Oct 24, 2009

மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறில்லை - தங்கபாலு

சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் தங்கபாலு கூறியதாவது:

முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை. கண்டன கூட்டம் நடத்த திமுகவினருக்கு உரிமை உள்ளது. முல்லை பெரியாறு பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஒரு சுமுகமான தீர்வை மேற்கொள்ள வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment

Popular Posts