Jan 10, 2011

சாக்கடை இந்தியாவை சுத்தப்படுத்த முடியுமா?

அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன்.

இப்படி நாரிப்போன இந்தியாவை சுத்தப்படுத்த முடியுமா? 

சும்மா குறைகளையே சொல்லிக்கொண்டு இருந்தால் பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன? -  இதுதான் பலரின் ஆதங்கம்.

இந்திய அரசியலை சுத்தப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான் செயல் அல்ல.

இந்தியா அரசியல் அமைப்பு சாசனத்தை தங்களின் சுயநலனுக்கு ஏற்ப திரித்துவிட்ட அரசியல்வாதிகள் அதை முறைப்படுத்துவார்கள் என்பது கேள்வி குறியே?

 இந்தியாவை சுத்தப்படுத்த அரசியல் ஒன்று தான் வழி என்றால் எத்தனை யுகங்கள் கடந்தாலும் சுத்தப்படுத்தவே முடியாது என்பதுவே என் கருத்து.

ஒரு கட்சி ஆரம்பித்து அதில் நல்லவர்களை இணைத்து இப்போது உள்ள அரசியல் பணமுதலைகளை எதிர்த்து எப்படி ஆட்சியை பிடிக்க முடியும்?

சாதாரண மக்களுக்கு பிரபலங்களின் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. எந்த பிரபலம் தைரியமாக அரசியல்வாதிகளை எதிர்க்க முன்வருகிறார்கள்?

உதாரணத்துக்கு ஈழப்போரின் போது குழந்கைளையாவது மீட்க குரல்கொடுங்கள் என்று அப்துல்கலாமை கேட்டோம். வாயே திறக்கவில்லை. இவர் எல்லாம் எதற்கு குழந்தைகளை பற்றி பேசி பிரபலமானார்?. இப்படி தான் இன்றுள்ள ஒவ்வொரு பிரபலமும். தங்களுக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் வீதிக்கு கூட வந்து போராடுவார்கள். ஆனால் பொதுநலன் என்றால் பொட்டி பாம்பாக அடங்கிவிடுவார்கள். 

இன்று இந்தியாவை ஆக்கிரமித்து உள்ள இத்தாலி சனியன் உட்பட 2000 நச்சு அரசியல்வாதிகளை தாண்டி ஒரு சாதாரன மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் வாய் கூட திறக்க முடியாது.

மக்களாட்சி என்ற இந்தியாவில் இன்று மத்தியிலும் மாநிலத்திலும் தாத்தன், அப்பன், மகன், பேரன், பொண்டாட்டி, வெப்பாட்டி, கள்ளகாதலன், கள்ளகாதலி, இப்படிப்பட்டவர்கள் தான் ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த கேவலம் இந்தியாவுக்கு தேவையா?

இந்தியாவை நிச்சயமாக அரசியலை வைத்து சீர்திருத்த முடியாது. அப்படி முயன்றால் என்னை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார்கள். இதை தாண்டிய ஒருமாற்று வழி. அது இந்திய அரசில் சாசனத்திலேயே உள்ளது.

அரசியல் அல்லாத மாற்று வழி. அந்த வழியில் இந்தியாவில் நல்லதொரு மக்களாட்சியை கட்டமைத்துவிட முடியும் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் உச்ச அதிகாரம் சனாதிபதி, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், இப்படி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று சனாதிபதியும், நாடாளுமன்றமும், நீதிமன்றமும் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருக்கின்றன. இந்த கட்டமைப்பை உடைக்க வேண்டும். அதிகார படிநிலைகளை நேர் எதிராக திருப்ப வேண்டும். 

நாடாளுமன்றம் - மாநிலம் - மாவட்டம் - பஞ்சாயத்து என்ற அதிகார கட்டமைப்பை
பஞ்சாயத்து - மாவட்டம் - மாநிலம் - நாடளுமன்றம் என்று திருப்ப வேண்டும்.

இது குறித்து விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமானது., அதிக கால அவகாசமும் தேவையில்லை. ஒரு ஆண்டு போதும். இந்தியாவை நல்லரசாகவும் வல்லரசாகவும் மாற்றிக்காட்ட முடியும். 

இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவை 100 நல்லெண்ணவாதிகள். 5 மாவட்ட ஆட்சியர்கள். 2 வழக்கறிஞர்கள். 1 எம்.பி, தேவைபட்டால் ஒரு பிரபலம் இவர்கள் இருந்தால் போதும்.

சேர்ந்து சிந்திப்போம். 
தொடரும்...

No comments:

Post a Comment

Popular Posts