Mar 31, 2011

அதிமுக 164. இந்தியா டுடே கருத்து கணிப்பு


தமிழக சட்டசபை தேர்தல் 2011 வெற்றி குறித்த கருத்துக்கணிப்பை இந்தியா டுடே(கெட்லைன்சு டுடே) பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2006 தேர்தல் முடிவுகள் அப்படியே திரும்புவது குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக அணி 164 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் மற்றவை 2 தொகுதிகளிலும் வெற்றிபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே (கெட்லைன்சு டுடே) பத்திரிக்கை வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் சுருக்கம் :-

ORG projects the ADMK alliance will get 50 per cent of the vote share, it's 45 per cent for DMK-Congress and 5 per cent for others.

If there were assembly elections in 2006, ADMK+ would have won 75 seats, while the DMK-Congress would have won 157 seats.

Look at how the tide has turned. ORG now projects the ADMK alliance romping home with 164 seats, while Congress and DMK will suffer a huge setback winning just 68 seats with Others getting 2 seats.

கருணாநிதி பக்கம் நகரும் கருத்துகணிப்புகள்


2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓரளவு வெற்றிவாய்ப்பு உள்ள அணி பக்கம் கருத்து திணிப்பை நடத்திவிடுவார்கள். கடந்த வாரம் வரை அதிமக அலை வீசியது. 140 தொகுதிகளுக்கு மேல் அதிமுக அணி கைபற்றும் என்று கருத்துகணிப்புகள் கூறி வந்தன. ஆனால் இந்த வாரம் திடீர் பல்டியாக கருத்து கணிப்புகளில் திமுக அலை வீசுகிறது. இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 2 தேதிக்கு மேல் திமுக அலை வீசும் என்று பாமக தலைவர் ராமதாசும், சுடாலினும் சொல்லி வந்தார்கள். அதேபோல காய் நகர்த்தப்பட்டுள்ளதோ என்று என்ன தோன்றுகிறது.

பணத்தை இறக்க தயக்கம் காட்டிவந்த திமுகவினர் இப்போது தைரியமாக பணத்தை வாரி இறைக்கின்றனர். 130 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்கிறது உளவுத்துறையின் சமீபத்திய கருத்து கணிப்பு.

பிரச்சாரம் மற்றும் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மிகமுக்கிய பணிகளை செய்வதில் அதிமுக அணி ஆமை வேகத்தில் தான் உள்ளது.

சன் தொலைகாட்சியை சமாளித்து வெற்றி அலையை மக்கள் மனதில் பதிய வைக்குமா அதிமுக ªன்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏப்ரல் 3 கருத்துக்கணிப்புகளை வெளியிட கடைசி நாள். அன்று ஏராளமான கருத்துக்கணிப்புகள் வெளிப்படையாக வெளியாக உள்ளன. அன்று 20 க்கும் மேற்பட்ட திமுக அணியின் கருத்து திணிப்புகள் வெளியாக உள்ளது. உண்மை நிலவரத்தை துள்ளியமாக அறிய இன்னும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

தமிழ்மலரும் இறுதி நிலவரம் அறிய முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளின் முழு நிலவரம் அ முதல் ன் வரையிலான புள்ளி விவரங்களுடன் விரைவில் வெளியிடப்படும். 

Mar 30, 2011

கிரிக்கெட் பார்க்க முடியாததால் சாலைமறியல்


இந்தியா பாகிசுத்தான் இடையேயான உலககோப்பை அரையிறுதி போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியை பார்க்க பலரும் இன்று விடுமுறை எடுத்துக்கொண்டு தொலைகாட்சி முன் அமர்ந்திருந்தனர். ஆனால் வழக்கம் போல 2-4, 4-6, மின்வெட்டு கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. 

ஈரோடு, சேலம், திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். முக்கியமான போட்டி நடக்கும்போது கூட மின்வெட்டு செய்யவேண்டுமா என்று கோசங்களை எழுப்பினர். 

கோவையில் முன்னாள் முதல்வராக பதவி இறக்கம் ஆக உள்ள கருணாநிதி வந்துள்ளதால் இன்று மட்டும் மின்வெட்டு இல்லை. கோவை மக்கள் நாங்க கொடுத்துவச்சவங்க போங்க...

கைக்கு வாக்கு கேட்கும் ‘பச்சை’ தமிழச்சி(படம்)


குசுப்புவின் கையில் என்ன எழுதி இருக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள். 

கோவைக்கு மருமகளானாலும் இந்திக்கு தான் முதலிடமாம். இந்தியில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் கலந்து தமிழில் வாழ்ந்துகொண்டிருக்கும் குசுப்பு ஆதரவுடன் ஆட்சியை பிடிக்க வேண்டிய கட்டாயம் முத்தமிழை வித்தவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 


இன்று மதியம் 12.30 மணிக்கு கோவை பீளமேட்டில் குசுப்பு கைசின்னத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தபோது எடுத்தபடம். 

பேசத்தெரியாதவர்கள் எல்லாம் வாழிய தமிழ் என்று பேசுவதும் காலத்தின் கொடுமை.

Mar 28, 2011

தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி. கருத்து கணிப்பு முடிவுகள்


காமராசரை தோற்கடித்து திமுக ஆட்சியை கொண்டுவந்தார் அண்ணா. அப்போதை மக்கள் மனநிலையில் காமராசரும் அண்ணாவும் சரிசம மதிப்பை பெற்றிருந்தனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தனர். 

மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற காமராசரை தோற்கடித்து காங்கிரசு ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்தார் அண்ணா. அவரது அடித்தளம் இன்று வரை தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு தடையாக இருந்து விட்டது. ஆனால் இன்று மக்கள் செல்வாக்கு சிறிதும் இல்லாத தங்கபாலு முன்பு திமுக தோற்றுபோகும் அவலத்தை யாரும் எதிர்பார்க்க வில்லை.

தற்போதைய உளவுதுறை கருத்து கணிப்புகள் படி தமிழகத்தில் திமுக காங்கிரசு கூட்டாட்சிக்கே வாய்பிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

இலவசங்களுக்கான முன்பதிவாய் டோக்கன் விநியோகிக்கும் அதிரடி திட்டம் மூலம் திமுக மக்களை கவர்ந்து வருகிறது. மேலும் ஓட்டுக்கு 2 ஆயிரம் வரை கனகச்சிதமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கருணாநிதி எதிர்ப்பு அலை வீசினாலும் 85 முதல் 90 தொகுதிகள் வரை திமுக கைபற்றும் என்கிறது பல்வேறு கருத்துகணிப்புகள். 

119+4=123 தொகுதிகளில் போட்டிடும் திமுக 85 தொகுதிகள் வரை வெற்றிபெரும். பாமக 18, விசி.1, கொமுக 1, என மொத்தம் திமுகவுக்கு நிபர்ந்தனை அற்ற ஆதரவாய் 105 தொகுதிகள் மட்டுமே திமுகவுக்கு உள்ளது. இந்த நிலையில் 15 தொகுதிகள் வரை காங்கிரசு வெற்றி பெற்றால் திமுக&காங்கிரசு&பாமக கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

பெருந்தலைவர் காமராசரை தோற்கடித்து காங்கிரசை முடிவுக்கு கொண்டுவந்தார் அண்ணா. கேவலம் தங்கபாலுவிடம் தோற்று காங்கிரசு ஆட்சியை மீண்டும் கொண்டுவந்தார் கருணாநிதி. இந்த வரலாற்று புகழோடு தன்னோடு திமுகவுக்கும் முடிவுகட்ட காத்திருக்கிறார் கருணாநிதி. 

இன்றைய கருத்து கணிப்பு நிலவரம்.

அதிமுக 90
திமுக ........85
பாமக ........18
காம்யூ ........14
காங்கிரசு 14
தேமுதிக...12
கொமுக.......1

அதிமுக 171, திமுக 123 தொகுதிகளில் போட்டியிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Mar 27, 2011

திருப்பூர் வடக்கு இந்திய தேர்தல் கூத்தை நிரூபிக்குமா?


திருப்பூர் வடக்கு தொகுதியில் தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 140 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சாயபட்டறை பிரச்சனையை அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் கட்சிகளின் சமரசத்தை தொடர்ந்து 140 வேட்பாளர்களை திரும்ப பெற தொழில் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்தி பரப்பப்படுறது. ஆனால் உண்மையில் 140 வேட்பாளர்களும் வேட்புமனுவை திருப்ப பெற மாட்டார்கள் என்று தெரிகிறது.


140 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சாயப்பட்டறை பிரச்சனைக்கு கடுகளவேணும் தீர்வு வந்துவிடப்போவதில்லை. அதே நேரத்தில் 140 வேட்பாளர்கள் களத்தில் இருப்பது நிச்சயம் ஒரு தீர்வை நோக்கி நகர்த்த முடியும். 

கடந்த 1996ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 1030 பேர் விவசாய கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள். இதனால் மொடக்குறிச்சியை இந்தியாவே திரும்பி பார்த்தது. 

ஆனால் வருத்தம் என்னவென்றால் 63 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. வெற்றிவேட்பாளரான திமுகவின் சுப்புலட்சுமி செகதீசன் 55% வாக்குகள் பெற்றார். 1030 சுயேட்சைகள் போட்டியிட்டும் அவர்களால் பிரிக்க முடிந்தது வெறும் 5% வாக்குகளை மட்டுமே.

போதிய விழிப்புணர்வோ பிரச்சாரமோ இல்லாததால் மொடக்குறிச்சி முயற்சி தோல்வியை தந்தது. ஆனால் அதே பாணியில் திருப்பூர் வடக்கு தொகுதியின் முடிவுகளும் இருக்க கூடாது

சாயபட்டறை பிரச்சனையை மட்டுமல்ல, அரசியல் கட்சிகளை நிராகரிக்ககூடிய நியாமன காரணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். 140 பேரும் சுயேட்சை வேட்பாளர்களின் தேவை மற்றும் பலத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். 

ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்த பட்சம் 500 (0.5%)வாக்குகளையாவது பிரிக்க வேண்டும். அப்படி நடக்குமானால் இந்திய தேர்தல் என்பது ஒரு கேளிகூத்து என்பதை கண்டீப்பாக நிரூபிக்க முடியும். இந்திய தேர்தல் முறையை திருத்தியே ஆகவேண்டும் என்ற முழக்கத்துக்கு ஒரு ஆதரா மைல்கல் கிடைக்கும்.

பதிவாகும் 80% வாக்குகளில் 60% வாக்குகளை சுயேட்சை வேட்பாளர்கள் பிரிக்க வேண்டும். வெற்றி வேட்பாளர் 10% துக்கும் குறைவான வாக்குகளை பெற்றவராக இருக்க வேண்டும். இது நிகழுமானால் இந்திய தேர்தல் கூத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்ற குரலை ஓங்காரமாகவே ஒலிக்க முடியும்.
  
அந்த மைல்கல்லை திருப்பூர் வடக்கு தொகுதி எட்டும் என்று நம்புவோம்.

Mar 26, 2011

ஒரே தொகுதியில் 152. தேர்தல் தள்ளிபோக வாய்ப்பு


திருப்பூர் வடக்கு தொகுதியில் 152 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்த தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது.

திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சணையை அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நூதன போராட்டத்தை ஏற்படுத்தினர் சாயபட்டறை முதலாளிகள். திருப்பூர் வடக்கு தொகுதியில் 1000 வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் இறங்கினர். இன்று வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் 140 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளர். இது போக அரசியல் கட்சி வேட்பாளர்கள் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. எனவே இந்த தொகுதியில் வாக்கு சீட்டு முறை தான். இதிலும் சிக்கல் உள்ளது. வேட்புமனு பரிசீலனை 30 தேதி முடிகிறது. அடுத்த 2 நாட்களுக்கு சுயேட்சைகளுக்கான சின்னம் ஒதுக்கீடு குலுக்கல் நடைபெறும். ஏப்ரல் 2 முதல் 12 தேதி வரை வாக்குபதிவுக்கு 10 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதில் வாக்குசீட்டு வடிவமைத்து, பிழைதிருத்தி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று அச்சிட்டு, கோர்வையாக புத்தகவடிவமாக்கி, வாக்குசாவடிகளுக்க அனுப்பி வைக்க போதிய கால அவகாசம் இல்லை. எனவே தேர்தலை தள்ளிவைக்க அதிக வாய்ப்புள்ளது.

