‘‘நான் ஊழலை பொறுக்காதவள்’’ இப்படி சொன்னது இன்று இந்தியாவை ஆட்டி படைக்கும் இத்தாலியா நாட்டின் அதிபர் சோனியா.
இந்திய வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய ஊழல்கள் நாட்டையே உலுக்கியது.
1. போபர்சு ஊழல்
2. அலைகற்றை ஊழல்
இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு, இந்த இரண்டு ஊழலிலும் நிழல்உலகமான இத்தாலியா நாட்டுக்கு தொடர்பு உண்டு.
இந்தியா இத்தாலி நாடுகள் நட்பை தாண்டி இத்தாலியா என்றொரு நிழல்உலக நாடு இந்தியாவை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
போபர்சு ஊழலில் முக்கிய குற்றவாளி குவோட்ரோசியை எல்லோருக்கும் தெரியும். சர்வதேச போலீசாருக்கு தண்ணி காட்டி வரும் இந்த குற்றவாளி பலமுறை பிடிபட்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த குற்றவாளியை காப்பாற்றுவதில் தன் கணவனை கூட தூக்கிவீசிவிட்டார் ஒருபெண். இதனால் பலமுறை கணவரின் கண்டிப்புக்குள்ளானது தனி கதை.
போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசியை காப்பாற்ற ராசீவ், நரசிமராவ், மன்மோகன் என்ற மூன்று பிரதமர்களை ஆட்டி படைத்த சோனியாவுக்கும் குவாட்ரோசிக்கும் உள்ள தொடர்பை சுவிடன் புலனாய்வு போலீசார் ஏற்கனவே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
சர்வதேச போலீசாரே குற்றவாளி என அறிவித்த தலைமறைவு குவாட்ரோசியை அப்பழுக்கற்ற அப்பாவி என சோனியா வெளிப்படையாக சொன்னபோது உலகமே மூக்கில் விரல்வைத்தது.
எப்படியோ ராசீவை கொன்றதோடு போபர்சு ஊழல் மர்மங்களையும் அப்படியே குழிதோண்டி புதைத்து விட்டனர். ஆனால் உண்மை பலகாலம் தூங்காது. எதாவது ஒரு விதத்தில் விழித்து உயிர்த்து வரும்.
இப்போது அலைகற்றை ஊழல் வடிவில் மீண்டும் உண்மை உயிர்த்துள்ளது.
நாட்டை உலுக்கிய போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசிக்கு அலைகற்றை ஊழலிலும் தொடர்பு இருப்பதை யூகிக்க தேவையில்லை.
காரணம் சோனியா+சர்வதேச தொழிலதிபர்கள் தான் அலைகற்றை ஊழலின் ஆணிவேர்கள். ராசா, மன்மோகன் திமுக இவர்கள் எல்லாம் வெறும் பகடைகாய்கள் மட்டுமே.
அலைகற்றை ஊழல் வழக்கும், விசாரணையும் இத்தாலியா என்ற நிழல்உலக நாட்டை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.
அது நடந்தால் ‘‘சோனியா, ராசீவ் மாமியார், சில நிழல்உலக தொழில்அதிபர்கள் இவர்களிடம் விசாரித்தால் ராசீவை கொன்றது யார் என்ற உண்மை வெளியில் வரும்’’ என்று சுப்பிரமணியசுவாமி சொன்னது மீண்டும் யோசிக்க வைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனிப்பட்டவர்கள். மொழி, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், ஆட்சிமுறை, நன்னெறிகள், கடவுள் கொள்கை என அனை...
-
திராவிட கட்சிகளை கண்டு மிரண்டு கிடந்த காங்கிரசு இன்று அசுரசக்தி பெற்றது எப்படி? மக்கள் செல்வாக்கு பெற்ற காமராசர், மூப்பனார், போன்ற தலைவர்க...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
முல்லைப்பெரியாறு விடயத்தில் கேரள தமிழக ஊடகங்கள் எவ்வளவு இருட்டடிப்பு செய்துள்ளன. உச்சநீதிமன்றம் அமைத்த ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை தம...
-
தமிழக தேர்தல் கருத்து கணிப்பு : ஆட்சி மாற்றம் உறுதி ---------------------------------------------------------------------------- அதிமுக + த...
-
நான் தான் தமிழ் பெண்களின் ‘‘கற்பு காவல் தெய்வம்’’ என்று நடிகைகளின் பாவாடைக்கு அடியில் கேமராவோடு சுற்றிய மாமாவுக்கு சரியான அடி விழுந்துள்ளது....
-
அலைகற்றை ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை காட்டிக்கொடுக்க ராசா தயாராகிவருவது திமுக & காங்கிரசு வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்த...
நாட்டில் எத்தனையோ ஊழல்கள் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன...பி ஜே பி என்ற ஆர் எஸ் எஸ் மதவெறி நாய்களின் வெறியாட்டம் பற்றி ஒன்றுமே வை திறக்காத சி ஐ எ ஏஜென்ட், இந்தியாவின் தேச துரோகி, அரசியல் கோமாளி சுப்பிரமணியன் என்பவனை ஒரு பொருட்டாக நினைத்து எழுதுவது வருத்தம் அளிக்கிறது. சுப்பிரமணியன், வைகோ போன்றவர்கள் நிஜ தேச துரோகிகள்..ஆண்ட துரோகிகளை கண்டுகொள்ளாமல் இருந்தாலே நல்லது.
ReplyDeleteதிரு.மர்மயோகி
ReplyDeleteசோனியாவை பற்றி எழுதினால் உடனே பாரதியசனதா, சுப்பிரமணிசாமிக்கு ஆதரவு என்று அர்த்தம் அல்ல.
ஒரு விடயத்தை பற்றி எழுதினால் அதில் உள்ள உண்மை பொய்களை பற்றி தான் விவாதிக்க வேண்டும்.
சுப்பிரமணியசாமி ஒரு கேமாளி என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். ஆனால் சில சமயம் கோமாளிகள் தான் இருட்டில் திருடவரும் காட்டுபன்றிகளை விரட்ட உதவுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
நன்றி..ஆனால் இந்த விஷயத்தை பற்றி சுப்ரமணியனுக்கு மட்டும்தான் தெரியுமா? அந்த கோமாளி நாய் விளம்பரத்துக்காக வழக்கு போட்டு இருக்கான்...ஒழுங்கானவனாக இருந்தால் மதவெறி நாய்களின் ஊழல்களுக்கும் அந்த நாய் வழக்கு போட்டு இருக்க வேண்டும்..அமெரிக்கவின் ஏவலாளி சுப்பிரமணியன் இத்தாலிக்கு எதிராக களமிறக்கப் பட்டு இருக்கான்..அமெரிக்க முட்டாள்களுக்கு தெரியாது இது ஒன்றுக்கும் உதாவாத பொறம்போக்கு என்று..
ReplyDelete