Feb 28, 2011

திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி ?

இந்த தேர்தலில் கட்டாயம் வெல்ல«ண்டும். இல்லாதவிட்டால் திமுகவுக்கு கடும் நெறுக்கடி காத்திருக்கிறது.

தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையுமானால் அனேகமாக திமுகவுக்கு வழக்குகளை சந்திக்கவே நேரம் போதாது.

அலைகற்றை ஊழல் விவகாரத்தில் மத்தியில் இப்போதே நெருக்கடி துவங்கி விட்டது. மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் தோண்டி எடுக்க காத்திருக்கின்றன. ஏரத்தாள 1996 ல் செயலலிதா ஆட்சிக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்குகளை விட அதிகமாக வர வாய்ப்புள்ளது.

தற்போதே காங்கிரசுடன் சுமுகமான நிலை இல்லாத நிலையில் தேர்தல் தோழ்விக்கு பின்னர் மிகப்பெரிய பிளவு ஏற்படும். மத்திய அரசு கோபத்தையும், மாநிலஅரசு பலிவாங்கும் படலத்தையும் திமுக எப்படி எதிர்கொள்ளும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

தற்போது 90 வயதாகி விட்ட கருணாநிதியால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு தேர்தலை முதலமைச்சர் வேட்பாளராக சந்திக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே.

கருணாநிதி அல்லாத பட்சத்தில் திமுகவில் அழகிரி சுடாலின் தரப்பு போட்டி கட்சியை பிளவுபடுத்தக்கூடும். மேலும் கனிமொழி, ராசா பூங்கோதை ராசத்தியம்மாள் வகை படைகள் தனி அணியாக செயல்படவும் வாய்ப்புள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவு திமுகவில் குடும்ப சண்டை எரிமலையாய் இப்போதும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தை கொண்டு மதிமுக, அதிமுக உட்பட கட்சிகளை கரைய செய்தது திமுக. அதே வேலையை திமுகவின் மீது செயலலிதா ஏவிவிடலாம். இந்த காலகட்டத்தில் அளவுக்கு அதிகமானோர் அதிமுக பக்கம் ஓட வாய்ப்பு உள்ளது.

இந்த தேர்தலில் தோற்றாலும் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. பாரதிய சனதா, காங்கிரசு, மூன்றாம் அணி இதில் வெற்றி பெரும் அணியில் இடம்பெற்று ஆட்சியில் பங்கு பெற வேண்டும். அதிலும் கோட்டை விட்டால் திமுகவின் எதிர்காலத்திற்கு கொஞ்சம் வெளிச்சம் குறைவு தான்.

Feb 26, 2011

காங்கிரசை கருவறுக்க தயாராகும் திமுக

அடங்கி போன காங்கிரசை வளர்த்துவிட்ட பெருமை திமுகவுக்கு உண்டு. ஆனால் அதே காங்கிரசு இன்று திமுகவின் கழுத்தை எட்டிப்பிடித்துள்ளது.

தகுதிக்கி மீறி தொகுதிகள் கேட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்கவேண்டுமானால் குறைந்தது 140 முதல் 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர் சுடாலினும் அழகிரியும். 

திமுக 150 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதம் உள்ள 84 தொகுதிகளை தான் கூட்டணிக்கு பிரித்துக்கொடுக்க வேண்டும். திமுக 146, காங்கிரசு 50, பாமக 31, விசி 5, இதரம் 4 ( திமுக சின்னத்தில்). இது தான் திமுகவின் கணக்கு. ஆனால் குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது காங்கிரசு. அதை அதிகார தொனியுடனேயே கேட்பது தான் காருணாநிதியை உச்ச கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டால் கூட்டணி தொடரலாம். இல்லாவிட்டால் மார்ச் இறுதி வரை இழுத்து வெட்டி விடலாம் என்பது தான் திமுக கணக்கு.

ஏதாவது ஒரு மூன்றாவது அணி போட்டியிடுவது தான் திமுக வெற்றிக்கு சாதகமானது. இதை பல தேர்தல்களில் உணர்ந்திருக்கிறார் கருணாநிதி. இந்த முறை தேமுதிக கூட்டணிக்கு தயாராகிவிட்டது. அதே நேரத்தில் மூன்றம் அணி கூட்டணி பலம் பெற்றுவிடக்கூடாது என்பதில் கருணாநிதி கவனமாக இருந்தார். 

பாமக, தேமுதிக காங்கிரசு கூட்டணி அமைவதை படு தந்திரமாகவே உடைத்தெரிந்தார். தொடர்ந்து தேமுதிக&காங்கிரசு கூட்டணி அமைவதற்கும் முடிவு கட்ட முயன்று வெற்றிகனி பறிக்க உள்ளார். இந்த நிலையில் மூன்றாம் அணியாக காங்கிரசு மட்டுமே உள்ளது. சென்ற தேர்தலில் விசயகாந்த் தனித்து நின்றது போல இந்த முறை காங்கிரசை தனித்து நிறுத்த திட்டமிட்டுள்ளார். ஈழம் தவிர்த்த தனது எதிர்ப்பு ஓட்டுகள் செயலலிதாவுக்கு செல்லாமல் காங்கிரசுக்கு செல்லும் என்பது கருணாநிதி கணக்கு.

அதே நேரத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை கொங்கு முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உட்பட இன்னும் பல உதிரி கட்சிகளுக்கு ஒதுக்குவது. இதனால் எதிர் அணியில் கூட்டணி கட்சிகள் பலம் குறையும் மேலும் 170 தொகுதிகளுக்கு மேல் திமுக போட்டியிட முடியும்.

காங்கிரசை கழட்டி விடுவதில் திமுகவுக்கு பிரச்சனை இல்லாமல் இல்லை. தற்போது கழட்டி விட்டால் உடனடியாக ஆட்சி கவிழும். இரண்டு மாதமே இருந்தாலும் இடையில் ஆட்சி கவிழ்வதை கருணாநிதி துளியும் விரும்பவில்லை. அதே போல ஆட்சி கவிழ்ந்தால் ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் தேர்தலை சந்திக்க முடியாது. மேலும் அலைகற்றை உட்பட வழக்குகளில் கனிமொழி, ராசாத்தியம்மாள் வரை கைது செய்யப்படலாம். இப்படி பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. 

மேலும் காங்கிரசை கழட்டி விட்டுவிட்டு மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் சிக்கல் தான். எந்த நேரத்திலும் காங்கிரசு 360வது பிரிவை பயன்படுத்தலாம். அதற்கு அதிமுக முழு துணை நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உறுதியான காரணங்களுக்காகவே தகுதிக்கு மீறி ஆட்டம் போடும் காங்கிரசை திமுக சகித்துக்கொண்டுள்ளது.

இந்த மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்துவது. 48 தொகுதிகள் கொடுப்பது. வேண்டாம் என்றால் கழட்டி விடுவது. தனித்து போட்டியிடும் காங்கிரசை தமிழகத்தை விட்டே கருவறுப்பது. இது தான் திமுகவின் அதிரடி திட்டம். 

கூட்டணி அமைந்தாலும் காங்கிரசை தோற்கடிக்க திமுக என்றோ முடிவெடித்துவிட்டது என்கின்றனர் திமுக அடிமட்ட தொண்டர்கள். தகுதிக்கு மீறி தொகுதி கேட்ட பாமகவின் நிலை தான் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Feb 25, 2011

தேமுதிகவுக்கு 35 தொகுதி : அதிமுக கூட்டணி விபரம்


நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒருவழியாக தேமுதிக அதிமுக வளையத்திற்குள் வந்துள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணிக்கு தயார் என கடந்த தேர்தலின் போதே விசயகாந்த் அறிவித்தார். அதை மையப்படுத்தியே கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். 

ஆட்சியில் பங்கு, எம்.சி.ஆர் வாரிசு, இந்த பேச்சுகளை பேசக்கூடாது என்று ஆரம்பத்திலேயே கடிவாளம் போட்டார் செயலலிதா. 80, 60, 50, 40 பாமகவை விட அதிகம் என்று தொகுதி பங்கீடு இழுத்து வந்தது. இறுதியில் தேமுதிகவுக்கு 35 தொகுதிகளை இறுதி செய்துள்ளது அதிமுக. இதற்கான அறிவிப்பு ஓரீரு நாளில் வெளிவரலாம். 

தேமுதிக காங்கிரசு கூட்டணி அமைக்க முழுவீச்சில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணி ஆட்சி தத்துவமும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் யார் அதிக தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் ஈகோ.

ஈழம், மீனவர் பிரச்சனையில் காங்கிரசு தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 85 தொகுதிகளில் போட்டியிடுவதை விட அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 35,  40 தொகுதிகளில் போட்டியிடுவது சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது தேமுதிக. 

