Feb 4, 2011

காட்டிக்கொடுக்க தயாராகும் ராசா : அதிர்ச்சியில் திமுக


அலைகற்றை ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை காட்டிக்கொடுக்க ராசா தயாராகிவருவது திமுக & காங்கிரசு வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அலைகற்றை ஊழலில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ராசா,நேற்று முன்தினம் திடீரென கைது செய்யப்பட்டார். ராசாவை கைது செய்ய பிரதமர் மற்றும் தயாநிதிமாறன் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

திமுக & காங்கிரசு கைவிடும் பட்சத்தில் அனைவரையும் காட்டிக்கொடுக்க தயங்கமாட்டேன் என்ற ராசா தரப்பு மிரட்டல் இருபக்கமும் சென்றுள்ளது.

முதல் நாள் வாதத்தின் போதே ராசாவின் வழக்கறிஞர் இதை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அலைகற்றை ஓதுக்கீட்டில் ராசா மட்டுமே முடிவு எடுக்கவில்லை, பிரதமர் அலுவலகமும் சேர்ந்து தான் முடிவு எடுத்தது என்ற வாதத்தை முன்வைத்தார். சி.பி.ஐ விசாரணையில் இதை கருத்தில் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராசாவின் அதிரடி திமுக தலைமையை கதிகலங்க வைத்துள்ளது. சுடாலின் தரப்புக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கலைஞர் தொலைகாட்சிகளுக்கு மிகப்பெரிய அவப்பெயரை கொண்டு சேர்க்க ராசாவின் வாக்குமூலம் காத்திருக்கிறது. 

உப்பை தின்றவன் தண்ணீரை குடித்து தான் ஆக வேண்டும்.

1 comment:

  1. சீக்கிரம் அந்த சம்பவம் நிகழவேண்டும்

    ReplyDelete

Popular Posts