Jun 11, 2012

கோவை வலைபதிவர் சில சுவாரசியங்கள்


எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர நிழ்வுடன் துவங்கியது கோவை வலைப்பதிவர் குழுமம். எப்படா முடியும் என்று மனதுக்குள் அளுத்துக்கொண்டேன். ஆனால் புரியாமல் 1.30 மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த படத்துக்கு உலக சினிமா ரசிகன் தந்த 2 நிமிட விளக்கம் மிக அருமை. இப்போது மீண்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.  

மரம் வளர்ப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, நோயாளிகளுக்கு உதவுதல் இந்த மூன்றும் தான் எந்த சந்திப்பிலும் விவாத பொருள். ஆனால் என்னை பொருத்தவரை இது அளுத்துபோய் விட்டது. கோவை சந்திப்பிலும் அதுதான் பேசப்பட்டது. 

இரண்டாவதாக மைக் பிடித்த பேராசிரியர் திரு. பழனி கந்தசாமி அவர்கள் ரத்தின சுருக்கமாக தன் கருத்தை முன்வைத்தார். பதிவர்கள் பொருளாதார ரீதியாக செயல்பட முடியாது. பதிவு, இணையம் மூலமாக இயன்றதை செய்யலாம் என்றார். 

மீண்டும் மரம் வளர்ப்பு பாதுகாப்பு விவாதங்கள் தொடர்ந்தது. வின்செண்ட் ஐயா என் பக்கத்து தோட்டக்காரர் என்பது அப்போது தான் தெரிந்தது. இணையத்தில் 4 ஆண்டுகள் பின்னூட்டம் ஏழுதி பரசுபரம் கருத்துக்களை பகிர்ந்துள்ளோம். ஆனால் நேரில் சந்தித்தித்த இப்போது தான் இந்த இன்ப அதிர்ச்சி கிடைத்தது. 

சரியாக பெயர் தெரியவில்லை (மன்னிக்கவும்) முகநூல் தோழி ஒருவர் முகநூல் பயன்பாட்டில் பெண்களின் தயக்கத்தையும் பிரச்சனைகளையும் தெளிவாக பகிர்ந்து கொண்டார். பாராட்டுக்கள்.  அடுத்து கோவை மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் அறிமுகம் கிடைத்து. 

அடுத்து பேசிய தோழியின் கருத்து எனக்குள் புது கருத்து தெளிவை தந்தது. தோழி அகிலா என்று நினைக்கிறேன். மாதம் ஒருமுறை பெரியார் பற்றி பதிவு எழுதுவேன். காரணம் அவர் இல்லாவிட்டால் இன்று இந்த அளவுக்கு நாம் சமுய ரீதியில் முன்னேறி இருப்போமா என்று தெரியாது.
கடவுள் மறுப்பு என்ற ஒற்றை வரியில் மட்டுமே பெரியார் அவர்களை பார்க்கக்கூடாது. கடவுள் மறுப்பை தாண்டி சமுதாய சீர்திருத்தத்திற்காக பெரியார் செய்த பணிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாமல் போவது வேதனை என்பதை பகிர்ந்துகொண்டார். ( பெயர் சரியாக தெரியவில்லை அகிலா என்றே நினைக்கிறேன்) பெரியார் அவர்ளை எனக்குள் மிகச்சரியாக புரிய வைத்த தோழி அகிலா அவர்களுக்கு மீண்டும் ஒரு தலைவணக்கம்

அடுத்து பேசிய தோழி கோவை மு சரளா அவர்கள் அன்பை பற்றி பேசினார். மரங்களை பற்றி பேசாமல் மனிதர்களின் அன்பை பற்றி பேசியதற்கு பாராட்டுக்கள். அவரின் வலைப்பதிவு கவிதைகளிலும் அன்பு கொட்டிக்கிடக்கிறது. அடுத்து முக்கிய நபரான சங்கவி எந்த முக்கிய கருத்தையும் சொல்லவில்லை. மாற்றாக ஒவ்வவொரு பதிவரின் சிறப்பை அவ்வப்போது அறிமுகப்படுத்தினார். நன்று.

