‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். தக்க சமயத்தில் மீண்டும் ஈழப்போரை ஏற்று நடத்துவார் என்பது வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களின் வாதம். இவர்களின் ஆணித்தரமான பேச்சு பிரபாகரன் இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.
சக்கரை நோயால் அவதியுற்று இருந்த பிரபாகரன் மீண்டும் பழைய யுத்வேகத்துடன் களத்தில் இறங்க சில ராசதந்திர நடவடிக்கைகளை கையாண்டாக வேண்டும். உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் பிரபாகரன் இறுதி யுத்தத்தின் இரண்டாம் பாகத்துக்கு தயாராகி வருவதாக பலரும் நம்புகின்றனர்.
உலகநாடுகளிடம் நீலிக்கண்ணீர் வடித்து ஆயுதங்களையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டார் ராசபட்சே. போர்நெறிகளை மீறி நச்சுகுண்டுகளை பயன்படுத்தி கொத்துக்கொத்தாய் மக்களை கொன்று குவிப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதைவிட இந்த கொடூரத்தை சர்வதேச சமுதாயம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்பதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈழம் இறுதிபோரின் முதல்சுற்று தோழ்விக்கு இதுதான் முக்கிய காரணம்.
அடுத்து ஈழம் அமைய ஒரே வழி இந்தியா(தமிழகம்).
இலங்கை இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்து கொடுக்க இந்தியா ஒன்றும் ராசீவ் பரம்பரையின் பரம்பரை சொத்து அல்ல.
ராசிவ் கொலை என்ற ஒற்றை பேச்சில் ஈழத்தை அழித்து வருகிறது இந்தியா. இந்த பேச்சை மாற்றும் சக்தி தான் ஈழம் இறுதிப்போரின் இரண்டாம் பாகம். இந்த ஆயுதம் தயாராகி விட்டால் மருத்துவ ஓய்வில் இருக்கும் பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றி உலகை உரைய வைப்பார்.
காலம் கணிகிறது. காத்திரும்போம் ராசபட்சேவின் நரிவேசம் கலையும் கனத்துக்காக.
இந்தியாவின் மீது வெறுப்பை கொட்டி தீர்க்கும் உலக தமிழர்களுக்கு மீண்டும் ஒன்றை நினைவூட்டுகிறோம்
‘‘இந்தியா ஒன்றும் ராசீவ் பரம்பரையின் பரம்பரை சொத்து அல்ல.’’
‘‘ ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்தை விட, 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து தான் மிக முக்கியமானது.’’
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே ...
-
நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் அரட்டை அடிப்பது. இது தான் வழக்கம், ஆனால் வலைபதிவர்கள் வெறும் அரட்டை அடிக்கும் கும்பலாக இருப்பதில் அர்த்தமில்லை...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார...
-
ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்...
-
செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. ...
இனி என்ன தான இந்தியா தலையால் நின்றாலும் ஈழத்தமிழர்கள் என்றும் இந்தியா என்ற நாட்டிற்கு துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி
ReplyDelete