Mar 10, 2011

63=0 தயாராகட்டும் சீமான் படை


தமிழகத்தில் இருந்து காங்கிரசை கருவறுக்க ஒரு துணிச்சலான படை அடியளந்து வேலை செய்கிறது என்றால் நிச்சயம் அது சீமான் படை தான்.

என்ன பெரிய சீமான் தேர்தல் நேரத்தில் பிடித்து சிறையில் போட்டுவிட்டால் சுருதி அடங்கிவிடும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் கோவையில் நாம்தமிழர் கட்சியின் நடத்திய பொதுக்கூட்டம் அந்த கணிப்பை மாற்றியது.

சீமானை விட வீறுகொண்டு பேசும் ஏராளமான இளம் பேச்சாளர்கள் காங்கிரசுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பங்களிப்பை அவ்வளவு குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. தமிழ்ர்களுக்கு எதிராக வாய் சவடால் விட்ட இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம் உட்பட காங்கிரசு தலைவர்களை தோற்கடித்து சாதனை படைத்தனர். 

இந்த தேர்தலில் இன்னும் கொஞ்சம் வீரியம் கொண்டுள்ளனர். 

ஈழத்தமிழர்களின் 63 ஆண்டு கனவை தவிடுபொடியாக்கிவிட்டு களம் காண்கிறது காங்கிரசு. கொஞ்சம் கொஞ்சமாய் ஈழ மண் சேர்த்து ஈழநாட்டை கட்டி எழுப்பினர். தனிஈழம் நாட்டுக்கு சர்வதேச அரசியல் அங்கீகாரம் கிடைக்ககூடிய நேரத்தில் ஒட்டுமொத்தமாக கொன்று குவித்தது காங்கிரசு. அந்த கோரம் காங்கிரசு மீது இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

63 தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவியது காங்கிரசு என்ற செய்தியை தான் உலகின் பல மூலையிலும் இருக்கும் ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கிறான்.

அந்த நற்செய்தியை அடைய சீமான் படை இன்னும் இன்னும் வீறுகொண்டு எழவேண்டும்.

திமுக&காங்கிரசு மோதலில் ஏற்கனவே 50% தோல்வி உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் மீதம் உள்ள 50% எட்ட தமிழர் அமைப்புகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும்.

நான் எந்த கட்சியிலும் அமைப்பிலும் இல்லை. ஆனாலும் காங்கிரசை வீழ்த்தும் ஒருங்கிணைந்த தமிழ்ர்படையில் நானும் களத்தில் நிற்பேன்.

5 comments:

  1. //"63=0 தயாராகட்டும் சீமான் படை"//

    அப்படி ஒன்று நடந்தால் நிச்சயம் சீமானுக்கு நன்றி சொல்லி எனது வலைத்தளத்தில் ஒரு பதிவிடுவேன்.

    ReplyDelete
  2. உலகப்பந்தில் உள்ள அத்தனை தமிழரினதும் எதிர்பார்ப்பும் அதுவே. போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் இரத்த வெறிபிடித்த காங்கிரஸ் மண்கவ்வ வேண்டும். தமிழகத்து உறவுகள் மனது வைத்தால் நிச்சயமாய் முடியும். அநாதரவாய் கண்ணீர் சிந்திய எம் ஈழ உறவுகள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரியும். அதற்காக போராடும் சீமான் அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நமது மக்களுக்கு அந்த உணர்வை ஊட்ட வேண்டிய பொறுப்பு தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் உள்ளது.மேலும் சீமான் போன்றவர்களது கரத்தை வழுப்படுத்தும் வகையில் தமிழ் உணர்வு உள்ள உள்ளங்கள் அனைவரும் தெரு முனை பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.

    ReplyDelete
  4. நமது மக்களுக்கு அந்த உணர்வை ஊட்ட வேண்டிய பொறுப்பு தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் உள்ளது.மேலும் சீமான் போன்றவர்களது கரத்தை வழுப்படுத்தும் வகையில் தமிழ் உணர்வு உள்ள உள்ளங்கள் அனைவரும் தெரு முனை பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.

    ReplyDelete
  5. "ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

    அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

    ReplyDelete

Popular Posts