Nov 28, 2010

அதிமுக-காங்கிரசு-தேமுதிக கூட்டணி : தொகுதி உடன்பாட்டில் சிக்கல்

அதிமுக கூட்டணியில் தேமுதிக காங்கிரசு கட்சிகள் இணைவது என ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டிருந்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் சனவரியில் அனைத்து கட்சிகளும் வெளியிட உள்ளன.

இந்நிலையில் 236 தொகுதிகளில் அதிமுக 136,  தேமுதிக 50, காங்கிரசு 50 என தொகுதி ஒதுக்கீட்டு உடன்பாட்டில் தான் இழுபறி இருந்துவருகிறது.

 50 ஆண்டு கால கட்சிக்கும் 5 ஆண்டு கால கட்சிக்கும் ஒரே அளவு தொகுதிகள் ஒதுக்கவதை காங்கிரசார் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுக்கு 60 ம் தேமுதிகவுக்கு 40 ஒதுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வருகிறது.

திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கிடைத்தால் திமுக கூட்டணியிலேயே தொடர்வது, ஆட்சியில் பங்கு என்ற கணக்கீட்டில் உறுதியாக இருக்கிறது காங்கிரசு.

தமிழகத்தில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட்டு பலத்தை கணக்கிட்டு பார்க்கும் சோதனை, அல்லது காங்கிரசு தலைமையில் கூட்டணி இந்த இரண்டு விடயங்களை ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார்.

 தனித்து போட்டியிட்டால் காங்கிரசு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெரும் என்பதை தமிழக காங்கிரசின் அனைத்து தரப்பு தலைவர்களும் ஒருமனதாக விளக்கி விட்டனர். 


 தனித்து போட்டி என்று அறிவித்தால் கட்சியே உடைந்துவிடும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக காங்கிரசே முகவரி இல்லாமல் போகிவிடும் என்பதையும் உளவுதுறை மூலம் ராகுலுக்கு புரியவைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி உள்ளனர் கட்சியினர்.

50 தொகுதிகள் கிடத்தாலும், அதிமுக கூட்டணியில் இடம்பிடித்து விசயகாந்த மூலம் அதிமுக ஆட்சியில் பங்கு கேட்கும் கணக்கை தான் காங்கிரசார் நம்புகின்றனர்.

அதிமுக 136 தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயமாக ஆட்சிக்கான பெரும்பான்மை கிடைக்காது. அதே நேரத்தில் சிறுபான்மை அரசை செயலலிதா விரும்ப மாட்டார். கூட்டணி ஆட்சிக்கு அதுவே சாதகம் என்பது காங்கிரசு,மற்றும் விசயகாந்தின் கணிப்பு.

ஆனால் கருணாநிதியை எதிர்த்து 20 வருடங்களாக அரசியல் நடத்திவரும் செயலலிதாவின் கணக்கு காங்கிரசையும், விசயகாந்தையும் தலைசுற்ற வைக்க இருக்கிறது.

4 comments:

  1. தனித்து போட்டியிட்டால் காங்கிரசு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெரும் என்பதை தமிழக காங்கிரசின் அனைத்து தரப்பு தலைவர்களும் ஒருமனதாக விளக்கி விட்டனர். ரெண்டு தொகுதியா.....ஏண்டா எங்க மக்கள கொன்னு குவிச்சதுக்கு நாங்க ரெண்டு பேர் கூட ஒட்டுப்போட மாட்டோம் காங்கிரஸ் பனாதி நாய்களுக்கு...

    ReplyDelete
  2. ADMK SHOULD MAKE ALAIANCE WITH ONLY VIJAYKANTH OR CONGRESS
    NOT WITH THEM TOGHER
    IF ONE ALLINACE ANY ONE CONGRESS R VIJAYKANTH ONLY MAKES JAYALALITHA TO MOVE EASY
    AND TO WIN IN SINGLE MAJORITY
    ALIANCE WITH BOTH VIJAYKANTH AND CONGRESS WILL MAKE PROBLEM FOR JAYA LALITHA

    ReplyDelete
  3. ADMK SHOULD BE WITH EITHER VIJAYKANTH OR CONGRESS
    NOT WITH THEM TOGHER.
    SHE HAS TO DECIDE IF CONGRESS OR VIJAYKANTH BUT ANY ONE ONLY THIS MAKES JAYALALITHA TO MOVE EASY
    AND TO WIN IN SINGLE MAJORITY.
    ALIANCE WITH BOTH VIJAYKANTH AND CONGRESS WILL MAKE PROBLEM FOR JAYALALITHA IN FUTURE
    SEAT ALLOCATIONS SHOULD BE LIKE
    ADMK-160
    VIJAYKANTH/CONGRESS-55
    MDMK-2
    IF THIRUMA -5
    OTHERS-14
    THIS WILL MAKE J.J SURE WIN IN SINGLE MAJORITY
    IN THIS UPCOMING ELECTION

    ReplyDelete
  4. ஆ தி மு கா இந்த தடவ கூட்டணி எவ்வளவு தொகுதி கேட்குதோ அத குடுத்து சமரசமா
    போறதுதான் நல்லது.
    நான் சொல்லி என்ன நடக்கபோகுது எல்லாம் கடவுள் விட்ட வழி.
    kumar.navink@gmail.com

    ReplyDelete

Popular Posts