விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இதன் பின்னனியில் இந்தியாவின் ராசதந்திரம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
இறப்பு சான்றிதழை கொடுக்க இலங்கை தயங்குவது எந்த ராசசந்திரத்தின் அடிப்படையோ, அதை எதிர்கொள்ளும் முன்கூர் நடவடிக்கை தான் இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பு.
இந்திய பெருங்கடலில் இலங்கையை காரணமாக வைத்து சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதை இந்தியாவும் மேற்குலக நாடுகளும் விரும்பவில்லை. நமட்டு சிரிப்புடன் இந்தியா எனது நண்பன் என ராசபட்சே சொல்லிக்கொள்வது ஒரு ஏளனம் என்பது இந்தியாவுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.
சீனாவை தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவுக்கு நல்லபிள்ளையாகிக்கொள்ள ராசப்டசே ஒன்றும் தெரியாத பிள்ளை இல்லை. இந்தியாவின் அதிகார பீடம் ராசீவ் குடும்பத்தின் பரம்பரை சொத்து அல்ல என்பது ராசபட்சேவுக்கு தெரியும். என்றாவது ஒரு நாள் ஈழப்போருக்கு இந்தியா பச்சை கொடி காட்டும் என்பதும் ராசப்டசேவின் அச்சம். இதற்காகவே சீனாவின் பிடியை இன்னும் இறுக்கிக்கொள்கிறது இலங்கை.
ஆனால் இந்தியாவின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. என்ன காரணத்திற்காக கட்சதீவை இலங்கைக்கு கொடுத்ததோ, அது இன்று கேள்விக்குறியாக உள்ளது. எதற்காக விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதங்களை அள்ளி கொடுத்தார்களோ அதுவும் கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இலங்கை என்ற நண்பன் இந்தியாவை காட்டிக்கொடுக்கும் கருணாவாகிவிடுவான் என்ற அச்சம் இந்தியாவுக்கு வர ஆரம்பித்து விட்டது.
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்பது இலங்கையின் சிரம்தாழ்ந்த கோரிக்கை. அதே ரீதியில் தான் இந்தியாவும் இங்ககையிடம் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ளும் கோரிக்கையை வைத்திருக்கிறது.
ஒன்றுக்கொன்று இறுக்கி இழுக்கும் இந்த கோரிக்கை முடிச்சு அவிழ்ந்துவிட்டால், இருநாடுகளும் உச்சகட்ட எதிரிளாகிவிடுவார்கள்.
விடுதலை புலிகளை வளர்த்துவிட்டவர்கள் யார் என்பதை இலங்கை மறந்துவிடவில்லை. அதேபோல இன்னொரு ஈழப்போருக்கு இந்தியா பின்னனி வகுக்க தயாங்காது என்பதையும் இலங்கை யோசிக்காமல் இல்லை.
எவ்வளவு நாள் தான் இந்தியாவிடம் பணிந்திருப்பது? இலங்கை வெகுநாட்களுக்கு முன்பே யோசிக்க துவங்கி விட்டது. ஆனால் இந்தியா இப்போது தான் சுதாகரித்துக்கொண்டுள்ளது.
எவ்வளவு நாள் தான் சீனாவிடம் ஒட்டாதே என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக்கொடுப்பது? தடையை நீக்கமாட்டோம், நீக்கமாட்டோம் என்ற பரிவுப்பேச்சுக்கு இலங்கை தந்த பரிசு நமட்டு சிரிப்பு மட்டுமே.
அடுத்து ஏன் தடையை நீக்கக்கூடாது என்ற பூச்சான்டி காட்டும் வித்தையை இந்தியா கையில் எடுத்திருக்கிறது.
பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற சி.பி.ஐ அறிக்கைக்கு பின்னால் உள்ள ராசதந்திரமும் இது தான்.
இந்த பூச்சான்டிக்கு இலங்கை பயப்படுமா? அல்லது இதற்கும் நமட்டு சிரிப்பு மட்டும் தான் பதிலா? இதை பொருத்தது விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதும், நீட்டிக்கப்படுவதும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பா...
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்த...
-
தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் க...
-
நக்கீரன், விகடன், குமுதம் போன்ற வார இதழ்களை படிக்கவே முடிவில்லை. எப்படி இவர்கள் பார்வையில் மட்டும் கேரளாவில் தமிழர்கள் அடிவாக்குகிறார்கள் என...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
முல்லைப்பெரியாரில் புதிய அணை வேண்டாம் என கேரள போராட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் முல்லைப்பெரியாறு பாத...
-
கருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யார்? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அ...
-
நீங்கள் சன் டையரக்ட் வைத்திருப்பவரா? உங்கள் ரிசீவர் பாக்சில் This CPE is the Property of Sun Direct TV Pvt Ltd இப்படி எழுதியிருக்கிறதா...
-
ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்...
-
நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப...
// என்ன காரணத்திற்காக கட்சதீவை இலங்கைக்கு கொடுத்ததோ ?//
ReplyDeleteஎன்ன காரணம் ?
இனி என்ன தான இந்தியா தலையால் நின்றாலும் ஈழத்தமிழர்கள் என்றும் இந்தியா என்ற நாட்டிற்கு துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி. முள்ளிவாய்கால் மட்டும் இந்தியனை நம்பிக் கெட்டவாகள் ஈழத்தமிழர்கள். இனியும் நம்புவோம என எண்ணி காய்களை நகாத்தினால் அதற்கான பிரதிபலனை இந்தியாவே அனுபவிக்கும்.
ReplyDeleteஇந்தியாவில் விடுதலைபுலிகள் மீதான தடை நீங்கினால் அடுத்த நாளே இலங்கை இந்தியாவுடனான எல்லா உறவையும் துண்டித்துக்கொள்ளும்.
ReplyDeleteஇன்னொரு பிரபாகரனை இலங்கை தாங்காது.
- கபிலன்