Jan 11, 2011

தமிழ்ஈழம் அமைய தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு

இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று.


இன்று கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரே பகை முல்லைபெரியாறு தான்.


உண்மையில் முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் தான் கேரளாவுக்கு துரோகம் செய்கிறது. சுண்ணாம்பு கற்கலால் கட்டப்பட்ட முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பது உலகறிந்த விடயம்.


இதுவரை ஆய்வு செய்த 23 நிபுணர் குழுவும் முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்பதை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்துக்கு சாதகமாக சொன்ன உச்சநீதிமன்றம் கூட அணை பலப்படுத்தப்பட்டு உள்ளது, என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர பாதுகாப்புடன் இருக்கிறது என்பதை சொல்லவில்லை. 

இந்த விடயத்தில் தமிழகம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். வீண்பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருப்பது நமக்கு தான் இழப்பை தரும். நாம் ஏன் வீம்பு (ஈகோவை) விட்டுவிட்டு மாற்றை யோசிக்கக்கூடாது?




நமக்கு தேவை தண்ணீர். அதை தர கேரள முழுமனதுடன் சம்மதிக்கிறது. அதை எங்கு சேமிப்பது என்பதில் தான் பிரச்சனை. முல்லைபெரியாறு அணையில் கூடுதலாக தண்ணீர் சேமிப்பது கேரளாவுக்கு ஆபத்தை தரும். என்றால் சேமிப்பிடத்தை ஏன் மாற்றக்கூடாது?



1975ல் சீனாவில் 2 அணைகள் உடைந்து ஏரத்தாள 2 லட்சம் மக்கள் இறந்தார்கள். இது நடந்தது நம் கண்முன் தான். 35 ஆண்டுகள் தான் கடந்துள்ளது. நம்மைபோல தான் அணை பலமாக உள்ளது பலமாக உள்ளது என பாட்டுப்பாடிக்கொண்டு இருந்தார்கள். இறுதியில் அந்த பாட்டு 2 லட்சம் மக்களுக்கு மரண ஓலமானது. அது கூட உள்நாட்டு பிரச்சனையாக முடிந்துவிட்டது.



ஆனால் முல்லை பெரியாறு விடயத்தில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அணைக்கு எதாவது சம்பவித்தால் அப்புறம் கேரளா தமிழகம் நல்லுறவு என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்க வேண்டியதில்லை. ஏற்படும் இழப்பிற்கு நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்.



இன்று தமிழகத்தின் வாதம் இதுதான் கல்லணை. கல்லணை. கல்லணை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை உறுதியாக இருக்கும்போது 112 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பெரியாறு அணை உறுதியாக இருக்காதா என்பது தான் தமிழகத்தின் வாதம்.



இது தவறாதும் மடத்தனமான வாதமுமாகும்.