152 வேட்பாளர்கள் என்பதால் வாக்குசீட்டை புத்தகமாக தான் வடிவமைக்க வேண்டும். குறைந்தது 15 பக்கங்களுக்கு கூடுதலான புத்தகமாக அமையும். இதில் அகர வரிசைப்படி தான் வேட்பாளர் பட்டியல் அமையும் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் திகைத்து வருகின்றனர். 

ஒரு வாக்காளர் வாக்கு புத்தகத்தை படித்த தெளிந்து 15 பக்கங்களை புரட்டி தங்கள் சின்னத்தை கண்டுபிடித்து வாக்களிப்பார்களா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு சுயேட்சை வேட்பாளர் குறைந்தது 100 வாக்குகளை பிரித்தாலும் 15000 வாக்குகள் பிரிகிறது. சாயபட்டறை பிரச்சனை அதிகம்பேரிடம் சென்றடைந்துள்ளது. இந்த நிலையில் ஒரு சுயேட்சை வேட்பாளர் 500 வாக்குகளுக்கு கூடுதலாக பெரும் பட்சத்தில் 1,00,000 வாக்குகளை அரசியல் கட்சிகள் இழக்க உள்ளனர் என்பது தான் வேடிக்கை.

1,58,000 வாக்குகள் உள்ள இங்கு சுயேட்சைகள் 1 லட்சம் வாக்குகளை பிரித்தால் வெற்றிவேட்பாளர் வெறும் 10% ஓட்டுகளை மட்டுமே பெற்றவராக இருக்க கூடும்.

Mar 25, 2011

வெற்றியை தவறவிடும் செயலலிதா. மக்கள் மனநிலை


என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும் பிரச்சாரத்தில் மயங்கும் வெகுளித்தன வாக்காளர்கள் தான் வெற்றி தோழ்வியை நிர்னயிக்கின்றனர். திமுகவை விட அதிக பிரச்சாரக்காரணிகள் இருந்தும் பிரச்சாரபலம் அற்று நிற்கிறது அதிமுக அணி.

மின்வெட்டு உட்பட பிரச்சனைகளை தேர்தல் நேரத்தில் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பகல் நேரங்களில் 2,3 மணிநேர மின்வெட்டை மக்கள் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக்கிவிட்டனர். அலைகற்றை ஊழல், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை கடந்து இலவசத்துக்கு மயங்கும் நிலையில் தான் வெகுசனங்கள் உள்ளனர். ஓரளவு படித்தவர்கள் மட்டுமே இந்த பிரச்சனைகளை சீர்தூக்கி பார்க்கின்றனர். இருந்தாலும் செயலலிதாவின் ஆணவப்போக்கு இன்னும் மாறவில்லை என்ற பிரச்சரத்தை சன், கலைஞர் உட்பட தொலைகாட்சிகள் இடைவிடாது செய்கின்றன.

பொதுவாக வெற்றிபெரும் அணிக்கு வாக்குசெலுத்தும் பழக்கம் மக்களிடம் உள்ளது. இந்த அணிதான் வெற்றிபெரும் என்ற ஒரு அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டால் போதும் வேறு பிரச்சாரங்கள் தேவை இல்லை. அதை சன் தொலைகாட்சி மட்டுமல்லாது அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆளும் கட்சி ஆதரவு ஊடகங்கள், உளவுதுறை என பலதும் கட்சிதமாக செய்கின்றன.

செய தொலைகாட்சி இன்னமும் சவ்வு இழுப்பு இழுத்துக்கொண்டிருக்கிறது. செயலலிதாவின் இலவச அறிவிப்புகள் இன்னும் பலரது காதுகளுக்கு செல்லவில்லை. கருணாநிதி மின்விசிறியும் சேர்த்து தருகிறாராம் என்ற எதிர்மறை பிரச்சாரம் தான் அதிமுகவுக்கு மிஞ்சுகிறது.

இப்போதைய நிலையில் தினமணி தினமலர் ஆனந்தவிகடன் செய்திதாள்கள் மட்டுமே அதிமுகவுக்கு உள்ள ஒரே பிரச்சர ஊடகம். விளம்பர மற்றும் பிரச்சார யுக்தி கொஞ்சம் கூட இல்லாத செயதொலைகாட்சியும் மக்களை வசீகரிக்க தவறிவருகிறது. 

15 நாட்களில் செயலலிதாவும் விசயகாந்தும் எவ்வளவு சூராவளி பிரச்சாரம் செய்தாலும் வெகுசனங்களுக்குள் ஒரு வெற்றி அலையை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

சன் தொலைகாட்சியின் பிரச்சார யுக்திக்கு முன்னால் அத்தனையும் அடிபட்டுபோய்விடும் என்று அடித்து சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தினத்தந்தி, தினகரன், நக்கீரன், சன், கலைஞர், இலவச திட்டங்களுக்கான டோக்கன் என திமுக அணிக்கு ஆதரவு அலை அதிகமாகவே வீசுகிறது.

எவ்வளவு பணம் இருந்தும் செயதொலைகாட்சியை சன்னுக்கு இணையாக வளர்க்காதது அதிமுகவுக்கு பெரும் வீழ்ச்சியே.

இன்றைய நிலையில் மக்கள் மனங்களில் மீன்டும் கருணாநிதி என்ற அலுப்பு அலையே வீசுகிறது. 

Mar 24, 2011

வேட்பாளராய் ஒரு வலைபதிவர். கண்டுபிடியுங்கள்


பலதரப்பட்ட நட்பு வட்டங்கள் இருந்தாலும் பள்ளிபருவத்தில் வரும் கையெழுத்து பிரதி நட்புவட்டத்திற்கு என தனி ஈர்ப்பு இருக்கும். அந்த இடத்தை இன்றைய வலைபதிவுலகம் பெற்றுள்ளது. எவ்வளவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் வலைபதிவர்களுக்குள் நாம் என்ற ஒரு தனி அடையாளம் வந்துவிடுகிறது.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலதரப்பட்ட வலைபதிவர்கள் நம்மில் அன்றாடம் மின்னலையாய் வந்து செல்கின்றனர்.

அந்த வரிசையில் நம்முடன் அன்றாடம் உறவாடிய ஒரு மதிப்புமிக்கவர் வேட்பாளராய் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

அவரை வரவேற்போம், அவரது வேட்பாளர் நிலை வேறு காரணங்களுக்கானதாக இருந்தாலும் அது வலைபதிவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை தரட்டும்.

அவரது வேட்பாளர் அனுபவம் அடுத்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு பல வலைபதிவர்களை தாயார்படுத்தும் ஒரு படிக்கல்லாய் அமையட்டும்.

வலைபதிவு என்பது ஒரு மக்கள் ஊடகம். இந்த மக்கள் ஊடகத்தில் வாக்காளர்கள் மட்டுமல்ல வேட்பாளர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளட்டும்.

பல பெரிய கட்சி வேட்பாளர்களுக்கு வலைபதிவு என்றால் என்ன என்பதே தெரியாது. அரசியல்வாதிகள் இங்கு விமர்சிக்கப்படுகிறார்கள் என்பது கூட தெரியாது. வலைபதிவில் மக்கள் பகிரங்கமாக கேள்வி கேட்கிறார்கள் என்ற செய்தியாவது ஆட்சியாளர்களை சென்றடைய வேண்டும். அதற்கான அடித்தளமாய் நம்முடன் உள்ள வலைபதிவரின் வேட்பாளர் பிரவேசம் அமையட்டும். 

நல்ல மாற்றத்திற்கு ஆசைப்படுவோம்.

நம்ம வேட்பாளர் யார்? கண்டுபிடியுங்கள்..... 

சீமான், வைகோ முடிவு காங்கிரசுக்கு முடிவு


தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ளார் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் ஆளும் கட்சிமீது அதிர்ப்தி அலை வீசுகிறது. இந்த தேர்தலில் அதிமுக அணி வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த நிலையில் தனித்து போட்டியிட்டால் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர அதிமுக வெற்றியை தடுக்க முடியாது. 

வைகோ தனித்து போட்டியிட்டு அதிமுக வெற்றி பெரும் பட்சத்தில் வைகோ இல்லாமலே வெற்றி பெற்றுவிட்டோம் என்ற இருமாப்பு அதிமுகவினருக்கு வரும். அதே நேரத்தில் மதிமுக தேர்தல் புறக்கணிப்பால் நடுநிலைவாக்குகள் சிதறவில்லை, அதனால் தான் அதிமுக வெற்றிபெற முடிந்தது என்ற நம்பிக்கை அதிமுக வட்டத்தில் இருக்கும். ஒரு வேளை திமுக வெற்றி பெற்றால் வைகோ நடுநிலை வாக்குகளை பிரித்ததால் திமுக வெற்றிபெற்றது என்ற பலிசொல் வரும். தேர்தல் புறக்கணிப்பால் வைகோ தனது பலத்தை கூட்டியதோடு அடுத்த தேர்தலுக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளார்.

வைகோ முடிவால் சீமான் என்ன செய்யப்போகிறார் என்ற பார்வை தான் பலருக்கும் இருந்தது. சீமானும் சரியான முடிவை எடுத்துள்ளார். காங்கிரசுக்கு எதிராக பலமான அணிக்கு வாக்கு கேட்பது தான் புத்திசாலித்தனம். 

தமிழகத்தில் காங்கிரசின் தோழ்வி பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். திமுக காங்கிரசு எதிர்ப்பாளர்கள் தயங்காமல் அதிமுக அணிக்கு வாக்கு செலுத்தலாம்.

தேர்தலுக்கு பின்னர் திமுக & அதிமுக & காங்கிரசு ஒரு யுத்தம் தயாராக இருக்கிறது. அதில் வைகோ தலைமையில் மூன்றாம் அணி கம்பீரமாய் முளைக்கும்.

Mar 23, 2011

அதிமுக 134, திமுக 100 கருத்து கணிப்பு முடிவுகள்


வாக்குபதிவுக்கு 20 நாட்கள் மட்டுமே உள்ளது. அதிமுக திமுக இருபெரும் அணி கூட்டணிகள் முடிவாகி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் வெற்றி வாய்ப்புக்காண கருத்து கணிப்புகளும் துள்ளியமாகி வருகின்றன.

கட்சி வாக்கு வங்கி மற்றும் பொதுமக்கள் மனநிலை, பொது பிரச்சனைகள் அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் அடிப்படையில் கட்சிகளின் வாக்கு வங்கி கணக்கிடப்படவில்லை. தொகுதி வாரியாக சராசரி கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர்.

வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கொங்கு மண்டலம், தென்மாவட்டங்கள் என்ற நான்கு பிரிவுகளில் கட்சிகளின் பலம் அலசப்பட்டுள்ளது.

வட மாவட்டங்கள் 50 தொகுதிகள் 

(புள்ளிகள் சதவீதத்தில் கணக்கிடப்பட்டுள்ளது)

திமுக .........12
பாமக ..........6
காங்கிரசு ..5
வி.சி ..2
மொத்தம் 25

அதிமுக ......12
தேமுதிக .....4
கம்யூ .........2
இதரம் .........1
மொத்தம் ...19

மின்வெட்டு, ஊழல் குற்றசாட்டுகள் இவைகளை கடந்து இலவச திட்டங்கள் மற்றும் சன், மக்கள், கலைஞர், காகிரசு தொலைகாட்சிகளின் பிரச்சார பலம், ராமதாசு, கருணாநிதி, சுடாலின், திருமாவளவன் என மேடை பேச்சாளர்கள் அணி வகுப்பால் திமுக அணிக்கு இங்கு வெற்றி அலை வீசுகிறது.  திமுக அணி வடமாவட்டங்களில் 36 தொகுதிகளை கைபற்றும் அதிமுக அணி இங்கு 14 தொகுதிகள் வரை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.

கொங்கு மண்டலம் 60 தொகுதிகள்

திமுக ...............10
கொமுக............. 2
காங்கிரசு 2
விசி+இதரம் 1
மொத்தம் 15

அதிமுக .......14
தேமுதிக .....6
கம்யூ .........4
இதரம் .........1
மொத்தம்.... 25

கடும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தொழில்பாதிப்பு போன்ற காரங்களால் திமுக அணி பின்னங்கால் பிடரி வாங்குகிறது. இங்குள்ள 60 தொகுதிகளில் அதிமுக அணி 50 தொகுதிகளுக்கும் கூடுதலாக  உறுதியாக வெற்றிவாகை சூடும்.

