ஒரு நாட்டின் சொத்துக்களை அபகரிக்க சில சர்வதேச கொள்ளையர்கள் திட்டம் தீட்டினர். அந்த நாட்டின் அரசராகும் தகுதியுடைய நபரை தங்கள் கைபாவையாய் செயல்படும் ஒரு பெண்ணை வைத்து வளைத்துபோட்டனர். திருமணம் முடிந்து எதிர்பார்த்தது போல அரசரும் கொள்ளையர்களுக்கு சாதகமாக செயல்பட்டார்.
நாட்டின் சொத்து வண்டி வண்டியாய் கொள்ளை போனது. இதை பார்த்த நாட்டுமக்கள் கொந்தளித்தனர். அயல்நாட்டு கொள்ளையர்களை பிடித்து தண்டிக்கவேண்டும் என கோசமிட்டனர். அரசரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கொள்ளையர்கள் தங்கள் கைபாவையிடம் முறையிட்டனர்.
உடனே அரசனான தன் கணவரை மிரட்டினார் அந்த பெண். எங்கள் ஊர்காரர்களை சிறையில் அடைத்தால் நான் இந்த நாட்டைவிட்டே ஓடிவிடுவேன். இந்த நாட்டுகுடியுரிமையை இன்னும் நான் தற்காலிகமாக தான் வைத்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துவிடுவேன். அப்புறம் உங்கள் நிலை அவ்வளவு தான். என்று மிரட்டியுள்ளார்.
மனைவியின் மிரட்டல்களால் மனஉழைச்சலுக்கு ஆளான ராசாவும் கொள்ளையர்களின் கைபாவையாக நடித்தார். என்றிருந்தாலும் ராசா நம்மை காட்டிக்கொடுத்துவிடுவான். ராசாவை விட நம்நாட்டு பெண்ணே ராணியானால் வசதியாக இருக்குமே என கொள்ளைகூட்டம் திட்டம் போட்டது. இதற்கு ராசாவின் கூட்டாளிகளில் சிலரும் விலைபோனார்கள்.
அப்போதைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த பக்கத்துநாட்டு உயிர்போராட்டத்தை இதற்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். பலபல பேரங்கள். பக்கத்து நாட்டில் ராசாவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து சிலரை மூளை சலவை செய்தார்கள். அவர்களை வைத்து கச்சிதமாக ராசாவை கொன்றார்கள்.
ராசா கொல்லப்பட்டதும் பழியை தூக்கி பக்கத்துநாட்டு போராளிகள் மீது போட்டார்கள். நாடே கொந்தளித்து நாசமானது.
ஆனால் ராசா இறந்ததும் கொள்ளை கூட்டத்திற்குள் பங்கு பிரச்சனை வந்தது. ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்போம் என ஒருவருக்கு ஒருவர் மிரட்டிக்கொன்டனர். இதனால் கொள்ளை கும்பலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தற்காலிகமாக திட்டத்தை ஒத்திவைத்தனர்.
உடனடியாக ராசாவுக்கு பின் மனைவியை ராணிக்கினால் சந்தேகம் வந்துவிடும். எனவே ராசாவின் மனைவிக்கு மனஉளைச்சல் வந்தது போல நடிக்கவைத்தார்கள். அதற்கு மாற்றாக நன்றாக பேசக்கூடிய ஆனால் வாயே திறக்காத ஒருவரை ராசாவாக்கினார்கள்.
காலம் கனிந்ததும் திட்டம் போல தங்கள் நாட்டு பெண்னை ராணியாக்க பார்த்தார்கள். ஆனால் நாட்டின் சட்டம் சில சந்தேகம் எழுப்ப உடனடியாக சுதாகரித்தது கொள்ளை கும்பல்.
மீண்டும் ஒரு வாய்திறக்காத பூம்பூம் மாட்டை ராசாவாக்கினார்கள். அவர் பேருக்கு தான் ராசா. ஆட்சி அதிகாரம் எல்லாம் இவர்கள் எதிர்பார்த்தது போல ராணியிடம் தான்.
மீண்டும் அதிகப்படியான கொள்ளை நடந்தது. ஆனால் ராணி மகுடம் சூடும் நாள் தான் தள்ளிக்கொண்டே போனது.
உங்கள் விருப்பபடி ராசாவையே கொன்றுவிட்டீர்கள் பரவாயில்லை. ஆனால் என்னால் இன்னும் ராணியாகமுடியவில்லையே. அதற்கு எதாவது செய்யுங்கள் என்று கொள்ளை கும்பலிடம் அந்த பெண் முறையிட்டார்.
