விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது.
சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது.
அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை.
அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது.
அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே.
அதே போல தான்.
நடிகைகளின் அந்தரங்களை வெளியிடுவதால் எந்த பொதுசனத்துக்கும் ஒரு பருக்கை சோறுகிடைக்கப்போவதில்லை. ஆனால் வெளியிடும் பத்திரிக்கை முதலாளி குறைந்தது பத்து வட்டல் சோறாவது திண்ணலாம்.
விசயகுமார் - வனிதா குடும்பத்தில் நடக்கும் சண்டை இந்தியாவில் வேறு எந்த குடும்பத்திலும் நடக்காத சண்டை அல்ல. அது பொதுநோக்கு சண்டையும் அல்ல. அப்படி இருக்க இந்த பத்திரிக்கைக்கு மட்டும் அதில் என்ன அலாதி பிரியம்.
தங்கள் குடும்பத்தில் சொத்து சண்டை இல்லை என்று கூறும் மனசாட்சி உள்ளவர்கள் விசயகுமார் - வனிதா சண்டையை விமர்சித்து எழுதட்டும்.
பின்குறிப்பு: தன் வீட்டு சொத்து சண்டையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர் அதை மீடியா வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று 10 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஒரு மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. அதே அவர் பிரச்சனையில் எதாவது ஒரு பெண் சம்மந்தப்பட்டிருக்கட்டும், பல பத்திரிக்கைகளின் கிளை அலுவலகமே அவர் வீட்டில் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
இலங்கை ராசபட்சே அரசின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக மற்றும் ஒரு காணொளியை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழப்பெண்களை...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
இனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் "எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
அதே அவர் பிரச்சனையில் எதாவது ஒரு பெண் சம்மந்தப்பட்டிருக்கட்டும், பல பத்திரிக்கைகளின் கிளை அலுவலகமே அவர் வீட்டில் இருக்கும். //
ReplyDeleteஅதே.
:(
நண்பரே அவுங்க வீட்டுல உள்ள விஷயத்தை அவுங்களே ஒண்ணா கூடி பேசி முடிச்சுக்கணும்.
ReplyDeleteஅவுங்க குடும்ப விஷயத்தை மீடியாவுக்கு தெரிவுக்கும்போது அது அப்படித்தான் வரும். இரண்டாவது
நம்ம மீடியாவுக்கு சின்ன தீகுச்சி இருந்த பத்தாது பெரிய தீ பிழம்பா வந்துரும்ல.