முகநூல் மூலம் மனிதர்களை பாதுகாக்கும் அரும்பணி செய்யும் ஒரு அன்பரின் பணி உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது. அவரது பணிகளை பற்றி தனிப்பதிவாக எழுத திட்டமிட்டுள்ளேன். அடுத்து மீண்டும் சில நண்பர்கள் மரங்கள் பாதுகாப்பு பற்றி பேசினார்கள். 

அடுத்து பின் வரிசையில் அமர்ந்திருந்த என் பக்கம் மைக் வந்ததும் முக்கிய அறிவிப்பு வந்தது. மசுகட்டில் இருந்து நண்பர் மனசாட்சி மைக்கை பிடிங்கிக்கொண்டார். கோவை வலைப்பதிவர் சந்திப்பு தித்திப்பாக செல்பேசி வழி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நன்றிகள் பல.

நான் என்ன பேசியிருப்பேன் என்று எனது வலைதளத்தை தொடர்ந்து படிப்பவர்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

வேரென்ன? விதண்டாவாதம் தான்.

சாலை ஒர மரங்களையம், சிட்டுக்குருவிகளையும் பாதுகாப்பதாக கூறுபவர்கள் மீது கோபத்தை பகிர்ந்துகொண்டேன். நகரத்தில் உள்ள மரத்துக்காக போராடும் இவர்கள் வனத்திலும் கிராமங்களிலும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட முக்கிய காரணமாகின்றனர். சாலை விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாதது. அதே போல செல்போன் டவர் தவிர்க்க முடியாதது. சிட்டுக்குருவிக்காக உச்சு கொட்டுகிறவர்கள் தயவு செய்து தங்கள் செல்போன்களை தூக்கி எறியுங்கள் என்றேன். யாரும் தயாரில்லை. 

(செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது ஒரு கட்டுக்கதை. செல்போன் நிறுவனங்களிடம் பேரம்பேசி பணம்பறிப்பதற்காக எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை என்பதை புறிந்து கொள்ளுங்கள்.)

விரிவாக்கப்பணிகள் நடக்கும் சாலையில் வெட்டப்படும் 150 மரங்களுக்காக கண்ணீர் வடிக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு வனத்தில் அதிகாரப்பூர்வமாக வெட்டப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் தெரியாதது வேடிக்கை.

சாலை ஓரங்களில் வெட்டப்படவேண்டிய மரங்களை வெட்டி தான் ஆக வேண்டும். அதை தடுக்க தயவு செய்து யாரும் நேரம் ஒதுக்க வேண்டாம். உங்களால் அது இயலாது.  

அடுத்து மரக்கன்றுகளை தயவு செய்து விவசாயிகளுக்கு கொடுங்கள். சாலை ஓரத்தில் நட்டி வீணடிக்காதீர்கள். சாலை ஓரத்தில் மரத்தை நட்டினால் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் பொருப்பு இருக்கிறது. அது உங்களால் முடியுமா? 

வலைப்பதிவர்கள் நாம் பொருளாதார ரீதியாக யாருக்கும் உதவி செய்ய முடியாது. அதே போல மரங்களை நடவோ, பாதுகாக்கவோ நிச்சயமாக முடியாது. அதனால் இதுபோன்ற சேவைகளில் எனக்கு உடன்பாடில்லை. 

வலைப்பதிவு, இணையம் மூலமாக என்ன உதவிகள் செய்ய முடியுமோ அவைகளை வலைப்பதிவர்களால் நிச்சயமாக செய்ய முடியும். எனது கருத்தாக மலைகிராமத்தில் உள்ள 8,&10, 12ம் வகுப்பு மாணவ&மாணவியருக்கு இணையம், வலைப்பதிவு குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தி தருவோம். அவர்களின் படைப்புகளை வலைப்பதிவுக்கு கொண்டு வருவோம் என்றுள்ளேன். அதற்கான அரசாங்க அனுமதியும் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளேன்.