இதற்கும் ஒரு திட்டம் போட்டது கொள்ளை கும்பல். ராசா என்ற பெயருடைய ஒரு எதிர்ஆடு கூட்டத்திற்குள் இருந்தது. இந்த ஆட்டை பலிகடாவாக்கி காரியத்தை சாதிக்க திட்டம் தீட்டினார்கள்.
நினைத்தபடியே கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டார்கள். பலியாடும் பலியிடப்பட்டு விட்டது. இனி ராணி மகுடம் சூடவேண்டியது மட்டும் பாக்கி.
ராணி மகுடம் சூட்ட வேண்டும். இயன்றவரை நாட்டை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கவேண்டும். இறுதியில் ராணியின் தற்காலிக குடியுரிமையையும் ரத்து செய்து விட்டு ராணியோடு தங்கள் சொந்தநாட்டில் செட்டிலாகிவிடவேண்டும். இதுதான் கொள்ளை கும்பலின் திட்டம்.
நாட்டுமக்கள் அப்போதும் சொல்வார்கள் ‘‘வாழவந்த மருமகளுக்கு இப்படி ஒரு நிலமையா? என்ன இருந்தாலும் ஒரு பொண்னுக்கு பொறந்த வீடு தான் தஞ்சம்.’’
இது கதையல்ல நிசம்...
தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பா...
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்த...
-
நீங்கள் சன் டையரக்ட் வைத்திருப்பவரா? உங்கள் ரிசீவர் பாக்சில் This CPE is the Property of Sun Direct TV Pvt Ltd இப்படி எழுதியிருக்கிறதா...
-
தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் க...
-
நக்கீரன், விகடன், குமுதம் போன்ற வார இதழ்களை படிக்கவே முடிவில்லை. எப்படி இவர்கள் பார்வையில் மட்டும் கேரளாவில் தமிழர்கள் அடிவாக்குகிறார்கள் என...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
முல்லைப்பெரியாரில் புதிய அணை வேண்டாம் என கேரள போராட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் முல்லைப்பெரியாறு பாத...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரள தமிழக மக்கள் அமைதிகாக்கிறார்கள். ஆனால் சிறு சிறு கும்பல்களை தூண்டி விட்டு வேடிக்கை காட்டி வருகிறது இருமா...
-
கருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யார்? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அ...
-
சோனியா காந்தி எந்த மதத்தை சேர்ந்தவர், எந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க கோரி தகவல் அறியும் உரிமை சட்டப்படி ம...
ஊரறிந்த ரகசியமாயிற்றே இக் கதை நிகழ்ந்த களம்... இதற்கு பம்பர் பரிசு வேறா... இந்தியாவும் தமிழ்நாடும் உலகளாவிய புகழடைய ஏதோ 'அவர்களால்' ஆன சிறு கைங்கர்யம்!
ReplyDeleteசுப்ரமணிய சாமி இதை தான் ரொம்ப நாளாக சொல்லி வருகிறார்
ReplyDeletetoo too much
ReplyDeleteதிரு. ஆர்.கே சதீசுகுமார்...
ReplyDelete// சுப்ரமணிய சாமி இதை தான் ரொம்ப நாளாக சொல்லி வருகிறார்//
ராசா கொலை குறித்த முழு விவரங்களும் சுப்பிரமணியசாமிக்கு தெரியும். ஏனென்றால் கொள்ளையர்களுக்கு விலைபோன ராசாவின் முக்கிய கூட்டாளி சுப்பிரமணியசாமி தானே.
ராசாவுக்கு பின் தான் எதிர்பார்த்த பிரதமர் பதவி கிடைக்காமல் போனது தான் சுப்பிரமணியசாமியை பைத்தியம் பிடிக்கவைத்தது. அன்றிலிருந்து தான் மந்திரித்து விட்ட கோழியாக உளறிக்கொண்டு இருக்கிறார். உளரல் என்பதால் அது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
ராசாவின் கொலைக்கு பக்கத்துநாட்டு போராளிகள் மீது பழியை போட்ட சுப்பிரமணியசாமிக்கு அப்போதே சரியான தண்டனை கிடைத்துவிட்டது. அதனால் தான் இன்னமும் மந்திரித்த கோழியாக சுற்றிதிரிகிறார்.
திரு. Ravi kumar Karunanithi
ReplyDelete// too too much //
இது கதையல்ல நிசம்...
அதனால் தான் இன்னமும் மந்திரித்த கோழியாக சுற்றிதிரிகிறார்.
ReplyDelete---------------------------
ஹஹாஹா