Dec 2, 2010

இந்தியன் என்பதில் கேவலப்படுகிறேன்.

அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள்.

உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள். 

ஆனால் நான் இந்தியன் என்பதற்கு வெட்கி கூனி குறுகுகிறேன்.

இந்தியர் என்பதில் பெருமைபடுகிறேன் என்று பள்ளிகூடம் படிக்கும்போதிருந்தே உறுதிமொழி எடுத்த அப்பாவி இந்தியர்கள் 100 கோடி பேரில் நானும் ஒருவள்.

இந்தியர் என்பவர்கள் யார்?

மனிதநேயத்துக்கு மதிப்பளிப்பவர்கள் தான் இந்தியர்கள். இது ஒரு ஆன்மீக பூமி. அகிம்சை என்பதற்கான அர்த்தம் இந்தியர்களிடம் இருக்கும். இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு அப்பாவி இந்தியரும் உறுதிமொழி எடுக்கின்றனர்.

ஆனால் இன்று ?

இந்த 21ம் நூற்றாண்டில் அப்பாவி மனித உயிர்களை வேட்டையாடிய ராசபட்சேவுக்கு லண்டன் தமிழர் பாடம் புகட்டினர். இங்கிலாந்து மக்கள் அதற்கு முழு ஆதரவு அளித்தனர்.

ஆனால் அதே ராசபட்சேவுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.
மனித உயிர்களை குடித்தவனுக்கு இந்தியர்கள் ராச மரியாதை கொடுக்கிறார்கள் என்றால் நான் இந்தியன் என்பதில் மிகவும் கேவலப்படுகிறேன்.

4 comments:

  1. மிக அருமையாக சொன்னீர்கள்

    ReplyDelete
  2. அருமை nanpa....

    ReplyDelete
  3. தலைப்பை பார்த்தவுடன் படிக்கும்முன்பே எதிர்மறை பின்னூட்டம் போடதான் வந்தேன் ஆனால் உங்களுடைய இந்த கேள்விக்கு முடியல.

    ReplyDelete
  4. இத்தாலியில் இருந்து இங்கே வந்த ஒரு பெண், நம்மை நம் சொந்த நாட்டையே வெறுக்க வைத்து விட்டார்.....

    ReplyDelete

Popular Posts