விவசாயத்தை அரசாங்க பணியாக அறிவிக்க கோரி சிறு முயற்சி மேற்கொண்டுள்ளேம். அதற்கான ஆதரவை தரும்படி கேட்டுக்கொண்டேன்.

இறுதியில் பல நண்பர்களும் வந்தார்கள். குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நேரம் 6.30 கடந்துவிட்டது. இதற்கு மேலும் நான் வீட்டுக்கு புறப்படாவிட்டால் காட்டுயானைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் புறப்பட்டு விட்டேன். 

அனைவரையும் எங்க ஊரு அட்டப்பாடிக்கு சுற்றுலா வர அழைப்பு விடுத்துள்ளேன். வருக வருக....

மீதி அடுத்த பதிவில்... 

22 comments:

  1. ஒ. அப்ப தான் எனது என்ட்ரியா...நன்றி நண்பரே வந்து இருந்தால் உங்கள் அறிமுகம் கிடைத்து இருக்கும்....ம் முடியல.

    எதிர்பார்கிறேன் ஆவலுடன் அடுத்த பதிவை

    ReplyDelete
  2. பெரியார் பற்றி பேசியதை கூறி உள்ளீர்கள் - அந்த சகோ கூறியது உண்மையே,. நான் அப்படிதான் புரிந்துள்ளேன்.

    ReplyDelete
  3. மனசாட்சி//
    அடுத்த சந்திப்பில் சந்திப்போம்...

    ReplyDelete
  4. உங்களது கருத்துக்கு நன்றி தமிழ்மலர் அவர்களே

    மரங்களை பற்றி ஏன் பேசினார்கள், என்ன முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு சரியாக தெரியாது

    பொருளாதார ரீதியாக உதவி செய்ய இயலாதவர்களை பற்றி கவலை இல்லை நண்பரே, முடிந்தவர்கள் செய்வார்கள்,

    நீங்கள் கூறியது போல மலைக்கிராம மக்களுக்கு உதவி செய்யவும் குழு நண்பர்கள் தயாராகவே இருப்பார்கள்,

    மொத்தத்தில் உருப்படியாக எதாவது செய்தால் சரி, நிறைய பேர்கள் இணையத்தில் வெறும் கருத்து குப்பைகளை மட்டுமே கொட்டுகிறார்கள், அதை பார்த்து பார்த்து படித்து சலித்துவிட்டது

    அடுத்த முறை உங்களை சந்திக்க வேண்டும், நன்றி

    ReplyDelete
  5. இரவு வானம்//
    அடுத்த சந்திப்பில் சந்திப்போம்...

    ReplyDelete
  6. உங்க பேரு தமிழ் மலரா ,நல்லாத்தான் இருக்கு, நீங்களே விதண்டாவாதம் தான் பேசுவேன்னு சொல்லிக்கொண்ட பிறகு , நாமும் பேசலாமேனு சொல்லுறேன்.

    //எனது கருத்தாக மலைகிராமத்தில் உள்ள 8,&10, 12ம் வகுப்பு மாணவ&மாணவியருக்கு இணையம், வலைப்பதிவு குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தி தருவோம். அவர்களின் படைப்புகளை வலைப்பதிவுக்கு கொண்டு வருவோம் என்றுள்ளேன். அதற்கான அரசாங்க அனுமதியும் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளேன்.//

    மலைக்கிராம மாணவர்களுக்கு இணையம், வலைப்பதிவு குறித்து அறிமுகம் செய்யலாம்னு சொல்வது மோசமான ஐடியா இல்லை நல்லாத்தான் இருக்கு ,ஆனால்...

    அதுக்கு எதுக்கு அரசாங்க அனுமதி வாங்கணும்,அவங்க என்ன நாடுகடத்தப்பட்ட கைதிகளா? இல்லை அவங்க எல்லாம் தடை செய்யப்பட்டவங்களா? ஒருத்தங்க செய்யணும் நினைச்சா செய்யலாமே.