கடலோர மாவட்டங்கள் 54 தொகுதிகள் :

திமுக ........14
காங்கிரசு ..4
வி.சி............1
இதரம்........1
மொத்தம் 20%


அதிமுக 11
தேமுதிக 5
கம்யூ 4
இதரம் 2
மொத்தம் 22%

மீனவர் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை உட்பட பிரச்சனைகளால் திமுக கோட்டையான இங்கு இம்முறை அதிமுக பலம்பெற்றுள்ளது. பிரச்சார சக்தி இல்லாததால் அதிமுக தனது வெற்றியை சேர்த்து அள்ள தவறிவிட்டது. இதனால் வெற்றி இரு பாதியாக பிரிந்து செல்கிறது. 54 தொகுதிகளில் 30 அதிமுக அணிக்கும் 24 திமுக அணிக்கும் செல்கிறது.

தென்மாவட்டங்கள் 70 தொகுதிகள்

திமுக..........13
காங்கிரசு... 8
இதரம் ........
மொத்தம் ..22

அதிமுக 15
தேமுதிக 5
கம்யூ ........3
இதரம் .......3
மொத்தம் 26%

தென் மாவட்டங்களை பொருத்தவரை கட்சி வாக்கு வங்கிதான் வெற்றி தோழ்வியை நிர்ணயிக்கிறது. வைகோ மற்றும் கார்த்திக் கட்சிகள் வெளியேற்றம், நாடார் சங்கங்களின் பிளவு, பிரச்சார அணிவகுப்பு இல்லாமை போன்றவை அதிமுக அணிக்கு பாதகமாக உள்ளன. இலவசங்கள் மற்றும் காங்கிரசு கூட்டணி திமுகவுக்கு பலமாக உள்ளது. சன் தொலைகாட்சி இறுதிகட்ட பிரச்சார யுக்திகள் மூலம் திமுக அணிக்கு கணிசமான வெற்றிதொகுதிகள் செல்கிறது. அதிமுக 40 திமுக 30 என்ற ரீதியில் வெற்றிகள் அமையலாம்.


திமுக 70 தொகுதிகளிலும், அதிமுக 100 தொகுதிகளிலும் வெற்றி பெரும். எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாதால் காங்கிரசு, பாமக, தேமுதிக கட்சிகள் ஆட்சியை நிர்ணயிக்கும் சூழல் உருவாகும் நிலை உள்ளது. காங்கிரசு 10, பாமக 15 தேமுதிக 15, இடதுசாரிகள் 15 தொகுதிகள் வெற்றிபெற வாய்ப்புள்ளது. 

Mar 18, 2011

தில்லாலங்கடி வேலையை துவங்கிய சன்டிவி


தேர்தல் களத்தில் எதிரணியின் பலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் யுக்தியை சன்தொலைகாட்சி மூலம் திமுக பெற்றுவருகிறது. நடுநிலை ஊடகம் போல காட்டிக்கொள்ளும் சன்குழுமம் வாக்குபதிவுக்கு முன்னரான மூன்றுநாட்களில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்திவிடும்.

விளம்பரம் பெருவதற்காக அனைத்து கட்சிகளின் செய்திகளையும் வெளியிடுவார்கள். இறுதி கட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு காரியத்தை சாதித்துக்கொள்வார்கள்.

நேற்று அதிமுக அணியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி சன்குழுமம் காசுக்கு மீறி கத்திவிட்டது. செயலலிதாவை யாரோ ஒருவர் ஆட்டிவைக்கிறார் என்றார் மதிமுகவின் நாஞ்சில் சம்பத். ஆனால் ராசபட்சே பேச்சை கேட்டு செயலலிதா செயல்படுகிறார் என்று நாஞ்சில் சம்பத் கூறியதாக தொடர்ந்து செய்தி வெளியிட்டது சன் டிவி. தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனை நடந்து கொண்டிருக்க தேமுதிக செயலலிதாவுக்கு 3 நிபர்ந்தனைகள் விதித்துள்ளதாக செய்தி பரப்பினர். அதே போல அதிமுகவுடன் சமரசம் இல்லை என தா.பாண்டியன் பேட்டியளித்ததாக பரப்பினர். இந்த செய்திகள் நாஞ்சில் சம்பத், விசயகாந்த், த.பாண்டியன் உள்ளிட்டோரை அதிர்ச்சியடைய வைத்தது. சூழ்நிலை கைதியானதால் மறுப்பு செய்தி வெளியிட முடியாமல் தவித்தனர். 

அதிமுக கூட்டணியை உடைப்பதில் தீவிரம் காட்டிய சன்குழுமம் அதிமுகவில் உள்ள சிலரின் உதவியை நன்கு பயன்படுத்தி வருகிறது. 

அரசியலில் எதிரிகள் என்றாலும் சாராய தயாரிப்பு தொழிலில் கூட்டாளிகளாக உள்ளனர் துணை ஒன்றாம் அமைச்சர் மற்றும் அதிமுக தலைமையின் தோழி ஆகியோர். இவர்கள் இணைந்து போட்ட ரகசிய திட்டம் தான் அதிமுக கூட்டணியில் நேற்று நிலவிய அத்தனை குழப்பங்களுக்கும் காரணமாம்.( இது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் நாளை காலை பதிவிடுகிறேன். )

மதிமுகவுக்கு 15 தொகுதிகள் கொடுத்து பிரச்சனையை சுமூகமாக்க செயலலிதா தீவிரம் காட்டியுள்ளதாக அதிமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Mar 17, 2011

மூன்றாம் அணி வெற்றிவாய்ப்பு? -கருத்துகணிப்பு


அதிமுக கூட்டணி உடைந்து மூன்றாம் அணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு குறித்து திமுக சார்பில் உளவுத்துறையின் மின்னல்வேக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தேமுதிக, இடதுசாரிகள், மதிமுக உட்பட கட்சிகள் வாக்குவங்கி மற்றும் நடுநிலை வாக்காளர்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதிமுக 85
திமுக 72
தேமுதிக 16
பாமக 12
கம்யூ 12
காங்கிரசு 10
மதிமுக 10
வி.சி 2
கொமுக 2
இதரம் 13

அதிமுக அணி ..............90
திமுக அணி ..................102
மூன்றாம் அணி........... 42

இந்த கருத்துகணிப்பு படி மூன்றாம் அணி தயவு இல்லாமல் அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்பதை காட்டுகிறது. இதற்கிடையில் மூன்றாம் அணி அமைவதை தடுக்கும் தடுக்கும் முயற்சியில் அதிமுகவினர் தீவிரம் காட்டியுள்ளனர்.

குறைந்த பட்சம் வைகோ தலைமையில் சிறு கட்சிகள் மூன்றாம் அணியாக செயல்பட வாய்ப்புள்ளது. 

விசயகாந்த், வைகோ தலைமையில் மூன்றாம் அணி.


அதிமுக கூட்டணி உடைந்து பலமான மூன்றாம் அணி ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு விரும்பும் தொகுதிகளை ஒதுக்காமல் தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது அதிமுக. இதனால் தேமுதிக, சி.பி.எம், சி.பி.ஐ, புதிய தமிழகம், மூமுக, பார்வர்டு பிளாக் உட்பட கட்சிகள் அதிமுக அணியில் இருந்து விலகின.  ஏற்கனவே அதிமுக அணியில் இருந்து விலக்கப்பட்டிருந்த மதிமுக, கார்த்திக் கட்சிகளும் மூன்றாம் அணி முயற்சியில் இறங்கியிருந்தன. 

இன்று காலை தேமுதிக அலுவலகத்தில் ராமகிருசுடிணன்,த.பாண்டியன், கிருசுணசாமி, சேதுராமன், கதிரவன் உள்ளிட்ட தலைவர்கள் விசயகாந்துடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாம் அணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மதிமுக தலைவர் வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மமக உட்பட உதிரி கட்சிகளையும் இணைத்து பலமான மூன்றாம் அணி அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேமுதிக, மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, புதிய தமிழகம், சமக, பார்வடு பிளாக், முமுக இதரகட்சிகள் மூன்றாம் அணியில் இடம்பெறலாம் என தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. 

திமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்



திமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்:

திருவள்ளூர் மாவட்டம்
1. திருவள்ளூர்
2. பொன்னேரி (தனி)
3. அம்பத்தூர்
4. மாதவரம்
5. திருவொற்றியூர்

சென்னை
6. ஆர்.கே.நகர்
7. கொளத்தூர்
8. வில்லிவாக்கம்
9. எழும்பூர் (தனி)
10. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி
11. ஆயிரம்விளக்கு
12. விருகம்பாக்கம்
13. சைதாப்பேட்டை

காஞ்சிபுரம்
14. பல்லாவரம்
15. தாம்பரம்
16. செய்யூர் (தனி)
17. உத்தரமேரூர்

வேலூர்
18. காட்பாடி
19. ராணிப்பேட்டை
20. கே.வி. குப்பம் (தனி)
21. குடியாத்தம் (தனி)
22. திருப்பத்தூர்
கிருசுணகிரி
23. வேப்பனகள்ளி
24. தளி

தருமபுரி
25. பென்னாகரம்
26. பாப்பிரெட்டிபட்டி
திருவண்ணாமலை
27. திருவண்ணாமலை
28. கீழ்பென்னாத்தூர்
29. ஆரணி
30. வந்தவாசி (தனி)

விழுப்புரம்
31. வானூர் (தனி)
32. விழுப்புரம்
33. விக்ரவாண்டி
34. திருக்கோவிலூர்
35. சங்கராபுரம்

சேலம்
36. கெங்கவல்லி (தனி)
37. ஏற்காடு (தனி)
38. சங்ககிரி
39. சேலம் (மேற்கு)
40. சேலம் (தெற்கு)
41. வீரபாண்டி

 நாமக்கல்
42. ராசிபுரம் (தனி)
43. சேந்தமங்கலம் (தனி)
44. குமாரபாளையம்

ஈரோடு
45. ஈரோடு (கிழக்கு)
46. அந்தியூர்
47. பவானிசாகர் (தனி)

திருப்பூர்
48. தாராபுரம் (தனி)
49. மடத்துக்குளம்

நீலகிரி
50. கூடலூர் (தனி)
51. குன்னூர்

கோவை
52. மேட்டுப்பாளையம்
53. கவுண்டம்பாளையம்
54. கோவை (வடக்கு)
55. கோவை (தெற்கு)
56. கிணத்துக்கடவு

திண்டுக்கல்
57. பழனி
58. ஒட்டன்சத்திரம்
59. ஆத்தூர்
60. நத்தம்

கரூர்
61. அரவக்குறிச்சி
62. கிருசுணராயபுரம் (தனி)
63. குளித்தலை

திருச்சி
64. சிறீரங்கம்
65. திருச்சி (மேற்கு)
66. திருச்சி (கிழக்கு)
67. திருவெறும்பூர்
68. லால்குடி
69. மணச்சநல்லூர்
70. துறையூர் (தனி)

பெரம்பலூர்
71. பெரம்பலூர் (தனி)
72 குன்னம்

கடலூர்
73. பண்ருட்டி
74. கடலூர்
75. குறிஞ்சிப்பாடி

நாகை
76. கீழ்வேளூர் (தனி)
திருவாரூர்
77. மன்னார்குடி
78. திருவாரூர்
79. நன்னிலம்

தஞ்சை
80.திருவிடைமருதூர் (தனி)
81. கும்பகோணம்
82. திருவையாறு
83. தஞ்சாவூர்
84. ஒரத்தநாடு

புதுக்கோட்டை
85.கந்தர்வக்கோட்டை (தனி)
86. விராலிமலை
87. புதுக்கோட்டை

சிவகங்கை
88. திருப்பத்தூர்
89. மானாமதுரை (தனி)

மதுரை
90. மேலூர்
91. மதுரை (கிழக்கு)
92. மதுரை (மத்தி)
93. மதுரை (மேற்கு)
94. திருமங்கலம்
95. உசிலம்பட்டி

தேனி
96. ஆண்டிப்பட்டி
97. பெரியகுளம் (தனி)
98. போடிநாயக்கனூர்
99. கம்பம்

விருதுநகர்
100. ராசபாளையம்
101. சிறீவில்லிபுத்தூர் (தனி)
102. சாத்தூர்
103. சிவகாசி
104. அருப்புக்கோட்டை
105. திருச்சுழி

ராமநாதபுரம்
106. திருவாடானை
107. முதுகுளத்தூர்
108. தூத்துக்குடி
109. திருச்செந்தூர்
110 ஒட்டப்பிடாரம் (தனி)

திருநெல்வேலி
111. சங்கரன்கோவில் (தனி)
112. தென்காசி
113. ஆலங்குளம்
114. திருநெல்வேலி
115. அம்பாசமுத்திரம்
116. பாளையங்கோட்டை

கன்னியாகுமரி
117 கன்னியாகுமரி
118. நாகர்கோவில்
119. பத்மநாபபுரம்

Mar 16, 2011

விரக்தியில் திமுக, மமதையில் அதிமுக:பலமாகும் மூன்றாம் அணி

அதிமுக திமுக கூட்டணிகளில் விரிசல் ஏற்பட்டு பலமான மூன்றாம் அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விரும்பிய தொகுதிகளை காங்கிரசு உட்பட கூட்டணி கட்சிகள் கராராக பெற்றுவிட்டன. இதனால் 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது திமுக. பெரும்பான்மை பெறமாட்டோம். அடுத்து கூட்டணி ஆட்சிதான். அதுவும் காங்கிரசு, பாமகவுடன் என்பதை திமுக தொண்டர்கள் சீரணித்துக்கொள்ளவில்லை. தலைமை மட்டத்தில் கூட்டணி ஏற்பட்டாலும், தொண்டர்கள் மத்தியில் அடிதடி தான் மிஞ்சுகிறது. போதகுறைக்கு பல தொகுதிகளில் காங்கிரசு தனித்துபோட்டி என்ற அறிவிப்புகள் வெளிவர அதிர்ச்சியில் உறைந்துள்ளது திமுக கூட்டணி. 

