Feb 6, 2011

கருணாநிதி-சுப்பிரமணியசாமி வெல்வது யார்?


அலைகற்றை ஊழல் வழக்கில் ராசாவுடன் சேர்ந்து கருணாநிதியும் கூட்டுசதியில் ஈடுபட்டுள்ளார் என சுப்பிரமணியசாமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும் என்று தனி வழக்காக தொடர இருப்பதாக சுப்பிரமணியசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுப்பிரமணியசாமியின் இந்த அதிரடி நடவடிக்கை கருணாநிதியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சுப்பிரமணியசாமி செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும் என கருணாநிதி சுப்பிரமணிய சாமிக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளார்.

சுப்பிரமணிய சாமியை சமாளிக்க கெஞ்சல், பேரம், மிரட்டல் என அனைத்து விதத்திலும் திமுக தரப்பு முயன்று வருகிறது.

சுப்பிரணிய சாமி படியாமல் டெல்லி செல்வாரா? அல்லது திமுக மடக்குமா? வரும் 22ம்தேதி தெரிந்துவிடும்.

பாவம் கருணாநிதி இன்னும் என்னென்ன அனுபவிக்கவேண்டி உள்ளதோ?...  

1 comment:

  1. ஜெய்ப்பது கருணாநிதியா இருந்தாலும்... தோற்ப்பது என்னவோ தமிழ் தலைவரின் image தான்

    ReplyDelete

Popular Posts