நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப்படாததால் இதுவரை மாநகராட்சி கூட்டத்திற்கு சென்றதில்லை.
இன்று ஏதேசயாக சென்றேன். சட்ட மன்றம் போன்ற கம்பீரம் எல்லம் இருந்தது.
70 உறுப்பினர்கள் வருகையுடன் கலைகட்டியது.
மேயர் நடுவே அங்கியுடன் அமர்ந்திருக்க இடபுறம் துணைமேயரும், வலது புறம் மாநகராட்சி ஆணையரும் அமர்ந்திருந்தார்.
கூட்டம் துவங்கிய ஒருசில நிமிடங்களில் வழக்கம் போல கூச்சல் குழப்பம் என அமர்களப்பட்டது. வயதில் பெரிய உறுப்பினர்களின் வாக்குவாதம் கொஞ்சம் ரசிக்கும்படியாக தான் இருந்தது. ஆனாலும் ரகளை மட்டும் எரிச்சலை தந்தது.
மக்கள் பிரச்சனைகளை எப்படி அழகாக அமைதியாக விவாதிக்கலாம், ஆனால் இப்படி கூச்சல் போட்டுக்கொள்கிறார்களே என அருகில் இருந்த சக பத்திரிக்கையாளரிடம் கேட்டேன்.
தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் மாநகராட்சி கூட்டம் இவ்வளவு அமைதியாக நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்றார். ஓ இது தான் சிறந்த அமைதியோ என சிலாக்கித்துக்கொண்டேன்.
ஒரு அரை மணி நேரம் அமைதியாக பார்வையிட்டேன். ஏறத்தாழ எல்லா உறுப்பினர்களுமே பல முறை எழுந்து நின்று பேசி கூச்சல்போட்டனர். ஒரே ஒருவர் மட்டும் அமைதியாகவே இருந்தார். என்ன நினைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
அவர் வேறு யாரும் இல்லை மேடையில் அமர்ந்திருந்த மாநகராட்சி ஆணையர் தான்.
ஒவ்வொரு கூட்டத்தின் போதும் கூச்சல் குழப்பத்தை 2 மணிநேரம் வேடிக்கை பார்ப்பது தான் இவரது பணி. (வேறு என்ன செய்ய முடியும் குறுக்க பூந்து சண்டையை தடுக்கவா முடியும்).
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் செய்தி படிக்க இங்கு க்ளிக் .. . அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது இன்று இரவு முன்னாள் மத்திய தொலை த...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
3 கோடி ரூபாயுடன் முதலமைச்சர் வாழ்க்கையை துவங்கிய செயலலிதாவுக்கு அப்படி 68 கோடி ரூபாய் சொத்து வந்தது என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. இன்ற...
-
சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான். அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்...
-
பதிவர் திரு. தொப்பிதொப்பி அவர்களின் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவுக்கு செலுத்தும் தலைவணக்கம் தான் இந்த பதிவு: வலைபதிவர்கள் ...
No comments:
Post a Comment