித்த இறுதி முடிவு எடுக்கும் நாள் 26.2.2011 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
6.11.2010 அன்றைய கூட்டத்தில் தகவல்தொடர்புதுறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். இதனால் ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது தகவல்தொடர்புதுறை அமைச்சராக கபில்சிபல் உள்ளார்.
இதனால் கிரந்தம் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடையவர்களின் பணி மிகமிக எளிமையாகிவிட்டது. ஆனால் தமிழர்களின் நிலை?
தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்க்கும் முயற்சி குறித்து உலகெங்கும் உள்ள குறிப்பாக தமிழகத்தில் உள்ள பலருக்கும் தெரியாது. இது இணைய ஊடகம் வழியாக மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மூத்த தமிழர் அறிஞர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தெரியாத நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு இந்த செய்தியை கொண்டு சேர்க்கும் பணியில் உள்ள பத்திரிக்கைகள் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ் ஒருங்குறியில் கிரந்த குளறுபடி வருவது நிச்சயம்.
தற்பொது உள்ள ஒரே ஆறுதல் வலைபதிவர்கள். இது குறித்து அனைவரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். தங்களுக்கு இயன்றவரை இணைய தொடர்பு இல்லாதவர்களிடமும் இந்த செய்தியை கொண்டு சேருங்கள்.
கிரந்தம் சேர்ப்பதற்கு எதிராக தங்கள் வலைபூவில் ஒருபதிவாவது எழுதி உங்கள் நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
இணைய தமிழர்களே உங்கள் கையில் தான் உள்ளது தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்வதும், அதை தடுப்பதும்.
இந்த பிரச்சனையை அப்படியே 26.2.2011க்கு விட்டுவிடாமல் இயன்றவரை தினமும் நினைவூட்டிக்கொண்டே இருங்கள்.
கூட்டு முயற்சிக்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்.
விபரங்களை தெரியப்படுத்துங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
உங்களுடைய நம்பிக்கையான பின்னூட்டங்களும், வார்த்தைகளும் என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளது நாம் விரைவில் சாதித்துக் காட்டுவோம்.
ReplyDeleteஇம்மாற்றங்களை கண்டித்து ஏற்கனவே பல பதிவுகள் வந்துவிட்டன. இப்போது ஆக்க பூர்வமான வழியில் இதெற்கென என்ன நாம் செய்ய வேண்டும் என சொல்லுங்கள்.
ReplyDeleteநன்றி.