Jan 2, 2011

தமிழ்மணம் விளம்பரம்

பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது?

மக்கள் இதழியலாக மெருகேறிவரும் வலைபதிவையும் தயவு செய்து வியாபாரமாக்கி சீரழித்து விடாதீர்கள்.

பத்திரிக்கை துறை வியாபாரத்தின் பிடியில் சிக்கிவிட்டது. கூகுள் தரும் இலவச வலைபதிவு சேவை நிச்சயம் ஒரு மாற்று ஊடகமாக இருக்கும் என இங்கு வந்தால், இதையும் வியாபாரமாக்குவது வேதனை.
இதை தட்டி கேட்டால் நமது வலைபதிவையும் தமிழ்மணம் புறக்கணித்து விடுமோ என்ற அச்சம் பதிவர்களுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட வலைபதிவர்களுக்கு திரைபடத்துறையையும், பத்திரிக்கை துறையையும், அரசியலையும் விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது? 

உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
தமிழ்மணத்தின் தவறுகளை எத்தனை பதிவர்கள் தட்டிக்கேட்டுள்ளீர்கள்?

வலைபதிவுகளை காட்டி விளம்பரம் வாங்கலாம். ஆனால் வலைபதிவுகளுக்கே காசுகேட்பது எந்தவித்தில் நியாயம்?

வியாபாரத்துக்காக பத்திரிக்கைகள் எப்படி பத்திரிக்கை தர்மத்தை இழந்தனவோ, அதே போல வியாபாரத்துக்காக திரட்டிகள் செயல்படுவது மக்கள் இதழியலின் கருத்து சுதந்திரத்திற்கு விடபட்ட மிகப்பெரிய சவால்.
பதிவர்கள் இதை அனுமதிக்கக்கூடாது. சுயநலத்துக்காக இப்போது அனுமதித்தால் வலைபதிவும் ஒரு சாக்கடையாகிவிடும்.

தைரியமுள்ள பதிவர்கள் தமிழ்மணத்தின் தவறை தட்டிக்கேட்பார்கள் என்று நம்புகிறேன்.

16 comments:

  1. நீங்கள் மட்டும் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்கனு எனக்கு தெரியல. உங்களை விட சமுதாயத்தின் மேல் அதிக அக்கறை உள்ளவர் வினவு, அவரே பணம் கொடுத்து இன்னும் தமிழ்மணம் நிறுவனத்துடன் தனது சேவையை தொடர்கிறார்.

    எல்லாவற்றையும் இலவசமாகவே எதிர்ப்பார்த்து இப்போது இலவசம் இல்லையென்றால் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது போல. தமிழ்மணம் செய்யும் சேவைக்கு நாம் கொடுக்கும் பணம்தான் அவர்களை ஊக்குவிக்கும், வருமானமே இல்லாமல் அவர்கள் எப்படி தமிழ்மணம் திரட்டியை தொடர முடியும். செய்வது சேவையாக இருந்தாலும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவாவது
    பணம் வேண்டும் அல்லவா. சரி என் நண்பர் ஒருவர் ஆபாசம்,சினிமா அழகு குறிப்பு என்று எதுவுமே இல்லாமல் தேச நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செய்தி இதழ் நடத்தி வருகிறார் அவருடன் வருமானமே வாங்காமல் பத்திரிகை தொழிலில் வேலை செய்ய நீங்கள் தயாரா?. நீங்கள் தயார் என்றால் என் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் நான் அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் நீங்கள் உங்கள் ஊரில் நடக்கும் அநீதிகளை அவருக்கு செய்தியாக அனுப்பி வையுங்கள் இலவசமாக(சேவை தானே)

    ReplyDelete
  2. நண்பரே இன்னும் சில நாட்களில் நானும் தமிழ்மணத்தில் பணம் கொடுத்து சேவையை தொடரலாம் என்று முடிவு செய்துள்ளேன் எனது எழுத்துக்கள் இன்னும் பலரிடம் சென்றடையும் என்ற நம்பிக்கையில்.

