வாடகை வேனில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட குழந்தைகள் காணாமல் போனல் மனம் பதரும் பதட்டம் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும். ஆனால் அதே குழந்தைகள் சடலமாக தண்ணீரில் மிதக்கும் கொடுமையை எப்படி சொல்வது?
பணத்துக்காக மனிதர்களை கடத்திய பயங்கரவாதிகள், பெரும் கொள்ளையர்கள் கூட கொலைசெய்வது அரிது. ஆனால் இந்த இரு பிஞ்சுகளை கொலை செய்ய எப்படி மனம் வந்தது?
கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள துணிக்கடை அதிபரின் 12, 7 வயதே ஆன இரு குழந்தைகளையும் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மக்களை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
அம்மா, அப்பா, ஆசிரியர் இவர்களுக்கு அடுத்த படியாக குழந்தைகள் அதிக உரிமை எடுத்துக்கொள்வது டிரைவர் மாமா. எந்த கவலையையும் தயங்காமல் சொல்லக்கூடிய ஒரே வடிகால் டிரைவர் மாமா. அத்தனை டிரைவர் மாமாக்களும் தன் குழந்தைகளை போலவே வேனில், ஆட்டோவில், காரில் வரும் பிற குழந்தைகளையும் பாவிக்கின்றனர்.
ஆனால் அப்படிப்பட்ட டிரைவர் மாமாக்களில் எப்படி உருவானார்கள் இந்த கொடூரர்கள்?
குந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் தொழில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
சில கொள்ளையர்களுக்கு பணம் கிடைக்கிறது. சிலருக்கு சிறை கிடைக்கிறது. சிலர் மீட்கப்படுகின்றனர். சிலர் கொல்லப்படுகின்றனர். காவல்துறை வழக்கம்போல தன் கடமையை செய்கிறது.
ஆனால் இதற்கு முடிவு?
காவல் துறை, சட்டம் இவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் காவல்துறை, சட்டம், தண்டனை இவற்றின் மீது கொஞ்சம் கூட குற்றவாளிகளுக்கு பயம் வரவில்லை என்பது தான் நிதர்சன உண்மை.
கொலை செய்தால், எளிமையாக தப்பித்து விடலாம், போலீஸ் கண்டுபிடிக்காது, அப்படியே கண்டுபிடித்தாலும் ஜாமீன் கிடைக்கும், ஜாமீன் கிடைக்கா விட்டாலும் அதிகபட்சம் 15 வருடங்களுக்கு மேல் வழக்கை இழுத்தடிக்கலாம். டேபிள் டாப்பிள் உக்காத்திருக்கும் நீதிபதியை பணத்துக்காக பேசும் வக்கீல் பார்த்துக்கொள்வார். அதுவரை சிறையில் சொகுசு வாழ்க்கை. பின்னர் கருணை மனு அப்படி இப்படி 5 வருடம் ஓடிவிடும். அதற்கு அப்புறம் 50 வயசுககு மேல் இருந்தால் என்ன? தூக்கில் தொங்கினால் என்ன?
ரவுடிகள் தேவை என்று விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளும், டேபிள் டாப்பில் உட்காத்திருக்கம் நீதிபதிளும் இருக்கும் வரை யாரின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.
இப்போது மனைவி குழந்தைகளோடு உயிரோடு இருக்கிறோம். அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். அடுத்த நிமிடத்தை பற்றி யோசிக்காதீர்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
பதிவுக்கு தமிழ்மணத்தின் கட்டண சேவை தவறானது என்பது பதிவர்களுக்கு புரியாமல் போனது வேதனையே. தமிழ்மணத்தின் முதல்பக்கம் முழுவதும் கட்டணசேவையில்...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...
-
தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவ...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
வலபதிவுகளில் சில பின்னூட்டங்களை படிக்கும்போது தானக நமக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த சிரிப்பை அடக்க சிலமணிதுளிகள் பிடிக்கும். அப்படி இன்று அ...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. இன்ற...
-
இந்தியன் என்பதில் பெருமை பட்டோம் எப்போது தெரியுமா? அண்ணல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை படித்த போது. எவ்வளவு நேர்...
No comments:
Post a Comment