வாடகை வேனில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட குழந்தைகள் காணாமல் போனல் மனம் பதரும் பதட்டம் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும். ஆனால் அதே குழந்தைகள் சடலமாக தண்ணீரில் மிதக்கும் கொடுமையை எப்படி சொல்வது?
பணத்துக்காக மனிதர்களை கடத்திய பயங்கரவாதிகள், பெரும் கொள்ளையர்கள் கூட கொலைசெய்வது அரிது. ஆனால் இந்த இரு பிஞ்சுகளை கொலை செய்ய எப்படி மனம் வந்தது?
கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள துணிக்கடை அதிபரின் 12, 7 வயதே ஆன இரு குழந்தைகளையும் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மக்களை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
அம்மா, அப்பா, ஆசிரியர் இவர்களுக்கு அடுத்த படியாக குழந்தைகள் அதிக உரிமை எடுத்துக்கொள்வது டிரைவர் மாமா. எந்த கவலையையும் தயங்காமல் சொல்லக்கூடிய ஒரே வடிகால் டிரைவர் மாமா. அத்தனை டிரைவர் மாமாக்களும் தன் குழந்தைகளை போலவே வேனில், ஆட்டோவில், காரில் வரும் பிற குழந்தைகளையும் பாவிக்கின்றனர்.
ஆனால் அப்படிப்பட்ட டிரைவர் மாமாக்களில் எப்படி உருவானார்கள் இந்த கொடூரர்கள்?
குந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் தொழில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
சில கொள்ளையர்களுக்கு பணம் கிடைக்கிறது. சிலருக்கு சிறை கிடைக்கிறது. சிலர் மீட்கப்படுகின்றனர். சிலர் கொல்லப்படுகின்றனர். காவல்துறை வழக்கம்போல தன் கடமையை செய்கிறது.
ஆனால் இதற்கு முடிவு?
காவல் துறை, சட்டம் இவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் காவல்துறை, சட்டம், தண்டனை இவற்றின் மீது கொஞ்சம் கூட குற்றவாளிகளுக்கு பயம் வரவில்லை என்பது தான் நிதர்சன உண்மை.
கொலை செய்தால், எளிமையாக தப்பித்து விடலாம், போலீஸ் கண்டுபிடிக்காது, அப்படியே கண்டுபிடித்தாலும் ஜாமீன் கிடைக்கும், ஜாமீன் கிடைக்கா விட்டாலும் அதிகபட்சம் 15 வருடங்களுக்கு மேல் வழக்கை இழுத்தடிக்கலாம். டேபிள் டாப்பிள் உக்காத்திருக்கும் நீதிபதியை பணத்துக்காக பேசும் வக்கீல் பார்த்துக்கொள்வார். அதுவரை சிறையில் சொகுசு வாழ்க்கை. பின்னர் கருணை மனு அப்படி இப்படி 5 வருடம் ஓடிவிடும். அதற்கு அப்புறம் 50 வயசுககு மேல் இருந்தால் என்ன? தூக்கில் தொங்கினால் என்ன?
ரவுடிகள் தேவை என்று விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளும், டேபிள் டாப்பில் உட்காத்திருக்கம் நீதிபதிளும் இருக்கும் வரை யாரின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.
இப்போது மனைவி குழந்தைகளோடு உயிரோடு இருக்கிறோம். அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். அடுத்த நிமிடத்தை பற்றி யோசிக்காதீர்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பா...
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்த...
-
தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் க...
-
நக்கீரன், விகடன், குமுதம் போன்ற வார இதழ்களை படிக்கவே முடிவில்லை. எப்படி இவர்கள் பார்வையில் மட்டும் கேரளாவில் தமிழர்கள் அடிவாக்குகிறார்கள் என...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
முல்லைப்பெரியாரில் புதிய அணை வேண்டாம் என கேரள போராட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் முல்லைப்பெரியாறு பாத...
-
நீங்கள் சன் டையரக்ட் வைத்திருப்பவரா? உங்கள் ரிசீவர் பாக்சில் This CPE is the Property of Sun Direct TV Pvt Ltd இப்படி எழுதியிருக்கிறதா...
-
ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்...
-
நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
No comments:
Post a Comment