கோவை குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர்பார்த்ததை போல மனோகர் அப்ரூவராக மாறியுள்ளார்.
கோவையில் குழந்தைகள் இருவர் கடத்தி கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக டிரைவர்கள் மோகன்ராசு, மனோகரன் கைது செய்யப்பட்டனர். போலீசு என் கவுண்டரில் மோகன்ராசு சுட்டுக் கொல்லப்பட்டான்.
குழந்தைகள் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய விசாரணை கைதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டாம் விசாரணை கைதியை வைத்து மேற்கொண்டு விசாரணைகள் நடந்தது.
காவல் உதவி ஆணையர் குமாரசாமியை தனி அதிகாரியாக கொண்ட தனிப்படை குற்றப்பத்திரிக்கை தயாரித்துள்ளது.
குழந்தைகளின் பாட்டி, மனோகரனின் நண்பர்கள், மோகன்ராசுவின் நண்பர்கள் உள்பட 60 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மனோகரன் தற்போது அப்ரூவராக மாறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் கடத்தப்பட்டது முதல் கொலை செய்யப்பட்டது வரையிலான அனைத்து சம்பவங்களையும் ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளான் மனோகரன்.
இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆரம்பத்தில் மோகன்ராசு கடத்தினான், மனோகர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்றான் என போலீசு தரப்பு கூறியது. மோகன்ராசு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மனோகர் அப்ரூவராக மாறியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மனோகர் தரப்பு வாக்குமூலம் என்ன என்பதை பொருத்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும். தான் செய்யவில்லை, மோகன்ராசு தான் எல்லாம் செய்தான் என மனோகர் அப்ரூவராக மாறியிருந்தால் அதை மறுக்க மோகன்ராசுவின் ஆவி நிதிமன்றத்துக்கு வரப்போவதில்லை.
பொருத்திருந்து பார்ப்போம்.
பின்குறிப்பு : என்கவுன்டர் வழக்கில் அண்ணாதுரை அப்ரூவராவது எப்போது?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ...
-
தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே ...
-
சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார...
-
அலைகற்றை ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் புதுபுது முறைகேடுகளை வெளிக்கொண்டுவருகிறது. நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனைக்கு ஒத்துக்கொண்டால் ராசினாமா...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள். உலக அரங்கில் ராசபட...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
தமிழகத்தில் இருந்து காங்கிரசை கருவறுக்க ஒரு துணிச்சலான படை அடியளந்து வேலை செய்கிறது என்றால் நிச்சயம் அது சீமான் படை தான். என்ன பெரிய சீமான...
No comments:
Post a Comment