கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
லஞ்சம் வாங்காத அதிகாரிகளையே லஞ்சம் வாங்கவைத்த பத்திரிக்கையாளர் குறித்த பதிவு மாவட்ட ஆட்சியர் வரை பார்வையிடப்பட்டது குறித்து பெருமிதப்பட்டுக்கொண்டார்.
ஆனால் அடுத்து அவர் பொதுமக்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு நியாயமாகவே பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர், போக்குவரத்து உட்பட பல அரசு அலுவலகங்களுக்கு சிறு சிறு விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் வருகின்றனர். சாதாரன மக்கள் தாமாகவே முன்வந்து சிறிய தொகையை லஞ்சமாக கொடுக்கின்றனர். சில அதிகாரிகள் கமுக்கமாக வாங்கிக்கொண்டு கூடுதலாக கேட்கின்றனர். சில நேர்மையான அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை.
ஆனால் லஞ்சம் வாங்காத அதிகாரியை பொதுமக்கள் நம்புவதில்லை. லஞ்சம் வாங்கினால் நிச்சயமாக காரியம் நடந்துவிடும் என மக்கள் நம்புகின்றனர். லஞ்சம் வாங்காவிட்டால் அவர்கள் சந்தேக பார்வையுடனேயே செல்கின்றனர். நியாயமான காரணங்களுக்காக ஒரு சில நாட்கள் கோப்பை ஒத்திவைத்தால் கூட அதிகாரியை நம்புவதில்லை, புலம்பி தீர்க்கின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
லஞ்சம் கொடுத்தால் காரியம் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் முறையாக சரியான ஆவணங்களை கொண்டுவருவதில்லை.
99% மக்கள் தங்கள் காரியங்களை விரைவில் சாதித்துக்கொள்ள தானாக முன்வந்து லஞ்சம் கொடுக்கின்றனர். இதில் நடக்கும் பேரத்தில் தான் பிரச்சனையே வருகிறது.
லஞ்சம் வாங்காத அதிகாரியை 1% மக்கள் கூட நம்புவதில்லை, பாரட்டுவதில்லை. இது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான். அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்...
-
2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு போட்ட அதே கூட்டணியை அமைத்து 2011 சட்டசபை தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அதற்கான முயற்சிகளை ...
-
கோவையில் தீண்டாமை சுவர் இடிப்பு என்ற செய்தியை இரு தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிக்கைளிலும் படித்திருப்பீர்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம்,...
-
இந்தியாவில் படித்தவர்களிடம் ஒரு முட்டாள் தன அலை அவ்வப்போது வீசுவது உண்டு. ஊழலுக்கு எதிராக பணக்கார வர்க்கம் மெழுகுவர்த்தி ஏந்தியது, டெல்லி ...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
நீதித்துறையை ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் என்பது 61% இணைய வாசகர்களின் கருத்து. இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களும் இதை தான் கூறியு...
No comments:
Post a Comment