கல்லணையும் பெரியாறு அணையும் ஒன்றா? நீங்களே ஒப்பிட்டுப்பாருங்கள்

  • கல்லணை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • பெரியாறு அணை 2890 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • கல்லணையின் உயரம் 20 அடிகள் 
  • பெரியாறு அணையின் உயரம் 177 அடிகள். 
  • கல்லணையில் இருந்து அவசர காலத்தில் ஒரே நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரை வெளியேற்ற முடியும். 
  • பெரியாறு அணையில் இருந்து 2000 கன அடி நீரை மட்டுமே வெளியேற்ற முடியும் அதுவும் அவரசர கதியில் வெளியேற்ற முடியாது. 
  • கல்லணையின் கீழ்பகுதி 20 டிகிரி சரிவையுமே 20 அடி ஆழமும் கொண்டுள்ளது. 
  • பெரியாறு அணையின் கீழ்பகுதி 90 டிகிரி சரிவும் 300 அடி ஆழ பள்ளத்தாக்கையும் கொண்டுள்ளது. 
  • கல்லணை பகுதியில் நிலச்சரிவு, நிலநடுக்க அபாயம் இல்லை. 
  • பெரியாற்றில் இந்த இரண்டு அபாயங்களும் உள்ளது. பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 2006 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகியுள்ளது.
  • கல்லணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மேட்டூர், அமராவதி, பவானிசாகர் இந்த மூன்று அணைகளை வைத்தே கல்லணையின் அவசர காலத்தை கணித்து விட முடியும்.
  • ஆனால் பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அணை கட்டுமானத்தின் போதே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கட்டுமானம் கைவிடப்பட்டிருக்கிறது. பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில் பென்னி குயிக் தன் சொத்துக்களை விற்று சொந்த செலவில் கட்டி முடித்திருக்கிறார். கட்டும்போதே 185 இடங்களில் தடுப்பணை கட்டி, பிரதான பாதையை பேபி டேம் பக்கம் திருப்பியிருக்கிறார்.  பெரியாற்றில் எதை வைத்து அவசர காலத்தை கணிப்பது. 
  • பெரியாறு அணையானது 12க்கும் மேற்பட்ட காட்டாறுகளை இணைத்து மலை உச்சியில் கட்டப்பட்ட அணை.
  • மலைசிகரத்தில் உள்ள காட்டாற்றின் அழுத்தம், வேகத்தை சமவெளி பகுதியில் ஓடும் நதியுடன் ஒப்பிடலாமா?
  • கல்லணையில் தண்ணீரை தடுத்து நிறுத்தும் மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் வழியாகவே நான்கு திசைகளில் தண்ணீரை பிரித்து விடக்கூடிய வசதிகள் இருக்கிறது.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீரை தடுத்து வைப்பது ஒரு பகுதி, வெள்ளம் அதிகமாகும் போது திறந்து விட வேறு ஒரு பகுதி, தண்ணீரை தமிழகத்திற்கு திருப்ப ஒரு பகுதி என மூன்றாக, மூன்றும் மூன்று திசையில் இருக்கிறது. 
  • பெரியாறு அணையில் அழுத்தம் அதிகமான பகுதியில் தண்ணீர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் மதகுகள் இல்லை. அழுத்தம் கூடும்போது தண்ணீரை திறந்துவிட அணையின் இடது புறத்தில் பேபி டேம் உள்ளது. இது ஆற்றின் பிரதான பாதையைவிட மேடான இடத்தில் உள்ளது. அடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்க வடக்குப்பக்கம் சுரங்கப்பாதை உள்ளது. அணையில் 104 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தண்ணீர் கீழே வரும்.
  • கல்லணை என்பது தண்ணீரை பிரித்துவிடும் அணைதானே தவிர தேக்கி நிறுத்தும் அணை அல்ல. மேலும் இயற்கையான போக்கில் கட்டப்பட்ட அணை.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீர் தடுத்து தேக்கப்பட்டு அணையின் மற்றொரு மூலையில் சுரங்கம் வழியாக கீழே கொடுவரப்படுகிறது. இது இயற்கைக்கு எதிராக கட்டப்பட்ட அணை. 
  • இரு அணைகளின் அழுத்தமும், நீர் அரிப்பும் மிகஅதிக வேறுபாடு உடையது.
  • கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை என்பது தற்போது மதகுகளுக்கு கீழ் உள்ள அடிப்பகுதி. அதாவது ஒரு செக் டேம் போன்றது. அதன்மீது உள்ள பாலங்களும், மதகுகளும் சமீபத்தில் கட்டப்பட்டது. 
  • கல்லணை தடுப்பு சுவற்றின் அகலம் அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதிவரை ஒரேமாதிரியாக உள்ளது. 
  • ஆனால் பெரியாறு அணையின் தடுப்பு சுவற்றின் அடியில் அகலமான சுவரும்,மேலே வரவர கூர்மையான பகுதியாக உள்ளது. இந்த கட்டமைப்பு தான் ஆபத்தாக உள்ளதாக கேரளா கூறுகிறது.
  • கல்லணை ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
  • பெரியாறு அணை இரு அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • கல்லணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை.
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது. 
  • கல்லணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. 
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிது.
  • காவிரியாற்றில் கர்நாடகாவுக்கும், நமக்கும் தேவை ஒரேமாதிரியானது. குடிநீர், விவசாயம், மின்சாரம்.
  • ஆனால் பெரியாற்று நீர் கேரளாவுக்கு ஆபத்தானது, தமிழ்நாட்டுக்கு தேவையானது.
  • தண்ணீரை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
  • தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
  • கேரளாவின் குடிநீர், விவசாயம், மின்சாரத் தேவைகளுக்கு பெரியாறு பயன்படுவதில்லை, தேவையும் இல்லை.
  • பெரியாற்றின் வெள்ளப்பெருக்கால் உயிர்சேதமும், கொச்சி நகர அழிவும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
  • ஆனால் தமிழகத்தின் 7 மாவட்டங்களின் குடிநீர், விவசாயம்,மின்சார தேவைகளுக்கு பெரியாறு இன்றியமையாதது.
  • நமக்கு இது உயிர் ஆதார பிரச்சனை.கேரளாவுக்கு இது உயிர் போகும் பிரச்சனை.
  • கர்நாடகாவைப் போல தண்ணீர் தரமாட்டோம் என்று கேரளா ஒரு போதும் சொல்லவில்லை.
  • காவிரி பிரச்சனையில் தீர்வை முன்வைத்து யாரும் போராடுவதில்லை.
  • ஆனால் பெரியாற்று பிரச்சனையில் போராட்டக்காரர்கள் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள்.