அதிமுக 160 தொகுதிகளில் போட்டி என்பதை தேமுதிக எதிர்பார்க்கவில்லை. அதே போல மதிமுக வெளியேற்றம், தமிழ் அமைப்புகளின் ஆதரவு இழப்பு போன்றவையும் தேமுதிகவை யோசிக்க வைத்துள்ளது. வேறு வழியில்லை என்ற நிலையில் சேர்ந்துள்ள இடதுசாரிகளும் விரும்பிய தொகுதி கிடைக்காமல் விக்கித்து நிற்கின்றனர்.

இன்று அதிரடியாக 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை செயலலிதா அறிவித்துள்ளார். இதில் தேமுதிகவின் 30, இடதுசாரிகளின் 10 தொகுதிகளும் அடக்கம் என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் தேமுதிக மற்றும் இடதுசாரிகள்.

சி.பி.எம் பகிரங்கமாகவே எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தாங்காள் விரும்பும் தொகுதிகளில் இருந்து அதிமுக வேட்பாளர்களை திரும்ப பெறவேண்டும் என்றுள்ளது சி.பி.எம். இதுகுறித்து சி.பி.எம் அவசர ஆலோசனை கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.

ஏமாற்றத்தில் அமைதிகாத்த வைகோவுக்கு அதிமுக அணி விரிசல் தெம்பை தந்துள்ளது. மூன்றாம் அணியை பலப்படுத்த தீவிரம் காட்டியுள்ளார்.

மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ வரிசையில் கொமுக, மமக, உட்பட கட்சிகளை சேர்க்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தேமுதிகவையும் மூன்றாம் அணிக்கு இழுக்கும் காய் நகர்த்தல்களும் தயாராகியுள்ளதாக தெரிகிறது.

விரக்தியில் இருக்கும் திமுக அணிக்கு மூன்றாம் அணிவரவு சற்று ஆருதலை தந்துள்ளது. ஆனாலும் மூன்றாம் அணி பலம் அடைவது திமுகவுக்கு திக்திக்.

சமீபத்திய தேர்தல் கணிப்புகளின் படி வெற்றி மதமதப்பில் இருக்கும் செயலிதா இறங்கி வருவாரா? 

தன்னம்பிக்கையோடு துணிச்சலாக வைகோ மூன்றாம் அணியை பலப்படுத்துவாரா?

காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை தக்கவைக்கும் கருணாநிதியின் திட்டத்திற்கு பலம் கூடுமா?

மூன்று நாட்களுக்குள் விடை கிடைத்துவிடும்...

அதிமுக 160 தொகுதிகளில் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு


சட்டசபை தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலை செயலலிதா வெளியிட்டுள்ளார். திருச்சி சிறீரங்கம் தொகுதியில் செயலலிதா போட்டியிடுகிறார். 

அதிமுக கூட்டணியில் 
அதிமுக ..........160
தேமுதிக ........41
மா.கம்யூ ........12
இ.கம்யூ ..........10
மமக .................3
பு. தமிழகம் ....2
இதரம்.............. 6
இறுதி வடிவம் பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் இருந்த மதிமுக அமைதியாக வெளியேற்றப்பட்டுள்ளது. 

Mar 15, 2011

காங்கிரசு தொகுதிகள் பட்டியல்-2011


காங்கிரசு தொகுதிகள் பட்டியல் - 2011
1.    திருத்தணி
2.    பூந்தமல்லி (தனி)
3.    ஆவடி
4.    திரு.வி.க நகர் (தனி)
5.    ராயபுரம்
6.    அண்ணாநகர்
7.    தியாகராய நகர்
8.    மைலாப்பூர்
9.    ஆலந்தூர்
10.    சிறீபெரும்புதூர் (தனி)
11.    மதுராந்தகம் (தனி)
12.    சோளிங்கர்
13.    வேலூர்
14.    ஆம்பூர்
15.    கிருசுணகிரி
16.    ஒசூர்
17.    செங்கம் (தனி)
18.    கலசப்பாக்கம்
19.    செய்யார்
20.    ரிசிவந்தியம்
21.    ஆத்தூர் (தனி)
22.    சேலம் வடக்கு
23.    திருச்செங்கோடு
24.    ஈரோடு மேற்கு
25.    மொடக்குறிச்சி
26.    காங்கேயம்
27.    உதகை
28.    அவிநாசி (தனி)
29.    திருப்பூர் தெற்கு
30.    தொண்டாமுத்தூர்
31.    சிங்காநல்லூர்
32.    வால்பாறை (தனி)
33.    நிலக்கோட்டை (தனி)
34.    வேடசந்தூர்
35.    கரூர்
36.    மணப்பாறை
37.    முசிறி
38.    அரியலூர்
39.    விருத்தாசலம்
40.    மயிலாடுதுறை
41.    திருத்துறைப்பூண்டி (தனி)
42.    பாபநாசம்
43.    பட்டுக்கோட்டை
44.    பேராவூரணி
45.    திருமயம்
46.    அறந்தாங்கி
47.    காரைக்குடி
48.    சிவகங்கை
49.    மதுரை வடக்கு
50.    மதுரை தெற்கு
51.    திருப்பரங்குன்றம்
52.    விருதுநகர்
53.    பரமக்குடி (தனி)
54.    ராமநாதபுரம்
55.    விளாத்திகுளம்
56.    சிறீவைகுண்டம்
57.    வாசுதேவநல்லூர் (தனி)
58.    கடையநல்லூர்
59.    நாங்குநேரி
60.    ராதாபுரம்
61.    குளச்சல்
62.    விளவங்கோடு
63.    கிள்ளியூர்

சீமான் யாருக்கு ஓட்டு கேட்கபோகிறார்?


அதிமுக அணியில் இருந்து வைகோ பிரிந்து தனித்துபோட்டியிட உள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சராசரியாக 4% வாக்குகளை மதிமுக வைத்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக என இரு அணிகள் மீதும் அதிர்ப்தி உள்ளது. 

காங்கிரசுக்கு எதிராக சீமான் உட்பட தமிழர் அமைப்புகள் இணைந்து 2% வாக்குவங்கி களம்காண்கிறது.  63 தொகுதிகளிலும் காங்கிரசை தோற்கடிப்போம் என்ற சபதத்தில் சீமான் உள்ளிட்டோர் களத்தில் குதித்துள்ளனர்.

காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்அணிக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். அந்த வரிசையில் எதிர் அணியில் அதிமுக நிற்கிறது. இந்த நிலையில் வைகோ மூன்றாம் அணியாக போட்டியிட்டால் சீமான் யாருக்கு வாக்கு சேகரிப்பார் என்பது தான் உச்சகட்ட கேள்வி.

ஒருவேளை வைகோவுக்கு வாக்குகேட்டால் வாக்குகள் சிதறி காங்கிரசு வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு ஓட்டு கேட்டால் வைகோ நட்புக்கு தர்மசங்கடமான நிலையுள்ளது.

தேர்தலுக்கு பின்னர் காங்கிரசு கணிசமான தொகுதிகளுடன் அதிமுக அணிக்கு செல்லாது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இந்த நிலையில் தமிழர் அமைப்புகள் யாருக்கு வாக்கு கேட்பார்கள்?

புதிருக்கு புதிராக உள்ள இந்த தேர்தல் தமிழகத்தை புரட்டிப்போட காத்திருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம். 

Mar 14, 2011

வைகோ மூன்றாம் அணி வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்


இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

அதிமுக அணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டால் நிச்சயம் இழப்பு அதிமுகவுக்கு தான். எதாவது ஒரு பலமான கட்சி மூன்றாவது அணியாக போட்டியிடாதா என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது திமுக. 

அதிமுக அணியில் இருந்து மதிமுக பிரிவதால் 1. எதிரணி பலவீனம் அடையும், 2. ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும். 3. ஈழம் ஆதரவு வாக்குகள் அதிமுக அணிக்கு போகாது. 4. வைகோவின் எதிர்மறை பிரச்சாரம் அதிமுகவை பலவீனப்படுத்தும். 5. தேர்தலுக்கு பின்னர் திமுக பக்கம் மதிமுகவை இழுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி 5 வித பலனை அனுபவிக்க திமுக காத்திருக்கிறது.

அதிமுக அணியில் தற்போது வாக்குவங்கி அடிப்படையில் வெற்றிக்கான போதிய பலம் உள்ளது. ஆனால் பிரச்சாரம் மூலம் கிடைக்கும் கடைசிகட்ட ஆதரவு மற்றும் வாக்கு சிதறல் வெற்றியை வெகுவாகவே பாதித்துவிடும்.

ஈழம் ஆதரவு அமைப்புகள் மற்றும் வாய்ப்பு கிடைக்காத பலகட்சி அதிர்ப்தி வேட்பாளர்களை ஒன்றினைத்தால் அது நிச்சயம் அதிமுகவுக்கு மிகப்பெரிய அடியாக அமையும்.

திமுக அணியை பொருத்தவரை அவர்கள் தெளிவான வாக்குவங்கியை குறிவைத்துள்ளார்கள். திமுகவுக்கு தற்போதைய ஒரே தேவை மூன்றாம் அணி. அது வைகோ மூலம் கிடைத்துவிட்டால் திமுகவின் வெற்றி உறுதியாக்கப்பட்டுவிடும்.

வட மாவட்டங்களில் நல்ல பலத்துடன் களம் இறங்குகிறது திமுக. தென் மாவட்டங்களிலும் காங்கிரசு உதவியுடன் கொஞ்சம் கரை காண்கிறது. ஆனால் மேற்கு மற்றும் கடலோர பகுதிகளில் திமுக பலவீனமாக உள்ளது. 

கடலோர பகுதிகளில் அதிகமாக உள்ள சிறுபான்மையினர் வாக்கு செயலலிதாவுக்கு வராது. அதே நேரத்தில் வைகோ மூன்றாம் அணியாக போட்டியிடும் போது மீனவர் பிரச்சனை காரணமாக திமுகவுக்கம் போய்சேராது.

விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மதிமுக பலமாக உள்ளது. அதே போல கடலோர மாவட்டங்களிலும் கொஞ்சம் செல்வாக்கு கூடியுள்ளது. இங்கு மட்டும் கவனம் செலுத்தி போட்டியிட்டால் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் வரை வெற்றிவாய்ப்பு உறுதியாக உள்ளது.

அதிமுக அணியில் 10 தொகுதிகளில் போட்டியிடுவதை விட மூன்றாம் அணியாக தனித்து போட்டியிடுவது மதிமுகவுக்கு கூடுதல் பலம். 

நடுநிலை வாக்காளர்கள், செயலலிதா&கருணாநிதி எதிர்ப்பு, ஈழம் ஆதரவு வாக்குகளுடன் மீண்டும் ஒருமுறை மதிமுக தனது 10 % வாக்குவங்கியை உறுதிசெய்யலாம்.

தற்போது செயலலிதாவை விட்டு பிரிவதால், கருணாநிதிக்கு பின்னரான திமுக விரிசல் மதிமுகவுக்கு நல்ல பலனை தரும்.