    பெரியாரை பற்றியே யாரொ சில நிமிடம் பேசினத கேட்டப்பிறகு தான் கொஞ்சம் அவரோட முழு பரிமாணம் தெரிய வரும் அளவுக்கு மட்டுமே உங்க பொது அறிவு இருக்கு என்பதால்,மலைவாழ் மக்களைப்பற்றியும் சரியா தெரிய வாய்ப்பில்லை என்பதால் அப்படி சொல்லி இருக்கீங்க என நினைக்கிறேன்.

    அப்புறம் மலை கிராமங்களில் மின்சாரம் இருக்கானு தெரியுமா, அவங்க கிராமத்தில இணைய வசதி இருக்கா? 2ஜி,3ஜி யுஸ்பி மோடெம் கு அங்கு சிக்னல் வருமா? மடிக்கணினியை ஒரு நாள் எடுத்துப்போய்க்காட்டுவீங்க தினசரி அவங்களுக்கு கணினி எப்படி கிடைக்கும், அதுக்கு மின்சாரம் எங்கே?

    இதை நான் கேட்டு இருக்க மாட்டேன் மரம் வச்சா தினம் யாரு தண்ணீர் ஊற்றுவானு கேட்கும் அளவுக்கு விவரமானவர் என்பதால் கேட்டேன் :-))

    //விவசாயத்தை அரசாங்க பணியாக அறிவிக்க கோரி சிறு முயற்சி மேற்கொண்டுள்ளேம். அதற்கான ஆதரவை தரும்படி கேட்டுக்கொண்டேன்.//

    25 ஆயிரம் ஆசிரியப்பணிக்கு ஆறு லட்சம் பேர் விண்ணப்பிக்கும் அளவுக்கு படிச்ச மக்கள் வேலையத்து கிடக்கும் மாநிலத்தில் ,விவசாயத்தை அரசு பணியாக மாற்ற கோரி சிறு முயற்சினு காமெடி செய்வது ஏன்?

    மக்கள் தொகையில் 60% பேர் விவசாயிகள் அப்படி இருக்கும் அரசு பணியாக்க உலக வங்கியே முயன்றாலும் முடியாது,ஆக மொத்தம் போகாத ஊருக்கு வழி காட்டுவீங்க, யாரோ சிலர் மரம் நடணும் சொன்னா அது வேலையத்த வேலைனு சொல்லுவிங்க?

    விவசாயிகளுக்கு தேவை உற்பத்திக்கு சரியான விலை கொடுத்தா போதும், அது கிடைக்க வழி காட்டணும்னு எதாவது செய்யுங்க.

    மரம் நடுதல்(மரக்கன்று தான்) சுற்றுச்சூழல்னு யாராவது பேசினால் அவங்க விருப்பம். முதல் கூட்டத்திலேயே இப்படி விதண்டாவாதம் கிளப்பினால் அப்படியே முடங்கி விடும்,போக போக சரி செய்ய முயற்சிக்கலாமே.அறிமுக மேட்ச்சிலேயே சதம் அடிக்கணும்னு பேட்ஸ்மேனை எதிர்ப்பார்க்கிறாப்போல இருக்கு, நீங்களும் சிலரும் பேசுவது.சென்னையில தான் எதுவும் உருப்படுறாப்போல காணோம் ,கோவையிலும் அப்படி ஆக்காமல் விட மாட்டிங்க போல :-))

    சிட்டுக்குருவி கட்டுக்கதையே. தேவை இல்லாமல் யாரோ கிளப்பிவிட்ட புரளியை எல்லாம் சேர்ந்து ஊதிவிடுறாங்க.

    ReplyDelete
  7. திரு. வவ்வால் எல்லாவற்றையும் தலை கீழாக பார்க்கிறீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மலர்,

      யாரு நான் தலைக்கீழா பார்க்கிறேன்,நீங்க நேராப்பார்க்கிறிங்க :-))

      உங்களுக்கு பார்க்க தெரியுமான்னே இப்போ சந்தேகமா இருக்கு, எனக்கு அடுத்து எத்தனைப்பேரு நான் சொன்னதையே சொல்லி இருக்காங்கன்னு பாருங்க, அப்புறமா தலைக்கீழா பார்க்கிறதப்பத்தி பேசலாம் :-))

      Delete
  8. அடுத்தவர் சேவையை பற்றி...நீங்கள் விமர்சனம் வைக்கும்போது ...உங்கள் சேவையின் மீது விமர்சனம்
    வரத்தான் செய்யும்.
    அதைத்தாங்க பக்குவம் இல்லாதவர்...விமர்சிக்கவே கூடாது.

