தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் இப்படி பல கட்டங்களை கட்சிகள் சந்திக்க வேண்டி உள்ளது.
முன்னதாக இன்னும் 2 மாதத்தில் தமிழக சட்டமேலவை தேர்தல் வேற இருக்கு. அதற்குள் கூட்டணியை முடிவுசெய்யவெண்டிய கட்டாயத்தில் கட்சிகள் உள்ளன.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரசு கட்சிகள் பேச்சுவார்த்தையை முடித்து விட்டன. தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, கம்யூனிசுட்டுகளுக்கு கூட்டணியில் இடம் இல்லாத நிலையில் இருதலைகொள்ளியாக தவித்து வருகின்றன.
காங்கிரசு போய்விட்டால் திமுகவிடம் இருக்கும் ஒரே கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான். கூட்டணி தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை செயலலிதாவும், கருணாநிதியும் உறுதியாக நம்புகின்றனர்.
திமுக கூட்டணியில் கம்யூனிசுட்டுகளை இழுக்கும் முயற்சியை கருணாநிதி தொடங்க அது எளிதிலேயே முடிந்தது.
காங்கிரசு போனால் அடுத்த நிமிடம் திமுக கூட்டணியில் இரு இடதுசாரிகட்சிகளும் இருக்கும் என்ற உறுதியை உயர்மட்ட தலைவர்களே கொடுத்து விட்டனர்.
அதே போல பாமகவும் திமுக பக்கம் சாய்கிறது.
அதிமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காது என்பதை முன்னரே யூகித்துக்கொண்டனர். ஆனாலும் விசயகாந்த், காங்கிரசு, பாமக, கொமுக, இதரம் உட்பட கட்சிகளை இணைத்து மூன்றாம் அணி உருவாக்கும் முயற்சியை பாமக இன்னும் கைவிடவில்லை. இது நடக்காத பட்சத்தில் சேர்ந்த உதிரி கட்சிகளோடு திமுகவிடம் சரணடைவது என்பது என பாமக முடிவு செய்துள்ளது.
காலங்கள் செல்ல கோலங்களின் மாற்றம் வேகமாகவே இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர். ...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
திமுக - காங்கிரசு உறவில் விரிசல் வரும்போது எல்லாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னர் வீரப்பமொய்லியின் அறிக்கை பறந்துவந்திருக்கும். கூட்டணி...
-
இன்று நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் அலைகற்றை ஊழல் வழக்கில் மன்மோன்சிங்கின் பங்கு தான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. மன்மோகன் சிங்கின் ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய பீட்டர் அல்போன்ஸ் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்காக நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத...
-
தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நட...
No comments:
Post a Comment