    ReplyDelete
  3. திரு. தொப்பி தொப்பி

    எனது கருத்துக்களை நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்

    நான் விளம்பரம் வாங்கக்கூடாது என்று சொல்லவில்லை. வலைபதிவையே விளம்பரமாக கேட்க கூடாது என்று தான் சொல்கிறேன்.

    வலைபதிவுக்கும் மின்னஞ்சலுக்கும் கூகிள் பணம் கேட்கிறதா? இதனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய கருத்து சுதந்திரம் தரப்பட்டுள்ளது.

    இதை பணத்தின் பெயரில் இருட்டடிப்பு செய்யும் தமிழ்மணத்தை தட்டி கேட்க ஏன் பயப்படுகிறீர்கள்?

    வலைபதிவுக்கு பணம் கேட்பது தமிழ்மணத்தின் தவறான செயல். இதை தட்டிகேட்க உங்களுக்கு ஏன் துணிவு இல்லை?

    விளம்பரத்தை விளம்பரமாக பார்க்க வேண்டும். செய்தியை செய்தியாக பார்க்க வேண்டும். இது தான் பத்திரிக்கை தர்மம்.

    அதை மீறும் பத்திரிக்கைகளை தட்டிக்கேட்கிறீர்கள். ஆனால் நீங்கள் சார்ந்துள்ள திரட்டியில் அது நடக்கும்போது தட்டிகேட்க நடுங்குகிறீர்கள்

    இது என்ன நியாயம்?

    ReplyDelete
  4. // சரி என் நண்பர் ஒருவர் ஆபாசம்,சினிமா அழகு குறிப்பு என்று எதுவுமே இல்லாமல் தேச நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செய்தி இதழ் நடத்தி வருகிறார் அவருடன் வருமானமே வாங்காமல் பத்திரிகை தொழிலில் வேலை செய்ய நீங்கள் தயாரா?.//


    அப்படி ஒரு பத்திரிக்கை நடத்துவது மிகப்பெரிய சவால். அந்த சவாலை எதிர்கொண்ட அன்பர் உண்மையில் நாட்டின் தலைசிறந்த சமூக சேவகர்.

    அவரை அறிமுகப்படுத்துங்கள். என்னால் மட்டுமல்ல கோவையில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுமே அவருக்கு செய்தி அனுப்ப தயார்.

    நண்பா பத்திரிக்கை துறை குறித்து உங்களுக்கு என்ன தெரியும்.

    உதாரணத்திற்கு கோவையில் 150 பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 120க்கும் மேற்பட்டவர்கள் எந்தவித சம்பளமும் வாங்காமல் தான் செய்தியாளர்களாக உள்ளனர். பல முன்னனி பத்திரிக்கைள் தொலைகாட்சி நிறுவனங்களே சம்பளம் தருவதில்லை.

    சேவையை குறித்து திரட்டிகள் பத்திரிக்கையாளர்களுக்கு சொல்லிதர வேண்டியதில்லை.

    ReplyDelete
  5. மேடையில் ஒருவன் பேசவேண்டும் என்றால் பேச்சும், கருத்தும் தான் முக்கியம் கோர்ட் சூட் முக்கியமல்ல. கோர்ட் சூட் போட்டால் இன்னும் கொஞ்சம் பேர் மதிப்பார்கள், பேச்சை கேட்ப்பார்கள். கோர்ட் சூட்டுக்கு ஆசைப்படுபவன் அதற்க்கு தகுந்த செலவையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். முடியவில்லை என்றால் தானே ஒரு கோர்ட் சூட் தயாரிக்க முயற்சி செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு அராஜகம், அநீதி என்றால் என்ன செய்வது, வேடிக்கை பார்ப்பவர்களை தொடை நடுங்கி என்றால் என்ன சொல்வது. இதற்க்கு முன் பணம் கொடுத்து கோர்ட் சூட் போட்டு பேசுபவர்கள் எல்லாம் என்ன முட்டாளா? கோர்ட் சூட் தயாரிக்க அவர்களுக்கு பணம் தேவைப்படும் அல்லவா?