    நீங்கள் அன்று பேசிய கருத்துக்களை சபை நாகரீகம் கருதி எதிர்க்கவில்லை என்பதற்க்காக உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என நினைக்கவேண்டாம்.

    ReplyDelete
  9. விவசாயத்தை அரசு பணியாக்க இது கம்யூனிச நாடா? விவசாயிகளுக்கு நாம் மரக்கன்று கொடுப்பதா ? வேடிக்கை. விவசாயத்தை அரசே நடத்தினால் தினமுன் 100 ரூபாய் வேலை வாய்ப்பு திட்டம் போல் குழியை தோண்டுவதும், பின் அதை மூடுவதுமாகத்தானிருக்கும். 150 மரங்களை பெற்றுக் கொண்டார். அதன் அடுதத செயல் பாடு பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும். லேப்டாப்பை எடுத்திட்டு போய் அவங்களுக்கு ஒரே நாள் மேஜிக் சோ நடத்தினால் போதுமா ? இதற்கு எதற்கு அரசாங்க அனுமதி. மாணவர்களுக்கு எது எதை வழங்க வேண்டும் என்பது அரசுக்கு நீங்க எடுத்துறைத்து ஆர்டர் வாங்குங்க சந்தோசம். கிராமத்து குழந்தைங்களுக்கு படிப்பை விட face book, twitter அவசியமா ? விவசாயத்தை அரசே நடத்துவது அந்த விவசாயியையே அரிசிக்கு கையேந்தும் இழி நிலையை உருவாக்க வேண்டுமா ? மலைவாழ் கிராமத்தில் மின்சாரத்திற்கு முதலில் முயற்சி மேற்கொள்வதே அவசியம். நகரத்திற்கே மின்சாரம் சரிவர இயக்கத்தில் இல்லை. மலை கிராமத்திற்கு நல்ல குடிநீர், சாலைவசதி, சுகாதாரம், அந்த மக்களின் பொருளாதார முன்னேற்றம் இவைகளை பெற்றுக் கொடுத்தால் நீங்கள் சொல்லும் கம்யூட்டர் புரட்சி தானாக ஏற்படும்.

    ReplyDelete
  10. விவசாயிகளுக்கு அரசு பணி!
    விவசாயிகளுக்கு கொடுத்த இலவச மின்சாரம் கோவை,திருப்பூர் பகுதியில் பல இடங்களில் சலவை, டையிங் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க பயன்படுகின்றது...!100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பல சோம்பேறிகளுக்கு தினம் நூறு ரூபாய் கிடைக்கின்றது....!மற்றபடி அது ஒன்றும் நல்ல திட்டமாக பயன்பெறவில்லை...

    இலவசங்கள் எதற்கு நம்மிடம் இருக்கும் ஆறு குளங்களை சரிபடுத்தி கிணறுகளில் தண்ணீர் வர திட்டங்கள் கொண்டுவரவேண்டும்.அதை அரசை வலியுறுத்துவதை விட்டுவிட்டு அரசு பணி என்பது சரி வராது

    சிட்டுகுருவி இனம் அழிவதற்கு காரணம் செல்போன் டவர்தான் காரணம் எல்லாரும் நம்புகிறார்கள்...அது காரணமல்ல என்பதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா? இருந்தால் விளக்கலாம் நீங்கள்...நாங்கள் புரிந்து கொள்ள உதவும்!உங்களின் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளலாம் சிலதை ஏற்றுக்கொள்வது சிரமம்!

    ReplyDelete
  11. தாங்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி....

