ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழ்செம்மொழி என்பதற்கு அர்த்தமே இல்லை.
வீர தீரம் பேசும் புலிகேசி தமிழர்கள் வேண்டுமானால் இந்த எழுத்துக்களை சமசுகிருதம் இல்லை, கிரந்தம், இது தமிழ் எழுத்துக்கள் தான் என்று வெரும் வாயை மென்றுகொண்டு இருக்கலாம்.
ஆனால் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளி பாடம் முதற்கொண்டு உலகம் தழுவிய மொழி ஆய்வு வல்லுனர்கள் வரை இந்த எழுத்துக்களை சமசுகிருத எழுத்துக்களாகவே சொல்லி வருகின்றனர்.
தமிழுக்கு என்று ஒரு இலக்கண நடை உள்ளது. தொல்காப்பிய இலக்கணமும் இன்றைய இலக்கணத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. ஆனால் இந்த எழுத்துக்களை எங்கே சேர்ப்பது.
காலத்தின் கட்டாயம் இந்த எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் என்றால் முறையாக தமிழரிஞர்கள் கூடி இலக்கணத்துக்கு களங்கம் ஏற்படுத்தாமல் தமிழ் அட்டவணையில் சேர்த்து விடுங்கள். அல்லது வேண்டாம் என்றால் அதற்கு மாற்றை யோசியுங்கள்.
அதை விட்டுவிட்டு வேணும் வேண்டாம் என்று குருட்டு கண்ணன் காரை ஓட்டிய கதையாக இருந்தால் வடிவேலு போல ஊர்போய் சேர முடியாது.
ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது வெட்டிவிடுங்கள்
ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ எழுத்துக்களுக்கு மாற்றாக தாராளமாக ஃ ஆயுத எழுத்தை பயன்படுத்தலாம். இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்.
உங்களது ஆலோசனைகளையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.
ஃ பயன்படுத்தி எழுதுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
ஃசிடாலின் ஃசிபெயின் இப்படி ஒலிப்பதில் என்ன கடினம் இருக்கப்போகிறது ?
ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.
உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
தமிழ் மீது மரியாதை வைத்துள்ள வலைப்பதிவர்களே தமிழ் அறிஞர்களே, வாசகர்களே உங்கள் ஒத்துழைப்பு தேவை. தமிழுக்காக கொஞ்சம் சிந்தியுங்கள், ஒன்றுசேர்ந்து போரடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
தனிஈழம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சனை, தமிழ்தேசியம் இப்படி தமிழர்களின் தீராத பிரச்சனையை தீர்க்க இதை விட சிறந்த யோசனை இருக்குமா?. தன...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
அதிமுக அணியில் இருந்து வைகோ பிரிந்து தனித்துபோட்டியிட உள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சராசரியாக 4% வாக்குகளை மதி...
-
தமிழக சட்டசபை தேர்தல் 2011 வெற்றி குறித்த கருத்துக்கணிப்பை இந்தியா டுடே(கெட்லைன்சு டுடே) பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2006 தேர்...
நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்.
ReplyDeleteஇதுவரை இந்த பதிவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
நான் கடந்த ஒரு மாதமாகத்தான் உங்களது பதிவுகளை பார்கிறேன்.