தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் இப்படி பல கட்டங்களை கட்சிகள் சந்திக்க வேண்டி உள்ளது.
முன்னதாக இன்னும் 2 மாதத்தில் தமிழக சட்டமேலவை தேர்தல் வேற இருக்கு. அதற்குள் கூட்டணியை முடிவுசெய்யவெண்டிய கட்டாயத்தில் கட்சிகள் உள்ளன.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரசு கட்சிகள் பேச்சுவார்த்தையை முடித்து விட்டன. தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, கம்யூனிசுட்டுகளுக்கு கூட்டணியில் இடம் இல்லாத நிலையில் இருதலைகொள்ளியாக தவித்து வருகின்றன.
காங்கிரசு போய்விட்டால் திமுகவிடம் இருக்கும் ஒரே கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான். கூட்டணி தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை செயலலிதாவும், கருணாநிதியும் உறுதியாக நம்புகின்றனர்.
திமுக கூட்டணியில் கம்யூனிசுட்டுகளை இழுக்கும் முயற்சியை கருணாநிதி தொடங்க அது எளிதிலேயே முடிந்தது.
காங்கிரசு போனால் அடுத்த நிமிடம் திமுக கூட்டணியில் இரு இடதுசாரிகட்சிகளும் இருக்கும் என்ற உறுதியை உயர்மட்ட தலைவர்களே கொடுத்து விட்டனர்.
அதே போல பாமகவும் திமுக பக்கம் சாய்கிறது.
அதிமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காது என்பதை முன்னரே யூகித்துக்கொண்டனர். ஆனாலும் விசயகாந்த், காங்கிரசு, பாமக, கொமுக, இதரம் உட்பட கட்சிகளை இணைத்து மூன்றாம் அணி உருவாக்கும் முயற்சியை பாமக இன்னும் கைவிடவில்லை. இது நடக்காத பட்சத்தில் சேர்ந்த உதிரி கட்சிகளோடு திமுகவிடம் சரணடைவது என்பது என பாமக முடிவு செய்துள்ளது.
காலங்கள் செல்ல கோலங்களின் மாற்றம் வேகமாகவே இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது. தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அ...
-
கோவையில் வரும் ஞாயிறு அன்று இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல் உதயமாகிறது. கோவை வலைப்பதிவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு வரவேற்புக்கள். ...
-
இந்த படங்கள் சொல்லும் செய்தி என்ன? ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம் ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர். சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை ப...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
No comments:
Post a Comment