Feb 14, 2011

வாய் திறந்தார் ராசா - என்னை வைத்து அரசியல் நடக்கிறது


இன்று மீண்டும் ராசாவுக்கு மேலும் 3 நாள் சி.பி.ஐ காவல் நீட்டிக்கப்பட்டது. என்னை வைத்து அரசியல் செய்கிறார்கள் என ராசா பகிரங்கமாகவே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

பிப்.2 தேதி கைது செய்யப்பட்ட ராசா தொடர்து 11 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று ராசாவுக்கு மேலும் 3 நாட்கள் காவல்நீட்டிப்பு செய்யப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராசாவின் வழக்கறிஞர் , அந்த வழக்கு அரசியல் நோக்கில் கொண்டு செல்லப்படுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது. ராசானை உடணடியாக பிணையத்தில் விடுதலை செய்யவேண்டும் எனவாதிட்டார். 

சி.பி.ஐ தரப்பில் மேலும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தவேண்டி உள்ளதால் இப்போதைக்கு ராசாவை வெளியில் விடக்கூடாது, மேலும் 4நாட்கள் விசாரணை காவல் வேண்டும் என வாதிட்டனர். 

சி.பி.ஐ காங்கிரசு கைபாவையாக செயல்படுத்துகிறது என்பது ஏற்கனவே நிலுவையில் இருக்கும் குற்றச்சாட்டு. இந்நிலையில் ராசாவை வைத்து தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி என்ற பேரத்தில் காங்கிரசு ஈடுபட்டுள்ளது தி.மு.கவுக்கு பெரும் அதிர்ச்சி.

விரைவில் தலைவர் மௌனம் கலைவார். பொருத்திருந்து பொருத்திருந்து பொங்கி வெடிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ராசாவின் ஆதரவாளர்கள்.

No comments:

Post a Comment

Popular Posts