அதிமுக கூட்டணியில் கம்யூ 12+10 ஒதுக்கீடு


அதிமுக கூட்டணியில் சி.பி.எம் 12, சி.பி.ஐ 10 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று மாலை அதிமுக அலுவலகத்தில் சி.ராமகிருட்டிணன், த.பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து செயலலிதாவை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

அதிமுக கூட்டணியில் இதுவரை தேமுதிக 41, சி.பி.எம் 12, சி.பி.ஐ 10, மமக 3, சமக 2, இதரம் 6 என மொத்தம் 74 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. மீதம் உள்ள 160 தொகுதிகளில் அதிமுக மதிமுக தொகுதிகளை பங்கிட்டு கொள்ள வேண்டும்.

மதிமுகவுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கி மீதம் உள்ள 144 தொகுதிகளில் அதிமுக போட்டியிடக்கூடும் என தெரிகிறது. 

மதிமுக 21 தொகுதிகள் கேட்டு வருகிறது. குறைந்தது 18 தொகுதிகளையாவது தரவேண்டும். இல்லாவிட்டால் தனித்துபோட் என்ற நிலையில் மதிமுக உள்ளது.

Mar 13, 2011

யாரை வெளியேற்றுவது? செயலலிதா ஆடுபுலி ஆட்டம்

அதிமுக கூட்டணியில் இதுவரை 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. மிதம் உள்ள 182 தொகுதிகளை தான் இனி பங்கிட வேண்டும்.

தனிபெரும்பான்மை பெற குறைந்தது 150 தொகுதிகளுக்கும் கூடுதலாக போட்டியிடவேண்டும் என்று அதிமுக திட்டமிட்டுள்ளது. அனேகமாக 153 தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம். இதில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் இதர கட்சிகளின் தொகுதிகளும் உள்ளடக்கம்.

மமக 3, புதிய தமிழகம் 2, சமக 2, மூமுக 1, பார்வடு பிளாக்1, இகுக 1, கொஇபேரவை 1, என மொத்தம் இதர கட்சிகள் 11 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதில் மமக தனி சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதலாக இன்னொரு இதர கட்சி அதிமுக சின்னத்தில் போட்டியிட கூடும். 

12 + தேமுதிக 41 என மொத்தம் 53 தொகுதிகள் காலி. மிதம் உள்ள 181 தொகுதிகளில் அதிமுக 144 தொகுதிகளில் போட்டியிடும். 144 + 13 = 157 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் பட்சத்தில் குறைந்தது 125 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றிபெற்றுவிட முடியும் என்பதுவே அதிமுகவின் திட்டம். 

157+41=198 போக 36 தொகுதிகளை தான் மதிமுக, இந்திய கம்யூ, மார்க்சிய கம்யூ ஆகியவற்றிற்கு பிரித்து கொடுக்க வேண்டும். மதிமுக 15, சி.பி.எம்.11, சி.பி.ஐ 10 என பிரித்துக்கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

ஆனால் 21 தொகுதிக்கும் குறையாமல் வேண்டும் என்று மதிமுகவும், குறைந்தது 15 வேண்டும் என்று சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் கோரி வருகின்றன. 

சீமான் மற்றும் ஈழம் ஆதரவு வாக்குவங்கி மதிமுக பக்கம் இருப்பதால் மதிமுகவை தக்கவைத்துக்கொள்ள அதிமுக விரும்புவதாக தெரிகிறது. மதிமுகவை வெளியில் விட்டால் மூன்றாம் அணி என்ற பெயரில் வாக்குகள் பிரியும் என்ற பயம் செயலலிதாவுக்கு உள்ளது. அதே நேரத்தில் கம்யூனிசுட்டுகளை கழட்டி விடவும் தயக்கம் உள்ளது. களப்பணிக்கு கம்யூனிச தொண்டர்கள் தேவைப்படுகின்றனர்.

மதிமுக 21, சி.பி.ஐ 13 என 34 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

சி.பி.எம் ஒத்துவந்தால் 15, சி.பி.ஐ ஒத்துவந்தால் 13. எதாவது ஒரு கம்யூனிச கட்சி விட்டுபிரிந்தால் மதிமுகவுக்கு 21 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப்படியே காய்நகர்த்தல்கள் நடைபெருகிறது. 


அதிமுக ....144
தேமுதிக ..41
மதிமுக ....15
சி.பி.எம் ....11
சி.பிஐ ........10
இதரம் .......13

அல்லது 


அதிமுக .....146
தேமுதிக ...41
மதிமுக ......21
சி.பிஐ .........13
இதரம் ........13



இது தான் அதிமுக கூட்டணி கணக்கு. 

ஒரு கம்யூனிச கட்சியை பிரித்துவிடுவதால் பெரிதாக மூன்றாம் அணி உருவாகிடாது என்பது செயலலிதாவின் கணக்கு.

மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ யார் வெளியேறுவார்கள் காத்திருக்கிறது அதிமுக. 3ல் யார் வெளியேறுவது தோழமையுடன் பழகிய  மூன்று கட்சிகளுமே தர்ம சங்கடத்தில் உள்ளன.

வைகோ,விசயகாந்த்,சுடாலின்,அழகிரி அடுத்த முதல்வர்?

அண்ணா, கருணாநிதி, எம்.சி.ஆர், செயலலிதா வரிசையில் தமிழர்களுக்காக சிம்ம குரல் கொடுக்கக்கூடிய ஒரு அரசியல்வாதி வைகோவாக தான் இருக்க முடியும்.

கருணாநிதிக்கு பின்னர் வரும் சுடாலின், அழகிரி இன்னபிற திமுக தலைவர்களால் டெல்லியை சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை.

விசயகாந்திடன் தெளிவான பேச்சு தென்படுவதில்லை. அதேபோல சட்டம்நுணுக்கம், மொழி, தொடர்பியல் அறிவு போன்றவையும் விசயகாந்திடம் குறைவாகவே உள்ளது.

செயலலிதாவுக்கு இணையான ஒரு அரசியல்வாதியை தேடினால் இப்போது உள்ளவர்களில் வைகோவுக்கு தான் அந்த தகுதி அதிகமாக உள்ளது.

சுடாலின், அழகிரி போன்றவர்களால் அடிதடி ரவுடி அரசியல் நடத்த முடியுமே தவிர அறிவுசார்ந்த வாதவிவாதங்களை வைக்கமுடியாது என்றே தோன்றுகிறது.

விசயகாந்தின் மதுவிருப்பம் அவரது மதிப்பை என்றோ கெடுத்துவிட்டது. மதுஇல்லாமல் விசயகாந்தால் இருக்க முடியாது. அதுவும் அளவுக்கு அதிகமாக உளரும் விசயகாந்த் முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதி அற்றவரே.

தங்கபாலு, சிதம்பரம், வாசன் உட்பட காங்கிரசு தலைவர்கள் தகுதியற்றவர்கள் என்று சொல்லிதெரியவேண்டியதில்லை. அவர்களுக்கு பதில் சோனியாவே நேரடியாக தமிழகத்தை ஆட்சி செய்துவிடலாம்.

ராமதாசு, திருமாவளவன் போன்றவர்களால் அவர்கள் சாதியை விட்டு வெளியே வரமுடியாது.

செயலலிதாவுக்கு எதிர்திசையில் அமரும் தகுதி வைகோவுக்கு நிரம்பவே உள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது தமிழருக்கு இழப்பே...

தேமுதிக, காங்கிரசு ஆட்சியை நிர்ணயிக்கும் கட்சிகள்


தேர்தல் நெருங்க நெருங்க கருத்துக்கணிப்புகளும் துள்ளியத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. பத்திரிக்கையாளர்கள், காவல்துறை, அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், பொதுநல அமைப்புகள் உதவியுடன் உளவுத்துறை எடுக்கும் கருத்துக்கணிப்பு ஓரளவு துள்ளியமாக இருக்கும். ஆனால் இவை வெளியிடப்படுவதில்லை. 

தினமும் புதிப்பிக்கப்படும் உளவுத்துறை கருத்துக்கணிப்பில் சமீபத்திய முடிவு திமுக அதிமுக கட்சிகளை கலங்க வைத்துள்ளது.

ஆட்சியை நிர்ணயிக்கும் கட்சிகளாக காங்கிரசு மற்றும் தேமுதிக கட்சிகள் பலம் பெற்றிருப்பது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

காங்கிரசு மற்றும் தேமுதிக கட்சிகள் குறைந்தது தலா 25 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. பாமகவும் கனிசமான தொகுதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தேமுதிக 28
காங்கிரசு 25
பாமக 12
இதரம் 7
என மொத்தம் 72 தொகுதிகள் அதிமுக திமுக கட்சிகளை விட்டு பிரிந்து செல்கிறது.

அதிமுக 90
திமுக 72

தொகுதிகள் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசு அல்லது தேமுதிக தயவு இல்லாமல் அடுத்த ஆட்சி அமைய வாய்ப்பில்லை என அடித்துச்சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Mar 12, 2011

அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சி

அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போனாலும் 10,000 முதல் 1 லட்சம் வரை அன்பளிப்பு வர வாய்ப்புள்ளது. விருப்ப முள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியல் :

