ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழ்செம்மொழி என்பதற்கு அர்த்தமே இல்லை.
வீர தீரம் பேசும் புலிகேசி தமிழர்கள் வேண்டுமானால் இந்த எழுத்துக்களை சமசுகிருதம் இல்லை, கிரந்தம், இது தமிழ் எழுத்துக்கள் தான் என்று வெரும் வாயை மென்றுகொண்டு இருக்கலாம்.
ஆனால் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளி பாடம் முதற்கொண்டு உலகம் தழுவிய மொழி ஆய்வு வல்லுனர்கள் வரை இந்த எழுத்துக்களை சமசுகிருத எழுத்துக்களாகவே சொல்லி வருகின்றனர்.
தமிழுக்கு என்று ஒரு இலக்கண நடை உள்ளது. தொல்காப்பிய இலக்கணமும் இன்றைய இலக்கணத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. ஆனால் இந்த எழுத்துக்களை எங்கே சேர்ப்பது.
காலத்தின் கட்டாயம் இந்த எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் என்றால் முறையாக தமிழரிஞர்கள் கூடி இலக்கணத்துக்கு களங்கம் ஏற்படுத்தாமல் தமிழ் அட்டவணையில் சேர்த்து விடுங்கள். அல்லது வேண்டாம் என்றால் அதற்கு மாற்றை யோசியுங்கள்.
அதை விட்டுவிட்டு வேணும் வேண்டாம் என்று குருட்டு கண்ணன் காரை ஓட்டிய கதையாக இருந்தால் வடிவேலு போல ஊர்போய் சேர முடியாது.
ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது வெட்டிவிடுங்கள்
ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ எழுத்துக்களுக்கு மாற்றாக தாராளமாக ஃ ஆயுத எழுத்தை பயன்படுத்தலாம். இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்.
உங்களது ஆலோசனைகளையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.
ஃ பயன்படுத்தி எழுதுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
ஃசிடாலின் ஃசிபெயின் இப்படி ஒலிப்பதில் என்ன கடினம் இருக்கப்போகிறது ?
ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.
உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
தமிழ் மீது மரியாதை வைத்துள்ள வலைப்பதிவர்களே தமிழ் அறிஞர்களே, வாசகர்களே உங்கள் ஒத்துழைப்பு தேவை. தமிழுக்காக கொஞ்சம் சிந்தியுங்கள், ஒன்றுசேர்ந்து போரடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்.
ReplyDeleteஇதுவரை இந்த பதிவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
நான் கடந்த ஒரு மாதமாகத்தான் உங்களது பதிவுகளை பார்கிறேன்.