Dec 2, 2010

இசைப்பிரியாவுக்கு வீரவணக்கம் (காணொளி)


இலங்கை ராசபட்சே அரசின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக மற்றும் ஒரு காணொளியை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ் ஈழப்பெண்களை கண்ணை கட்டி நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொல்லும் கொடூரம் அந்த கணொளியில் இடம்பெற்று உள்ளது. 

பொது தொலைகாட்சி மற்றும் ஊடகங்களில் முழுமையாக வெளியிடமுடியாத அளவுக்கு கொடூரம் காணொளியில் உள்ளது. காணொளியில் பதிந்துள்ள சிங்கள ராணுவத்தின் ஆபாசபேச்சுக்களில் அவர்கள் பலபேரை பாலியல்வன்முறைக்கு உற்படுத்தி கொன்றுள்ளனர் என்பது தெரிவதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.

இந்த காணொளியில் கொல்லப்பட்ட பெண்களில் ஒருவர் ஈழத்தில் இருந்து வெளிவந்த ஒளிவீச்சு ஊடகத்தின் செய்தியாளர் இசைபிரியா என தெரியவந்துள்ளது. இதை தமிழ்நெட் செய்திதளம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்டவர் ஒரு ஊடகவியலாளர்.
அதுவும் ஒரு பெண் ஊடகவியலாளர். 

பெண்களை மனிதாபிமானம் அற்ற வகையில் கொச்சைப்படுத்தி பிணத்தின் மீது காமத்தையும் வீரத்தையும் காண்பிக்கும் இவர்கள் மனிதர்களா?

இதை செய்துவிட்டு வரும் ஈனபுத்திகாரனுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பவர்களை என்னவென்று சொல்வது?

(மனித உரிமை அமைப்புக்களுக்கும், ஏனைய சமூக நோக்குடனான  தேவைகளுக்கும் பயன்படுத்த விரும்புவோர் காணொளியைப்  பின்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காட்சிகள் மிகவும் குரூரமானவை என்பதால் இங்கு பதிவிடவில்லை).
நன்றி :  channel 4., & http://inioru.com

1 comment:

  1. சிங்களவன் மனித குலத்திற்கே அவமானம். இவர்கள் மனித குலத்தில் சேராத அரக்கர். என் தங்கையே உன்னை வதைத்தவனை வதைக்க எனக்கு சக்திகொடு தாயே. உன்னை அழிததவனை அழிப்பதற்கு எனக்கு சக்தி கொடு என் தங்கையே. எமக்காய் வாழ்ந்தாய் எமக்காய் அரக்கரின் கையினால் அவலமாய் அழிந்தாய். மறவோம் மறவோம். மறவோம். உமை துடிக்க வைத்த அரக்கரை அழிக்கும் வரை ஓயோம். உனக்கு எனது வீர அஞ்சலிகள் தங்கையே.

    ReplyDelete

Popular Posts