1.  எஸ். ஷேக் தாவூத்
தலைவர் - தமிழ் மாநில முஸ்லீம் லீக்
2.  வேட்டவலம் கே. மணிகண்டன்
தலைவர் - இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
(தமிழக விவசாயிகள் சங்கம்)
3. டாக்டர் எஸ். ஜோசப்பெர்னாண்டோ
தலைவர் - கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்,
4.  சி.என். ராமமூர்த்தி
நிறுவனத் தலைவர்-வன்னியர் கூட்டமைப்பு
5. டாக்டர் வை. பாலசுந்தரம்
தலைவர் - டாக்டர் அம்பேத்கர் மக்கள் கட்சி
6. பேராசிரியர் னுச. சி.அம்பேத்கர் பிரியன்
நிறுவனத் தலைவர் - இந்திய தேசிய குடியரசு கட்சி
7. பேராசிரியர் ஏ.எஸ்.எம். மரியநல்லு
தலைவர் - கிறிஸ்துவ மக்கள் கட்சி
செயல் தலைவர் - சிறுபான்மை ஐக்கியப் பேரவை
8.  குமரி அருண்
மாநிலத் தலைவர் - தலித் மக்கள் முன்னணி
9.  சாந்தமூர்த்தி
பொதுச் செயலாளர் - இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)
10.  ஏ.ஜி. நரசிம்மன்
நிறுவனத் தலைவர் - ராஜீவ் மக்கள் காங்கிரஸ்
11.  ஆர்.கே. சந்திரசேகரன்
தலைவர் - தமிழ் நாடு அனைத்துக் கட்டடத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு
12.  இடிமுரசு இஸ்மாயில்
மாநில பொதுச் செயலாளர்- முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13.  செஞ்சி த. வேலு மயிலோன்
பொதுச் செயலாளர்
வன்னிய குல ஷத்திரிய நல அமைப்புகளின் மத்திய மையம்
14.  ஏ.சி. சண்முகம்
நிறுவனத் தலைவர் - புதிய நீதிக்கட்சி
15.  பி. மணி கவுண்டர்
தலைவர் - மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை
16.  முருகன் ஜீ
நிறுவனத் தலைவர் - பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி
17.  பி.டி. அரசகுமார்
நிறுவனத் தலைவர் - அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக்
18.  கே.ஏ. செங்கோட்டுவேல்
தலைவர் - தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்
19.  அர்ஜூன் சம்பத்
மாநிலத் தலைவர், இந்து மக்கள் கட்சி (தமிழகம்)
20. டாக்டர் ம. மத்தியாஸ் (எ) சீனிவாசன்
நிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் கட்சி
21.  நுங்கை வீர. பாபு
நிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் கழகம்
22.  சாத்தை ஏ. பாக்யராஜ்
நிறுவனத் தலைவர், மக்கள் தேசம் கட்சி
23.  பெ. செங்கோடன்
நிறுவனத் தலைவர், விடுதலை விரும்பிகள் கட்சி
24.  கே. ஜெயப்பால் நாயுடு
தலைவர்- உழவர் உழைப்பாளர் கட்சி
அமைப்பாளர்- மக்கள் கூட்டணி
25.  நெல்லை எஸ். மகாலிங்கம்
மாநிலத் தலைவர்,
தமிழக கட்டடத் தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்
26.  தஞ்சை இளஞ்சிங்கம்
மாநிலத் தலைவர், சோஷயலிஸ்ட் ஜனதா கட்சி
27.  ச. வித்யாதரன்
மாநிலத் தலைவர், லோக் ஜனசக்தி கட்சி (தமிழ்நாடு)
28.  வி.ஏ. ஜார்ஜ்
நிறுவனத் தலைவர், அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சி
29.  டி.எஸ். பிரபு ராஜா
மாநிலத் தலைவர், நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்
30.  காஞ்சி காடக முத்தரையன்
மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு முத்தரையர் சங்கம்
31.  சு. பால்ராசு
நிறுவனர், மக்கள் முன்னேற்ற முன்னணி
(அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழுவைச் சேர்ந்த
22 நிர்வாகிகள் ஆதரவு)
32.  எம்.பி. சாலமன்
நிறுவனர் & தேசிய தலைவர்
அனைத்திந்திய அம்பேத்கர் மக்கள் முன்னேற்றக் கழகம்
33.  எம். புரட்சிவேந்தன்
தமிழ்நாடு படித்த வேலையற்றோர் இளைஞர் இயக்கம்
34.  இரா. குலசேகரன்
கூட்டமைப்பு தலைவர் - கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
35.  வி. ரங்கநாதன்
பொதுச் செயலாளர் - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கட்சி
36.  கே. நாராயணமூர்த்தி
மாநில முதன்மை பொதுச் செயலாளர்,
ராஷ்டிரிய ஜனதாதளம், தமிழ்நாடு
37.  கருவை கணேசன்
நிறுவனத் தலைவர்,
தமிழ் நாடு அருந்ததியர் மக்கள் முன்னேற்ற சங்கம்
38.  டி.வி.பி. நீலத்துண்டார்
அகில இந்திய தலைவர்,
அகில இந்திய அம்பேத்கர் திராவிட குடியரசு கட்சி
39.  சி. நிக்கோலஸ்
தலைவர், டாக்டர் அம்பேத்கர் பேரவை
40.  என். வெள்ளைச்சாமித் தேவர்
தலைவர், பசும்பொன் தேசிய கழகம்
41.  ஏ.ஆர். பர்கத்துல்லா
நிறுவனத் தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
42.  வி.ஒய். டேனியல் நாடார்
தலைவர், நாடார் மக்கள் இயக்கம்
43.  அ.த. ஸ்ரீரங்கன் பிரகாஷ்
தமிழ் மாநிலத் தலைவர் - அம்பேத்கர் இந்திய குடியரசுக் கட்சி
44.  பி.ஆர். தாமோதரன்
மாநிலத் தலைவர், தமிழ் நாடு சமாஜ்வாடி பார்ட்டி
45.  கே.சி. காட்டையன்
மாநில அமைப்பாளர்
தமிழ் நாடு அனைத்து அருந்ததியர் சங்கங்களின் கூட்டமைப்பு
46.  வி. அலங்கார பரதர்
நிறுவனத் தலைவர் - மீனவ மக்கள் கட்சி
47.  சி. ரவிராஜ்
நிறுவனத் தலைவர், திராவிட மக்கள் முன்னணி
48.  சி. பூபதி
மாநிலத் தலைவர், அனைத்து மக்கள் விடுதலை கட்சி
49.  கே.பி. சுந்தரபிரதாபன்
மாநில செயல் தலைவர், இந்திய குடியரசு கட்சி (கவாய்)
50.  வீ.க. அர்ச்சுனன்
மாநில பொதுச் செயலாளர்,
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம்
51.  பி.எம்.எம். காமராஜ்
நிறுவனத் தலைவர், இந்திய மக்கள் கட்சி
52.  வ. அய்யாக்கண்ணு
மாநிலத் தலைவர் - உழவர் உழைப்பாளர் முன்னேற்ற கட்சி
53.  வி. கணபதி சுப்பிரமணியன்
மாநிலத் தலைவர், தேசிய மனித உரிமைகள் கழகம் மற்றும்
நுகர்வோர் உரிமைகள் கழகம்
54.  கே.ஏ. தணிகைவேல்
மாநிலத் தலைவர் - தமிழ் நாடு முதலியார்கள் முன்னேற்ற சங்கம்
55.  எம்.எல். ராஜு
நிறுவனத் தலைவர்
தமிழக காந்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம்
56.  இ.எஸ். தங்கப்பா
மாநிலத் தலைவர்
தமிழ் நாடு மருத்துவர் சமூக மக்கள் முன்னேற்ற சங்கம்
57.  எம். ராஜப்பன்
தலைவர், வேட்டுவ கவுண்டர் சமூக நல சங்கம்
58.  ஆர். மணி
தலைவர் - அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் இளைஞர் பேரவை
59.  என்.வி. ஜெயசீலன்
தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)
60. டாக்டர் எஸ். மார்ட்டின்
நிறுவனத் தலைவர்-இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி
61.  இரா. மோகன்
மாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (ஹ)
62.  ஏ.ஜி. ஜோதிமணி
நிறுவனத் தலைவர், அகில இந்திய வள்ளலார் பேரவை
63.  மு.சு. திருநாவுக்கரசு
மாநில அமைப்பாளர், தலித் மக்கள் முன்னணி
64.  எஸ். வேலுச்சாமி
நிறுவனப் பொதுச் செயலாளர்-ஜனநாயக பார்வர்டு பிளாக்
65.  எம்.எஸ். மோகன்தாஸ்
மாநிலத் தலைவர், அம்பேத்கர் முன்னேற்றக் கழகம்
66.  எம்.ஜி. கண்ணன்
மாநிலத் தலைவர்,
தமிழ் நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை
67.  எஸ். அன்பில் பொய்யாமொழி
நிறுவனத் தலைவர், தலித் முன்னேற்றக் கழகம்
68.  பெ. கோவிந்தராசன்
மாநிலத் தலைவர், உழைப்பாளி மக்கள் முன்னேற்றக் கட்சி
69.  ஜெ. வாசுதேவன்
தேசிய பொதுச் செயலாளர், ஜனநாயக சுதந்திரா கட்சி
70.  எஸ். பால்ராஜ்
மாநிலத் தலைவர், சமூக நீதிக் கட்சி
71. டாக்டர் என். கிறிஸ்துமூர்த்தி
நிறுவனத் தலைவர், இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி
72.  அ.ச. லோகநாதன்
மாநிலத் தலைவர், தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி
73.  பி. சந்திரபோஸ்
தமிழ் மாநிலத் தலைவர்,
அனைத்து பிள்ளைமார், வேளாளர், முதலியார் சங்கங்களின் கூட்டமைப்பு
74.  பொன்னர் சு. சண்முகவேலு
அமைப்பாளர், வ.உ.சி. சோசலிச சனநாயக கட்சி
75.  எம். மோகன்
பொதுச் செயலாளர், அனைத்து மாவட்ட அருந்ததியர் இளைஞர் பேரவை
76.  கோவையரசு
நிறுவனர், ஆதித் தமிழர் பாசறை
77.  சின்னப்பாண்டி
தென்னிந்திய அருந்ததியர் சங்க கூட்டமைப்பு மற்றும்
அருந்ததியர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள்
78.  டி.கே. தீரன்சாமி
அமைப்பாளர், மாநில கொங்கு தமிழர் பேரவை
79.  அ. இனமுரசு கோபால்
நிறுவனர், தேசிய மக்கள் கட்சி
80.  எஸ். பொன்முத்து பாண்டியன்
பொதுச் செயலாளர்,
தமிழ் நாடு பசும்பொன் முக்குலத்தோர் குல நல சங்கப் பேரவை
81.  ஏ. அப்துல் அசீஸ்
பொதுச் செயலாளர், அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
82.  புயல் பாண்டியன்
நிறுவனத் தலைவர், அருந்ததியர் முன்னேற்றக் கழகம்
83.  க. பன்னீர்செல்வம்
தலைவர், தமிழ் நாடு அனைத்து தெலுங்கு மக்கள் பேரவை
84.  தலித் ஞானசேகரன்
தலைவர், அருந்தமிழர் குடியரசுக் கட்சி
85.  எம்.ஆர். கந்தசுவாமி
மாநில நிறுவனத் தலைவர், தமிழக பசவர் முன்னேற்ற கழகம்
86.  சக்தி சி. ஆனந்தன்
மாநிலத் தலைவர், தென் இந்திய நாடார் இளைஞர் பேரவை
87.  திண்டிவனம் எஸ். பெருமாள்
மாநில துணைத் தலைவர்
டாக்டர் அம்பேத்கர் மக்கள் உரிமை வளர்ச்சி
88.  பி.வி. ராஜன் (எ) ராஜேந்திரன்
பொதுச் செயலாளர், தென் இந்திய பொதுநலச் சங்கம்
89.  இனமிகு எஸ். குணசேகரன்
மாநிலத் தலைவர், ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி
90.  வானூர் கனகராஜ்
மாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)
91.  பி.வி. செல்வமணி
மாநிலத் தலைவர், விஸ்வகர்மா ஆசாரிகள் சங்கம்
92.  டி.ஏ. அன்வர்தீன்
நிறுவனத் தலைவர், தேசிய மக்கள் முன்னேற்ற கழகம்
93.  கே.வி. கனகாம்பரம்
தலைவர், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்
94.  விடியல் ஜெகநாதன்
மாநிலத் தலைவர், தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவை
95.  ஆசை. தாமஸ்
மாநிலத் தலைவர், கிறிஸ்தவ மக்கள் பாதுகாப்பு இயக்கம்
96.  கட்டபொம்மன் கந்தசாமி
நிறுவனத் தலைவர், அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
97.  தெக்கூர் இரா. தெட்சிணாமூர்த்தி
நிறுவனத் தலைவர், மக்கள் சேவை கழகம்
98.  வி.எஸ். நவமணி
மாநிலத் தலைவர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் (தமிழ் மாநிலக் குழு)
99.  என். ராஜு
நிறுவனர், எம்.ஜி.ஆர். புரட்சி முன்னேற்றக் கழகம்
100.  ஜெ. ஜார்ஜ்
ஒருங்கிணைப்பாளர்-அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
101.  எம்.எம்.சி. சேகர்
