இந்தியாவையே கலக்கி வரும் அலைக்கற்றை ஊழல் பிரச்சனையில் நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறைந்தபட்சம் 1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அளவிலான தொகைக்கு எவ்வளவு லஞ்சம் கைமாறி இருக்கும்? இதை யோசிக்கும் போது இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களையே கண்ணை கட்ட செய்கிறது.
அலைகற்றை ஊழல் என்பது ராசா என்ற ஒற்றை மனிதன் செய்திருக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.
எனவே அலைகற்றை ஒதுக்கீடு மோசடியின் ஆரம்ப மூலத்தை கண்டறியும் முயற்சியில் பல பத்திரிக்கைகள் இறங்கியுள்ளன.
முதல் கட்டமாக தயாநிதிமாறன் வரை இதற்கான ஆழம் சென்று நிற்கிறது.
2006 பிப்ரவரி 25 தேதி தயாநிதிமாறன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதம் முக்கிய சாட்சியாக எடுக்கப்பட்டுள்ளது.
அலைகற்றை ஒதுக்கீட்டு தொகை மற்றும் நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே முடிவு செய்துகொள்ளும் உரிமையை கோரியுள்ளார் தயாநிதிமாறன்.
அப்போது தி.மு.கவின் முழு தயவில் தான் காங்கிரசு அரசு இருந்தது. இதனால் தயாநிதிமாறனின் கோரிக்கையை நிராகிரிக்க முடியாத நிலையில் வழக்கம் போல பிரதமர் மன்மோகன்சிங் ரப்பர் முத்திரையானார்.
அடுத்து என்ன திட்டம் போட்டுவைத்திருந்தாரோ தயாநிதிமாறன், அதற்குள் பதவி பறிபோனது. தயாநிதிமாறன் போட்ட அடித்தளத்திற்கு ராசா பதவி ஏற்ற முதல் நாளே கைமேல் பலன்(பணம்) கிடைத்துள்ளது.
அந்த தொகை உடனடியாக ராசா தன் தலைவருக்கு குருதட்சணையாக்கிருக்கிறார். பின்னர் தான் 8 அடி 16 அடி 32 அடி என தாண்டி பல லட்சம் கோடி வரை தாண்டியுள்ளார். இது போன்ற பல அதிர்ச்சி தகவல்களும் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கூட்டி கழித்து பார்த்தால் இதற்கு அடித்தளம் அமைத்தவராக இப்போதைக்கு தயாநிதிமாறன் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார். அடுத்து இன்னும் ஆழமாக தோண்டப்படுகிறது.
அலைகற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு இழப்பு 1.76 லட்சம் கோடி உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த இழப்பை ஏற்படுத்த ராசாவுக்கு எத்தனை லட்சம் கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பதை பொருத்து ராசாவின் எதிர்காலம் அமைந்திருக்கிறது. இதில் தாயிநிதிமாறனும் கட்டாயமாக விசாரணை கூண்டில் ஏறவேண்டிய நாட்கள் நெருங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் செய்தி படிக்க இங்கு க்ளிக் .. . அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது இன்று இரவு முன்னாள் மத்திய தொலை த...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
3 கோடி ரூபாயுடன் முதலமைச்சர் வாழ்க்கையை துவங்கிய செயலலிதாவுக்கு அப்படி 68 கோடி ரூபாய் சொத்து வந்தது என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. இன்ற...
-
சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான். அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்...
-
பதிவர் திரு. தொப்பிதொப்பி அவர்களின் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவுக்கு செலுத்தும் தலைவணக்கம் தான் இந்த பதிவு: வலைபதிவர்கள் ...

No comments:
Post a Comment