    ReplyDelete
  6. திரு தொப்பி தொப்பி

    செய்திக்கு காசுவாங்குவது நியாயமா தவறா?

    வலைபதிவுக்கு காசு கேட்பது நியாயமா தவறா ?

    இது தான் கேள்வி. இதை மழுப்ப சுற்றி வளைத்து பேசாதீர்கள்

    பேச்சாளனை நம்பி தான் மேடையே உள்ளது. அப்படி இருக்கும்போது பேச்சாளனிடமே காசுகேட்டால் அந்த மேடையில் என்ன சேவை இருக்க போகிறது? காசுஉள்ளவன் தான் மேடை ஏறுவான். கருத்து உள்ளவன் இருட்டடிப்பு செய்யப்படுவான்.

    நான் எனக்கு ஒருவனுக்காக வாதிடவில்லை. இந்த போக்கை அனுமதித்தால் ஒட்டுமொத்த தமிழ் வலையுலகமே இருட்டிப்புக்கு உள்ளாகிவிடும் என்று தான் ஆதங்கப்படுகிறேன்.

    இலவசத்துக்கு மயங்கியதை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்

    இலவசத்தை சேவை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் எல்லோருக்குமே சேர்த்து சொல்கிறேன்.

    எவனும் எவன் அப்பன் வீட்டு சொத்தையும் யாருக்கும் இலவசமாக தருவது கிடையாது. ஊரை சுரண்டி தான் இலவசம் என்ற போர்வையில் கொடுக்கிறார்கள். இது கூடவா உங்களுக்கு தெரியாது?

    ReplyDelete
  7. //பேச்சாளனை நம்பி தான் மேடையே உள்ளது. அப்படி இருக்கும்போது பேச்சாளனிடமே காசுகேட்டால் அந்த மேடையில் என்ன சேவை இருக்க போகிறது?//

    பேச்சாளன் பணம் வாங்கும்போது மேடை அமைப்பவன் பணம் கேட்பதில் என்ன தவறு?( முன்னணி வலைப்பதிவுகளை கொஞ்சம் சென்று பார்க்கவும்)

    இலவசமாக ஒருவரை சேவை செய் என்று யாரையும் நாம் வழியுறுத்த முடியாது. அது அவர்கள் விருப்பம்

    நீங்கள் என்னமோ தமிழ்மணம் இல்லையென்றால் தமிழ் வலையுலகமே அழிந்துவிடும் என்பது போல் அல்லவா எழுதுகிறீர்கள். தமிழ்மணம் என்பது அவர்கள் உருவாக்கியது, பணம் வாங்குவதும் வாங்காமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். உங்களுக்கு பிடிக்கவில்லையா பல திரட்டிகள் தமிழில் உள்ளன அவர்களுடன் உங்கள் சேவையை தொடருங்கள். இதே பணத்தை ta.tamilers என்று ஒரு புது திரட்டி வந்துள்ளது அவர்கள் கேட்டால் இது போன்று எதிர்ப்பு தெரிவித்து இருப்பீர்களா? ஒருவேளை எல்லாம் திரட்டியும் பணம் கேட்டால் நாமே ஒரு திரட்டியை உருவாக்கலாம். இப்போதைக்கு தமிழ்மணம் முதன்மையாக உள்ளது அது அவர்கள் கடும் முயற்ச்சியால் விளைந்தது. அதற்காக அவர்கள் பணம் கேட்க்க கூடாது என்று சொல்ல நமக்கு அதிகாரம் கிடையாது, அது அவர்கள் விருப்பம்.

