கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
லஞ்சம் வாங்காத அதிகாரிகளையே லஞ்சம் வாங்கவைத்த பத்திரிக்கையாளர் குறித்த பதிவு மாவட்ட ஆட்சியர் வரை பார்வையிடப்பட்டது குறித்து பெருமிதப்பட்டுக்கொண்டார்.
ஆனால் அடுத்து அவர் பொதுமக்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு நியாயமாகவே பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர், போக்குவரத்து உட்பட பல அரசு அலுவலகங்களுக்கு சிறு சிறு விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் வருகின்றனர். சாதாரன மக்கள் தாமாகவே முன்வந்து சிறிய தொகையை லஞ்சமாக கொடுக்கின்றனர். சில அதிகாரிகள் கமுக்கமாக வாங்கிக்கொண்டு கூடுதலாக கேட்கின்றனர். சில நேர்மையான அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை.
ஆனால் லஞ்சம் வாங்காத அதிகாரியை பொதுமக்கள் நம்புவதில்லை. லஞ்சம் வாங்கினால் நிச்சயமாக காரியம் நடந்துவிடும் என மக்கள் நம்புகின்றனர். லஞ்சம் வாங்காவிட்டால் அவர்கள் சந்தேக பார்வையுடனேயே செல்கின்றனர். நியாயமான காரணங்களுக்காக ஒரு சில நாட்கள் கோப்பை ஒத்திவைத்தால் கூட அதிகாரியை நம்புவதில்லை, புலம்பி தீர்க்கின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
லஞ்சம் கொடுத்தால் காரியம் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் முறையாக சரியான ஆவணங்களை கொண்டுவருவதில்லை.
99% மக்கள் தங்கள் காரியங்களை விரைவில் சாதித்துக்கொள்ள தானாக முன்வந்து லஞ்சம் கொடுக்கின்றனர். இதில் நடக்கும் பேரத்தில் தான் பிரச்சனையே வருகிறது.
லஞ்சம் வாங்காத அதிகாரியை 1% மக்கள் கூட நம்புவதில்லை, பாரட்டுவதில்லை. இது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பா...
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்த...
-
தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் க...
-
நக்கீரன், விகடன், குமுதம் போன்ற வார இதழ்களை படிக்கவே முடிவில்லை. எப்படி இவர்கள் பார்வையில் மட்டும் கேரளாவில் தமிழர்கள் அடிவாக்குகிறார்கள் என...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
முல்லைப்பெரியாரில் புதிய அணை வேண்டாம் என கேரள போராட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் முல்லைப்பெரியாறு பாத...
-
நீங்கள் சன் டையரக்ட் வைத்திருப்பவரா? உங்கள் ரிசீவர் பாக்சில் This CPE is the Property of Sun Direct TV Pvt Ltd இப்படி எழுதியிருக்கிறதா...
-
ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்...
-
நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
No comments:
Post a Comment