Oct 31, 2009

நடிகைள் மீது வழக்கு - நிருபர்களின் தரம் தாழ்ந்த செயல்

பத்திரிக்கையாளர்களின் ஒட்டு மொத்த குடும்பம் மீது நடிகைகள் அவதூறாக பேசிவிட்டார்கள், இதனால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது எவ்வளவு தரம்தாழ்ந்த செயல்?

தினமலரில் வந்த செய்தி நூற்றுக்கு நூறு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட செய்தி என்பது எல்லோருக்கும் தெரியும்.
நடிககைள் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று நடுநிலையாக நின்று யோசித்து பாருங்கள்.

நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள் செய்யவில்லை என்பது முக்கியமில்லை. அப்படி செய்வதை துணிச்சலுடன் சமுதாய அக்கரையுடன் சொல்ல நினைக்கும் பத்திரிக்கை முழு ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். அதே போல அரசியல்வாதிகளின் பெயர்களையும் வெளியிட வேண்டும்.
செய்தியில் நடிகைகளின் படத்தை வெளியிட்ட தினமலர் ஏன் அந்த மூத்த அரசியல்வாதி மற்றும் மகன்களின் படத்தை வெளியிடவில்லை என்பது தான் முக்கிய கேள்வி?

ஆதாரமில்லாமல் அவதூறாக செய்தி வெளியிட்ட சில பத்திரிகையை பற்றி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்களே தவிர, ஒட்டுமொத்த பத்திரிக்கை துறையை பற்றி எந்த நடிகர் நடிகையும் பேசவில்லை என்பது தான் உண்மை.
நடிகைகள் பேச்சை தவறு என்று சொல்பவர்களை பார்த்து ஓரு கேள்வி? நமது தாய், மனைவி, தங்கையை இவர்களை பற்றி அவதூறாக பத்திரிக்கையில் வந்தால் நாம் என்ன பேசுவோமோ, அதையே தானே அவர்களும் பேசியுள்ளார்கள். தன் மனைவி மீது செய்திதாளில் ஆதாரமற்ற ஒரு அவதூறு செய்தி வந்தால் நிச்சயமாக நான் அந்த பத்திரிக்கை ஆலுவலகத்தையே தீவைத்து கொழுத்துவேன் என்று தான் ஆத்திரத்தில் சொல்வான். இது சராசரி மனிதனின் இயல்பு.
விபச்சாரிகளின் படங்களை பத்திரிக்கையில் போடாதீர்கள் அப்படியே போட்டால் விபச்சாரத்தில் ஈடுபட்ட அந்த ஆணின் படத்தையும் சேர்த்து போடுங்கள். என்று பேசிய ரஜினியின் பேச்சில் எங்கு ஆபாசம் இருக்கிறது?
தன்னை விபச்சாரி என்று செய்தி வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை பாஸ்ட்டட் என பேசிய ஸ்ரீபிரியாவின் பேச்சால் ஒட்டுமொத்த பத்தரிக்கையாளர்களும் எப்படி மனஉளைச்சலுக்கு உள்ளாவார்கள்?

விவேக் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. நடிகைகளின் படத்தை கிராப்பிக்ஸ் செய்து வெளியிடும் பத்திரிக்கைகளை தானே திட்டியுள்ளார். அதற்காக எல்லா பத்திரிக்கையாளர்களும் கொதித்தெழுவதன் காரணம் என்ன?
உங்கள் வீட்டு பிள்ளை ஓடும்போது உங்களுக்கு வலி தெரியும் என பேசிய சேரன் பேச்சில் என்ன தவறு இருக்கிறது?

கோட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் என விவேக் பேசியதை தான் பல பத்திரிக்கையாளர்களும் விமர்சிக்கிறார்கள். உண்மையில் அந்த அளவுக்கு பத்தரிக்கையாளர்கள் தரம் தாழ்ததால் தானே அந்த பேச்சு வந்திருக்கிறது.
பத்திரிக்கை நிருபர் என்றால் எவ்வளவு கம்பீரமாக இருக்க வேண்டும்? சமுதாயத்தின் தலைச்சிறந்த பணியை எவ்வளவு நேர்த்தியாக செய்யவேண்டும்? ஆனால் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய கவுரவத்துடன் எத்தனை பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள்? நச்சத்திர ஒட்டலில் தண்ணிப் பார்ட்டியுடன் (கோட்டர் & கோழிபிரியாணி) நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்வு நிகழ்ச்சிகளை ஏன் பத்திரிக்கையாளர்கள் புறக்கணிப்பது இல்லை. அது குறித்து ஏன் விமர்சித்து எழுதுவதில்லை.
பத்திரிக்கையாளர்களின் தரம் தாழ்ந்த செயல்கள் குறித்து இன்னும் விரிவாக சொன்னால் உண்மை அதிகமாகவே கசக்கும். அது குறித்து பின்னொரு பதிவில் பார்க்கலாம்.

