நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப்படாததால் இதுவரை மாநகராட்சி கூட்டத்திற்கு சென்றதில்லை.
இன்று ஏதேசயாக சென்றேன். சட்ட மன்றம் போன்ற கம்பீரம் எல்லம் இருந்தது.
70 உறுப்பினர்கள் வருகையுடன் கலைகட்டியது.
மேயர் நடுவே அங்கியுடன் அமர்ந்திருக்க இடபுறம் துணைமேயரும், வலது புறம் மாநகராட்சி ஆணையரும் அமர்ந்திருந்தார்.
கூட்டம் துவங்கிய ஒருசில நிமிடங்களில் வழக்கம் போல கூச்சல் குழப்பம் என அமர்களப்பட்டது. வயதில் பெரிய உறுப்பினர்களின் வாக்குவாதம் கொஞ்சம் ரசிக்கும்படியாக தான் இருந்தது. ஆனாலும் ரகளை மட்டும் எரிச்சலை தந்தது.
மக்கள் பிரச்சனைகளை எப்படி அழகாக அமைதியாக விவாதிக்கலாம், ஆனால் இப்படி கூச்சல் போட்டுக்கொள்கிறார்களே என அருகில் இருந்த சக பத்திரிக்கையாளரிடம் கேட்டேன்.
தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் மாநகராட்சி கூட்டம் இவ்வளவு அமைதியாக நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்றார். ஓ இது தான் சிறந்த அமைதியோ என சிலாக்கித்துக்கொண்டேன்.
ஒரு அரை மணி நேரம் அமைதியாக பார்வையிட்டேன். ஏறத்தாழ எல்லா உறுப்பினர்களுமே பல முறை எழுந்து நின்று பேசி கூச்சல்போட்டனர். ஒரே ஒருவர் மட்டும் அமைதியாகவே இருந்தார். என்ன நினைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
அவர் வேறு யாரும் இல்லை மேடையில் அமர்ந்திருந்த மாநகராட்சி ஆணையர் தான்.
ஒவ்வொரு கூட்டத்தின் போதும் கூச்சல் குழப்பத்தை 2 மணிநேரம் வேடிக்கை பார்ப்பது தான் இவரது பணி. (வேறு என்ன செய்ய முடியும் குறுக்க பூந்து சண்டையை தடுக்கவா முடியும்).
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பி...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
No comments:
Post a Comment