சுபெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசா மீது வழக்குதொடர வேண்டும் என சுப்பிரமணியசாமி குதித்து வருகிறார்.
இது சுப்பிரமணியசாமியின் பொதுநல நோக்கு என யாராவது நினைத்தால் அது தவறு.
செயா டி.வி யில் காண்பிக்கப்பட வேண்டும் எனபத்தாக தான் இப்படி குதிக்கிறாரா என்றால் அது ஒரு காரணம் மட்டுமே.
செயா டி.வி.யில் சுப்பிரமணியசாமியின் ஏளனமான பேட்டி சுபெக்ட்ரம் விவகாரத்தை மட்டும் சுற்றி வரவில்லை. தனது ஏளனமான பேச்சு மற்றும் சைகைகள் மூலம் எதோ ஒரு பிரச்சனையை தமிழகத்தில் கிளப்ப நினைக்கிறார்.
அதே நேரத்தில் சுபெக்ட்ரம் விவகாரத்தில் ராசா குற்றம் செய்தாரா இல்லையா என்பது ஒருபுறம். ஆனால் 1 லட்சம் கோடிக்கு மேல் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது தெரிந்த அடுத்த கணமே ராசா பதவிவிலகி இருந்தால் நிச்சயம் அவரை பாரட்டியிருக்கலாம். ஆனால் 2 ஆண்டுகள் என்னென்ன நாடகங்கள்....
இப்போது தமிழகத்தில் ராசாவுக்கு ஆதரவாக சாதிசாயம் பூசி வரும் விளம்பரங்கள், போராட்டங்கள் மிகமிக கேவலமானதாகவே இருக்கிறது.
ஆனால் கொஞ்சம் ஆழமாக நோக்கும் போது இந்த போராட்டங்களில் எங்கோ ஒரு மூலையில் சின்ன நியாயமும் இருக்கிறது.
சுப்பிரமணிய சாமி போன்ற சாதிவெறி பிடித்தவர்களின் ஆதிக்கம் இன்னமும் அதிகாரமையத்தில் அப்படியே இருப்பது தான் இந்த போராட்டங்களை நியாயப்படுத்துகிறது.
தமிழகத்தில் சாதிப்பிரச்சனையை அவ்வப்போது தூண்டி விடும் சக்தியாக சில சாமிகள் வலம் வருவதை தடுக்க எந்த சாமி வருவாரோ? (சாமியே இல்லை என்பவர்களும் இதையே செய்யும்போது சாமியை தானே கூப்பிட முடியும்.)
ராசா விவகாரத்தில் சுப்பிரமணியசாமியின் தலையீட்டை குறைப்பது தமிழகத்துக்கு நல்லது. சுப்பிரமணிசாமி இல்லை என்றால் சுபெக்ட்ரம் ஊழல் ஒன்றும் மூடிமறைக்கப்பட்டுவிடாது. பொதுநல நோக்கத்தோடு பல புத்திசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் வழக்கு தொடரட்டும். சுப்பிரமணியசாமி ஒதுங்கி இருக்கட்டும்.
ஆமாம் இடதுசாரி கட்சிகள் வெளிக்கொண்டு வந்த சுபெக்ட்ரம் ஊழக்கு சுப்பிரமணியசாமி எதற்காக உரிமைகொண்டாடிக்கொண்டு அலைகிறார்?
யார் என்ன வழக்கு தொடர்ந்தாலும் அதில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என குதிக்கும் இந்த கோமாளியின் நோக்கம் என்ன ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
தனிஈழம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சனை, தமிழ்தேசியம் இப்படி தமிழர்களின் தீராத பிரச்சனையை தீர்க்க இதை விட சிறந்த யோசனை இருக்குமா?. தன...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை ...
-
அதிமுக அணியில் இருந்து வைகோ பிரிந்து தனித்துபோட்டியிட உள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சராசரியாக 4% வாக்குகளை மதி...
-
தமிழக சட்டசபை தேர்தல் 2011 வெற்றி குறித்த கருத்துக்கணிப்பை இந்தியா டுடே(கெட்லைன்சு டுடே) பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2006 தேர்...
//ஆமாம் இடதுசாரி கட்சிகள் வெளிக்கொண்டு வந்த சுபெக்ட்ரம் ஊழக்கு சுப்பிரமணியசாமி எதற்காக உரிமைகொண்டாடிக்கொண்டு அலைகிறார்?//
ReplyDeleteதவறு. சுப்ரமணியம் சுவாமி தான் முதலில் பிரதமர் அலுவலகத்திற்கு ராஜா மேல் வழக்கு தொடர அனுமதி கேட்டது.இவ்வளவு அநியாயம் நடக்கும்போது ஏதோ இவராவது கேட்கிறாரே என்றில்லாமல் இவரையே குற்றம் சொல்வது கொடுமை!