நிறுவனர், அகில இந்திய பறையர் பேரவை
102.  எஸ்.தென்மறவன்
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு மூவேந்தர் சேனா
103.  கே.கே. சீனிவாசன்
தமிழ் மாநிலத் தலைவர், அகில பாரத ஹிந்து மஹா சபா
104.  தேவர் சி. முகேஷ்
தலைவர், தேசிய தேவர் முன்னேற்றக் கழகம்
105.  க. சுந்தரமூர்த்தி
மாநிலத் தலைவர், வேட்டுவக் கவுண்டர்கள் பேரவை
106.  கா. முருகேசன்
மாநலித் தலைவர்,
தமிழ்நாடு விஸ்வகர்மா(ஆசாரியார்) இளைஞர் முன்னேற்ற பேரவை
107.  கா. மாரிமுத்து
மாநில போதுச் செயலாளர், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி
108.  ஆர். முருகபாண்டியன்
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு சீர்மரபினர் கூட்டமைப்பு
109.  அன்புதீபன்
தலைவர்-சமூக நீதி கூட்டணி
110.  என். தர்மதுரை
தலைவர்-காமராஜர் நாடார் சமுதாய பேரவை
111.  மு. பாலசுப்ரமணியன்
பொதுச் செயலாளர்- தமிழ் தேசியக் கட்சி
112.  ஏ. கிருஷ்ணமூர்த்தி
தலைவர், வன்னியர் இளைஞர் சங்கம்
113.  எஸ். ராஜேந்திரன்
நிறுவனத் தலைவர்,
அகில இந்திய மருதுபாண்டியர் முன்னேற்றக் கழகம்
114.  டி. சந்திரன்
தலைவர், அனைத்திந்திய காமராஜர் மக்கள் கட்சி
115.  அ. பழனிவேல்
மாநில பொதுச் செயலாளர்-தமிழக நண்பர்களின் உதவும் கரங்கள்
116.  என். ஜெயராமன்
மாநில பொதுச்செயலாளர்,
தமிழக மூவேந்தர் அமைப்புசாரா/கட்டுமானம்
மற்றும் பொதுத் தொழிலாளர்கள் நலச் சங்கம்
117.  சி. இராஜேந்திரன்
நிறுவனத் தலைவர், உழைப்பாளி மக்கள் முன்னேற்றக் கட்சி
118.  ஜெ.எம். கிருஷ்ணன்
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு மண்பாண்ட உற்பத்தி தொழிலாளர் சங்கம்
119.  ஈ. செல்வம்
தலைவர், வன்னியர் சிங்கம்
120.  எல்.ஆர். விஸ்வநாதன்
பொது செயலாளர், மனித உரிமை கட்சி
121.  வே. அசோக்குமார்
தலைவர், வன்னிய சத்திரியர் சங்கம்
122.  திண்டிவனம் ப. பாலாஜி
தலைவர், வன்னியர் இளைஞர் முன்னேற்ற சங்கம்
123.  அரிமா சி. முத்துக்குமார்
நிறுவனத் தலைவர்-அனைத்திந்திய ஜனநாயக முற்போக்கு கழகம்
124.  தலித் பாண்டியன்
நிறுவனத் தலைவர்,
கிராம லட்சியம் அனைத்து தொழிலாளர் முன்னணி
125.  எஸ். மருதமுத்து கவுண்டர்
நிறுவனர்-மாநிலத் தலைவர்,
கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் சங்கம்
126.  சி. ராமசுவாமி
மாநிலத் தலைவர், அகில இந்திய தாழ்த்தப்பட்ட இளைஞர் சங்கம்
127.  ஆர். செல்வராஜ்
நிறுவனத் தலைவர், அகில பாரத வீர சைவ ஜங்கம குல சங்கம்
128. பேராசிரியர் ஏ.எஸ். கருணாகரன்
நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு அனைத்து கவுண்டர் நலச் சங்கம்
129.  ஜி. ராமசுவாமி
தலைவர், அகில இந்திய திராவிட மக்கள் கட்சி
130.  பி. அம்பேத்வெங்கடேஷ்
நிறுவனத் தலைவர், ஆதி மக்கள் கட்சி
(6 ஷெட்யூல்டு இனத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேச)
131.  ஆர். பன்னீர்செல்வம்
நிறுவனத் தலைவர், தமிழ் நாடு வாணியர் பேரவை
132.  கட்டபொம்மன் சவுந்தரபாண்டியன்
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
133.  ஆர். அரவிந்தன்
மாநிலத் தலைவர், அகில இந்திய ஆர்ய வைசிய முன்னேற்ற பேரவை
134.  இரா.கோ. இராசசேகர்
நிறுவன பொதுச் செயலாளர், திராவிட பறையர் முன்னேற்றக் கழகம்
135.  கோ. நீலமேகம்
மாநில அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை
136.  வி.ஏ. அயாத்பாஷா
மாநில பொதுச் செயலாளர், புதிய காயிதே மில்லத் கட்சி
137.  ஆர். நாகராஜன்
பொதுச் செயலாளர், செட்யூல்டு இன விடுதலை இயக்கம்
138.  பி.எம். மகாலிங்கம்
மண்டலத் தலைவர், சேலம் மண்டல கட்டுமானம் &
அமைப்புசாரா உழைப்போம் உயர்வோம் பொது நல சங்கம்
139.  எம். நாகரத்தினம்
மாநிலத் தலைவர், தொம்பர சமுதாய முன்னேற்ற சங்கம்
140.  ரங்கநாதன்
தலைவர்,
அன்னை இந்திரா காந்திபவன் தமிழக தாய் காங்கிரஸ் கமிட்டி
141.  வி. தொட்டுசெட்டி
செயலாளர், கன்னட தேவாங்கர் பேரவை
142.  ஆர். அரங்கப்பெருமாள்
நிறுவனர், அருந்ததியர் மக்கள் இயக்கம்
143.  கே.ஜி. ராஜமாணிக்கம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி
144.  வி.கே. கோபாலகிருஷ்ணன்
மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜனசக்தி அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம்
145.  ஏ. நூர்முகம்மது
பொதுச் செயலாளர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல உரிiமை சங்கம்
146.  ஆர். பழனிசாமி
தலைவர் - தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்கள் நலப் பாதுகாப்பு சங்கம்
147.  ரங்கநாதன்
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம்
148.  எம். சின்னராசு
மாநிலத் தலைவர் - தமிழ்நாடு அருந்ததியர் நல உரிமை சங்கம்
149.  ஏ.சி. ராஜன்
அகில இந்திய அருந்ததியர் முன்னணி
150.  ப. நடராஜன்
தமிழ்நாடு அருந்ததியர் நல இயக்கம்
151.  வேங்கை ஆ. வன்னி அரசி
பொதுச் செயலாளர், சத்ரியர் முன்னேற்றக் கழகம்
152.  பா.அ. புத்தபிரியன்
தலைவர், சமூக நீதி பாதுகாப்பு இயக்கம்
153.  கே.வி. காம்ராஜ்
மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு குலாளர் சங்கம் மத்திய அமைப்பு
154.  த. சுரேஷ் படையாச்சி
தலைவர், வன்னியர் ஆட்டோ தொழிற்சங்கம்
155.  விசு சிவக்குமார்
நிறுவனத் தலைவர், அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம்
156.  துரை. சந்திரசேகரன்
தலைவர், தமிழ்நாடு அகமுடையார் பேரவை
157.  மு. கதிர்வேல்
தேசிய பொதுச் செயலாளர், இந்து தேசிய காங்கிரஸ்
158.  ஆரணி மு. ஜெயபால் கவுண்டர்
தலைவர், பாட்டாளி வன்னியர் முன்னேற்ற சங்கம்
159.  முனியசாமி
அனைத்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம்
160.  ஆர்.எஸ். தாமஸ்
பொதுச் செயலாளர், கிறிஸ்தவ நீதிக் கட்சி
161.  சி.ஜெ. ஸ்ரீதரசேகர்
மாநிலத் தலைவர்,பண்டி-கொட்டா சமூக மக்கள் பேரவை
162.  டி. விஜயகுமார்
நிறுவனர்-தலைவர், அகில இந்திய கிறிஸ்தவ லீக்
163.  செ. கணேசன்
மாநிலத் தலைவர் -ராஷ்டிரிய கிரந்திகாரி சமாஜ்வாடி கட்சி
164.  கே. ராமராஜன்
மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் கட்சி
165.  கி. காசிநாதன்
பொதுச் செயலாளர், வன்னியர் சங்கம்
166.  கே. சின்னராஜ்
நிறுவனத் தலைவர், தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கம்
167.  தா.வெ. வெங்கடேசனார்
நிறுவனத் தலைவர்,
அனைத்திந்திய திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம்
168.  டி.டி.கே. தலித் குடிமகன்
இயக்குநர் - நடத்துனர், தமிழக தலித் கட்சி (கூ.னு.மு.)
169.  பி.சி. தில்லன்ராஜ்
நிறுவனப் பொதுச் செயலாளர்,
டாக்டர் பி.ஆர். அம்பேத்ககர் மனிதநேய சங்கம்
170.  எம். சண்முகம் பிள்ளை
மாநில பொதுச் செயலாளர், பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கம்
171.  ஆர்.எம்.எஸ். சிட்டிபாபுராஜ்
தலைவர், தொழிலாளர்களின் கட்சி
172.  டி. கிருஷ்ணசாமி
மாநில பொதுச் செயலாளர், மாநில வள்ளுவர் குலச் சங்கம்
173.  தம்பி ச. தேவேந்திரன்
நிறுவனத் தலைவர், தமிழ் மக்கள் கட்சி
174.  கோவி. சுப்பிரமணியன்
தலைவர், அகில இந்திய நேதாஜி ஐசூஹ வாரிசுகள் சங்கம்
175.  ஏ. செல்வகுமார்
நிறுவனத் தலைவர்,
அகில இந்திய ஜனநாயக கிறிஸ்தவ முன்னேற்ற சங்கம்
176.  என்.எஸ்.ஏ. அக்னி சி. ஆறுமுகம்
நிறுவனத் தலைவர், அம்பேத்கர் கருஞ்சிறுத்தைகள்
177.  பி. சிவா
மாநிலத் தலைவர், அருந்ததியர் இளைஞர் முன்னேற்ற இயக்கம்
178.  ஆ. சிகாமணி
நிறுவனத் தலைவர், ஜனநாயக மக்கள் கட்சி
179.  தலித் கோ. பாலகிருஷ்ணன்
பொதுச் செயலாளர், அகில இந்திய தலித் முன்னேற்றக் கழகம்
180.  ஈ. கருணாமூர்த்தி
நிறுவனர் - தமிழ்நாடு ஆதியன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம்
181. எம். சங்கர்
தலைவர், டாக்டர் அம்பேத்கர் பழைய துணி வியாபாரிகள் நல சங்கம்
182.  ராயல் டி. தேவுகுமார்
அகில இந்திய கிருஸ்தவர்கள் விடுதலை முன்னணி
183.  சோம வேலாண்டி
நிறுவனர்/பொதுச்செயலாளர் - தேசிய அருந்ததியர் கட்சி
184.  பி. சம்பத்
நிறுவனத் தலைவர், தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
185.  கே.ஏ.ஆர். நூருல் அமீன்
மாநில பொதுச் செயலாளர் - அகில இந்திய முஸ்லிம் லீக்
186.  பெ. பொன்னுதுரை
நிறுவனர் & தலைவர், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி
187.  வி. பஞ்சவர்ணம்
சேதுபதி முன்னேற்ற முன்னணி
188.  பி. பால்ராஜ்
பொதுச் செயலாளர், கிறிஸ்தவ முன்னேற்ற முன்னணி
189. செஞ்சி  நி. சிலம்பரசன்
தலைவர், வன்னியர் மாணவர் சங்கம்
190. கவிஞர் ஜி. சீமான்
மாநில தலைவர்,
தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மறுமலர்ச்சி சங்கம்
191.  சி. ஆறுமுகம்
பொதுச் செயலாளர், ஒருங்கிணைந்த கட்டுமானம்-
அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் அமைப்பு
192.  மு. ராஜபாண்டியன்
மாநிலத் தலைவர்,
தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை
193.  சூளை மணி
நிறுவனத் தலைவர், தமிழ் நாடு போயர் மக்கள் பேரவை
194.  பி.கே. லோகநாதன்
நிறுவனப் பொதுச் செயலாளர், தமிழக சமத்துவ முன்னேற்றக் கழகம்
195.  சி. ரமேஷ்
மாநில பொதுச் செயலாளர், நமது தேசம் கட்சி
196.  ஆர். விஸ்வநாத முத்தரையர்
மாநிலத் தலைவர், தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்
197.  ஆர்.டி. பழனி
நிறுவனத் தலைவர்,
அகில இந்திய அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்றக் கழகம்
198.  எஸ். மாது
மாநிலத் தலைவர், டாக்டர் அம்பேத்கர் முன்னேற்ற பேரவை
199.  ஏ.சி. ராமலிங்கம்
நிறுவனத் தலைவர், அகிம்சை புலிகள் கட்சி
200.  கே. செல்வராஜ்
நிறுவனர், தமிழ் நாடு வன்னியர் சமூக நல இளைஞர் பேரவை
201.  சு. மழைமேனிபாண்டியன்
தலைவர், அம்பேத்கர் மக்கள் கட்சி
202.  ஏ.பி. ராமசாமி
நிறுவன்த் தலைவர், அருந்ததியர் மக்கள் விடுதலை கட்சி
203.  பொன். சிவக்குமார்
மாநிலத் தலைவர், தலித் மாணவர் இளைஞர் சங்கம்
204.  என்.ஆர். அரிராஜன்
மாநில பொதுச் செயலாளர், தேசிய தொழிலாளர் கட்சி
205.  கோ. வைரபாண்டியன்