    நீங்கள் இலவசமாக எழுதுவதால் அவர்களும் இலவசமாக திரட்டி நடத்த வேண்டும் என்று நீங்கள் நினைப்பது உங்கள் அறியாமையை காட்டுகிறது. இன்று பல வலைப்பதிவுகள் விளம்பரம் மூலம் பணம் வாங்க ஆரம்பித்து விட்டனர். பணம் வாங்காமல் எழுதுபவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கிலும், விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் தங்களுடைய பணத்தையும், நேரத்தையும் செலவழித்து வருகிறார்கள். உங்களுடைய எழுத்து மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று நீங்கள் கருதினால் தனிப்பட்ட பெயரில் ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதுங்கள் தமிழ்மணம் உங்களை அனுமதிக்கும் என்று நம்புகிறேன், இல்லை உங்கள் செய்தித்தாள் பெயரில் தான் எழுதி உங்கள் செய்திதாளுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்றால் பணம் கொடுத்து சேவையை தொடருங்கள் .

    நீங்கள் என்னமோ மாதம் மாதம் அவர்களுக்கு வரி செலுத்துவதை போலவும், அவர்களுக்கு டொமைன் வாங்க பணம் கொடுத்து உதவியதை போலவும், முன்னணி திரட்டியாக வருவதற்கு ஆலோசனை கூறியவர் போலவும் அல்லவா கேள்வி கேட்குரீர்கள். உங்களுக்கு இலவசமாக ப்ளாக் கொடுத்த கூகிள் தளமா பரிந்துரைத்தது தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவும் என்று, நீங்கள் தானே அதில் இணைந்தால் பலர் படிப்பார்கள் என்று இணைந்தீர்கள்?. நீங்கள் இணையும் போது தமிழ்மணம் நிறுவனம் உங்களுக்கு எந்த ஒரு பத்திரத்திலும் கையெழுத்து போட்டு கொடுக்கவில்லையே நாங்கள் உங்களிடம் பணமே கேட்க்க மாட்டோம் என்று.

    ReplyDelete
  8. திரு தொப்பி தொப்பி

    நான் கேட்ட கேள்வியை தவிர்த்து ஏதோதோ சொல்கிறீர்கள்

    ஆம்வே கொள்ளை பற்றி எதற்கு எழுதினீர்கள்? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் தயாரிப்புகள் இருக்கிறது அதை வாங்கவேண்டியது தானே. அதை விட்டுவிட்டு ஆம்வே கொள்ளையடிக்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

    ஆம்வே சொல்கிறது மக்கள் சேவை செய்கிறோம் என்று. இதை எதிர்த்து ஏன் குரல்கொடுக்கிறீர்கள்.

    ஆம்வேவால் உங்களுக்கு ஒரு காரியமும் ஆகவேண்டியதில்லை. ஆனால் தமிழ்மணத்தால் பல காரியங்கள் ஆகவேண்டி உள்ளது. அதனால் தமிழ்மணத்தை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இல்லை.

    தமிழ்மணத்தால் எத்தனை வலைபதிவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

    திரட்டி என்பது வலைபதிவை ஊக்குவிக்கதானே தவிர வலைபதிவுகளை இருட்டடிப்பு செய்ய அல்ல. இது ஏன் உங்களுக்கு புரிவதில்லை?

    தமிழ்மணம் விளம்பரம் வாங்ககூடாது என்று நான் சொல்லவில்லை. வலைபதிவையே விளம்பரமாக கேட்டு இருட்டடிப்பு செய்யக்கூடாது என்று தான் சொல்கிறேன். இதில் என்ன அநீதியை கண்டீர்கள்?

    அநீதி எங்கு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு
    நமக்கு ஒரு நீதி ஊருக்கு ஒரு நீதி பேசக்கூடாது.

    தமிழ்மணம் வலைபதிவர்களிடம் கட்டாயமாக காசுகேட்பது சரியா தவறா? இது தான் கேள்வி.

    தமிழ்மணத்திடம் கேள்வி கேட்ககூடாது என்றால் ஆம்வேவிடம் மட்டுமல்ல வேறு எந்த சமூக அவலத்தையும் நீங்கள் கேள்விகேட்ககூடாது.

