‘‘நான் ஊழலை பொறுக்காதவள்’’ இப்படி சொன்னது இன்று இந்தியாவை ஆட்டி படைக்கும் இத்தாலியா நாட்டின் அதிபர் சோனியா.
இந்திய வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய ஊழல்கள் நாட்டையே உலுக்கியது.
1. போபர்சு ஊழல்
2. அலைகற்றை ஊழல்
இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு, இந்த இரண்டு ஊழலிலும் நிழல்உலகமான இத்தாலியா நாட்டுக்கு தொடர்பு உண்டு.
இந்தியா இத்தாலி நாடுகள் நட்பை தாண்டி இத்தாலியா என்றொரு நிழல்உலக நாடு இந்தியாவை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
போபர்சு ஊழலில் முக்கிய குற்றவாளி குவோட்ரோசியை எல்லோருக்கும் தெரியும். சர்வதேச போலீசாருக்கு தண்ணி காட்டி வரும் இந்த குற்றவாளி பலமுறை பிடிபட்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த குற்றவாளியை காப்பாற்றுவதில் தன் கணவனை கூட தூக்கிவீசிவிட்டார் ஒருபெண். இதனால் பலமுறை கணவரின் கண்டிப்புக்குள்ளானது தனி கதை.
போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசியை காப்பாற்ற ராசீவ், நரசிமராவ், மன்மோகன் என்ற மூன்று பிரதமர்களை ஆட்டி படைத்த சோனியாவுக்கும் குவாட்ரோசிக்கும் உள்ள தொடர்பை சுவிடன் புலனாய்வு போலீசார் ஏற்கனவே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
சர்வதேச போலீசாரே குற்றவாளி என அறிவித்த தலைமறைவு குவாட்ரோசியை அப்பழுக்கற்ற அப்பாவி என சோனியா வெளிப்படையாக சொன்னபோது உலகமே மூக்கில் விரல்வைத்தது.
எப்படியோ ராசீவை கொன்றதோடு போபர்சு ஊழல் மர்மங்களையும் அப்படியே குழிதோண்டி புதைத்து விட்டனர். ஆனால் உண்மை பலகாலம் தூங்காது. எதாவது ஒரு விதத்தில் விழித்து உயிர்த்து வரும்.
இப்போது அலைகற்றை ஊழல் வடிவில் மீண்டும் உண்மை உயிர்த்துள்ளது.
நாட்டை உலுக்கிய போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசிக்கு அலைகற்றை ஊழலிலும் தொடர்பு இருப்பதை யூகிக்க தேவையில்லை.
காரணம் சோனியா+சர்வதேச தொழிலதிபர்கள் தான் அலைகற்றை ஊழலின் ஆணிவேர்கள். ராசா, மன்மோகன் திமுக இவர்கள் எல்லாம் வெறும் பகடைகாய்கள் மட்டுமே.
அலைகற்றை ஊழல் வழக்கும், விசாரணையும் இத்தாலியா என்ற நிழல்உலக நாட்டை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.
அது நடந்தால் ‘‘சோனியா, ராசீவ் மாமியார், சில நிழல்உலக தொழில்அதிபர்கள் இவர்களிடம் விசாரித்தால் ராசீவை கொன்றது யார் என்ற உண்மை வெளியில் வரும்’’ என்று சுப்பிரமணியசுவாமி சொன்னது மீண்டும் யோசிக்க வைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக தேர்தல் கருத்து கணிப்பு : ஆட்சி மாற்றம் உறுதி ---------------------------------------------------------------------------- அதிமுக + த...
-
ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம் எனற பதிவின் மூலம் கோவை பத்திரிக்கையாளர்களிடம் நேரடியாக நிறையவே வாங்கி கட்டிக்கொண்டேன். ...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
3 கோடி ரூபாயுடன் முதலமைச்சர் வாழ்க்கையை துவங்கிய செயலலிதாவுக்கு அப்படி 68 கோடி ரூபாய் சொத்து வந்தது என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
நாட்டில் எத்தனையோ ஊழல்கள் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன...பி ஜே பி என்ற ஆர் எஸ் எஸ் மதவெறி நாய்களின் வெறியாட்டம் பற்றி ஒன்றுமே வை திறக்காத சி ஐ எ ஏஜென்ட், இந்தியாவின் தேச துரோகி, அரசியல் கோமாளி சுப்பிரமணியன் என்பவனை ஒரு பொருட்டாக நினைத்து எழுதுவது வருத்தம் அளிக்கிறது. சுப்பிரமணியன், வைகோ போன்றவர்கள் நிஜ தேச துரோகிகள்..ஆண்ட துரோகிகளை கண்டுகொள்ளாமல் இருந்தாலே நல்லது.
ReplyDeleteதிரு.மர்மயோகி
ReplyDeleteசோனியாவை பற்றி எழுதினால் உடனே பாரதியசனதா, சுப்பிரமணிசாமிக்கு ஆதரவு என்று அர்த்தம் அல்ல.
ஒரு விடயத்தை பற்றி எழுதினால் அதில் உள்ள உண்மை பொய்களை பற்றி தான் விவாதிக்க வேண்டும்.
சுப்பிரமணியசாமி ஒரு கேமாளி என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். ஆனால் சில சமயம் கோமாளிகள் தான் இருட்டில் திருடவரும் காட்டுபன்றிகளை விரட்ட உதவுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
நன்றி..ஆனால் இந்த விஷயத்தை பற்றி சுப்ரமணியனுக்கு மட்டும்தான் தெரியுமா? அந்த கோமாளி நாய் விளம்பரத்துக்காக வழக்கு போட்டு இருக்கான்...ஒழுங்கானவனாக இருந்தால் மதவெறி நாய்களின் ஊழல்களுக்கும் அந்த நாய் வழக்கு போட்டு இருக்க வேண்டும்..அமெரிக்கவின் ஏவலாளி சுப்பிரமணியன் இத்தாலிக்கு எதிராக களமிறக்கப் பட்டு இருக்கான்..அமெரிக்க முட்டாள்களுக்கு தெரியாது இது ஒன்றுக்கும் உதாவாத பொறம்போக்கு என்று..
ReplyDelete