ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை.
நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை. 4 பேர் பேட்டி கொடுத்ததை, இவர்கள் மட்டுமே பொது மக்கள் அல்ல.
தொலைகாட்சியில் தெரிய வேண்டும் என்றால் பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என்று சொன்னால் என்ன எதற்கு என்று கேட்காமல் பட்டாசு வெடிப்பபவர்கள் எத்தனை பேர் வேண்டும்? (அதற்காக பட்டாசு வெடித்தவர்களை நான் கொஞ்சைப்படுத்தவில்லை)
மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்... இதை பத்திரிக்கைகள் சாதகமாக பயன்படுத்தகூடாது.
பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்கிறதை எழுதவேண்டும் என்ற இதழியல் கொள்கை பத்திரிக்கை விற்பனைக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரும்.
உண்மையை எழுதவேண்டும் அது தான் பத்திரிக்கை தர்மம்.
அதை எத்தனை பத்திரிக்கைகள் செய்தன?
என்கவுன்டர் தவறானது. போலீசாரின் கோழைதனம் என்று கூறியவர்களின் பேட்டிகள் தொலைகாட்சியிலும், பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டதா?
ஒரு சாரர் கருத்தை வெளியிட்டால் அது பத்திரிக்கைகள் கருத்தே தவிர, பொதுமக்கள் கருத்து அல்ல.
நான் பல பேரிடம் நேரடியாக கேட்டேன்
எனது கேள்வி இது தான்.
கேள்வி: மோகன்கிருட்டிணன் என்கவுன்டரை வரவேற்கிறீகளா?
பதில் : ஆமாம்.
கேள்வி : மோகன கிருட்டிணன் என்கவுன்டர் போலீசார் திட்டமிட்டு செய்ததா? தற்செயலா?
பதில் : 100 % திட்டமிட்டு செய்தது தான்.
கேள்வி : பின் ஏன் அதை ஆதரிக்கிறீர்கள்
பதில் : குழந்தைகளை பாலியல் வன்முறை படுத்தி கொன்றவனுக்கு இப்படிப்பட்ட தண்டனைகள் தான் தர வேண்டும்.
கேள்வி : மோகனகிருட்டினன் தான் உண்மையான குற்றவாளி என்று தெரியுமா?
பதில் : தெரியாது,
கேள்வி : மோகனகிருட்டிணன் பணம் பறிக்கும் நோக்கத்துடன் காரில் கடத்தினான், நண்பன் மனோகர் பாலியல் வன்முறை செய்தான். பயந்துபோய் இருவரும் குழந்தையை கொன்றார்கள். இது தான் போலீசு தரப்பு குற்றசாட்டு தெரியுமா?
பதில் : அப்படியா
கேள்வி: ஆமாம். இப்படி இருக்க பாலியல் வன்முறை படுத்தி கொன்றவனை விட்டுவிட்டு, கொன்றவனை மட்டும் கொன்றதை எப்படி கருதுகிறீர்கள்
பதில்: இதில் இப்படி எல்லாம் விசயம் இருக்கா.
கேள்வி : போலீசு உண்மையிலுமே மக்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்திருந்தால் முதலில் யாரை என்கவுன்டர் செய்திருக்க வேண்டும்.
பதில்: பாலியல் வன்முறை படுத்தி கொன்ற மனோகரை தான்.
கேள்வி : பின் ஏன் அவசர கதியில் மோகன கிருட்டிணனை கொன்றார்கள்
பதில்: அப்படினா வேறு எதாவது காரணம் இருக்கனும்.
கேள்வி : இதுவரை இறந்த குழந்தைகளின் பெற்றோர் காவல்நிலையம் வரவில்லை ஏன்?
பதில்: அப்படியா?
கேள்வி: இப்போது ஒரு நிமிடம் யோசித்து சொல்லுங்கள் மோகனகிருட்டினன் என்கவுன்டர்?
பதில் : அந்த குழந்தைகள் சடலத்தை பார்த்தா கண்ணீர் வருது, அந்த கோபம் தான். ஆனா நீங்க சொல்லரதை எல்லாம் வைத்து பார்த்தால் பின்னனி ஏதோ விசயம் இருக்கு போல தெரியுதுங்க.
கேள்வி : இந்த என்கவுண்டரை கொண்டாடினீர்ளா?
பதில் : அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. யாரை நம்பரதுனே தெரியலை. முதலில் மனசுக்கு சரினு பட்டுச்சு. இப்ப கொஞ்சம் யோசிக்க தோணது. இனியும் என்னவெல்லாம் வருமோ?
இது தான் உண்மை.
மக்கள் இந்த என்கவுன்டர் குறித்து சந்தேகம் கிளப்ப ஆரம்பித்துவிட்டார்கள்..
இப்போது உங்கள் கருத்தை சொல்லுங்கள்
இந்த என்கவுன்டரை வரவேற்கிரீர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் அரட்டை அடிப்பது. இது தான் வழக்கம், ஆனால் வலைபதிவர்கள் வெறும் அரட்டை அடிக்கும் கும்பலாக இருப்பதில் அர்த்தமில்லை...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஊடங்கள் நினைத்ததை சாதித்து விட்டன. தமிழர் மலையாளி பிரச்சனையை கிளப்பி கொஞ்சம் காசுபார்த்து விட்டன. அதற்கு சால்...
-
ஒரு நாட்டின் சொத்துக்களை அபகரிக்க சில சர்வதேச கொள்ளையர்கள் திட்டம் தீட்டினர். அந்த நாட்டின் அரசராகும் தகுதியுடைய நபரை தங்கள் கைபாவையாய் செயல...
-
மதியம் உச்சிவெயில், நிழலுக்காக சாலையோரம் இருத்த மரத்தடியில் வண்டியை ஒரம்கட்டினேன். எதிர்புறம் சாலையோர சுவரில் திமுக மற்றும் காங்கிரசுக்கு ஆத...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத...
No comments:
Post a Comment