தேமுதிகவுக்கு தங்களை விட அதிக தொகுதிகளை(100) கொடுத்து போட்டியிடுவதை விட ஒன்று தனித்து போட்டி அல்லது திமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளது காங்கிரசு.

தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்க தயாராக இருக்கும் தொகுதி எண்ணிக்கை விபரம் :

அதிமுக...................... 145 (140)
தேமுதிக.................... 35
மதிமுக...................... 20 (25)
கம்யூனி..................... 23
கொமுக.................... 4
மமக........................... 3
இதரம்........................ 4

மொத்தம் ..................234

இதர கட்சிகள் அதிமுக சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்  மதிமுகவுக்கு அதிமுக தொகுதிகளில் மேலும் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

கேபிள்இணைப்பு இலவசம்:அதிமுக தேர்தல் அறிக்கை


கடந்த சட்டமன்ற தேர்தலில் வண்ணதொலைகாட்சி இலவசம் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதற்கு இணையாக இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி கேபிள் இணைப்பு இலவசம் அல்லது 20 ரூபாய்க்கு 100 சேனல்களுடன் கேபிள் இணைப்பு என்ற அதிரடி திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது அதிமுக.

தற்போது தமிழகத்தில் கேபிள் இணைப்பாக ரூ.150 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது. டி.டி,எச் போன்றவற்றிலும் மாதம் 120 வரை செலவாகிறது. இந்நிலையில் மிகக்குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு என்ற திட்டம் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று அதிமுக தலைமை விபரங்களை சேகரித்துள்ளது.

அதிமுக ஆட்சியின் இறுதியில் அரசு கேபிள் நிறுவனம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாறன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திமுக அரேசே அரசு கேபிள் நிறுவனத்தை கொண்டு வந்தது. 

ரூ. 400 கோடி வரை சவப்பெட்டியில் அடக்கமாகிவிட்ட இந்த திட்டம் அடக்கமாக செயல்படுவதாக இன்னமும் திமுக சொல்லி வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த அடக்கமே ஆரவாரமாக தோண்டி எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இதில் நடைபெற்ற ஊழல் குறித்த விசாரனைகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கருணாநிதி மற்றும் சுடாலின் கைது செய்யப்படும் அளவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரன் குடும்பத்துடன் இதயம் இனிக்கும் வரை திமுக ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் வராது. எனவே கேபிள் கொள்ளையை தடுக்க அதிமுகவுக்கு வாக்கு அளியுங்கள் என்ற பிரச்சாரம் தயாராகிவிட்டது.

Feb 21, 2011

கசாபுக்கு தூக்கு உறுதிசெய்தது மும்பை உயர்நீதிமன்றம்


மும்பை தாக்குதல் வழக்கில் அசுமல் கசாப்பின் தூக்குதண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. 

2008 மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே அப்துல்கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்திருந்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அன்சாரி சபாகிதின் ஆகிய இருவரை விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. 

மேலும் அசுமல் கசாப் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Feb 20, 2011

திருட்டு முன்னேற்ற கழகம்

மதியம் உச்சிவெயில், நிழலுக்காக சாலையோரம் இருத்த மரத்தடியில் வண்டியை ஒரம்கட்டினேன். எதிர்புறம் சாலையோர சுவரில் திமுக மற்றும் காங்கிரசுக்கு ஆதரவான சுவர்விளம்பரம் எழுதப்பட்டு வந்தது. ஒரு பக்கம் இளைய தலைவர் கோவை விசுணு என்ற விளம்பரம். அருகில் பாரி துதிபாடி விளம்பரம்.
யார் இந்த விசுணு? பாரி? 

கோவையில் உள்ள அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பாரி. கோவை தங்கம் எம்.எல்.ஏ.,வின் மகன் விசுணு. இந்த முறை இவர்களும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார்கள் என்பது விளம்பரத்தில் இருந்து தெரிகிறது.

திமுகவில் வாரிசு அரசியல் என்பது கருணாநிதி குடும்பத்தில் மட்டும் இல்லை. எல்லா மாவட்ட மட்டத்திலும் இருக்கிறது. கொடி கட்டி, சுவர்விளம்பரம் எழுதும் இளிச்சவாய் தொண்டர்கள் கடைசிவரை அதே வேலையை செய்யவேண்டியது தான்.
ஏதோ மத்தியிலும் மாநிலத்திலும் தான் ஊழல் நடக்கிறது. கருணாநிதியின் குடும்பம் மட்டும் தான் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறது என்றால் அது தவறு. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து மட்டத்திலும் அளவுக்கு ஏற்ப கொள்ளை தொடர்கிறது.

திராவிட முன்னேற்ற கழகம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது? இப்போது இந்த கேள்விக்கான பதில் எந்த திமுக காரனுக்கும் தெரியாது. அதே நிலை தான் மற்ற கட்சிகளுக்கும்.

மக்கள் மனநிலை என்னவாக இருக்கும்? அருகில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். எல்லாம் திருடனுகங்க... விசுணு, பாரி இவனுக எல்லாம் எந்த காலத்தில் வேலைக்கு போனானுக? எப்ப ஒழுங்கா படிச்சானுக? ஆனா நாளைக்கு எம்.எல்.ஏ., மந்திரினு இவனுகளுக்கு நம்ம கையேந்தனும். கோடி கோடியா கொள்ளை அடிக்கறதுல திமுக காரனுகளை விட்டா வேற ஆள் இல்லை என வெளிப்படையாகவே பட்டுனு சொன்னார்.

கனிமொழி, அழகிரி, தயாநிதிமாறன், சுடாலின் இவர்களுக்கு எல்லாம் கருணாநிதியின் வாரிசு என்பதை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது? அதே போல தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைவர்களின் வாரிசுகள் அடிக்கும் ஆட்டமும், கொள்ளையும் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  

நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு (ரூ.170000000000) திமுக மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. உயர்மடத்திலேயே அவ்வளவு என்றால் கடைகோடி ஊராட்சியில் எவ்வளவு கோடி இருக்கும் என்று கணித்துக்கொள்ளுங்கள்.

Feb 18, 2011

அதிமுகவுக்கு சாதகமாக முடிவு எடுத்த பாமக


இன்று காலை கலைஞர் தொலைகாட்சி அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை நடத்திவந்தது. இந்த செய்தி தமிழகபத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக கருணாநிதி விரும்பவில்லை. மேலும் கூட்டணி மற்றும் தொகு பங்கீடு விடயத்தில் தொடர்ந்து திமுகவுக்கு காங்கிரசு தண்ணிகாட்டி வந்தது. 

இந்நிலையில் பலநாட்களுக்கு பின்னர் கருணாநிதி இன்று காலை ஒரு அதிரடி முடிவை எடுத்தார். பாமக தலைவர் ராமதாசுக்கு அதிரடியாக தொலபேசியில் அழைப்பு விடுத்தார். அழைப்புக்காக காத்திருந்த ராமதாசு கோபாலபுரம் நோக்கி சிட்டாக பறந்தார். 40 நிமிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

பாமக திமுக கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க சொன்னார் கருணாநிதி. தொகுதி எண்ணிக்கையோடு அறிவிக்கலாம் என்று ராமதாசு முருக்கினார். அவ்வளவு தானே. 31 தொகுதிகள் + அன்புமணிக்கு மேலவை பதவி என்று கையெழுத்தே போட்டுக்கொடுத்தார் கருணாநிதி. 

மகிழ்ச்சி பொங்க பேட்டி கொடுத்தார் ராமதாசு. டெல்லியில் இருந்து என்ன பதிலடி வருமோ என்ற பயம் கலந்த குழம்பியே பேட்டியளித்தார் கருணாநிதி. மொத்தத்தில் கூட்டணியில் பாமகவுக்கு 31 இதரத்திற்கு 6 என 37 தொகுதிகள் ஓதுக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள 199 தொகுதிகளில் தான் காங்கிரசு & விடுதலைசிறுத்தைகள் & திமுக பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதி எதிர்பார்த்தது போலவே மாலை பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சி செய்திகளில் திமுக-பாமக தொகுதி உடன்பாடு தான் தலைப்பு செய்தி. ஆனால் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு இன்னும் இழுபறிதான். 

கூட்டணியில் பாமக வந்தாலும் 70 தொகுதிகளில் இருந்து குறைவதாக இல்லை என்ற நிலையில் காங்கிரசு உறுதியாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தேர்தல் ஆணைய அங்கீகாரம் என்பதில் உறுதியாக உள்ளனர். கூட்டி கழித்து பார்த்தால் திமுகவுக்கு மிஞ்சுவது 120 தான். அதிரடியாக பாமகவை கூட்டணியில் சேர்த்த திமுகவுக்கு கிடைத்த லாபத்தை விட அதிமுகவுக்கு கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.

