Mar 8, 2011

திமுக ராசினாமா காரித்துப்பும் டெல்லி நிருபர்கள்


இன்றும் மாலை நெருங்குகிறது என்ன நிலவரம் என்று கேட்க டெல்லி பத்திரிக்கை நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். 

உங்களுக்கு வேரவேலை இல்லையா? என்பது தான் முதல் பதிலாக வருகிறது. 

ஒரு காலத்தில் தமிழக முதலமைச்சர் டெல்லி வருகிறார் என்றால் அத்தனை பத்திரிக்கையாளர்களும் வீட்டுப்பாடத்துடன் தயாராக இருப்பார்கள். உறுதியான முடிவுகளுக்கு பெயர் பெற்றது தமிழக அரசியல்.

ஆனால் கடந்த 2 நாட்களாக இங்கு நடக்கும் நாடகங்கள் உண்மையில் தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கே கேவலமாக இருக்கிறது. நேற்று கூட கேரள உட்பட பல மாநில பத்திரிக்கையாளர்கள் திமுக ராசினமா விடயத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்தார்கள். இன்று அதை கண்டுகொள்ளவே இல்லை. 

இது பற்றி பேசினாலே மற்ற மொழி பத்திரிக்கையாளர்கள் கேவலமாக பேசுகிறார்கள். இதே பதிலை தான் டெல்லியில் உள்ள மலையாள பத்திரிக்கை நண்பரும் சொன்னார்.

கருணாநிதி இறுதிகாலத்தில் ஏன் தான் இப்படி கேவலப்படுகிறாரோ? கோபம் போய் பாவம் என்ற பரிதாப எண்ணம் தான் வருகிறது.

1 comment:

Popular Posts