Jun 13, 2012

முல்லைப்பெரியாறு கேரள-தமிழக விவசாயிகள் சந்திப்பு


தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த விவசாயிகள், எழுத்தாளர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் சந்தித்து ஆலோசனைகளை பகிரும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்

வரும் சூலை மாதம் 7 தேதி கொச்சியில் வைத்து இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கேரளாவில் இருந்து முல்லைப்பெரியாறு போராட்டக்குழு முன்னாள் தலைவர் சி.பி.ரோய், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி தாமசு (நீதிபதி ஆனந்த் குழுவில் கேரள பிரதிநிதியாக இருந்தவர்) எழுத்தாளர்கள் சிவிசங்கரன், நீலகண்டன், வழக்கறிஞர் காளிங்கராசு, திருவனந்தபுரம் தமிழ் சங்கம் உட்பட பலரும் கலந்துகொள்கின்றனர். 

தமிழகம் சார்பில் ஐந்து மாவட்ட பெரியார் நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு, தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், இயக்குனர் அரவிந்த், இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்

திரு.நெடுமாறன், திரு கு.ராமகிருசுணன், திரு.கொளத்தூர் மணி உள்ளிட்டோரையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த கூட்டத்தில் கேரள தமிழக மக்களுக்கு முழுமையான பயனை தரும் புதிய நீர்வழி சுரங்கம் அமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளோம்.  இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ஆலோசனை முடிவுகளை கேரள தமிழக அரசுகளுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்க உள்ளோம். 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் வலைப்பதிவர்கள் உள்ளிட்டோர் தொடர்பு கொள்ளவும். 

ஆக்கபூர்வமான சிந்தனைகள் நிச்சயம் நல்ல தீர்வை தரும்.

தொடர்புக்கு தமிழ்மலர் :9787678939      tamilmalarnews@gmail.com

நன்றி...

4 comments:

  1. நல்லதொரு முடிவை எதிர்நோக்கியுள்ளோம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என் சொந்த ஊர் மக்களுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்கட்டும் நண்பரே...

    இன்னமும் என் சொந்தங்கள் கேரள எல்லைக்கு வேலைக்கு செல்வதற்க்கு அஞ்சிக்கொண்டே செல்கின்றனர்..

    நல்லதோர் விடிவு கிடைக்கட்டும்

    நன்றி
    சம்பத்குமார்

    ReplyDelete
  3. நல்லது நடக்கட்டும் சார் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Popular Posts