அணையின் பகுதியில், தமிழகத்தின் பக்கம், தற்போது உள்ளதைவிட தாழ்வாக சில கால்வாய்களை வெட்டவேண்டும். அதனால் அணை இல்லாமலும் தண்ணீரை கீழே கொண்டுசெல்ல முடியும். இல்லாவிட்டால் ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும். தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. மேற்கூறிய தீர்வுகளுக்கு தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் கூட இல்லை என்ற தீர்வை அவர்கள் முன்வைக்கிறார்கள். 



இதைப்பற்றி நாம் ஏன் யோசிக்க கூடாது.
இந்த தீர்வால் தமிழகத்திற்கு செலவு குறைவும், பிரச்சனைக்கு தீர்வும், அதிக தண்ணீரும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப
காய் கவர்ந் தற்று 
அல்லவா..



முல்லைப்பெரியாறு பிரச்சனையோடு, காவிரியையும், பாலாற்றையும், ஈழத்தையும் சேர்த்து முடிச்சு போட்டு, எங்கு பார்த்தாலும் தமிழர்களுக்கு தொல்லை என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. நமது கண்ணோட்டத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். 

இது அரசியல்வாதிகளுக்கு இடையேயான பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையில் போராடும் அட்டைக்கத்தி சண்டையோ அல்ல. தமிழனுக்கும் மலையாளிக்கும் உள்ள இனப்போராட்டமோ ஈகோ பிரச்சனையோ அல்ல.



இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான போராட்டம். இயற்கையோடு அளவோடுதான் எதிர்த்து நிற்க வேண்டும். அளவுக்கு மீறிய ஆற்றலோடு வரும் இயற்கையிடம் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் அழிவு மனிதனுக்குத்தான்.



அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்  



இந்த பதிவை வாசிப்பவர்கள் ஒரு முறை கூகிள் இணையத்தில் உள்ள மேப் பகுதி வழியாக அணையை பார்வையிடுங்கள். நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்


ஈழத்துக்கும் முல்லை பெரியாருக்கும் என்ன சம்மந்தம்? என்ற கேள்வி மனதுள் எழுந்திருக்கும் . நன்று .

ஈழத்துக்கு கேரளாவின் மிகப்பெரிய உதவி தேவைப்படுகிறது. குமரகம் சென்றுவரும் வைகோவுக்கு இது தெரியும். 

8 comments:

  1. ஆழமான பதிவு.

    இதுகுறித்து தமிழக-கேரள அரசுகளும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், ஊடகங்களும் கலந்துபேசி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

    தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் எப்போதுமே மக்களைப்பற்றி சிந்திப்பதில்லை. சிறிய கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் மட்டுமே இப்பரச்சனையை கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    தமிழகத்தின் உரிமைகள் பறிபோகமால் பெரியாறிலிருந்து தொடர்ந்து நமக்குத் தேவையான நீரைப்பெற ஆவண செய்ய வேண்டும்...