    ReplyDelete
  12. திரு உலக சினிமா ரசிகன்

    மரங்களை பாதுகாப்பது என்பது நகரத்தில் சாலை ஓரங்களில் உள்ள மரங்களுக்காக மட்டும் குரல் கொடுப்பது அல்ல. அதன் போர்வையில் வனத்தில் வெட்டப்படும் லட்சக்கணக்கான மரங்களை மறந்து விடுகிறீர்கள். இது தான் நான் சொன்ன கருத்து.
    சிறுவாணி மலைப்பகுதியில் வெட்டப்பட இருந்த லட்சக்கணக்கான மரங்களை காத்த பெருமை எங்களுக்கு உண்டு. இன்றும் வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படாமல் இருக்க கண்காணித்து வருகிறோம். நகரத்தில் மட்டும் போராடும் சுற்றுசூழல் அமைப்புகளை கிராமங்களுக்கும் காடுகளுக்கும் வழிகாட்டி உள்ளோம். நாங்கள் சபை நாகரீகம் தெரியாதவர்கள் அல்ல.

    பத்திரிக்கை புகழுக்காக அப்துல்கலாமும் இன்ன பிற அமைப்புளும் நட்டு சென்ற நூற்றுக்கணக்கான மர கன்றுகள் நீர் இன்றி கருகியதை வெளிசத்துக்கு கொண்டு வந்தோம். மீண்டும் சொல்கிறேன் மரம் நட்டால் போதாது தண்ணீர் ஊற்ற வேண்டும் அது உங்களால் முடியாது.

    ReplyDelete
  13. திரு.வவ்வால், திரு.கலாகுமரன்

    மலைவாழ் மக்களுக்கு கணிணி பற்றி சொல்லிக்கொடுக்க அரசிடம் ஏன் அனுமதி வாங்கவேண்டும் என்று சங்கவியிடம் கேட்டுப்பாருங்கள். அவர் புறியும்படி பதில் சொல்வார்.

    ReplyDelete
    Replies
    1. திரு.தமிழ் மலர்,

      எதுக்கு அரசு அனுமதி பெறணும் ,அப்படி விதி இருக்கா? எதுவும் சொல்லாமல் இழுத்துக்கிட்டே போறிங்க.

      நாங்க சாதாரணமான கிராமத்தில சில வேலைகள் செய்து இருக்கோம், ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் சொல்லிவிட்டு செய்வோம். அவரும் மக்களுக்கு நல்லது தானே செய்யுறிங்கன்னு கூட இருந்து உதவியும் செய்வார், சமயங்களில் ஆட்களும் அனுப்பியுள்ளார்கள்.

      மலைவாழ் மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்யக்கூடாதுன்னு எதுவும் இருக்கான்னு எனக்கு தெரியலை.

      மலைக்கிராமங்களுக்கு சாலை,குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி என எதுவும் சரியாக கிட்டாத நிலையில் ,இணையம், வலைப்பதிவு அறிமுகம் செய்து வைத்து அவர்கள் தொடர்ந்து இணையத்தில் எப்படி இயங்க வைப்பீர்கள், அதற்கு என்ன திட்டம் கைவசம் வைத்துள்ளீர்கள்?

      சும்மா ஒரு நாள் கண்ணில காட்டி வந்தால் போதும்னு நினைக்கிறீர்களா?

      Delete
  14. திரு.கலாகுமரன்

    //விவசாயத்தை அரசு பணியாக்க இது கம்யூனிச நாடா?//

    விவசாயத்தை அரசாங்க வேலையாக்கினால் அது கம்யூனிச நாடா?

    //விவசாயிகளுக்கு நாம் மரக்கன்று கொடுப்பதா ? வேடிக்கை.//

    விவசாயிக்கு வேண்டாம் கம்பியூட்டர் பொறியாளருக்கும், கண்டக்டருக்கும் கொடுங்கள்

    //கிராமத்து குழந்தைங்களுக்கு படிப்பை விட face book, twitter அவசியமா ?//

    முதலில் உங்களுக்கும் எனக்கும் அவசியாமா என்று ஒரு கணம் யோசித்து பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. திரு.தமிழ்மலர்,

      //விவசாயிக்கு வேண்டாம் கம்பியூட்டர் பொறியாளருக்கும், கண்டக்டருக்கும் கொடுங்கள்//

      இப்போ இது எதுக்கு? உங்க மனசில வேற என்னமோ உறுத்துகிறது ,அதை நேர்டியாக் உடைச்சு சொல்லாம, ஏன் இப்படியான கண்ணாமூச்சு?

