வாடகை வேனில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட குழந்தைகள் காணாமல் போனல் மனம் பதரும் பதட்டம் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும். ஆனால் அதே குழந்தைகள் சடலமாக தண்ணீரில் மிதக்கும் கொடுமையை எப்படி சொல்வது?
பணத்துக்காக மனிதர்களை கடத்திய பயங்கரவாதிகள், பெரும் கொள்ளையர்கள் கூட கொலைசெய்வது அரிது. ஆனால் இந்த இரு பிஞ்சுகளை கொலை செய்ய எப்படி மனம் வந்தது?
கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள துணிக்கடை அதிபரின் 12, 7 வயதே ஆன இரு குழந்தைகளையும் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மக்களை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
அம்மா, அப்பா, ஆசிரியர் இவர்களுக்கு அடுத்த படியாக குழந்தைகள் அதிக உரிமை எடுத்துக்கொள்வது டிரைவர் மாமா. எந்த கவலையையும் தயங்காமல் சொல்லக்கூடிய ஒரே வடிகால் டிரைவர் மாமா. அத்தனை டிரைவர் மாமாக்களும் தன் குழந்தைகளை போலவே வேனில், ஆட்டோவில், காரில் வரும் பிற குழந்தைகளையும் பாவிக்கின்றனர்.
ஆனால் அப்படிப்பட்ட டிரைவர் மாமாக்களில் எப்படி உருவானார்கள் இந்த கொடூரர்கள்?
குந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் தொழில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
சில கொள்ளையர்களுக்கு பணம் கிடைக்கிறது. சிலருக்கு சிறை கிடைக்கிறது. சிலர் மீட்கப்படுகின்றனர். சிலர் கொல்லப்படுகின்றனர். காவல்துறை வழக்கம்போல தன் கடமையை செய்கிறது.
ஆனால் இதற்கு முடிவு?
காவல் துறை, சட்டம் இவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் காவல்துறை, சட்டம், தண்டனை இவற்றின் மீது கொஞ்சம் கூட குற்றவாளிகளுக்கு பயம் வரவில்லை என்பது தான் நிதர்சன உண்மை.
கொலை செய்தால், எளிமையாக தப்பித்து விடலாம், போலீஸ் கண்டுபிடிக்காது, அப்படியே கண்டுபிடித்தாலும் ஜாமீன் கிடைக்கும், ஜாமீன் கிடைக்கா விட்டாலும் அதிகபட்சம் 15 வருடங்களுக்கு மேல் வழக்கை இழுத்தடிக்கலாம். டேபிள் டாப்பிள் உக்காத்திருக்கும் நீதிபதியை பணத்துக்காக பேசும் வக்கீல் பார்த்துக்கொள்வார். அதுவரை சிறையில் சொகுசு வாழ்க்கை. பின்னர் கருணை மனு அப்படி இப்படி 5 வருடம் ஓடிவிடும். அதற்கு அப்புறம் 50 வயசுககு மேல் இருந்தால் என்ன? தூக்கில் தொங்கினால் என்ன?
ரவுடிகள் தேவை என்று விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளும், டேபிள் டாப்பில் உட்காத்திருக்கம் நீதிபதிளும் இருக்கும் வரை யாரின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.
இப்போது மனைவி குழந்தைகளோடு உயிரோடு இருக்கிறோம். அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். அடுத்த நிமிடத்தை பற்றி யோசிக்காதீர்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ...
-
தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே ...
-
சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார...
-
அலைகற்றை ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் புதுபுது முறைகேடுகளை வெளிக்கொண்டுவருகிறது. நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனைக்கு ஒத்துக்கொண்டால் ராசினாமா...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள். உலக அரங்கில் ராசபட...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
தமிழகத்தில் இருந்து காங்கிரசை கருவறுக்க ஒரு துணிச்சலான படை அடியளந்து வேலை செய்கிறது என்றால் நிச்சயம் அது சீமான் படை தான். என்ன பெரிய சீமான...
No comments:
Post a Comment