    ஒத்துக்கொள்வீர்களா?

    ReplyDelete
  9. தமிழ்மணம் கட்டணசேவை தொடர்பவர்கள் எல்லாம் முட்டாளா என கேள்வி கேட்டுள்ளீர்கள்

    அப்படியானால் ஆம்வே தயாரிப்புகள் விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாம் முட்டாளா?

    ReplyDelete
  10. //நான் கேட்ட கேள்வியை தவிர்த்து ஏதோதோ சொல்கிறீர்கள்//

    உங்கள் புரிதலில் ஏதோ கோளாறு


    //ஆம்வே கொள்ளை பற்றி எதற்கு எழுதினீர்கள்? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் தயாரிப்புகள் இருக்கிறது அதை வாங்கவேண்டியது தானே. அதை விட்டுவிட்டு ஆம்வே கொள்ளையடிக்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.//

    ஆம்வே ஒரு அந்நிய நாட்டு நிறுவனம். எனது தேசத்தின் நிறுவனம் பாதித்து விடக்கூடாது என்று தான் எழுதினேன்.


    //ஆம்வேவால் உங்களுக்கு ஒரு காரியமும் ஆகவேண்டியதில்லை. ஆனால் தமிழ்மணத்தால் பல காரியங்கள் ஆகவேண்டி உள்ளது. அதனால் தமிழ்மணத்தை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இல்லை.//

    என்னால் திரட்டிகளின் உதவியே இல்லாமல் எழுத முடியும் மக்களிடம் சென்றடைய செய்ய முடியும். எதையும் கண்டு துவண்டு விடுபவன் நானில்லை.


    //தமிழ்மணத்தால் எத்தனை வலைபதிவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? //

    எனக்கு தெரிந்து உங்கள் செய்தி தாள் மட்டும்தான் நீங்கள் இல்லை


    //திரட்டி என்பது வலைபதிவை ஊக்குவிக்கதானே தவிர வலைபதிவுகளை இருட்டடிப்பு செய்ய அல்ல. இது ஏன் உங்களுக்கு புரிவதில்லை?//

    தனது எழுத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் திரட்டிகளை நம்பியே வலைத்தளம் ஆரம்பித்தவனுக்கு மட்டும்


    //தமிழ்மணம் விளம்பரம் வாங்ககூடாது என்று நான் சொல்லவில்லை. வலைபதிவையே விளம்பரமாக கேட்டு இருட்டடிப்பு செய்யக்கூடாது என்று தான் சொல்கிறேன். இதில் என்ன அநீதியை கண்டீர்கள்?//

    கூகிள் நிறுவனம் தமிழ்மணம் நிறுவனத்துக்கு டெண்டர் விடவில்லை வலைப்பதிவு எழுதுபவர்களிடம் பணம் வசூல் செய்யவும் என்று. அது அவர்கள் தளம் அது அவர்கள் விருப்பம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தமிழ்மணம் பக்கமே தலை வைத்து படுக்க வேண்டாம். தமிழ் மனத்துக்குத்தான் ஒரு ஹிட்ஸ் நட்டம்.


    //அநீதி எங்கு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு
    நமக்கு ஒரு நீதி ஊருக்கு ஒரு நீதி பேசக்கூடாது.//

    தன்னுடைய வீட்டுக்குள் ஒருவன் வரவேண்டும் என்றால் வீட்டின் உரிமையாளன் தான் முடிவு செய்ய வேண்டும் இலவசமாக அனுமதிக்கலாம் இல்லை பணம் வாங்கி வீட்டுக்குள் அனுமதிக்கலாமா என்று. ஏன் என்றால் அது அவன் வீடு. வீட்டுக்குள் வருபவன் தீர்மானிக்க முடியாது.