    இந்தக்கருத்தை தாங்கள் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவருக்கும் கடிதமாக அனுப்பி வைக்க வேண்டுகிறேன்... முயற்சி செய்யவும்... தங்களுடைய இந்தக்கருத்தால்கூட முல்லைபபெரியாறு பிரச்சனை தீர வாய்ப்பிருக்கிறது.

    ஆனால், இதற்கும் தமிழ்ஈழத்திற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை...

    ReplyDelete
  2. திரு. சீ.பிரபாகரன்.

    முல்லைபெரியாறு பிரச்சனையில் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. இது தமிழகம் மற்றும் கேரளா அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். ஆனாலும் பிரச்சனையை அரசியல் சூட்டிலேயே வைத்திருக்க விரும்புவது தான் வேதனை.

    முல்லைபெரியாறு அணைக்கும் ஈழத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கேரளாவுக்கும் ஈழத்துக்கும் அதிநெருங்கிய தொடர்பு இருக்கிறது. தமிழகத்தை விட ஈழத்துக்கான ஆதரவும் உதவியும் அங்கிருந்து தான் கிடைக்கப்பெருகிறது.

    இது வைகோ நெடுமாறன் உட்படுகிறவர்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் அதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். ஈழத்தை தமிழகத்தோடு முடிச்சுபோட பார்க்கிறார்கள். அது தவறான கோணமாக எனக்கு படுகிறது.

    சில விடயங்களை காலத்தின் சூழல் கருதி வெளிப்படையாக எழுது முடியாது. மன்னிக்கவும்.

    கேரளாவுடனான தமிழர் நல்லுறவு தமிழகத்துக்கும் தமிழ்ஈழத்துக்கும் அவசரதேவை அதை மட்டுமே இப்போது சொல்லமுடியும். நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்.

    காவிரி நதிநீர் பங்கீடு போன்று முல்லை பெரியாறும் தமிழர்களுக்கு ஒரு சிக்கல் என்ற அளவிலேயே என்னைப்போன்ற தமிழின உணர்வாளர்களுக்கு தெரியும். அதற்கான உண்மையான தீர்வு என்ன என்பது என்னைப்போன்ற பெரும்பாலான தமிழின உணர்வாளர்களுக்குத் தெரியாது.

    முல்லைப்பெரியாறு தொடர்பான உண்மைநிலைகளை தாங்கள் சிறுகையேடாக வெளியிட்டால் அது தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்... முயற்சிக்கவும்...

    ReplyDelete
  4. திரு. சீ.பிரபாகரன்.

    உங்கள் ஆலோசனைக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.

    முல்லை பெரியாறு விடயத்தில் இன்னும் கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறேன்.

    எளிமையான தீர்வுகள் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு இன்னும் கொண்டுசெல்லப்படவில்லை.

    முல்லைபெரியாறு குறித்த விழிப்புணர்வு என்னோடு பணியாற்றும் சகபத்திரிக்கையாளர்களுக்கே இல்லை. இதை பற்றி பேசினாலே என்னை ஏதோ தமிழின துரோகி என்றும் கேரளாவின் கைகூலி என்றும் பேசுகிறார்கள்.

    இன்று பெரும்பாலன பத்திரிக்கையாளர்களுக்கே முல்லைபெரியாறு என்றால் 136 அடி, வைகோ, உச்சநிதிமன்றம் கேரள தண்ணீர்தர மறுக்கிறது. இது தான் தெரிகிறது. அதை தாண்டிய எதையும் அவர்கள் அறிந்துகொள்ள முற்படுவதில்லை. அதை வைத்தே ஒருவித மெத்தன மனோபாவத்தில் செய்திகளை எழுதுகின்றனர்.

    கோவை மாவட்ட ஆட்சியரிடம் எனது ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அதை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்யவும் முயற்சி மேற்கொண்டுள்ளேன். இரு மாவட்ட ஆட்சியர்களும் சேர்ந்து முடிவுஎடுத்தால் அதை உச்சநீதிமன்றம் கூட மதித்தாக வேண்டும். அதற்கான முயற்சிகளில் தான் இப்போது ஈடுபட்டுள்ளேன். எவ்வளவு தூரம் வெற்றியடையும் என்று தெரியவில்லை.

