வாடகை வேனில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட குழந்தைகள் காணாமல் போனல் மனம் பதரும் பதட்டம் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும். ஆனால் அதே குழந்தைகள் சடலமாக தண்ணீரில் மிதக்கும் கொடுமையை எப்படி சொல்வது?
பணத்துக்காக மனிதர்களை கடத்திய பயங்கரவாதிகள், பெரும் கொள்ளையர்கள் கூட கொலைசெய்வது அரிது. ஆனால் இந்த இரு பிஞ்சுகளை கொலை செய்ய எப்படி மனம் வந்தது?
கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள துணிக்கடை அதிபரின் 12, 7 வயதே ஆன இரு குழந்தைகளையும் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மக்களை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
அம்மா, அப்பா, ஆசிரியர் இவர்களுக்கு அடுத்த படியாக குழந்தைகள் அதிக உரிமை எடுத்துக்கொள்வது டிரைவர் மாமா. எந்த கவலையையும் தயங்காமல் சொல்லக்கூடிய ஒரே வடிகால் டிரைவர் மாமா. அத்தனை டிரைவர் மாமாக்களும் தன் குழந்தைகளை போலவே வேனில், ஆட்டோவில், காரில் வரும் பிற குழந்தைகளையும் பாவிக்கின்றனர்.
ஆனால் அப்படிப்பட்ட டிரைவர் மாமாக்களில் எப்படி உருவானார்கள் இந்த கொடூரர்கள்?
குந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் தொழில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
சில கொள்ளையர்களுக்கு பணம் கிடைக்கிறது. சிலருக்கு சிறை கிடைக்கிறது. சிலர் மீட்கப்படுகின்றனர். சிலர் கொல்லப்படுகின்றனர். காவல்துறை வழக்கம்போல தன் கடமையை செய்கிறது.
ஆனால் இதற்கு முடிவு?
காவல் துறை, சட்டம் இவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் காவல்துறை, சட்டம், தண்டனை இவற்றின் மீது கொஞ்சம் கூட குற்றவாளிகளுக்கு பயம் வரவில்லை என்பது தான் நிதர்சன உண்மை.
கொலை செய்தால், எளிமையாக தப்பித்து விடலாம், போலீஸ் கண்டுபிடிக்காது, அப்படியே கண்டுபிடித்தாலும் ஜாமீன் கிடைக்கும், ஜாமீன் கிடைக்கா விட்டாலும் அதிகபட்சம் 15 வருடங்களுக்கு மேல் வழக்கை இழுத்தடிக்கலாம். டேபிள் டாப்பிள் உக்காத்திருக்கும் நீதிபதியை பணத்துக்காக பேசும் வக்கீல் பார்த்துக்கொள்வார். அதுவரை சிறையில் சொகுசு வாழ்க்கை. பின்னர் கருணை மனு அப்படி இப்படி 5 வருடம் ஓடிவிடும். அதற்கு அப்புறம் 50 வயசுககு மேல் இருந்தால் என்ன? தூக்கில் தொங்கினால் என்ன?
ரவுடிகள் தேவை என்று விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளும், டேபிள் டாப்பில் உட்காத்திருக்கம் நீதிபதிளும் இருக்கும் வரை யாரின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.
இப்போது மனைவி குழந்தைகளோடு உயிரோடு இருக்கிறோம். அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். அடுத்த நிமிடத்தை பற்றி யோசிக்காதீர்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து கனிமொழி கூறியதாவது : அலைகற்றை விவகாரத...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்...
-
இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர். ...
No comments:
Post a Comment