காங்கிரசு + தேமுதிக + பாமக என்ற மூன்றாம் அணிக்கு இப்போதைக்கு முற்றுபுள்ளி வந்துள்ளது. மேலும் அதிமுக தேமுதிக கூட்டணி உறுதியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாமகவை விட கூடுதல் தொகுதி வேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கையை நிறைவேற்ற இனி அதிமுகவுக்கு தயக்கம் இருக்காது. விரைவில் 35 தொகுதிகளுடன் தேமுதிக அதிமுக கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தேர்தல் வெற்றி யாருக்கு? வாக்குவங்கி கணிப்பு முடிவுகள்


தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது வாக்குவங்கி அடிப்படையில் ஒரு கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் விபரம்

அதிமுக கூட்டணி வாக்குவங்கி

அதிமுக ............................................................: 10 % 
தேமுதிக ..........................................................: 5 %
மதிமுக .............................................................: 3 %
கம்யூனி ............................................................: 3 %
மமக + கொமுக ............................................: 2 %
இதரம் ...............................................................: 1 %

கருணாநிதி எதிர்ப்பு + ஈழம் ஓட்டு........ : 3 %
ஆளும் கட்சி அதிர்ப்தி ஓட்டு ..................: 2 % 

மொத்தம் ..........................................................: 29 %

******************************
திமுக கூட்டணி வாக்கு வங்கி

திமுக .................................................................: 10 %
காங்கிரசு ..........................................................: 3 %
பாமக .................................................................: 3 %
வி.சி + இதரம் .................................................: 2 %

செயலலிதா எதிர்ப்பு ஓட்டு ......................: 2 %
ஆளும் கட்சி ஆதரவு ஓட்டு .....................: 2 %
அரசு ஊழியர்கள் பங்கு ...............................: 1 %

மொத்தம் ...........................................................: 23 %

*************************************

நடுநிலை வாக்கு வங்கி

நடுநிலையாளர் வாக்கு ..................................10 %

பிரச்சாரத்தில் திரும்பும் வாக்கு ...................8 %

கடைசி நிமிட அலை வாக்கு .........................10 %

மொத்தம் ................................................................30 %

****************************************
பதிவாகாத வாக்கு .......................................... 18 %
****************************************

அதிமுக கூட்டணியில் தற்போது 29% ஓட்டு உறுதியாக உள்ளது. செயலலிதா, வைகோ, சீமான், விசயகாந்த, கம்யூனிட்டுகள் என பிரச்சார பலம், ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற காரணங்கள் என நடுநிலை வாக்குகள் அதிகளவில் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன. அதே போல கடைசிநிலை அலையும் அதிமுமுக பக்கம் வரவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிமுக கூட்டணி குறைந்த பட்சம் 36% வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.


திமுக கூட்டணிக்கு 23 % ஓட்டு வங்கி உள்ள நிலையில் கவர்ச்சிகர தேர்தல் அறிக்கை, கடைசி நிமிட அலை நடுநிலை வாங்குகளை கவறும் யுக்தி, சன் தொலைகாட்சி பிரச்சார பீரங்கி இவற்றை பயன்படுத்தினால் குறைந்த பட்சம் 33 % வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக 44 % வாக்குகள் அதிமுக கூட்டணிக்கும் 36 % வாக்குகள் திமுக கூட்டணிக்கும் போய்சேர வாய்ப்புள்ளது.

ஓட்டு மொத்தமாக பார்த்தால் அதிமுக கூட்டணியே ஆட்சி அமைக்க 60% வாய்ப்புகள் உள்ளது. 

தி.மு.க,பா.ம.க கூட்டணி 31 தொகுதி ஒதுக்கீடு


திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளதாக கருணாநிதி மீண்டும் அறிவித்துள்ளார். இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் பாமக தலைவர் அன்புமனி ராமதாசு கருணாநிதியை சந்தித்து பேசினார்.

 பின்னர் திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் அன்புமணி ராமதாசு சோனியாவை சந்தித்து கூட்டணியில் சேர அனுமதி வாங்கிவந்தார். காங்கிரசு தலைமையிலான கூட்டணியில் திமுக, பா.ம.க, விடுதலைசிறுத்தைகள் உட்பட கட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Feb 15, 2011

தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?

நாட்டின் உச்ச அதிகாரம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சனாதிபதி பிரதீபாட்டீல் அகியோருக்கு தான் உள்ளது. இவர்களே ஒருவரை கண்டு பயப்படுகிறார்கள் என்றால் அது இத்தாலி நாட்டு சனியன் சோனியாவை கண்டு தான். ஆனால் சனியனே ஒருவரை கண்டு பயந்து வருகிறது. அது வேறு யாரும் இல்லை தற்போதைய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் தாமசு தான். 

கேரள ரோமன் கத்தோலிக்க கிறிசிட்டியனான இவர் இத்தாலி நாட்டு தொழில் அதிபர்களுக்கு நெறுக்கமானவர். குறிப்பாக சனியனின் தங்கைகளுக்கு வேண்டப்பட்டவர். கேரள மாநில பணிகளில் இருந்து சிறப்பு விதிதளர்த்தல் மூலம் மத்திய அரசு பணிக்கு பதவி உயர்வு பெற்ற பாக்கியசாலி, தொடர்ந்து தொலைதொடர்பு, ஊழல் கண்காணிப்பு ஆணையம் வரை உயர்பதவிக்கு வந்தவர்.

கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழலில் தாமசு மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பை தாண்டி ஊழல் கண்காணிப்பு ஆணையராக தோமசு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அடுத்த வாரம் தீர்ப்பு வெளிவர உள்ளது.

தாமசு விவகாரத்தில் பலமுறை நீதிமன்றம் கண்டனத்துக்கு உள்ளானது மத்திய அரசு. சோனியா தலைமையில் நடந்த காங்கிரசு உயர்மட்ட கூட்டத்தில் தாமசுவை ராசினாமா செய்ய சொல்வது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு தாமசு மறுத்துவிட்டார்.

தாமசுவின் இந்த தைரியம் மன்மோகன்சிங்குக்கே ஆச்சரியம். சோனியாவின் பேச்சை எதிர்க்கும் சக்தி தாமசுக்கு எப்படி வந்தது? பலரும் பொடி வைத்து தேட ஆரம்பித்தனர்.

சோனியா + தங்கைகள் + குவோட்ரோச்சி = சர்வதேச ஆயுத விற்பனை இந்த உலகமாக தொழிலுக்கு தாமசு தான் நிர்வாக அதிகாரியாம். மேலும் இத்தாலியில் சனியன் பிணாமி பெயரில் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்கள் மற்றும் உலகின் பல வங்கிகளில் உள்ள கருப்பு பணம் போன்றவையும் இந்த தாமசுவின் மேற்பார்வையில் தான் உள்ளதாம்.

தாமசு உச்சநீதிமன்றத்தின் வலையில் சிக்கிக்கொள்ள, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது சனியனின் குடும்பம்.

ராசினாமா மூலம் பிரச்சனையை சூட்டில் இருந்து தனித்துக்கொள்ள நினைத்தும் எடுபடவில்லை. ராசனாமா செய்யமாட்டேன் என்று தாமசு சொன்னது சோனியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. குற்ற வழக்குள்ள அரசியல்வாதிகள் குறித்து தாமசு நீதிமன்றத்தில் தன்னிச்சையாக வாதிட்டதும் சோனியாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. 

எந்த சமரசத்துக்கும் தயார், ஆனால் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்க்கமாக சொல்லிவிட்டாராம் தாமசு. அப்படி பதவி பறிக்கப்படுமானால் லட்சுமண ரேகையை உச்சநீதிமன்றம் மீறிவிட்டது என்று நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவியை பறிக்க கூடாது என்று விடாபிடியாக உள்ளாராம் தாமசு.

என்னை கைவிட்டால் நாடப்பதே வேறு என்ற தாமசுவின் நேரடி எச்சரிக்கை தான் இப்போது சோனியாவை பேச்சுமூச்சு இன்றி மூலையில் உற்கார வைத்துள்ளது.

ராசீவ் கொலை வழக்கில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தபோது சுப்பிரமணிய சாமியை கோமளியாக்கியது போல தாமசுவையும் கோமாளியாக்கிவிடலாம் என்று ஆறுதல் சொல்லி வருகிறது குவோட்ரோச்சி தரப்பு. அதற்கான காய்நகர்த்தலும் வேகமாக நடந்து வருகிறது.

