Feb 21, 2011

கசாபுக்கு தூக்கு உறுதிசெய்தது மும்பை உயர்நீதிமன்றம்


மும்பை தாக்குதல் வழக்கில் அசுமல் கசாப்பின் தூக்குதண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. 

2008 மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே அப்துல்கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்திருந்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அன்சாரி சபாகிதின் ஆகிய இருவரை விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. 

மேலும் அசுமல் கசாப் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

No comments:

Post a Comment

Popular Posts