இன்று நடக்க உள்ள போக்குவரத்து தொழில்சங்க பொதுதேர்தலில் அதிமுக தொழில்சங்கத்துக்கு அதரவு தெரிவிக்க வேண்டும் என்று தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகளுக்கு விசயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். தே.மு.தி.க., தொழிற்சங்க தலைவர் வாயிலாக, இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் உறுதியாகி இருந்தது. ஆனால் அதை இரு கட்சி தலைமையிடமும் தேவைப்படும் நேரத்தில் வெளியிட்டால் போதும், இப்போது இதுகுறித்து எதுவும் பேசவேண்டாம் என்ற ஒப்பந்தம் செய்திருந்தன.
காங்கிரசு மற்றும் மதிமுக இதர கட்சிகளின் நிலைபாடுகளுக்கு பின்னர் தே.மு.தி.க கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
வரும் சனவரி மாதம் சேலத்தில் தே.மு.தி.க மாநிலமாநாடு நடக்க இருக்கிறது. அன்று முறைபடி அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்து விசயகாந்த் அறிவிக்க உள்ளார். அதை தொடர்ந்து செயலலிதாவும் கூட்டணிக்கு விசகாந்துக்கு வரவேற்பு அறிக்கை வெளியிடுவது என பேசிமுடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடக்கம் போக்குவரத்து தொழில்சங்க தேர்தலால் கூட்டணியில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அ.தி.மு.கவுக்கு விசயகாந்த ஆதரவு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இன்று கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரே பகை முல்லைபெரியாறு தான். உண்மையில் முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் தான் கேரளாவுக்கு துரோகம்...
-
கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத...
-
தேர்தல் களத்தில் எதிரணியின் பலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் யுக்தியை சன்தொலைகாட்சி மூலம் திமுக பெற்றுவருகிறது. நடுநிலை ஊடகம் போல காட்டி...
-
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரசு ஒருநாள் அவகாசம் கேட்டதை தொடர்ந்து திமுக அமைச்சர்கள் இன்று ராசினாமா செய்வதில்லை என திமுக அறிவித்துள்ளது...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
வண்டிப்பெரியாறு பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பு கேட்டு போரடிவரும் போராட்டகுழுவில் உள்ள ஒரு மலையாளியின் குரலை தான் தற்போது க...
-
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கான எளிமையான தீர்வுகளை கோவை பத்திரிக்கையாளர்களுக்கு இன்று விளக்கம் அளித்தோம். கோவை பத்திரிக்கையாளர் மன...
-
‘‘ நான் ஊழலை பொறுக்காதவள் ’’ இப்படி சொன்னது இன்று இந்தியாவை ஆட்டி படைக்கும் இத்தாலியா நாட்டின் அதிபர் சோனியா. இந்திய வரலாற்றில் இரண்டு மிக...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் ஒரு கேரள தமிழனாக திரு வைகோ அவர்களை சந்தித்து பேசப்போகிறேன். நாளை தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சி...
No comments:
Post a Comment