நிறுவனர் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர்,
அம்பேத்கர் மக்கள் முன்னணி ( தேசிய அமைப்பு )
206.  அ. வெள்ளத்துரை
மாநிலத் தலைவர், கண்ணப்பர் குல தமிழ் நாடு முத்தரையர் பேரவை
தேசிய மக்கள் கட்சி
207.  எம்.ஏ. ராஜ்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ் நாடு அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி
208.  ஏ. நடராஜன்
தலைவர், வன்னியர் நோக்கர் சங்கம்
209.  மு.ம. தமிழ்யடியார்
நிறுவனர், தமிழ் தன்னுரிமை இயக்கம்
210.  சுகுமார்
தலைவர், தமிழ்நாடு கன்னட இனத்தினர் மக்கள்
211.  எஸ். ஜெயமணி
நிறுவனத் தலைவர்,
அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை
212.  ஓ. யோசன்
தலைவர், மனித சம உரிமைக் கட்சி
213.  கே. முரளிதரன்
பொதுச் செயலாளர், அகில இந்திய காமராஜ் காங்கிரஸ்
214.  ஆர். பக்கிரி
தலைவர், அருந்ததியர் சங்கம்
215.  கலிய. வீரமணி
மாநில தலைவர், தேசிய மக்கள் கழகம்
216.  பு. முத்துராமன்
மாநில பொதுச் செயலாளர் - அருந்ததியர் எழுச்சி பேரவை
217.  என்.எஸ். முருகன்
மாநிலத் தலைவர் - தமிழ் நாடு மக்கள் நல முன்னேற்ற சங்கம்
218.  வி.பி. ஜெயராஜ் ரெட்டியார்
நிறுவனத் தலைவர், தமிழக ரெட்டியார் நல வாழ்வு சங்கம்
219.  ப. சுப்புராஜ்
நிறுவனத் தலைவர், தமிழ் நாடு வ.உ.சி. பேரவை
220.  ஏ. தண்டபாணி
மாநிலத் தலைவர் - தமிழ்நாடு மருத்துவர் சமூகநல பாதுகாப்பு சங்கம்
221.  சு.க. முருகேவல்ராசன்
நிறுவனத் தலைவர், மக்கள் விடுதலை கட்சி
222. டாக்டர் ஜி. சுவாமிநாதன்
மாநிலத் தலைவர், சாலியர் மகாசன சங்கம் (தமிழ் நாடு)
223. தோழர் ஜி. சுபஹான்
மாநில பொதுச் செயலாளர், இந்திய ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி
224.  வெற்றி மு. ஜெயவேல்
நிறுவனத் தலைவர், அகில இந்திய வள்ளுவர் முன்னேற்ற கழகம்
225. திருமதி என். சாந்தி
வன்னியர் மகளிர் மேம்பாட்டு சங்கம்
226.  எம்.எம். பழனிசாமி
நிறுவன தலைவர்- தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் பேரவை
227.  கே.வி. முருகன்
மாநிலத் தலைவர், தமிழக பாரத ரத்னா
டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கம்
228. திருமதி ஏ. தனபாக்கியம்
தருமபுரி தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சி-தமிழ்நாடு
229.  கத்திப்பாரா கே. குணசேகரன்
தலைவர், செங்கை அண்ணா மாவட்டம்
தமிழ்நாடு சோனியாகாந்தி பேரவை (இ)
230.  சே. முரளிக்குமார்
தலைவர், பறையர் முன்னேற்ற கழகம்
231.  கே. சங்கரராவ்
தலைவர், தமிழ்நாடு ஆர்ய வைஷ்ய மகா சாபா
232.  மு. ராஜமாணிக்கம்
நிறுவனத் தலைவர், நமது மக்கள் கட்சி
233.  பி. சிவாஜி
நிறுவனத் தலைவர் - டாக்டர் அம்பேத்கர் கழுகுகள் தமிழ் நாடு
234.  ஜி.எஸ். பாண்டியன்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ் நாடு பிரமலைக் கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு
235.  ஒய். சாரதிகாந்த்
நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்
இந்திய முன்னேற்றக் கழகம்
236.  ஐ.எம். சேகர் நாயக்கர்
நிறுவனர், இந்து வன்னியர் பேரவை
237.  எம்.பி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர், அகில இந்திய திருணாமுல் காங்கிரஸ்/
அனைத்து பொது மக்கள் நலசேவை சங்கம்
238.  ஜி.எஸ். சுந்தர் கிருஷ்ணன்
தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கம்
239.  பி.என். பாலு
தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்
240.  மூடூர். கே. கிருஷ்ணன்
நிறுவனர் & தலைவர், விடுதலை சிங்கங்கள்
241.  இடையப்பட்டி எம். சின்னப்பா
மாநிலத் தலைவர்,எம்.ஜி.ஆர். சமநீதி கழகம்
242. திருமதி என். பானுமதி
மாநிலத் தலைவி - தமிழ் மாநில மகளிர் முன்னேற்றப் பேரவை
243.  வெ. கோபாலகிருஷ்ணன்
தமிழ்நாடு மாநில நிறுவனர், தமிழ்நாடு தர்மநீதி கட்சி
244. புலவர்  ஏ. சுப்பிரமணியன் யாதவ்
நிறுவனர்/செயல்தலைவர், உரிமை மீட்புக்கழகம்
245.  எம். தேவராஜ்
தலைவர், வன்னியர் முன்னேற்ற சங்கம்
246.  எம்.ஜி. தமிழன்பன்
தமிழ் மாநில மீனவர் பாதுகாப்புக் கழகம்
247. திருமதி ஸ்ரீலல்லி
மாநில தலைவர் - அகில இந்திய கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மீட்பு குழுவின் கூட்டமைப்பு
248.  அனகை நா. மக்கள்சிவன்
நிறுவனர்-தலைவர், வ(ந)ல்லரசு 2020 மக்கள் கட்சி
249.  ஜான் சுவார்ட்ஸ்
நிறுவனர்-தலைவர், தமிழ் கிறிஸ்தவர் கட்சி
250.  எஸ். ஜார்ஜ் ட்ரூமன்
தலைவர், தமிழர் முன்னேற்றக் கட்சி
251.  ஆர். ராஜா செந்தில்வேலன்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு
252.  வி. ராஜீ
தலைவர், தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டிய நலிவடைந்த மக்கள் பொது முன்னேற்றச் சங்கம்
253.  ஜி. மணி
தலைவர், தமிழ்நாடு சிறுவியாபாரிகள் சங்கம்
254.  பைபிள் பிலிப்
தலைவர்,
சென்னை மறைமாவட்டம் பெந்தெகொஸ்தே சபைகள் ஐக்கியம்
255.  எம்.ஜி. மணிவண்ணன்
நிறுவன தலைவர், மறுமலர்ச்சி வன்னியர் சங்கம்
256.  எம். பழனி
தலைவர், சம்பு மகாரிஷி வன்னியர் சங்கம்
257.  என்.எஸ். வேல்முருகன்
நிறுவனர் & தலைவர், மக்கள் வறுமை ஒழிப்பு சங்கம்
258.  கே.கே. கார்த்திகேயன்
நிறுவனத் தலைவர், இளைய சிங்கம் இயக்கம்
259. திருமதி கே.எஸ். சமுத்திரா தேவி
தலைவி, மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கம்
260.  ஏ.டி. விஸ்வநாத்
நிறுவனத் தலைவர், அம்பேத்கர் ஜனசக்தி
261.  சிதறல் வி. ராஜேஷ்
மாநிலத் தலைவர், தமிழ் நாடு சிவசேனா
262. கவிஞர் பி.ஜி. ஆனந்தன்
நிறுவனர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்
263.  லயன் எம்.எஸ். ராமலிங்கம்
பொதுச் செயலாளர் -அகில இந்திய சௌராஷ்ட்ர மத்ய சபா
264.  ஏ.எஸ். இராஜா யாதவ்
நிறுவனர், தமிழ் நாடு அனைத்து யாதவர் கூட்டமைப்பு
265.  எம்.டி. கிறிஸ்டியன் சாம்ராஜ்
தலைவர், அனைத்திந்திய கிறிஸ்தவ நீதிக் கழகம்
266.  ஜோலார்பேட்டை மு. மாணிக்கம்
இயக்கத் தலைவர், பாரத மக்கள் காங்கிரஸ்
267.  பி. கரிகாலன்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு பேரவை,
தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை
268.  க. நகைமுகன்
நிறுவனர், தனித் தமிழர் சேனை
269.  எம். பாண்டுரங்கன்
தலைவர், தமிழ்நாடு வணிகநடமாடும் வியபாரிகள் நல உரிமை சங்கம்
270.  மயிலை ஜி. குப்புசாமி
நிறுவனத் தலைவர், வன்னியத் ‘தீ’
271.  எம்.ஜி. முனுசாமி
மாநில தலைவர்-தமிழ்நாடு ஆதி ஆந்திரர் முன்னேற்ற சங்கம்
272.  வி. அருணாசலம்
தலைவர், மீனவர் பெடரேஷன்
273.  ஈ. மாணிக்கவேலு
பொதுச் செயலாளர்-அகில இந்திய விஸ்வகர்ம பேரவை
274.  எம்.பி. குமார்
பொதுச் செயலாhர்,
ரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிளாலர்கள் சம்மேளனம்
275.  எஸ்.கே. சீனிவாசன்
தலைவர்,
ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நல சங்கம் தமிழ்நாடு
276.  ஆ.சு. வேலுதாஸ் பாண்டியன்
நிறுவனர் மற்றும் மாநில பொதுச்செயலாளர், சமத்துவ மக்கள் கட்சி
277.  இரா. ஆனந்தராஜ்
மாநில பொதுச் செயலாளர் -இந்திய முற்போக்கு மக்கள் நலக்கட்சி
278. புரட்சிக்கயல்  கு. பாரதி
தலைவர், தென்னிந்திய மீனவர் நல சங்கம்
279.  கே. பழனிச்சாமி
மாநில தலைவர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்
280. திருமதி பி.வி. மஞ்சுளா
தலைவர், அருந்ததி மகளிர் மறுவாழ்வு அமைப்பு
281.  க. திலீபன்
மாநில அமைப்பாளர், சேரிப்புலிகள் இயக்கம்
282.  ஆர். விருத்தகிரி
பொதுச் செயலாளர்
இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு
283. டாக்டர் வீ. இராமகிருட்டிணன்
தலைவர், தேவரின கூட்டமைப்பு
284.  வீரக்குமார் (எ) மதுரை வீரபோயன்
தென் மண்டல அமைப்பாளர் - உழைப்பாளி மக்கள் கட்சி
285.  எம்.கே. கஜேந்திரன்
பொதுச் செயலாளர் -அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம்
286.  அ. மாரிச்சாமி
மாநிலத் தலைவர், தமிழ்நாடு அருந்ததியர் முன்னணி
287.  எஸ். அகமது மன்சூர்
மாநிலத் தலைவர், சிறுபான்மை மக்கள் கழகம்
288.  தொ. வெங்கடேசன்
தலைவர் - தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு
289.  கே.சி. அருணாசலம் செட்டியார்
தலைவர் - அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவை
290.  என்.டி. ராஜசேகர்
மாநில தலைவர்
தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம்
291.  இராம. நாகராஜ்
நிறுவனத்தலைவர், ஆதிவாசி குடியரசு கட்சி
292.  எஸ்.பி. இராஜதுரை
நிறுவன தலைவர்
தமிழக நலிவுற்றோர் நாடார் பாதுகாப்பு பேரவை
293.  ஆர். பொன் மாணிக்கம்
தலைவர், தமிழ்நாடு போயர் (ஓட்டர்) நலச்சங்கம்
294.  எம். தங்கராஜன்
மாநில துணைத் தலைவர், பாரதிய ஜன சக்தி
295.  மு. மகிழ்வாணன்
பொதுச் செயலாளர், இந்திய மனித உரிமை கட்சி
296.  ஆர். ரமேஷ்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்மாநில கட்டிட உழைப்பாளிகள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
297.  பி. வேலாயுதம்
மாநில அலுவலக செயலாளர்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு
298.  ஏ. எஸ்ராபாலகுரு
மாநிலத் தலைவர், ஆசிர்வாதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் மாநில சங்கம்
299.  தி. இரவி
நிறுவனர்-தலைவர், ஜனநாயக புரட்சி முன்னணி
300.  ஆர்.சி. ராமசாமி
தலைவர்- திராவிட என்.டி.ஆர். அண்ணா தெலுங்கு தேசம் கட்சி
301.  ஆர். விக்டர் தர்மராஜ்
நிறுவனர்-தலைவர், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு
302.  ஏ. கணேசமூர்த்தி
தலைவர் - தமிழ்நாடு பழைய பொருள் வியாபாரிகள் நல சங்கம்
303. கவிஞர் சி. வீர. சங்கர்
மாநில பொதுச் செயலாளர்
சமத்துவ தையல் தொழிலாளர்கள் நலச்சங்கம்
304.  வி.என். கண்ணன்
மாநில தலைவர்
தமிழ்திருநாடு நிலம், வீடு, மனை தரகர்கள் நலச்சங்கம்
305.  ஏ. குமரேசன்
தலைவர், வன்னியர் நலச்சங்கம்
306.  வி. வில்லியம்
தலைவர், தலித் மக்கள் கிருஷ்டீன் சங்கம்
307.  கே. முருகேசன்
மாநில பொதுச்செயலாளர்
குறவன் பழங்குடி மக்கள் நலச் சங்கம்

Popular Posts