      கண்டக்டரும்,கணிப்பொறியாளரும் மரம் நடக்கூடாதா?

      உண்மையில் விவசாயிக்கு மரக்கன்று கொடுத்த எங்கூர்ல இல்லாத மரக்கன்றா ,நீங்க புதுசாக்கொடுக்கிறிங்கன்னு சொல்வாங்க.ஆத்தங்கரை,குளத்தங்கரை, வாய்க்கா, வரப்பு என சின்னதும் பெருசுமா மரங்கள் தானே இருக்கு.

      இப்போ உங்கக்கிட்டேவே நாலு மரக்கன்று கொடுத்திருந்தால் என்ன தெரியுமா சொல்லுவிங்க, எங்கூரு அட்டப்பாடியில இல்லாத மரமா, இதை வேற நான் கோவையில இருந்து எடுத்துப்போகணுமான்னு சொல்லியிருப்பீங்க ;-))

      Delete
  15. ///பத்திரிக்கை புகழுக்காக அப்துல்கலாமும் இன்ன பிற அமைப்புளும் நட்டு சென்ற நூற்றுக்கணக்கான மர கன்றுகள் நீர் இன்றி கருகியதை வெளிசத்துக்கு கொண்டு வந்தோம். மீண்டும் சொல்கிறேன் மரம் நட்டால் போதாது தண்ணீர் ஊற்ற வேண்டும் அது உங்களால் முடியாது. ////

    நிச்சயமாய் சொல்கின்றேன் நண்பரே..விமர்சனத்தினை தாங்கிங்கொள்ள பழகுங்கள்..அதை விட்டு தனி மனித தாக்குதல் ஏன் ?..

    ReplyDelete
  16. திரு.சம்பத்குமார்

    தனிமனித தாக்குதல் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. உங்களால் முடியாது என்றால அது தனிப்பட்டவரை மட்டும் குறிப்பிடாது. இருந்தாலும் உங்களால் என்ற வார்த்தையை நம்மால் என்று மாற்றிக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  17. தனி ஆளா 3000 மரக்கன்னு வெச்சவங்கலாம் ஈரோட்ல இருக்காங்க....
    எல்லாத்தையும் அரசாங்கமே செய்யனும்னு எதிர்பாக்காதீங்க :-)))

    சிட்டுக்குருவி பத்தியும் தெரிஞ்சுக்குங்க....
    http://vovalpaarvai.blogspot.in/2012/03/20.html

    ReplyDelete
  18. நீங்கதானா அது. தமிழ்மலர் அப்படீங்கறது ஆணா, பொண்ணான்னு கொழம்பிக்கிட்டு இருந்தேன். நான் ஒரு நாளைக்கு உங்க ஊருக்கு வரணும். கட்டாயம் வருவேன். அதற்கு உங்களுடைய உதவி தேவைப்படும்.

    உங்களுடைய மரத்தைப் பற்றிய பேச்சை ரசித்தேன். மரம் நடுதல் என்பது இப்பொழுது ஒரு பேஷனாகப் போச்சு. லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. எத்தனை கன்றுகள் வளர்ந்து மரமாகின்றன?

    மரத்தைக் காப்போம் என்று பேசுபவர்கள் வீட்டில் மர சாமான்கள் ஒன்றும் இல்லாமலிருந்தால், அவர்கள் பேசலாம். இல்லாவிட்டால் அவர்களுக்கு மரத்தைக் காப்பதைப் பற்றி பேச உரிமை இல்லை.

    இன்று சென்னைக்கு 6 மணி நேரத்தில் போகிறோம் என்றால் அதற்கு என்ன காரணம்? மரத்தைக் கட்டிக்கொண்டு இருந்தால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமா?

    AHAD இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. இனிதே வரவேற்கிறோம்... AHADs செயல்படுகிறது.

      Delete

Popular Posts