ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழ்செம்மொழி என்பதற்கு அர்த்தமே இல்லை.
வீர தீரம் பேசும் புலிகேசி தமிழர்கள் வேண்டுமானால் இந்த எழுத்துக்களை சமசுகிருதம் இல்லை, கிரந்தம், இது தமிழ் எழுத்துக்கள் தான் என்று வெரும் வாயை மென்றுகொண்டு இருக்கலாம்.
ஆனால் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளி பாடம் முதற்கொண்டு உலகம் தழுவிய மொழி ஆய்வு வல்லுனர்கள் வரை இந்த எழுத்துக்களை சமசுகிருத எழுத்துக்களாகவே சொல்லி வருகின்றனர்.
தமிழுக்கு என்று ஒரு இலக்கண நடை உள்ளது. தொல்காப்பிய இலக்கணமும் இன்றைய இலக்கணத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. ஆனால் இந்த எழுத்துக்களை எங்கே சேர்ப்பது.
காலத்தின் கட்டாயம் இந்த எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் என்றால் முறையாக தமிழரிஞர்கள் கூடி இலக்கணத்துக்கு களங்கம் ஏற்படுத்தாமல் தமிழ் அட்டவணையில் சேர்த்து விடுங்கள். அல்லது வேண்டாம் என்றால் அதற்கு மாற்றை யோசியுங்கள்.
அதை விட்டுவிட்டு வேணும் வேண்டாம் என்று குருட்டு கண்ணன் காரை ஓட்டிய கதையாக இருந்தால் வடிவேலு போல ஊர்போய் சேர முடியாது.
ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது வெட்டிவிடுங்கள்
ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ எழுத்துக்களுக்கு மாற்றாக தாராளமாக ஃ ஆயுத எழுத்தை பயன்படுத்தலாம். இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்.
உங்களது ஆலோசனைகளையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.
ஃ பயன்படுத்தி எழுதுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
ஃசிடாலின் ஃசிபெயின் இப்படி ஒலிப்பதில் என்ன கடினம் இருக்கப்போகிறது ?
ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.
உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
தமிழ் மீது மரியாதை வைத்துள்ள வலைப்பதிவர்களே தமிழ் அறிஞர்களே, வாசகர்களே உங்கள் ஒத்துழைப்பு தேவை. தமிழுக்காக கொஞ்சம் சிந்தியுங்கள், ஒன்றுசேர்ந்து போரடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ...
-
தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே ...
-
சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார...
-
அலைகற்றை ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் புதுபுது முறைகேடுகளை வெளிக்கொண்டுவருகிறது. நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனைக்கு ஒத்துக்கொண்டால் ராசினாமா...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள். உலக அரங்கில் ராசபட...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
தமிழகத்தில் இருந்து காங்கிரசை கருவறுக்க ஒரு துணிச்சலான படை அடியளந்து வேலை செய்கிறது என்றால் நிச்சயம் அது சீமான் படை தான். என்ன பெரிய சீமான...
நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்.
ReplyDeleteஇதுவரை இந்த பதிவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
நான் கடந்த ஒரு மாதமாகத்தான் உங்களது பதிவுகளை பார்கிறேன்.