    //தமிழ்மணம் வலைபதிவர்களிடம் கட்டாயமாக காசுகேட்பது சரியா தவறா? இது தான் கேள்வி.//

    இது போன்ற கேள்வியை கேட்பதே தவறு.


    //தமிழ்மணத்திடம் கேள்வி கேட்ககூடாது என்றால் ஆம்வேவிடம் மட்டுமல்ல வேறு எந்த சமூக அவலத்தையும் நீங்கள் கேள்விகேட்ககூடாது.//

    தமிழ்மணம் இல்லையென்றால் நீங்கள் யார் என்றே தெரியாமல் போயிருக்கும். ஆம்வே இல்லையென்றால் இன்று பலர் பணம் இழக்காமல் இருந்திருப்பார்கள்.

    ReplyDelete
  11. //தமிழ்மணம் கட்டணசேவை தொடர்பவர்கள் எல்லாம் முட்டாளா என கேள்வி கேட்டுள்ளீர்கள்
    அப்படியானால் ஆம்வே தயாரிப்புகள் விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாம் முட்டாளா?//

    ஆம் முட்டாள் தான்

    ReplyDelete
  12. //ஆம்வே ஒரு அந்நிய நாட்டு நிறுவனம். எனது தேசத்தின் நிறுவனம் பாதித்து விடக்கூடாது என்று தான் எழுதினேன்.//

    சேவை செய்கிறோம் என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்களுக்கு என்ன அயல்நாடு உள்நாடு பாகுபாடு? உள்நாட்டு நிறுவனம் கொள்ளையடித்தால் ஒத்துக்கொள்வீர்களா?

    தமிழ்மணம் கூட அயல்நாட்டு நிறுவனம் தான். அதற்கு ஏன் பணம் கட்டுகிறீர்கள்? உள்நாட்டு திரட்டியில் பணம் கட்டி உங்கள் தேசபக்தியை காட்ட வேண்டியது தானே.

    நீங்கள் மட்டுமல்ல நான் உட்பட எந்த வலைபதிவரும் திரட்டிகளை நம்பி இல்லை. ஆனால் திரட்டிகள் தான் வலைபதிவர்களை நம்பி உள்ளது. இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

    தமிழ்மணத்தால் எத்தனை வலைபதிவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

    // எனக்கு தெரிந்து உங்கள் செய்தி தாள் மட்டும்தான் நீங்கள் இல்லை//

    நீங்கள் கிணற்று தவளை

    நான் சார்ந்துள்ள செய்திதாளுக்கு விளம்பரம் வேண்டும் என்றால் வலைபதிவு தேவையில்லை. வலைபதிவர்களே திரட்டிகளை நம்பி இல்லாத போது ஒரு செய்திதாள் எப்படி திரட்டிகளை நம்பி இருக்கும்?

    திரட்டி என்பதற்கான இலங்கணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

    வீட்டில் ஒருவர் வர/தடுக்க வீட்டின் உரிமையாளருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பணம் இருப்பவன் வரலாம்/ பணம் இல்லாதவன் வரக்கூடாது என்பதற்கு பெயர் தீண்டாமை.

    விட்டுக்கு தான் கட்டுபாடு கடைக்கு அல்ல.

    வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே வந்து செல்வது தான் வீடு. பலரும் வந்து செல்லும் இடத்திற்கு பெயர் வீடு அல்ல.

    தமிழ்மணம் வலைபதிவர்களிடம் கட்டாயமாக காசுகேட்பது சரியா தவறா? இது தான் கேள்வி.

    // இது போன்ற கேள்வியை கேட்பதே தவறு. //

    இதுதான் உங்கள் பதிலா. அப்படியானால் நீங்கள் உண்மையான இந்திய குடிமகன் தான். வாழ்க வளர்க உங்கள் சமுதாய சேவை.

    //தமிழ்மணம் இல்லையென்றால் நீங்கள் யார் என்றே தெரியாமல் போயிருக்கும்//

    வலைபதிவர்கள் இல்லை என்றால் தமிழ்மணம் என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும்.