வரும் 21 தேதி உச்சநீதிமன்றத்தில் தாமசுவின் பதவி பறிப்பு குறித்த தீர்ப்பு வெளியாகக்கூடும். அதன் பின்னர் சோனியா/தாமசு பனிப்போர் வெளியில் வரும். அத்தோடு பல உண்மைகளும் வெளியில் வரும் என காத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Feb 14, 2011

வாய் திறந்தார் ராசா - என்னை வைத்து அரசியல் நடக்கிறது


இன்று மீண்டும் ராசாவுக்கு மேலும் 3 நாள் சி.பி.ஐ காவல் நீட்டிக்கப்பட்டது. என்னை வைத்து அரசியல் செய்கிறார்கள் என ராசா பகிரங்கமாகவே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

பிப்.2 தேதி கைது செய்யப்பட்ட ராசா தொடர்து 11 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று ராசாவுக்கு மேலும் 3 நாட்கள் காவல்நீட்டிப்பு செய்யப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராசாவின் வழக்கறிஞர் , அந்த வழக்கு அரசியல் நோக்கில் கொண்டு செல்லப்படுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது. ராசானை உடணடியாக பிணையத்தில் விடுதலை செய்யவேண்டும் எனவாதிட்டார். 

சி.பி.ஐ தரப்பில் மேலும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தவேண்டி உள்ளதால் இப்போதைக்கு ராசாவை வெளியில் விடக்கூடாது, மேலும் 4நாட்கள் விசாரணை காவல் வேண்டும் என வாதிட்டனர். 

சி.பி.ஐ காங்கிரசு கைபாவையாக செயல்படுத்துகிறது என்பது ஏற்கனவே நிலுவையில் இருக்கும் குற்றச்சாட்டு. இந்நிலையில் ராசாவை வைத்து தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி என்ற பேரத்தில் காங்கிரசு ஈடுபட்டுள்ளது தி.மு.கவுக்கு பெரும் அதிர்ச்சி.

விரைவில் தலைவர் மௌனம் கலைவார். பொருத்திருந்து பொருத்திருந்து பொங்கி வெடிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ராசாவின் ஆதரவாளர்கள்.

Feb 13, 2011

தயமான நிதிக்கும் த நடிகைக்கும் என்ன தொடர்பு : அஞ்சாம்படை

சககலா நிதியின் டி.டி.எச் அறிமுக விளம்பரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் அந்த த அண்ணா நடிகை. அறிமுக நடிகையை மிகப்பெரிய மீடியா குழுமம் இந்த அளவுக்கு பிரபலபடுத்தியது பலரையும் மூக்கில் விரல்வைக்க வைத்தது. தொடர்ந்து அந்த நடிகை நடித்த படங்களை அந்த குழுமம் வாங்கியது.

அந்த வரிசையில் தான் இளைய தளபதி படமும் வாங்கப்பட்டது. தனக்காக வாங்கப்பட்து என்று நினைத்துக்கொண்டிருந்த தளபதிக்கு இந்த ரகசியம் தாமதமாக தான் புறிந்தது. அந்த நடிகை நடிக்கும் டப்பா படங்களையும் வாங்கி விளம்பரம் போட்ட அந்த குழுமத்தின் செயல் பல சந்தேகங்களுக்கு இடம் கொடுத்தது.

அந்த நடிகை நடித்த அனைத்து படங்களையும் அந்த குழுமம் வெளியிட்டது. இயந்திர படத்தில் அந்த நடிகையை முக்கிய கதாபாத்திரத்தில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது தான் பலருக்கும் உச்ச அதிர்ச்சியை தந்தது. 

அந்த நடிகைக்கும் நிறுவனத்துக்கும் அப்படி என்ன தொடர்பு என்பதை கண்டறிய போட்டி மீடியாக்கள் பொடிவைத்தன.

அந்தரங்கம் வரை சில ஆதாரங்கள் கிடைத்தாலும் அதை உறுதிபடுத்த நடிகை தரப்பில் ஒத்துழைப்பு இல்லையாம். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த எரிமலை வெடிக்கும். அப்போது சூரிய குழுமத்தையே ஒரு காட்டுகாட்ட போட்டி மீடியாக்கள் மட்டுமல்ல திரையுலகமே காத்திருக்கின்றதாம்.

 எரிமலை வெடிக்குமா? இல்லை புகையோடு புதைந்துவிடுமா?

Feb 12, 2011

அஞ்சாம்படை : கலையான டி.வி யாருக்கு


கலையான தொலைக்காட்சியின் ஆதிக்கம் யார்கைவசம் வரும் என்பதில் உச்சபிரச்சனை எழுந்துள்ளது. 

2க்கு 60%, 3னின் வாரிசுக்கு 20% கொடுத்ததோடு இன்னாரு 20%தை 3க்கு சாதகமாகவே சரம்போட்டுள்ளார் விஞ்ஞான ஊழல்வாதி. ஆரம்பத்தில் 60% தன்குடும்ப வசம் தான் உள்ளது. ஊழல் காலம் சென்றதும் சூரியகுழுமம் போல 20% பிரித்துக்கொடுத்து பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்ற கணக்கில் இருந்தது மதுரை வட்டம். ஆனால் ஊழல் காலம்போனாலும் பிரச்சனை அலைகற்றை வடிவில் வந்துநிற்கும் என்ற அச்சம் வந்துள்ளது 2ம் தரகுடும்பத்துக்கு.

மேலும் தாயின் சொந்த சம்பாதியத்தை விருப்பம் உள்ளவருக்கு கொடுக்கும் சட்டம் உள்ளதால், தனக்கு கலை டி.வியில் கடுகளவு பங்கும் வரவரவாய்ப்பில்லை என்பது இப்போது தான் புரிந்துள்ளது மதுரைவட்டத்திற்கு.

அதுமட்டுமல்ல 60 தை நான்காக பிரித்தால் 15 தான் வருகிறது. இதில் 20% 3ம்தரத்திடம் இருப்பது கவலை அளித்துள்ளது 2ம் தர வாரிசுகளுக்கு.

கலையான டி.வியையே ஊழல்கற்றையில் இருந்து மீட்பதோடு, 3ம் தர வாரிசுடன் சரத்தையும் உருவி தன்பங்கில் தனிக்கணக்கு துவங்க வேண்டும் என்பது மதுரைவட்டத்தின் நெருக்கடி.

3ம் தரம் கம்பி எண்ணுவதை தவிர்க்க இந்தாலி சனியனே சரணம் என்றிருக்கும் இந்த நிலையில் மதுரை வட்டத்தின் அதிரடியும் ஊழல் விஞ்ஞானிக்கு புதுநெருக்கடி.

Feb 10, 2011

அடுத்த முதல்வர் யார் கருத்துகணிப்பு முடிவுகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

10.02.2011 வரை எடுக்கப்பட்ட முடிவுகள்.

1. செயலலிதா...........53 %
2. கருணாநிதி............28 %
3. சுடாலின்.................15 %    
தி.மு.க - 43 )
4. விசயகாந்த்.............3 %
5. காங்கிரசார்.............1 %

Feb 6, 2011

கருணாநிதி-சுப்பிரமணியசாமி வெல்வது யார்?


அலைகற்றை ஊழல் வழக்கில் ராசாவுடன் சேர்ந்து கருணாநிதியும் கூட்டுசதியில் ஈடுபட்டுள்ளார் என சுப்பிரமணியசாமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும் என்று தனி வழக்காக தொடர இருப்பதாக சுப்பிரமணியசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுப்பிரமணியசாமியின் இந்த அதிரடி நடவடிக்கை கருணாநிதியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சுப்பிரமணியசாமி செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும் என கருணாநிதி சுப்பிரமணிய சாமிக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளார்.

சுப்பிரமணிய சாமியை சமாளிக்க கெஞ்சல், பேரம், மிரட்டல் என அனைத்து விதத்திலும் திமுக தரப்பு முயன்று வருகிறது.

சுப்பிரணிய சாமி படியாமல் டெல்லி செல்வாரா? அல்லது திமுக மடக்குமா? வரும் 22ம்தேதி தெரிந்துவிடும்.

பாவம் கருணாநிதி இன்னும் என்னென்ன அனுபவிக்கவேண்டி உள்ளதோ?...  

தினமலர் குடும்ப சண்டைக்கு பலியாகும் காவேரி


தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது.

தினமலரின் குடும்ப சண்டை அனைவரும் அறிந்ததே. அடிக்கடி அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு நீதிமன்றத்தில் நிற்பார்கள். சண்டையில் ஈரோடு, சேலம், திருச்சி பதிப்புகள் ஒரு குழுவாகவும், சென்னை மதுரை கோவை புதுச்சேரி பதிப்புகள் ஒரு குழுவாகவும் பிரித்துக்கொண்டார்கள்.