நடிகைகள் பேச்சை உண்மையான எந்த பத்திரிக்கையாளரும் தவறு என்று சொல்லவில்லை என்பது தான் உண்மை.ஆனால் தடை செய்யப்படும் அளவுக்கு சிக்கிக்கொண்ட தினமலர், தப்பிக விரித்த வலையில் தமிழக பத்திரிக்கையாளர்கள் சிலர் விழுந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.
தினமலர் விவகாரம் நீதிமன்றம், பிரஸ் கவுன்சில் வரை சென்றுள்ளது. அங்கு செய்திக்கான ஆதாரங்களை கொடுங்கவேண்டிய நெருக்கடியில் தினமலர் உள்ளது. இதை எதிர்கொள்ளவே தமிழகத்தில் உள்ள சிறு பத்திரிக்கையாளர்களை ஆர்பாட்டம், வழக்கு என துண்டி விட்டுள்ளது தினமலர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டும்., நடிகர் நடிகைளை அலைகளிக்க வேண்டும், ஒட்டுமொத்த பத்திரிக்கை துறையும் தனக்கு சாதகமாக உள்ளது என்பதை அரசுக்கு காண்பித்து லெனின் கைது வழக்கை வலுவிலக்க செய்யவேண்டும். இது தான் தினமலரின் திட்டம்.
தினமலர் முதலாளிகளுக்கு சிக்கல் வந்தவுடன் மட்டும், இன்று வீதிக்கு வந்து போராடும் தினமலர் ஏன் ஈழப்பிரச்சனைக்காக அனைத்து பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்ட போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை?
தினமலர் நிருபர்கள் எங்காவது அடி வாங்கினால் அதற்காக பத்திரிக்கையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இந்த ஆர்பாட்டத்திற்கு தினமலர் நிருபர்கள் கலந்துகொள்ள கூடாது என்பது தான் தினமலரின் கட்டளை. எங்களுக்கு வேதனையாக இருக்கும். அடிபட்ட தினமலர் நிருபருக்காக தான் இந்த ஆர்ப்பாட்டமே நடத்துகிறோம். ஆனால் சம்மந்தபட்ட நிருபரை கூட ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள தடை விதித்துள்ளதே தினமலர் நிர்வாகம் என் ஆத்திரம் வரும்.

ஆனால் இன்று தினமலர் முதலாளிக்கு பிரச்சனை என்றதும், நிருபர்கள் ஆர்பாட்டம் என்ற பெயரில் நிருபர் அல்லாத தினமலர் மேலாளர் முதல் விளம்பர பிரிவினர் வரை வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
தினமலர் நிருபர்களுடன் மேலாளர்களும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்
ஈழப்போரை நிருத்த பத்திரிக்கையாளர்கள் நடத்திய உண்ணாவிரம், போராட்டங்களில் கலந்துகொள்ள தினமலர் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று முதலாளிக்கு பிரச்சனை என்றதும் மற்ற நிருபர்களின் உதவியை கேட்கிறது தினமலர்.
உண்மையில் தினமலர் தன் பத்திரிக்கையை தவிர மற்ற எல்லா பத்திரிக்கை நிருபர்களுக்கும் டுபாக்கூர் என பட்டம் சூட்டி செய்தி வெளியிட்ட பத்திரிக்கை தான் இந்த தினமலர்.

நிருபர்களுக்கு முறையான சம்பளமோ, அடையாள அட்டைகளோ, அங்கீகாரமோ தினமலர் நிர்வாகம் தருவதில்லை, பிரஸ் கிளப்பில் உறுப்பினராக கூடாது, உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு சார்பில் தரப்படும் எந்த சலுகைகளையும் பெற்று தர தினமலர் தயாராக இல்லை. பிரஸ்கிளப்பே தேவையில்லை என்று சொன்ன தினமலர் தான்., இன்று முதலாளிக்கு ஆபத்து என்றதும் பத்திரிக்கையாளர் சங்கங்கள் காலில் விழுந்துள்ளது.

தினமலரின் சூழ்ச்சியில் விழுந்துவிடக்கூடாது என்பதில் முன்னனி பத்திரிக்கை நிருபர்கள் எச்சரிக்கையுடனேயே இருக்கிறார்கள். ஆனால் சில சின்ன பத்திரிக்கை நிருபர்கள் மட்டும் தினமலரின் தூண்டுதலோடு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இதற்கு தினமலரே அனைத்து உபயங்களையும் செய்கிறது.

உண்மையில் லெனின் தினமலரின் உதவி ஆசிரியர் தான். லெனின் மதிக்க தக்க ஒரு மனிதர். அவருக்காக தான் பல நிருபர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்களே தவிர, தினமலருக்காக அல்ல. தினமலரின் உண்மையான ஆசிரியர், பப்லிசரை கைது செய்ய வேண்டும் என்பது தான் ஒரு நடுநிலையான பத்திரிக்கையாளனின் எண்ணம்.
லெனின் கைது விவகாரம் வலுவிழக்கக்கூடாது என நான் இங்கு சொல்வதற்கான மற்றொரு காரணம் போலீஸ் வாக்குமூலம்.
போலீஸ் வாக்குமூலம் ஐயத்திற்கு உரியது. நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னால் கூறப்படும் வாக்குமூலம் தான் உண்மையானது என்பது எல்லா பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். அப்படி இருக்க உணர்வு சம்மந்தபட்ட நிகழ்வுகளில் விற்பனை, கவர்ச்சி, பரபரப்புக்காக மட்டும் தெரிந்தே போலீஸ் வாக்குமூலத்தை பெரிதுபடித்தி வெளியிடுகிறார்கள். இத்தகு உண்மைக்கு மாறான செய்திகளாலால் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்?
அந்த அதிர்ச்சி சம்பவங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். - விராலி.

2 comments:

  1. தினமலர் ஒரு மஞ்சள் பத்திரிகை அதி வரும் செய்திகள் எல்லாமே பொய் செய்திகள் தான் . ஆனால் அந்த பத்திரிக்கைக்காக மற்ற பத்திரிகைகள் போராட்டம் நடத்துப்வது தேவையற்றது

    ReplyDelete
  2. dina malarukku matroru peyar undu dina malam.

    ReplyDelete

Popular Posts