கோவை குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர்பார்த்ததை போல மனோகர் அப்ரூவராக மாறியுள்ளார்.
கோவையில் குழந்தைகள் இருவர் கடத்தி கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக டிரைவர்கள் மோகன்ராசு, மனோகரன் கைது செய்யப்பட்டனர். போலீசு என் கவுண்டரில் மோகன்ராசு சுட்டுக் கொல்லப்பட்டான்.
குழந்தைகள் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய விசாரணை கைதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டாம் விசாரணை கைதியை வைத்து மேற்கொண்டு விசாரணைகள் நடந்தது.
காவல் உதவி ஆணையர் குமாரசாமியை தனி அதிகாரியாக கொண்ட தனிப்படை குற்றப்பத்திரிக்கை தயாரித்துள்ளது.
குழந்தைகளின் பாட்டி, மனோகரனின் நண்பர்கள், மோகன்ராசுவின் நண்பர்கள் உள்பட 60 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மனோகரன் தற்போது அப்ரூவராக மாறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் கடத்தப்பட்டது முதல் கொலை செய்யப்பட்டது வரையிலான அனைத்து சம்பவங்களையும் ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளான் மனோகரன்.
இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆரம்பத்தில் மோகன்ராசு கடத்தினான், மனோகர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்றான் என போலீசு தரப்பு கூறியது. மோகன்ராசு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மனோகர் அப்ரூவராக மாறியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மனோகர் தரப்பு வாக்குமூலம் என்ன என்பதை பொருத்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும். தான் செய்யவில்லை, மோகன்ராசு தான் எல்லாம் செய்தான் என மனோகர் அப்ரூவராக மாறியிருந்தால் அதை மறுக்க மோகன்ராசுவின் ஆவி நிதிமன்றத்துக்கு வரப்போவதில்லை.
பொருத்திருந்து பார்ப்போம்.
பின்குறிப்பு : என்கவுன்டர் வழக்கில் அண்ணாதுரை அப்ரூவராவது எப்போது?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனிப்பட்டவர்கள். மொழி, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், ஆட்சிமுறை, நன்னெறிகள், கடவுள் கொள்கை என அனை...
-
2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓ...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
கோவையில் தீண்டாமை சுவர் இடிப்பு என்ற செய்தியை இரு தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிக்கைளிலும் படித்திருப்பீர்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம்,...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவ...
-
திராவிட கட்சிகளை கண்டு மிரண்டு கிடந்த காங்கிரசு இன்று அசுரசக்தி பெற்றது எப்படி? மக்கள் செல்வாக்கு பெற்ற காமராசர், மூப்பனார், போன்ற தலைவர்க...
No comments:
Post a Comment