ஈரோடு தினமலரும் கோவை தினமலரும் பரம எதிரிகள் என்பது ஊரறிந்த விடயம். இருவருக்குள்ளும் செய்திகளை திரித்து வெளியிடுவதில் கடும் போட்டி இருக்கும். குறிப்பாக கோவை தினமலர் குழு ஈரோட்டில் காலைகதிர் என்ற போட்டி பத்திரிக்கை நடத்துகிறது. காலைகதிருக்கும் ஈரோடு தினமலருக்கும் சக்களத்தி சண்டை எப்போதுமே உண்டு. ஒருவருக்கு ஒருவர் தான்தான் பெரிது என பீற்றிக்கொள்ள அவ்வப்போது சில பரபரப்பு செய்திகளை அவிழ்த்து விடுவார்கள். இதனால் பல முறை பொதுமக்களிடம் மன்டியிட்டுள்ளார்கள். 

இந்நிலையில் ஈரோடு தினமலருக்கு போட்டியாக தற்போது காவேரியில் கர்நாடகா தண்ணீர் எடுக்கிறது என்ற கலவரத்தை கிளப்பிவிட்டுள்ளது கோவை தினமலர்.

மேட்டூர் அணை மற்றும் கொளத்தூர் பகுதிகள் இவர்கள் சொத்து சண்டையில் ஈரோடு தினமலருக்கு கொடுக்கப்பட்டது. இந்த பகுதியில் தினமலரை விற்கும் உரிமை ஈரோடு பதிப்புக்கு தான் உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தான்தான் தீவிர செய்திகளை தருகிறேன் என்று காண்பிக்க கோவை தினமலர் அவ்வப்போது சில முயற்சிகள் எடுக்கும். அதை ஈரோடு தினமலர் எதிர்க்கும். தெரு சண்டை போடாத குறையாக எழும் இந்த பிரச்சனைக்காக நீதிமன்றத்தில் அண்ணன் தம்பிகள் கைகட்டிநிற்பது வாடிக்கை.

நீண்ட நாள் கழித்து மீண்டும் இவர்கள் குடும்பத்திற்குள் என்ன பிரச்சனையோ? திடீர் என காவேரியில் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளார்கள்.

மதேசுவரன் மலையில் உள்ள கர்நாடக தமிழர்களுக்கு சிறு குழாயில் குடிநீர் எடுப்பதால் தமிழகத்தில் உள்ள தமிழக தமிழர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. இதற்கு தமிழக தமிழர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் தினமலர் மட்டும் தொடர்ந்து ஒரு வாரமாக இந்த பிரச்சனையை அரசியல் சூட்டுக்கு துண்டிவிட்டு வருகிறது. 

ஈரோடு தினமலரிடன் தான்தான் இந்த செய்தியை முதலில் வெளிக்கொண்டு வந்தேன் என்பதை காண்பித்து அந்த பகுதியை அபகரிக்க கோவை தினமலர் செய்யும் சதிவேலை இது என்பது பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

தினமலரின் இந்த நரித்தந்திரத்துக்கு பலியாவது தமிழக கர்நாடக தமிழர்கள் தான். தினமலரின் குடும்ப சண்டைக்கு கூட காவேரி பலிகடா ஆக்கப்படுவது காலத்தின் கொடுமை.   

தினமலர் குடும்ப சண்டைக்கு பலியாகும் காவேரி


தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது.

தினமலரின் குடும்ப சண்டை அனைவரும் அறிந்ததே. அடிக்கடி அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு நீதிமன்றத்தில் நிற்பார்கள். சண்டையில் ஈரோடு, சேலம், திருச்சி பதிப்புகள் ஒரு குழுவாகவும், சென்னை மதுரை கோவை புதுச்சேரி பதிப்புகள் ஒரு குழுவாகவும் பிரித்துக்கொண்டார்கள்.

ஈரோடு தினமலரும் கோவை தினமலரும் பரம எதிரிகள் என்பது ஊரறிந்த விடயம். இருவருக்குள்ளும் செய்திகளை திரித்து வெளியிடுவதில் கடும் போட்டி இருக்கும். குறிப்பாக கோவை தினமலர் குழு ஈரோட்டில் காலைகதிர் என்ற போட்டி பத்திரிக்கை நடத்துகிறது. காலைகதிருக்கும் ஈரோடு தினமலருக்கும் சக்களத்தி சண்டை எப்போதுமே உண்டு. ஒருவருக்கு ஒருவர் தான்தான் பெரிது என பீற்றிக்கொள்ள அவ்வப்போது சில பரபரப்பு செய்திகளை அவிழ்த்து விடுவார்கள். இதனால் பல முறை பொதுமக்களிடம் மன்டியிட்டுள்ளார்கள். 

இந்நிலையில் ஈரோடு தினமலருக்கு போட்டியாக தற்போது காவேரியில் கர்நாடகா தண்ணீர் எடுக்கிறது என்ற கலவரத்தை கிளப்பிவிட்டுள்ளது கோவை தினமலர்.

மேட்டூர் அணை மற்றும் கொளத்தூர் பகுதிகள் இவர்கள் சொத்து சண்டையில் ஈரோடு தினமலருக்கு கொடுக்கப்பட்டது. இந்த பகுதியில் தினமலரை விற்கும் உரிமை ஈரோடு பதிப்புக்கு தான் உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தான்தான் தீவிர செய்திகளை தருகிறேன் என்று காண்பிக்க கோவை தினமலர் அவ்வப்போது சில முயற்சிகள் எடுக்கும். அதை ஈரோடு தினமலர் எதிர்க்கும். தெரு சண்டை போடாத குறையாக எழும் இந்த பிரச்சனைக்காக நீதிமன்றத்தில் அண்ணன் தம்பிகள் கைகட்டிநிற்பது வாடிக்கை.

நீண்ட நாள் கழித்து மீண்டும் இவர்கள் குடும்பத்திற்குள் என்ன பிரச்சனையோ? திடீர் என காவேரியில் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளார்கள்.

மதேசுவரன் மலையில் உள்ள கர்நாடக தமிழர்களுக்கு சிறு குழாயில் குடிநீர் எடுப்பதால் தமிழகத்தில் உள்ள தமிழக தமிழர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. இதற்கு தமிழக தமிழர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் தினமலர் மட்டும் தொடர்ந்து ஒரு வாரமாக இந்த பிரச்சனையை அரசியல் சூட்டுக்கு துண்டிவிட்டு வருகிறது. 

ஈரோடு தினமலரிடன் தான்தான் இந்த செய்தியை முதலில் வெளிக்கொண்டு வந்தேன் என்பதை காண்பித்து அந்த பகுதியை அபகரிக்க கோவை தினமலர் செய்யும் சதிவேலை இது என்பது பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

தினமலரின் இந்த நரித்தந்திரத்துக்கு பலியாவது தமிழக கர்நாடக தமிழர்கள் தான். தினமலரின் குடும்ப சண்டைக்கு கூட காவேரி பலிகடா ஆக்கப்படுவது காலத்தின் கொடுமை.   

Feb 5, 2011

சிறிதும் அறிவில்லாத செயலலிதா அறிக்கை


செயலாலிதாவின் வல்லார்படம் குறித்த அறிக்கையை கண்டு வருத்தமாக இருக்கிறது. சிறிதும் அறிவில்லாத அரசியல்வாதிகளையும், பத்திரிக்கைதுறையும் வைத்துக்கொண்டு தமிழர்கள் கூனிக்குறுக வேண்டியுள்ளது.

கொச்சியில் சர்வதேச துறைமுகத்தை எதிர்ப்பது எவ்வளவு கேவலமான செயல். தூத்துக்குடி சர்வதேச துறைமுகமாக மாற வாய்ப்புகள் குறைவு. காரணம் அருகில் கொழும்பு சர்வதேச துறைமுகம் உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக அதிகமாக பயனடைவது கொழும்பு துறைமுகம் தான். சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்த செயலலிதா தூத்துக்குடி துறைமுகத்தின் மீது காட்டும் திடீர் பாசம் வியப்பாக இருக்கிறது.


கோவை, திருப்பூர், கரூர், பகுதி வியாபாரிகள் தூத்துக்குடியை தவிர்த்து கொச்சி துறைமுகத்தை பயன்படுத்துவார்கள் என்கிறார் செயலலிதா. ஏன் இவர்கள் கொச்சி துறைமுகத்தை பயன்படுத்த வேண்டும்? கோவை, திருப்பூர், கரூர் தமிழகத்தில் தானே இருக்கிறது. 

கோவை, திருப்பூர் ஏற்றுமதியாளர்களிடம் விசாரித்தோம். அவர்களின் பதில் உங்களுக்கும் அதிர்ச்சியை தரலாம்.

