தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்த உள்ளது.
இதற்காக 6.11.2010 அன்று நடந்த கூட்டத்தில் தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்ப்பதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட வில்லை. மாறாக இது குறித்த இறுதி முடிவு எடுக்கும் நாள் 26.2.2011 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
6.11.2010 அன்றைய கூட்டத்தில் தகவல்தொடர்புதுறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். இதனால் ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது தகவல்தொடர்புதுறை அமைச்சராக கபில்சிபல் உள்ளார்.
இதனால் கிரந்தம் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடையவர்களின் பணி மிகமிக எளிமையாகிவிட்டது. ஆனால் தமிழர்களின் நிலை?
தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்க்கும் முயற்சி குறித்து உலகெங்கும் உள்ள குறிப்பாக தமிழகத்தில் உள்ள பலருக்கும் தெரியாது. இது இணைய ஊடகம் வழியாக மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மூத்த தமிழர் அறிஞர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தெரியாத நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு இந்த செய்தியை கொண்டு சேர்க்கும் பணியில் உள்ள பத்திரிக்கைகள் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ் ஒருங்குறியில் கிரந்த குளறுபடி வருவது நிச்சயம்.
தற்பொது உள்ள ஒரே ஆறுதல் வலைபதிவர்கள். இது குறித்து அனைவரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். தங்களுக்கு இயன்றவரை இணைய தொடர்பு இல்லாதவர்களிடமும் இந்த செய்தியை கொண்டு சேருங்கள்.
கிரந்தம் சேர்ப்பதற்கு எதிராக தங்கள் வலைபூவில் ஒருபதிவாவது எழுதி உங்கள் நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
இணைய தமிழர்களே உங்கள் கையில் தான் உள்ளது தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்வதும், அதை தடுப்பதும்.
இந்த பிரச்சனையை அப்படியே 26.2.2011க்கு விட்டுவிடாமல் இயன்றவரை தினமும் நினைவூட்டிக்கொண்டே இருங்கள்.
கூட்டு முயற்சிக்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்.
விபரங்களை தெரியப்படுத்துங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
தனிஈழம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சனை, தமிழ்தேசியம் இப்படி தமிழர்களின் தீராத பிரச்சனையை தீர்க்க இதை விட சிறந்த யோசனை இருக்குமா?. தன...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
அதிமுக அணியில் இருந்து வைகோ பிரிந்து தனித்துபோட்டியிட உள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சராசரியாக 4% வாக்குகளை மதி...
-
தமிழக சட்டசபை தேர்தல் 2011 வெற்றி குறித்த கருத்துக்கணிப்பை இந்தியா டுடே(கெட்லைன்சு டுடே) பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2006 தேர்...
உங்களுடைய நம்பிக்கையான பின்னூட்டங்களும், வார்த்தைகளும் என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளது நாம் விரைவில் சாதித்துக் காட்டுவோம்.
ReplyDeleteஇம்மாற்றங்களை கண்டித்து ஏற்கனவே பல பதிவுகள் வந்துவிட்டன. இப்போது ஆக்க பூர்வமான வழியில் இதெற்கென என்ன நாம் செய்ய வேண்டும் என சொல்லுங்கள்.
ReplyDeleteநன்றி.