    ஆம்வே கொள்ளையடிப்பது தவறு, தமிழ்மணம் கொள்ளையடிப்பது சரி என நீங்கள் சொல்வது மற்ற அரசியல்வாதிகள் செய்தால் அது ஊழல். ராசா செய்தால் அவர் தலித் என்பதை போல் உள்ளது.

    ReplyDelete
  13. எனக்கு தூக்கம் வருது டாட்டா........................பாய்........................

    ReplyDelete
  14. ஓசை செல்லா, ஏனிந்தக் கொலைவெறி?

    ReplyDelete
  15. உங்களுடன் ஒத்துப் போகும் விஷயங்கள்:-
    உங்க வாதப்படிப் பார்த்தால் காசு கிடைக்கும் செய்திகள் தான் செய்திகள் என்றாகிவிட்டது. காசு இருப்பவன் பிரபல பதிவர் என்கிற நிலை வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் காசிருந்தால் பிரபல எழுத்தாளன் என்கிற நிலையும் வந்துவிட வாய்ப்புள்ளது. ஆனால் தனியார் சேவை அமைப்பான தமிழ்மணத்துடன் இப்படி கோபப்பட்டு எழுதுவது நமது நேர விரயம் மற்றும் அவர்களுக்கு ஒரு விளம்பரம்.
    சரி, அது அவர்களின் பாழப்போன கொள்கையாக இருந்துவிட்டுப் போகட்டும், நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.



    உங்களுடன் முரண்படும் கருத்துக்கள்:-
    உங்களைப் போல எல்லா பத்திரிக்கையும் தங்கள் பதிவுகளை தமிழ் மணத்திற்கு அனுப்பினால் பிறகு பதிவர்கள் எங்கு போவார்கள்? ஏற்கனவே அரசியல் செய்து பலர் தமிழ் மணத்தில் என்றும் பிரபலமாக இருப்பவர்கள் சாதாரண பதிவர்களை நசுக்கி வரும் வேளையில் தங்களைப் போன்ற நிறுவனங்களும் வந்து சூடான இடுகையை ஆக்கிரமித்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?


    தமிழ்மணத்தை நாடாமல் பலர் அடிச்சு விளையாடுகிறார்கள், இட்லிவடை, பத்ரி சேஷாத்ரி, மாலன், சித்தூர் முருகேஷன், மற்றும் பலர் & நான்.
    நீங்களும் எங்க கூட்டணிக்கு வாங்க

    ReplyDelete
  16. தமிழ் மணம் திரட்டி வலைப்பதிவர் உலகில் தான் ஒரு மேல் அதிகாரி என்று நடந்து கொள்வது சகிக்க இயாலாதது. சமீபத்தில் எதிர்ப்பு கருத்து தெரிவித்த பல பதிவர்களை சபைநாகரிகம் அற்ற ரீதியில் பதில் பின்னூட்டம் இட்டு எதிர்கொண்டது வெட்கத்திற்குரியது. தமிழ்மணம் அங்கீகாரம் எதிர்நோக்கி இருக்கும் பல பதிவர்கள் உண்டு. பலர் தமிழ் மணம் இடும் தரவரிசையை தன் எழுத்தின் தரமாக எண்ணி தவறாக மதிப்பிட்டு கொள்கின்றனர். வலைப்பதிவர் கூடுகியில் கூட தமிழ்மணம் திரட்டி எழுத்தாளர்களின் சுயதம்பட்டம் தாங்க இயலாது. வலைப்பதிவுகளின் வருகையே செலவில்லாது தணிக்கையற்று தங்கள் கருத்துக்களை பதிய வேண்டும் என்பதற்க்கே. ஆனால் தமிழ்மணம் பல நிபந்தனைகள் விதித்து எழுத்தாளர்களை எழுத்தர்களாக மாற்றுகின்றது என்பதே உண்மை.

    ReplyDelete

Popular Posts