கொச்சி துறைமுகத்துக்கு செல்லும் வழியில் வாளையார் சோதனை சாவடி என்ற ஒரே ஒரு இடையூறு தான் உள்ளது. மேலும் கொச்சி துறைமுகத்தில் உயர் பதவி முதல் அடிமட்டம் வரை அதிகமாக தமிழர்கள் தான் பணியாற்றுகிறார்கள். எனவே எந்தவித சிரமமம் இன்றி ஏற்றுமதி செய்ய முடிகிறது.

ஆனால் தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்லும் வழியில் 50க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகள் உள்ளது. இதில் பலதும் சட்டவிரோதமாக அரசியல் ரவுடிகளால் நடத்தப்படுவது. இவர்களிடம் மாட்டி சிக்கி சிரழிய வேண்டி உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தில்லுமுல்லுகளை விட கொச்சி துறைமுகம் எவ்வளவோ மேல்

தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சியடைவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் சாலையில் சுங்க கொள்ளையை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கோவை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்.

நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைப்பது நீதி, அடுத்தவன் வளர்ச்சியை தடுத்து நாம் வளரவேண்டும் என்பது அநீதி. இது தமிழர்கள் உலகுக்கு சொல்லிக்கொடுத்த பாடம்.

கருணாநிதி மீது சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு


அலைகற்றை ஊழலில் ராசாவுடன் சேர்ந்து கருணாநிதியும் கூட்டுசதியில் ஈடுபட்டுள்ளளார் என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராசாமீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள சுப்பிரமணிய சாமி தான் இந்த வழக்கையும் தொடர்ந்துள்ளார்.

அலைகற்றை ஊழலால் பாகிசுத்தான் உளவு அமைப்பு மற்றும் சீன ராணுவ அமைப்புகள் பயனடைந்துள்ளன என சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும் இந்த வழக்கில் ராசாவுடன் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். 

இது குறித்து விளக்கம் அளிக்கும் படி சி.பி.ஐ., க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணாநிதி உள்ளிட்டோர் மீது தனி மனுவாக வழக்கு தொடரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சுப்பிரமணிய சாமி புதிய மனுதாக்கல் செய்துள்ளார்.

ராசா - கனிமொழிக்கு எதிராக திமுக கருப்புஆடு


 ராசா - கனிமொழிக்கு எதிராக திமுகவில் உள்ள ஒரு கருப்பு ஆடு டெல்லியில் முகாம் இட்டு காய்நகர்த்தி வருகிறது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தென்பொறுப்பின் ஆசியோடு தான் இந்த காய்நகர்த்தல்கள் நடப்பது தலைமைக்கு கூடுதல் அதிர்ச்சி.

கருப்பு ஆடின் இந்த புத்தியால் மீண்டும் இதயம் வெடித்து கண்கள் கசங்குமோ என்ற பயத்தில் உள்ளனர் திமுக தொண்டர்கள். 

சக்களத்தி சண்டை மீண்டும் வெடித்துவிடுமோ என்ற பயத்தில் குடும்பமான கழகத்தின் தலைமை கண்ணீர்வடித்து வருகிறது.

யார் அந்த கருப்பு ஆடு ?

Feb 4, 2011

அலைகற்றை ஊழல் கலைஞர் தொலைகாட்சி பங்கு - காணொளி

அலைகற்றை ஊழலில் கலைஞர் தொலைகாட்சி பங்கு குறித்த செயா தொலைக்காட்சி செய்தி...
  

கலைஞர் தொலைகாட்சி கனிமொழியின் பங்கு?


அலைகற்றை ஊழல் விவகாரத்தில் கலைஞர் தொலைகாட்சிகளுக்கு பணம் கைமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மத்திய அமலாக்க பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

அலைகற்றை ஊழல் வழக்கில் கைதாகி உள்ள ராசாவிடம் சி.பி.ஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பு இருப்பதால் விசாரணை துரிதப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலைகற்றை ஊழலில் தொடர்புடைய சுவான் டெலிகாம் நிறுவனம் ரூ.210 கோடியை கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள விவகாரம் வெளியாகியுள்ளது. இந்த பணம் கனிமொழியின் பங்குதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

 கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்தில் 60% பங்குகள் கருணாநிதியின் 2 வது மனைவி தயாளு அம்மாள் பெயரிலும், 20% பங்குகள் கனிமொழியின் பெயரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

கனிமொழியின் பங்கை நீக்கிவிட வேண்டும் என்பது ஏற்கனவே கருணாநிதி குடும்ப பிரச்சனையாக உள்ளது. தற்போது அலைகற்றை பூதமும் கலைஞர் தொலைகாட்சியை துரத்த துவங்கியுள்ளது. கனிமொழியின் பங்கை பிரித்து கொடுத்து விட்டால் சக்களத்தி சண்டையும், அலைகற்றை ஊழல் பிரச்சனையையும் சமாளித்து விடலாம் என்பது தயாளு அம்மாள் மற்றும் வாரிசுகள் கணக்கீடு. ஆனால் இதை ஏற்க கருணாநிதி மறுத்து வருகிறார்.

தன் காலத்திலேயே ராசாத்தி மற்றும் கனிமொழியை அநாதையாக விட கருணாநிதிக்கு விருப்பம் இல்லை. எந்த சகோதரசண்டை வாய்சாலம் அடித்தாரோ, அதே போன்ற சகோதர சண்டை இன்று கருணாநிதியை ஆட்டிப்படைக்க துவங்கியுள்ளது.

கருணாநிதி இன்னும் அனுபவிக்கவேண்டியது நிறைய உள்ளது.

திராவிட கட்சி - காங்கிரசு வென்றது யார்?

அலைகற்றை ஊழலில் கொள்ளையடித்தது காங்கிரசு. பலியானது? கருணாநிதியின் பழைய வசனம் தேனை எடுத்தவன் புறம் கையை நக்கிவிட்டேன், கருணாநிதிக்கு புது வசனம் நொங்கை தின்றவன் ஓடிவிட்டான் நோண்டி தின்றவன் மாட்டிக்கொண்டான்.

50 ஆண்டுகளாக கூட்டிணியை முடிவு செய்தது திராவிட கட்சிகள், இன்று கூட்டணியை முடிவு செய்வது காங்கிரசு, அப்போ வெற்றி?

சென்னை மருத்துவமனைக்கு ராசீவ்காந்தி பெயரை வைக்கவேண்டும் என்று காங்கிரசும், தந்தை பெரியார் பெயரை வைக்கவேண்டும் என்று திராவிட கட்சிகளும் போராடின. இறுதியில் வென்றது? 

கருணாநிதியை பார்த்து இந்திரா பயந்தார், இப்ப சோனியாவை பார்த்து கருணாநிதி? 

இன்னும் 5 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரசில் இணையும் மாபெரும் இணைப்பு விழா நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சனியன் சோனியாவிடம் இருந்து திராவிட இயக்கத்தை காப்பாத்துங்கோ...

காட்டிக்கொடுக்க தயாராகும் ராசா : அதிர்ச்சியில் திமுக


அலைகற்றை ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை காட்டிக்கொடுக்க ராசா தயாராகிவருவது திமுக & காங்கிரசு வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அலைகற்றை ஊழலில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ராசா,நேற்று முன்தினம் திடீரென கைது செய்யப்பட்டார். ராசாவை கைது செய்ய பிரதமர் மற்றும் தயாநிதிமாறன் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

திமுக & காங்கிரசு கைவிடும் பட்சத்தில் அனைவரையும் காட்டிக்கொடுக்க தயங்கமாட்டேன் என்ற ராசா தரப்பு மிரட்டல் இருபக்கமும் சென்றுள்ளது.

முதல் நாள் வாதத்தின் போதே ராசாவின் வழக்கறிஞர் இதை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அலைகற்றை ஓதுக்கீட்டில் ராசா மட்டுமே முடிவு எடுக்கவில்லை, பிரதமர் அலுவலகமும் சேர்ந்து தான் முடிவு எடுத்தது என்ற வாதத்தை முன்வைத்தார். சி.பி.ஐ விசாரணையில் இதை கருத்தில் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராசாவின் அதிரடி திமுக தலைமையை கதிகலங்க வைத்துள்ளது. சுடாலின் தரப்புக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கலைஞர் தொலைகாட்சிகளுக்கு மிகப்பெரிய அவப்பெயரை கொண்டு சேர்க்க ராசாவின் வாக்குமூலம் காத்திருக்கிறது. 

உப்பை தின்றவன் தண்ணீரை குடித்து தான் ஆக வேண்டும்.

தினமலருக்கு காவடி தூக்கும் வைகோ


என்ன கொடுமை, தமிழனை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கும் தினமலருக்கு வைகோ காவடி தூக்குவது வேதனையாக இருக்கிறது.