    முல்லைபெரியாறு குறித்து சிறுகையேடாக வெளியிட்டால் அதை பொதுமக்கள் விழிப்புணர்வாக பார்ப்பார்களா அல்லது விசமபிரச்சாரம் போல பார்ப்பார்களா என்ற தயக்கம் உள்ளது.

    ஆனால் கண்டீப்பாக மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

    ReplyDelete
  5. படிக்க ஆரம்பித்தவுடன் ஏதோ கேரளாவின் சார்பாகவே இந்த பதிவுள்ளதை போல தோன்றியது..,

    பதிவின் ஆரம்பத்தில்,
    "அணையின் பகுதியில், தமிழகத்தின் பக்கம், தற்போது உள்ளதைவிட தாழ்வாக சில கால்வாய்களை வெட்டவேண்டும். அதனால் அணை இல்லாமலும் தண்ணீரை கீழே கொண்டுசெல்ல முடியும். இல்லாவிட்டால் ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும். தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. மேற்கூறிய தீர்வுகளுக்கு தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் கூட இல்லை என்ற தீர்வை அவர்கள் முன்வைக்கிறார்கள்.' என வாய்ப்புள்ள தீர்வை சொல்லிவிட்டு பதிவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நினைக்கிறேன்!
    எனக்கு கூட ஏன் வீம்பாக இரண்டு அரசுகளும் மக்களிடம் இப்படி பகையை உண்டாக்க முயற்சிக்கின்றன என தோன்றியதுண்டு! மாற்று வழிகளை குறிப்பாக சுரங்க பாதைகளின் நீள, அகல அளவை கூட்டுதல்., தேவையெனில், கூடுதலாக மலைகளை குடைந்து அதிக நீர்வழிகளை,சுரங்க பாதைகளை ஏற்படுத்தலாம்!

    ReplyDelete
  6. pathivu arumai! kuduthal thagavalkalai pathividavum

    ReplyDelete
  7. பரவாயில்லையே மலையாளிக்கு நல்லாவே ஜால்ரா தட்டுரீங்க. இங்க எப்படி ஈழப்பிரச்னை வந்தது. வைகோ குமரகத்துக்கு போரது இருக்கட்டும் தினமும் லாரி லாரியா காய்கறியும், அரிசியும் போகுதே அது வானத்துல் இருந்து கொட்டுதா.. ஆள் ஆளுக்கு தலையங்கம் எழுத ஆரம்பிச்சா இப்படித்தான். கேரளா நல்லுரவுக்கும், ஈழப்பிரச்னைக்கும் நீங்கள் கைகாட்ட வேண்டியது சிவசங்கரமேனன் எனும் சகுனியை.. இதுல சப்போர்ட்டுக்கு "ஆழமான பதிவு, அகலமான பதிவு" அப்படின்னு உங்களுக்கு சில ஜால்ரா வேற.. தமிழக மக்கள் மீதும், ஈழ மக்கள் மீதும் என்னவொறு அக்கறை..

    ReplyDelete
  8. திரு குமார்

    உங்களை போன்றவர்களால் தான் தமிழர்களையே முட்டாள்களாக நினைக்கிறது உலகம்.

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறியும் அரிசியும் சும்மாவா போகுது? இல்லை இலவசமா தர்ரீங்களா? கேரளாவில் இருந்து மிளகு, ஏலக்காய், ரப்பர் உட்பட மலஞ்சரக்கு பொருட்கள் லாரிலாரியாய் தமிழகத்துக்கு ஏன் வருதுனு யோசிச்சு பாருங்க...

    தண்ணீரை பாதுகாப்பா கொண்டுபோங்கனு சொன்னா லவடால் வேற, சிவசங்கர மேனன் இருக்கட்டும், உங்கள் சிதம்பரமும், சிப்பந்தி எம்.பிகளும் என்ன பன்னுராங்கனு முதல்ல பாருங்க, அப்புறம் அடுத்தவன் என்ன செய்யரானு பார்க்கலாம்.

    ReplyDelete

Popular Posts