இந்தியாவையே கலக்கி வரும் அலைக்கற்றை ஊழல் பிரச்சனையில் நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறைந்தபட்சம் 1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அளவிலான தொகைக்கு எவ்வளவு லஞ்சம் கைமாறி இருக்கும்? இதை யோசிக்கும் போது இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களையே கண்ணை கட்ட செய்கிறது.
அலைகற்றை ஊழல் என்பது ராசா என்ற ஒற்றை மனிதன் செய்திருக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.
எனவே அலைகற்றை ஒதுக்கீடு மோசடியின் ஆரம்ப மூலத்தை கண்டறியும் முயற்சியில் பல பத்திரிக்கைகள் இறங்கியுள்ளன.
முதல் கட்டமாக தயாநிதிமாறன் வரை இதற்கான ஆழம் சென்று நிற்கிறது.
2006 பிப்ரவரி 25 தேதி தயாநிதிமாறன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதம் முக்கிய சாட்சியாக எடுக்கப்பட்டுள்ளது.
அலைகற்றை ஒதுக்கீட்டு தொகை மற்றும் நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே முடிவு செய்துகொள்ளும் உரிமையை கோரியுள்ளார் தயாநிதிமாறன்.
அப்போது தி.மு.கவின் முழு தயவில் தான் காங்கிரசு அரசு இருந்தது. இதனால் தயாநிதிமாறனின் கோரிக்கையை நிராகிரிக்க முடியாத நிலையில் வழக்கம் போல பிரதமர் மன்மோகன்சிங் ரப்பர் முத்திரையானார்.
அடுத்து என்ன திட்டம் போட்டுவைத்திருந்தாரோ தயாநிதிமாறன், அதற்குள் பதவி பறிபோனது. தயாநிதிமாறன் போட்ட அடித்தளத்திற்கு ராசா பதவி ஏற்ற முதல் நாளே கைமேல் பலன்(பணம்) கிடைத்துள்ளது.
அந்த தொகை உடனடியாக ராசா தன் தலைவருக்கு குருதட்சணையாக்கிருக்கிறார். பின்னர் தான் 8 அடி 16 அடி 32 அடி என தாண்டி பல லட்சம் கோடி வரை தாண்டியுள்ளார். இது போன்ற பல அதிர்ச்சி தகவல்களும் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கூட்டி கழித்து பார்த்தால் இதற்கு அடித்தளம் அமைத்தவராக இப்போதைக்கு தயாநிதிமாறன் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார். அடுத்து இன்னும் ஆழமாக தோண்டப்படுகிறது.
அலைகற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு இழப்பு 1.76 லட்சம் கோடி உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த இழப்பை ஏற்படுத்த ராசாவுக்கு எத்தனை லட்சம் கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பதை பொருத்து ராசாவின் எதிர்காலம் அமைந்திருக்கிறது. இதில் தாயிநிதிமாறனும் கட்டாயமாக விசாரணை கூண்டில் ஏறவேண்டிய நாட்கள் நெருங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
ராசா கைது செய்யப்பட்டதை சி.பி.ஐ இன்று மாலை 5.45க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ராசா நிறுத்தப்படுகிறார். ஊழல், கூட்...
-
ராசாவை கைது செய்ய காங்கிரசை விட திமுக அதிக அழுத்தம் கொடுத்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அலைகற்றை ஊழல் ராசாவை கட்சியில் இருந்து நீக்க...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
அதிமுக கூட்டணியில் விசயகாந்த் சேரமாட்டார் என மு.க அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் இந்த பேட்டி அதிமுக கூட்டணியில் சிறிய கலக்கத்தை ஏற்படுத்திய...
-
செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. ...
No comments:
Post a Comment