மாதேசுவரன் மலைக்கு கர்நாடகம் குடிநீர் எடுப்பதால் மேட்டூர் அணை வரண்டுவிடும் என தினமலர் விசமத்தை விதைத்தது. கர்நாடகா குடிக்க தண்ணீர் எடுப்பதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தூண்டி விட்டது. 
தினமலரின் விசமத்துக்கு எந்த தமிழரும் ஏமாற முன்வரவில்லை. உண்மையில் தமிழர்களின் பண்பாட்டை பெருமையாக நினைத்தேன். தினமலரின் விசமம் தோற்றுபோனதை இன்று எழுத நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் வழக்கம்போல வைகோவின் அவசர அறிக்கை வந்துள்ளது.

வைகோ ஒரு திறமையான அரசியல்வாதி. தமிழர்களுக்காக குரல்கொடுக்க இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நிச்சயம் தேவை. ஆனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பியே வைகோ செல்லாகாசவது வேதனை.

மாதேசுவரன் மலையில் வசிப்பவர்களில் 90% பேர் தமிழர்கள், தமிழர்களாக இருந்தால் என்ன, கன்னடர்களாக இருந்தால் என்ன?, குடிக்க சிறு குழாயில் தண்ணீர் எடுப்பதை எதிர்க்கிறீர்களே நீங்கள் மனிதர்களா?

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடகா எதிர்க்கிறது என்றால் அவர்களை காட்டுமிராண்டிகள் என்கிறோம். இப்போது அதே வேலையை நாம் செய்வது நாகரீகமா?

குடிக்க தண்ணீர் எடுப்பதை குற்றம் என்று தூண்டி விடுபவன் நிச்சயம் ஒரு ஈனபிறவியே. அதை தினமலர் என்றோ பெற்றுவிட்டது, வைகோ முயற்சிக்க வேண்டாம்.

காவேரியை துண்டாடினால் தினமலருக்கு பரபரப்பு செய்தியாகி, விற்பனை கூடும், தமிழருக்கும் கன்னடருக்கும் பகை கூடி சண்டை வரும். இழப்பு இருபகுதி மக்களுக்கு தான். தினமலருக்கு அல்ல.

அறிவுள்ள தமிழர்களே தினமலரின் சதியை புரிந்துகொள்ளுங்கள்... 

Feb 3, 2011

ராசாவை வீழ்த்திய செய்தியாளர்கள் : காணொளி


டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர்.


சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை பலிகடா ஆக்கிவிட்டார் கருணாநிதி. எவ்வளவு பலிகொடுத்தாகினும் காங்கிரசு கூட்டணியை வலுப்படுத்தியே தீருவேன் என்று தாத்தா பிடிவாதமாக இருக்கிறார் போல...

ராசா 5 நாள் விசாரனை காவலுக்கு நீதிபதி அனுமதி

ராசாவை 5 நாட்கள் சி.பி.ஐ விசாரணைக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இன்று மதியம் 2 மணிக்கு ராசா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ராசாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைபற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவல்களுக்கும் ராசாவின் நேரடி பதிலுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. மேலும் விசாரனையின் போது போதிய ஒத்துழைப்பு தர மறுக்கிறார். ராசாவிடம் கூடுதல் தகவல்களை பெற கைது தேவைப்பட்டது.

ராசாவை மேலும் 5நாட்கள் விசாரனைக்கு அனுமதிக்க வேண்டும். அலைகற்றை விவகாரத்தில் ராசா 22 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளது கண்டுபடிக்கப்பட்டடுள்ளது. இதுகுறித்த கூடுதல் விசாரனைக்கு ராசாவை 5 நாட்கள் விசாரனைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ வாதிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ராசாவின் வழக்கறிஞர் ரமேசு குப்தா. அழைக்கும்போது எல்லாம் முறையாக விசாரனைக்கு வந்தார் ராசா. மேலும் சோதனை உட்பட சி.பி.ஐயின் அனைத்து நடவடிக்கைகளுக்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்நிலையில் விசாரனை என்ற பெயரில் அழைத்து திடீர் கைது செய்யப்பட்டது தேவையற்றது. ராசானை விடுதலை செய்யவேண்டும் என்று ராசாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

சி.பி.ஐயின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள் 5 நாள் விசாரனை காவலில் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

தி.மு.க செயலாளர் பதவியில் இருந்து ராசா ராசினாமா

திமுக பொதுக்குழு கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை ராசினாமா செய்வதாக  ராசா கடிதம் கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்பது குறித்து பரிசீலனைக்கு பின்னர் முடிவு எடுக்கலாம் என கருணாநிதி அறிவித்துள்ளார். 


ஒருவர் கைது செய்யப்பட்டாலே அவர் குற்றவாளியாகிவிட முடியாது. எனவே திமுக முழுமையாக ராசாவை ஆதரிக்ககும் என திமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ராசா பிரச்சனையை மேலும் பூதகரமாக்கவேண்டாம் என்று திமுக தலைமைக்கு சோனியா கட்டளை இட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராசா கைது : அடுத்த இலக்கு பூங்கோதை


இன்று திமுக பொதுக்குழு கூடுகிறது. ஏற்கனவே அழகிரி வைத்த கெடு நினைவிருக்கலாம். ராசா மற்றும் மாநில அமைச்சர் பூங்கோதையை பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்று அழகிரி கோரியிருந்தார். 

ராசாவுக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் என்ன தொடர்பு என்பது ஊர் அறிந்த விடயம். அதே போல அமைச்சர் பூங்கோதை கருணாநிதியின் அன்பு துணைவி ராசாத்தியம்மாளின் உறவினர். இதனால் திமுகவில் பூங்கோதையும் ஒரு ஈட்டிமுனையாக இருந்து வருகிறார். 

நீரா ராடியாவுடனா£ன தொலைபேசி உரையாடலில் அழகிரியை முரடன், படிக்காதவன், என்றெல்லாம் வார்த்தை சாலம் விட்டவர் பூங்கோதை. இவற்றில் ஒருசில விடயங்களே வெளியாகி உள்ளன.

 இதனால் ஆத்திரம் அடைந்த அழகிரி கடந்த மாதம் திமுக தலைமைக்கு ஒரு மிரட்டல் விடுத்தார். ராசா, பூங்கோதையை கட்சியை விட்டு நீக்காவிட்டால் தான் ராசினாமா செய்வதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த கருணாநிதி திமுக பொதுகுழு கூடி முடிவு செய்யலாம். அதற்குள் நல்ல தீர்வு எடுக்கப்படும் என அழகிரிக்கு உறுதியளித்திருந்தார். அதை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார். 

சி.பி.ஐ யால் ராசா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சாமீனில் வெளிவருவதற்குள் திமுக பொதுகுழுவில் விவாதம் முடிந்திருக்கும். அதை குறிவைத்தே நேற்று ராசாவின் திடீர் கைது அரங்கேறியது. 

இந்நிலையில் இன்று நடக்கும் திமுக பொதுக்குழுவில் எதாவது காரணங்கள் கூறி பூங்கோதை கட்சி பொருப்புகளில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. 

திமுகவை பொருத்தவரை கருணாநிதியை தவிர பூங்கோதைக்கு ஆதரவாக பேச ஒருவரும் இல்லை என்பது துணைவி ராசாத்தியம்மாளுக்கு விழும் அடுத்த அடி. 

Feb 2, 2011

ராசா கைது, குற்றச்சாட்டு : சிபிஐ விளக்கம்

ராசா கைது செய்யப்பட்டதை சி.பி.ஐ இன்று மாலை 5.45க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ராசா நிறுத்தப்படுகிறார். ஊழல், கூட்டுசதி, சிலநிறுவனங்களுக்கு சாதகமாக விதிமுறைகளை தளர்த்தல் சட்டத்தை வளைத்தல் உட்பட குற்றச்சாட்டுகள் ராசாமீது சி.பி.ஐ சுமத்தியுள்ளது.

அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது

ராசாவை கைது செய்ய காங்கிரசை விட திமுக அதிக அழுத்தம் கொடுத்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலைகற்றை ஊழல் ராசாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அழகிரி கோரியிருந்தார். இதற்கு கனிமொழி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ராசாவை நீக்காவிட்டால் மத்திய அமைச்சர் மற்றும் தென்மண்டல செயலாளர் பதவியை ராசினாமா செய்வதாக அழகிரி மிரட்டல் விடுத்திருந்தார்.

