Feb 12, 2011

அஞ்சாம்படை : கலையான டி.வி யாருக்கு


கலையான தொலைக்காட்சியின் ஆதிக்கம் யார்கைவசம் வரும் என்பதில் உச்சபிரச்சனை எழுந்துள்ளது. 

2க்கு 60%, 3னின் வாரிசுக்கு 20% கொடுத்ததோடு இன்னாரு 20%தை 3க்கு சாதகமாகவே சரம்போட்டுள்ளார் விஞ்ஞான ஊழல்வாதி. ஆரம்பத்தில் 60% தன்குடும்ப வசம் தான் உள்ளது. ஊழல் காலம் சென்றதும் சூரியகுழுமம் போல 20% பிரித்துக்கொடுத்து பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்ற கணக்கில் இருந்தது மதுரை வட்டம். ஆனால் ஊழல் காலம்போனாலும் பிரச்சனை அலைகற்றை வடிவில் வந்துநிற்கும் என்ற அச்சம் வந்துள்ளது 2ம் தரகுடும்பத்துக்கு.

மேலும் தாயின் சொந்த சம்பாதியத்தை விருப்பம் உள்ளவருக்கு கொடுக்கும் சட்டம் உள்ளதால், தனக்கு கலை டி.வியில் கடுகளவு பங்கும் வரவரவாய்ப்பில்லை என்பது இப்போது தான் புரிந்துள்ளது மதுரைவட்டத்திற்கு.

அதுமட்டுமல்ல 60 தை நான்காக பிரித்தால் 15 தான் வருகிறது. இதில் 20% 3ம்தரத்திடம் இருப்பது கவலை அளித்துள்ளது 2ம் தர வாரிசுகளுக்கு.

கலையான டி.வியையே ஊழல்கற்றையில் இருந்து மீட்பதோடு, 3ம் தர வாரிசுடன் சரத்தையும் உருவி தன்பங்கில் தனிக்கணக்கு துவங்க வேண்டும் என்பது மதுரைவட்டத்தின் நெருக்கடி.

3ம் தரம் கம்பி எண்ணுவதை தவிர்க்க இந்தாலி சனியனே சரணம் என்றிருக்கும் இந்த நிலையில் மதுரை வட்டத்தின் அதிரடியும் ஊழல் விஞ்ஞானிக்கு புதுநெருக்கடி.

No comments:

Post a Comment

Popular Posts