ராசாவை திடீரென கட்சியில் இருந்து நீக்கினால் தலித் வேசம் கலைந்துவிடும் என்று கருணாநிதி கவலை தெரிவித்திருந்தார். அடுத்த திமுக பொதுகுழுவுக்குள் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்று அழகிரியை சமாதானப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நாளை திமுக பொதுக்குழு கூடுவதாக இருந்தது. ராசாவை கட்சியை விட்டு நீக்க தகுந்த காரணம் தேவை என்பதை கருணாநிதி உணர்ந்திருந்தார். அதற்காகவே டெல்லி பயணத்தை பயன்படுத்தியுள்ளார். ராசா கைதுக்கு டெல்லியில் கருணாநிதி பச்சை கொடி காட்டியுள்ளார். இதற்கு அழகிரி மற்றும் தயாநிதிமாறன் தரப்பு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. அதை தொடர்ந்தே இன்று ராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை திமுக பொதுகுழுவில் ராசா கட்சியை விட்டு தானாக நீக்கப்படுவார்.

ராசாவை வைத்து பிளாக்மெயில் செய்துவந்த காங்கிரசை தோற்கடிக்கவும், அழகிரியை சமாதானப்படுத்தவும், தன் தலித்வேசம் கலையாமல் இருக்கவும் கருணாநிதி போட்ட ஒரே கல்லில் மூன்று மாங்காய் கணக்கு தான் ராசா கைது.

காங்கிரசுக்கு எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?

திராவிட கட்சிகளை கண்டு மிரண்டு கிடந்த காங்கிரசு இன்று அசுரசக்தி பெற்றது எப்படி?

மக்கள் செல்வாக்கு பெற்ற காமராசர், மூப்பனார், போன்ற தலைவர்கள் கூட திராவிட கட்சிகளை ஆட்கொள்ளவில்லை. ஆனால் இன்று தங்கபாலு, வாசன், இளங்கோவன் போன்ற தலைவர்கள் திமுகவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டுகிறார்கள். இவர்களுக்கு தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு கடுகளவும் இல்லை. அதே போல இந்தி எதிர்ப்பை விட ஈழம் எதிர்ப்பில் காங்கிரசு சுவடற்று கிடக்கிறது. இருந்தாலும் காங்கிரசு திமுகவை மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம்?

இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் காங்கிரசால் உள்ளூர் நபரின் செல்வாக்கு இன்றி ஒரு தொகுயில் கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று ஆட்சியில் பங்கு என்ற நிலைக்கு வந்துள்ளது.

இது காங்கிரசின் வளர்ச்சியா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். அப்படியானால் இந்த நிலைக்கான காரணம் என்ன?
காங்கிரசு வளர்ச்சி அடையவில்லை அதே நேரத்தில் திமுக மிகபெரிய ஏமாளித்தனத்தை சந்தித்துள்ளது.

கருணாநிதி குடும்பத்தால் காங்கிரசு வளர்ந்துவிட்டது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

கருணாநிதி ஏமாளியானதற்காக ஒட்டுமொத்த தமிழனும் ஏமாளியாகிவிட முடியுமா?

ஒரு காலத்தில் கூட்டணி பற்றி பேச டெல்லி இங்கு வந்தது. ஆனால் பிசுகோத்து சோனியாவிடம் கூட்டணி பேச தள்ளுவண்டியில் தள்ளாடி செல்கிறார் கருணாநிதி. இந்திராவிடம் தைரியமாக அரசியல் செய்த கருணாநிதி சோனியாவிடம் வாலாட்டி நாயானது காலத்தின் கொடுமை.

கருணாநிதி இன்னும் நிறைய அனுபவிக்கவேண்டியுள்ளது. 

காலம் திரும்புவதாக காங்கிரசாரின் கணக்கு, தீபம் அணையும்போது கொஞ்சம் அதிகமாகவே பிரகாசிக்கும் என்பது காலத்தின் கணக்கு. 

Feb 1, 2011

என்னத்தை சொல்ல, படத்தை பார்த்து சிரிப்பதா அழுவதா? தலையில் அடித்துகொள்ளுவதா?


என்னத்தை சொல்ல


சுயமா எந்திரிக்க முடியாது, சுயமா நடக்க முடியாது, சுயமா செய்யவேண்டிய எதுக்கும் போக முடியாது, ஞபாகம மறதி, அசீரணம், ஆனால் தமிழ்நாட்டை ஆட்சி செய்தே ஆகவேண்டும் இந்த கிழடு கட்டைகள்.

படம் : சவுக்கு.நெட்

கலவரத்தை தூண்ட கோடு போடும் தினமலர்


மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. 

காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ் மக்களுக்கு குடிநீர் எடுக்கிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதை தமிழக விவசாயிகள் சொன்னதாக தினமலர் உலகமகா பொய்யை சொல்லியிருந்தது.

குடிக்க தண்ணீர் எடுப்பதை தவறு என்று எந்த காலத்திலும் தமிழன் சொல்லமாட்டான். அப்படி இருந்தும் தினமலர் தொடர்ந்து தமிழர் கருத்தாக தன்சொந்த கருத்தை திணித்து வருகிறது. 

தினமலரின் இந்த படுபாதக செயலை தெருநாய் தொல்லை என்று தமிழக விவசாயிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் மூக்கு உடைந்துபோன தினமலர் இன்று தமிழ் அமைப்புகளையும் விவசாய அமைப்புகளையும் சிண்டு முடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. 

மேட்டூர் அணையில் கர்நாடகா ரோடுபோடுவதை கண்டு தமிழர் அமைப்புகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனவாம். விவசாயிகள் கொந்தளிக்கவில்லையாம். 

விவசாயிகளும் தமிழர் அமைப்புகள் மட்டும் தான் காவேரிக்காக போராட வேண்டுமா? ஏன் தினமலர் ஆசிரியர் குடும்பம் காவேரி கரையில் உண்ணாவிரம் இருக்க வேண்டியது தானே.

தினமலரின் தண்ணீர் விபச்சாரம்

காவேரி ஆற்றில் இருந்து மாதேசுவரன் பகுதி மலைவாழ் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் எடுக்க கர்நாடகா முயற்சி செய்கிறதாம். இதை கண்டு தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

என்ன கொடுமை. காவேரி ஆறு பாயும் மலைபகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு குடிநீர் தரக்கூடாது என்று தினமலரை தவிர வேறு எந்த தமிழன் சொல்வான்? 

குழாய் மூலம் குடிநீர் எடுப்பதை கூடாது என்று சொல்பவர்கள் நிச்சயமாக நாகரீகமற்றவர்களாக தான் இருப்பார்கள். தமிழர்கள் நாகரீகம் உள்ளவர்கள், ஒருபோதும் குடிக்க தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள்.

தினமலரின் கருத்தை விவசாயிகள் கருத்தாக சொல்லும் இந்த நரிதந்திரம் தமிழகத்துக்கே கிடைத்த சாபக்கேடு

பிரபலமான பத்திரிக்கைகள் ஏன் இப்படி இருமாநில மக்களுக்கிடையே தண்ணீர் சண்டையை தூண்டிவிட்டுக்கொண்டு இருக்கிறது என்றே தெரியவில்லை. இதனால் இவர்கள் அடையும் பலன் என்ன? விற்பனைக்காக இப்படி படுபாதக செயலில் ஈடுபடுகின்றன பத்திரிக்கைகள்.

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான நீரோடைகள் உள்ளன. இவற்றை சிற்றணைகள் மூலம் தேக்கி அங்குள்ள மலைவாழ் மக்கள்(ஆதிவாசிகள்) குடிநீர் எடுக்ககூடாது, விவசாயம் செய்யக்கூடாது என்பதில் தமிழக பத்திரிக்கைகள் தீவிரமாக இருக்கின்றன. உண்மையில் இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கதக்கது. பலமுறை நான் யோசித்திருக்கிறேன் ஏன் நக்சலைட்டுகள் இங்கும் முளைக்ககூடாது என்று.

மலையில் சிற்றணைகள் கட்டுவதால் சமவெளிப்பகுதிகளில் நீர்ஆதரம் கூடுமே தவிர குறையாது. இது சில பத்திரிக்கை அறிவிலிகளுக்கு புரிவதில்லை. இவர்களுக்கு தண்ணீர் முக்கியம் அல்ல மணல்தான் முக்கியம். அதற்காக தான் சிற்றணைகள் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கோவையில் 100 கோடி செம்மொழி மேம்பாலம் கட்டுவதால் தமிழனுக்கும் பயனில்லை, தமிழுக்கும் பயனில்லை. கோவை குற்றாலம் வழி பாயும் சிற்றாறுகளை நொய்யலுடன் இணைத்து ஒரு அணை கட்டினால் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் விவசாயம் பெருகும், விலைவாசி குறையும். 

இதை எல்லாம் எழுத பத்திரிக்கைகள் இல்லை. ஏன் என்றால் எந்த விவசாயும் விளம்பரம் தரமாட்டான், பத்திரிக்கை படிக்கமாட்டான், அணை கட்டினால் ஊழல் செய்யமுடியாது, மேம்பாலம் கட்டினால் ஊழல் செய்யலாம்.

மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.

Popular Posts